Friday, November 24, 2023

"இடுக்கான வாயில்வழியே நுழையுங்கள். ஏனெனில், அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது: வழி பரந்தது: அதன் வழியே நுழைபவரும் பலர்."(மத்.7:13)

"இடுக்கான வாயில்வழியே நுழையுங்கள். ஏனெனில், அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது: வழி பரந்தது: அதன் வழியே நுழைபவரும் பலர்."
(மத்.7:13)

தியானிக்கும் போது கருத்தில் பட்டவை:

இப்படித்தான் நடக்க வேண்டும்,
இது விண்ணகம் நோக்கி செல்லும் பாதை.

எப்படியும் நடக்கலாம், இது அழிவை நோக்கி செல்லும் பாதை.

விண்ணகப் பாதையின் இருமறுங்கிலும் இப்படி நடக்கக்கூடாது  என்ற பாதுகாப்பு வளையம் இருக்கும்.

அழிவை நோக்கி செல்லும் பாதையில் எந்த பாதுகாப்பும் இருக்காது.

நம்மை படைத்தவரை முழுமையான உள்ளத்தோடு நேசிக்க வேண்டும்.

நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

இந்த பாதை வழியே மட்டும்தான் நடக்க வேண்டும்.

இறைவனின் கட்டளைகளை மீறி பாவம் செய்யக்கூடாது. இது பாதுகாப்பு வளையம். இதைத் தாண்டினால் அழிவின் பாதையில் நடக்க நேரிடும். 

குறுகலான விண்ணகப் பாதையில் நம்மை வழி நடத்துபவர் நமது ஆண்டவராகிய இயேசு.

உண்மையில் அவர்தான் வழி.

நமது கண்ணும், கருத்தும் எப்போதும் அவர் மேலேயே இருக்க வேண்டும்.

இயேசு சொல்கிறார்:

உலகப் பற்றை விடு, 
என்னை இறுகப் பற்றிக்கொள்.

உன்னைப் பகைப்பவர்களை நேசி.

உனக்குத் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்.

உன் மனதை யாராவது நோகச் செய்திருந்தால் அவர்களை மன்னித்து விடு.

மன்னிப்பு மட்டும் தான் மீட்புக்கான ஒரே வழி.

 உன்னை மன்னிப்பதற்காகவே நான் உலகிற்கு வந்தேன்.

 என்னைச் சிலுவையில் அறைந்தவர்களையே நான் மன்னித்து விட்டேன். 

எனது சீடன் நீ. 
என்னைப் பின்பற்று.

மன்னிப்பவர்களுக்கு மட்டுமே மன்னிப்புக் கிடைக்கும்.

இயேசுவின் ஒவ்வொரு வார்த்தையும் நமது காதுகளில் விழுந்து, கருத்தில் பதிந்து, கால்களை வழி நடத்த வேண்டும்.

இயேசுவின் விருப்பப்படி நடப்பவர்கள் குறுகலான விண்ணகப் பாதையில் நடக்கிறார்கள்.

தங்கள் விருப்பப்படி நடப்பவர்கள் பேரிடர்ப் பாதையில் நடக்கிறார்கள்.

பேரிடர்ப் பாதை அகன்றது, கட்டுப்பாடுகள் அற்றது.

இயேசுவின் விருப்பப்படி இயேசுவாகிய பாதையில் நடப்போம்.

விண்ணக வாசல் திறந்திருக்கிறது, உள்ளே நுழைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment