Thursday, October 12, 2023

அவர் இங்கே இல்லை: தாம் கூறியபடியே உயிர்த்துவிட்டார்.(மத்.22:6)

அவர் இங்கே இல்லை: தாம் கூறியபடியே உயிர்த்துவிட்டார்.
(மத்.22:6)

இயேசு மரித்து அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் 

மதலேன்மரியாளும்,

அன்னை மரியாளின் சகோதரியும், சின்ன யாகப்பரின் தாயுமான மரியாளும்,

அருளப்பர், பெரிய  யாகப்பர் ஆகியோரின் தாயுமான சலோமேயும்

இயேசுவின் உடலில் பூசுவதற்காகப் பரிமளப் பொருட்கள் பூசுவதற்காகக் கல்லறைக்கு வந்தனர்.

கல்லறையில் அமர்ந்திருந்த வான தூதர்கள் இயேசு உயிர்த்து விட்ட செய்தியை அவர்களுக்கு அறிவித்தனர்.

செய்தியை இயேசுவின் சீடர்களுக்கு அறிவிக்கும் படியும் கூறினர்.

இயேசு உயிர்த்த செய்தியை முதல் முதல் அறிவித்தவர்கள் இந்தப் பெண்மணிகள் தான்.

இயேசு உயிர்த்தார் என்பதன் பொருள் என்ன?

இதை அறிய முன் இன்னொரு முக்கிய உண்மையை அறிந்திருக்க வேண்டும்.

மனிதனுக்கு மரணம் உண்டு.

ஆனால் மனிதனுடைய ஆன்மாவுக்கு மரணம் இல்லை.

மனித ஆன்மா உடலோடு இருக்கும்போது இந்த சடப் பொருட்களால் ஆன (material) உலகில் வாழ்கிறது.

உடலை விட்டு பிரியும் ஆன்மா பாவ மாசு இல்லாமல் இருந்தால் விண்ணுலகை அடைகிறது.

விண்ணுலகு இடம், நேரம் இல்லாத உலகு.

ஆவி (Spirit)  ஆகிய கடவுள் இடம், நேரம் இல்லாத விண்ணுலகில்தான் நித்திய காலம் வாழ்கிறார்.

இயேசு மெய்யாகவே மனிதன்.

அவர் சிலுவையில் மரித்த வினாடியே அவரது ஆன்மா விண்ணுலகுக்குச் சென்று விட்டது.

விண்ணுலகம் என்பது ஒரு வாழ்க்கை நிலை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மனுக் குலம் ஆரம்பித்த நாள் முதல் 

இயேசு மனிதர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக தன்னையே பலியாக ஒப்புக்கொடுக்கும் வினாடி வரை

மரித்த புண்ணியவான்களின்
 ஆன்மாக்கள் லிம்போ நிலையில் இருந்தன.

According to the Catechism of the Catholic Church, before the Resurrection, Abraham, Noah, Moses, Adam and Eve, and all the righteous were in the Limbo of the Fathers (limbus patrum) where they remained until “in his human soul united to his divine person, the dead Christ went down to the realm of the dead. He opened heaven’s gates for the just who had gone before him” (CCC 637).

இயேசு மரித்தவுடன் 
,
அதாவது, அவர் பாவப் பரிகார பலி செய்து முடித்தவுடன்,

அவருடைய ஆன்மா (இயேசு)
 லிம்போவுக்குச் சென்று

 (இதை நமது விசுவாசப் பிரமாணத்தில் பாதாளத்தில் இறங்கி என்று சொல்கிறோம்) 

அங்கு அவருடைய வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்த புண்ணியவான்களின் ஆன்மாக்களை மோட்சத்திற்கு அழைத்துச் சென்றார்.

இயேசு மரித்த வினாடி மோட்ச வாசல் திறந்தது.

இயேசுவின் தந்தை சூசையப்பர் கூட அப்போதுதான் மோட்சத்துக்குள் நுழைந்தார்.

நல்ல கள்ளன்  இயேசு மரித்த வினாடியே அவரோடு விண்ணகம் சென்று விட்டான்.

"'இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்."

என்று இயேசு அவனுக்கு வாக்குக் கொடுத்திருந்தார்.

விண்ணகம் சென்றுவிட்ட இயேசுவின் ஆன்மா மரித்த மூன்றாம் நாள் அவரது உடலோடு இணைந்தது.

அந்த வினாடி அதற்கு முன் சடப்பொருளாக இருந்த அவரது உடல் ஆன்மீக உடலாக மாறியது.

இயேசு உயிர்த்த பின் 40 நாட்கள், விண்ணகத்தில் வாழ்ந்து கொண்டே அவ்வப்போது தனது சீடர்களுக்குக் காட்சியளித்தார்.

நாற்பதாவது நாள் அதற்குப் பின் காட்சியளிப்பதை நிறுத்திவிட்டார்.

இயேசு மரித்தவுடன் அவரது ஆன்மா விண்ணகம் சென்று விட்டாலும்,

உயிர்த்தவுடன் ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் சென்று விட்டாலும்,

அவர் உயிர்த்த 40வது நாளில் தான் அவர் விண்ணகத்திற்குச் சென்ற திருநாளைக் கொண்டாடுகிறோம்.

இயேசு உயிர்த்தார் என்பதன் பொருள் என்ன?

என்ற கேள்விக்கு இப்பொழுது பதில் புரிந்திருக்கும்.

மரித்தவுடன் விண்ணகம் சென்று விட்ட ஆன்மா திரும்பவும் பூமியில் உள்ள தன் உடலோடு சேர்வதைத்தான் உயிர்ப்பு என்கிறோம்.

நாமும் ஒரு நாள் உயிர்ப்போம் என்பதற்கு இயேசுவின் உயிர்ப்பு ஒரு முன் அடையாளம்.

நாம் இறந்தவுடன் நமது ஆன்மாக்களும் இயேசுவோடு வாழ மோட்சத்திற்கு சென்று விடும்.

அதாவது நமது ஆன்மாக்கள் மட்டும் மோட்சத்தில் இறைவனோடு வாழும்.

ஒரு நாள் உலகம் அழியும்.

உலகம் அழியும்போது மோட்சத்தில் வாழும் நமது ஆன்மாக்கள் 

அழிந்து கொண்டிருக்கும் பூமியில் உள்ள தங்கள் உடல்களோடு சேர்ந்து 

உயிர்த்து நாம் ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் செல்வோம்.

உலகம் அழிந்த பின் நாமும் இயேசுவைப் போலவும்,

 அன்னை மரியாளைப் போலவும்

 மோட்சத்தில் ஆன்ம சரிதத்தோடு வாழ்வோம்.

இயேசு கடவுள், ஆகவே அவர் சொந்த வல்லமையால் உயிர்த்தார்.

அன்னை மரியாள் ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள்.

உலக முடிவில் இயேசுவின் இரண்டாவது வருகையின் போது அவருடைய வல்லமையால் நாம் உயிர்ப்போம்.

உயிர்த்தபின் இயேசுவோடு முடிவில்லாத காலம் வாழப் போகிற நமது உடலைப்

 பாவம் செய்ய பயன்படுத்தாமல் புண்ணியம் செய்ய பயன்படுத்துவோம்.

இறையன்பு சேவையிலும்,
 பிறர் அன்பு சேவையிலும் பயன்படுத்துவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment