Friday, September 16, 2022

நல்ல நிலமும், நாமும்.

       நல்ல நிலமும், நாமும்.

"தாத்தா, சீரிய செம்மனம் என்றால் என்ன தாத்தா?"

",நல்ல மனது.

 "நல்ல மனது உள்ளவர்களுக்கு சமாதானம்" என்று வானவர் பாடினார்களே, அப்படிப்பட்ட மனது."

"நல்ல நிலத்திற்கும், அதற்கும் என்ன சம்பந்தம்?"

",நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதை நன்கு முளைத்து, நன்கு வளர்ந்து, நல்ல பலன் தரும்.

அதுபோல நல்ல மனது உள்ளவர்கள் இறைவாக்கை அறிந்தால் அது அவர்களுடைய ஆன்மீக வாழ்க்கையை சீரும், சிறப்பும் உள்ளதாக மாற்றும்."

"வழியோரம், பாறை, முட்செடிகள் நிறைந்த நிலம் ஆகியவற்றுக்கும்,

நல்ல நிலத்திற்கும் என்ன வித்தியாசம்?"

", வழியில் யார் நடப்பார்கள்?"

"யார் வேண்டுமானாலும் நடப்பார்கள். நல்லவர்கள். கெட்டவர்கள், திருடர்கள் போன்று யார் வேண்டுமானாலும் நடப்பார்கள்.

மனது வழி போன்று இருந்தால் அங்கு எல்லா வகை எண்ணங்களும் குடியேறும். சாத்தான் கூட  தன் எண்ணங்களோடு குடியிருப்பான்.

அத்தகைய மனதில் இறைவாக்காகிய விதையை விதைத்தால் அது பலன் தராது."

"இப்படிப்பட்ட மனமுள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை சாமியாருடைய நற்செய்தி பிரசங்கத்தை கேட்டாலும் அவர்களுக்கு எந்த பயனும் கிடைக்காது."

",இயேசுவின் நற்செய்தி நல்ல மனதுள்ள பாவிகளை மனம் திருப்பியது.

பாவியாகிய மரிய மதலேனாளை புனிதையாக மாற்றியது.

 ஆனால் பரிசேயர்களை அது மாற்றவில்லை.

அவர்கள் இயேசுவின் நற்செய்தியை கேட்டாலும் அவரை கொலை செய்யவே தீர்மானித்தார்கள்.

நல்ல நிலத்தில் பயிற்தொழில் செய்வோரும், அவர்களுக்கு உதவுபவர்களும் மட்டுமே இருப்பர்.

நல்ல மனதில் ஆண்டவருக்கு ஏற்ற எண்ணங்கள் மட்டுமே குடியிருக்கும்.

இந்த எண்ணங்களின் இடையே நற்செய்தியாகிய விதை விழுந்தால் நல்ல பலன் தரும்."

"பாறைக்கும் நல்ல நிறத்திற்கும் என்ன வித்தியாசம்?"

"நல்ல நிலம் உழுது பண்படுத்தப்பட்டிருப்பதால் கடினமாக இருக்காது.

முளைத்த விதை ஆழமாக வேரூன்றி வளரும் அளவிற்கு நிலம் நன்றாக இருக்கும்.

நல்ல நிலம் போன்ற மனதில் நற்செய்தி பதிந்தால் அது நல்ல ஆன்மீகப் பலன் தரும்."

"முட்செடிகள் நிறைந்த நிலத்துக்கும் நல்ல நிலத்துக்கும் என்ன வித்தியாசம் ?"

",முட்செடிகளின் நடுவே விதை விழுந்தால் என்ன ஆகும்?"

"அது முளைக்கும், ஆனால் வளராது. முட்செடிகள் அதை அழுத்தி விடும்."

", உலகக் கவலைகள், 
செல்வத்தின் மீது ஆசை,, 
 சிற்றின்ப ஆசை போன்ற
 முட்செடிகள் இடையே விழும்
நற்செய்தி விதையும் பலன் தராது."

"ஆக நல்ல எண்ணங்களும் நல்ல ஆசைகளும் நிறைந்த, மென்மையான மனதே நல்ல மனது.

இத்தகைய மனம் உள்ளவர்கள் தான் சமாதானத்தின் தேவனின் வார்த்தையால் பயன் பெறுவார்கள்."

",ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் ஆன்ம பரிசோதனை செய்து நமது மனதில் உள்ள வேண்டாத எண்ணங்களையும், ஆசைகளையும் அப்புறப் படுத்த வேண்டும்.

அடுத்து நற்செய்தியை வாசிக்க வேண்டும்.

தொடர்ந்து அதன்படி வாழ வேண்டும்.

இதுவே நம்மை இறைவன் பாதத்தில் சேர்க்கும் வாழ்க்கை.

"தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment