Tuesday, September 27, 2022

உங்களுக்கு எதிராக இல்லாதவன் உங்கள் சார்பாக இருக்கிறான்"(லூக்.9:50)

"உங்களுக்கு எதிராக இல்லாதவன் உங்கள் சார்பாக இருக்கிறான்"
(லூக்.9:50)

"அண்ணாச்சி, கொஞ்சம் நில்லுங்க."

",சொல்லுங்க.''


''நேற்று பங்குச் சாமியார் பிரசங்கத்தில பிரிவினை சபையார் நடத்தும் செபக் கூட்டஙகளுக்கு கத்தோலிக்கர் யாரும் போகக்கூடாது என்று சொன்னார்ல!"

", ஆமா, அதுக்கென்ன இப்போ?"

"ஆண்டவர் அப்படிச் சொல்லலிய."

", ஆண்டவர் என்ன சொன்னார்?"

"உங்களுக்கு எதிராக இல்லாதவன் உங்கள் சார்பாக இருக்கிறான்"னு தான சொன்னார்.

நாம் இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொள்கிறோம்.

அவர்களும் இயேசுவைத்தான் மீட்பராக ஏற்றுக் கொள்கிறார்கள்.

அவர்கள் நமக்கு எதிராக இல்லையே, சார்பாகத்தானே இருக்கிறார்கள்.

நமக்குச் சார்பாக இருப்பவர்கள் நடத்தும் கூட்டங்களுக்குப் போனால் என்ன?

ஒரு நாள் அருளப்பர் இயேசுவிடம்,

"குருவே, ஒருவன் உம் பெயரால் பேயோட்டுவதைக் கண்டு அவனைத் தடுக்கப்பார்த்தோம். ஏனெனில், அவன் நம்மைச் சாராதவன்" என்று கூறினார்.


 இயேசு அவரை நோக்கி, "அவனைத் தடுக்காதீர்கள்: ஏனெனில், உங்களுக்கு எதிராக இல்லாதவன் உங்கள் சார்பாக இருக்கிறான்" என்றார்.

பிரிவினை சபையாரும் இயேசுவின் பெயரால் தான் சுகம் அளிக்கும் கூட்டங்கள் நடத்துகிறார்கள்.


இயேசுவின் பெயரால் நடத்தப் படும் கூட்டங்களுக்கு நாம் போனால் என்ன?"

", தம்பி, வசனங்களையும், அதிலுள்ள வார்த்தைகளையும் மட்டும் எடுத்துக் கொண்டு விருப்பம்போல் பொருள் கொடுக்கக் கூடாது.

உங்கள் அம்மா எப்போதாவது உங்களை மட்டன் சாப்பிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்களா?"

"சொல்லியிருக்கிறார்கள்."

", ஆனால் நேற்று நீங்கள் ஹோட்டலில் மட்டன் பிரியாணி ஒரு முழு plate சாப்பிட்டீர்களே!''

"அண்ணாச்சி, நான் காய்ச்சல் வந்து சுகமில்லாமல் இருக்கும் போது சாப்பிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

அப்படின்னா எப்போதுமே சாப்பிடக் கூடாது என்றா அர்த்தம்."

", அதாவது வசனங்களுக்குப் பொருள் கொடுப்பது வார்த்தைகள் மட்டும் அல்ல, அவை கூறப்படும் சந்தர்ப்பமும் தான்.

ஒருவன் இயேசுவின் பெயரால் பேயோட்டுகிறான் என்றால் அவன் இயேசுவைக் கடவுளாக ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்றுதானே அர்த்தம்.

இயேசுவுக்கு அவனைப் பற்றி தெரிந்திருந்ததால் அவன் அவருக்கு எதிராக இல்லை என்றார்."

"நானும் அதைத்தானே சொல்கிறேன்.

நாம் இயேசுவை மீட்பராத ஏற்றுக் கொள்வதைப் போலவே

பிரிவினை சபையாரும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றுதானே சொன்னேன்."


", ஹலோ, அவசரப் பட வேண்டாம்.

சீடர்கள் இயேசுவைக் கடவுளாக ஏற்றுக் கொண்டது போல்தான் அவர் பெயரால் பேய் ஓட்டினவனும் ஏற்றுக் கொண்டிருந்திருப்பான்.

ஆனால் நாம் இயேசுவை ஏற்றுக் கொள்வது போல பிரிவினை சபையார் ஏற்றுக் கொள்ள வில்லையே!"

"நீங்கள் சொல்வது புரியவில்லை."


",ஒருவன் இயேசுவின் பெயரால் பேயோட்டியது இயேசு நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த காலம்,
அவருடைய பாடுகளுக்கு முன்னால்.

சீடர்கள் அவரை ஏற்றுக் கொண்டிருந்தது போலவே அவனும் ஏற்றுக்
கொண்டிருந்திருப்பான்.

பாடுகளுக்கு முன்னால் இயேசுவைப் பற்றி சீடர்கள் புரிந்து கொண்டதற்கும், பாடுகளுக்குப் பின்னால் புரிந்து கொண்டதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இயேசு தான் பாடுகள் பட்டு மரிக்கப் போவதைப் பற்றியும்,

மரித்த மூன்றாம் உயிர்த்தெழப்
போவதைப் பற்றியும் இயேசு அடிக்கடி சீடரகளிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார்.

அதைச் சீடர்கள் சரியாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.


புரிந்து கொண்டிருந்தால் இயேசுவை யூதர்கள் கைது செய்த போது அவரை விட்டுப் போயிருக்க மாட்டார்கள்.

அவர் உயிர்த்ததைப் பற்றி சந்தேகப் பட்டிருக்க மாட்டார்கள்.

இரண்டு சீடர்கள் எம்மாவூசைப் பார்த்து போயிருக்க மாட்டார்கள்.

சீடர்களுக்கு முழுமையான புரிதல் கிடைத்தது பரிசுத்த ஆவி அவர்கள் மேல் இறங்கி வந்த பிறகுதான்.

அதற்குப் பின்தான் முழுமையான புரிதலோடு நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார்கள்."

"இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறீர்கள்?"

",அப்போஸ்தலர்கள் இயேசுவை எப்படி ஏற்றுக் கொண்டார்களோ அப்படிதான் நாம் ஏற்றுக் கொள்கிறோம்."

"எப்படி ஏற்றுக் கொள்கிறோம்?''

", இயேசு உலகிற்கு எதற்காக வந்தாரோ அப்படியே புரிந்து ஏற்றுக் கொள்கிறோம்."

"இயேசு எதற்காக உலகிற்கு வந்தார்?"

",1. நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து நமது பாவங்களை மன்னிக்க.

நமது பாவங்களை மன்னிக்க அப்போஸ்தலர்களுக்கு முழுமையான அதிகாரம் கொடுத்தார்.

"பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:"
(அரு.20:22,23)

நாம் பாவ மன்னிப்பு பெற பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தை இயேசு ஏற்படுத்தினார்.

2. அவர் பாடுகள் படுவதற்கு முந்திய வியாழன் அன்று, வெள்ளிக் கிழமை பலியாகவிருக்கும் தன் உடலை அப்போஸ்தலர்களுக்கு உணவாகக் கொடுப்பதற்காக பரிசுத்த திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

அப்பத்தைத் தன் உடலாகவும், இரசத்தைத் தன் இரத்தமாகவும் மாற்றி அவர்களுக்கு உணவாகக் கொடுத்தார்.

அவர்களுக்குக் குருப் பட்டம் கொடுத்து, "இது என் உடல்."

"இது என் இரத்தம்" என்னும் வசீகர வார்த்தைகளைப் பயன்படுத்தி,

அப்பத்தை அவருடைய உடலாகவும், இரசத்தை அவருடைய இரத்தமாகவும் மாற்றும் வல்லமையைக் கொடுத்தார்.

இவ்வாறு செய்வது வெள்ளிக் கிழமையன்று தான் ஒப்புக்கொடுக்க விருக்கும் இரத்தம் சிந்திய பலியை இரத்தம் சிந்தாத விதமாய் ஒப்புக்கொடுப்பதாகும். .

குருக்கள் உலகம் முடியும் வரை இத் திருப்பலியைத் தினமும் ஒப்புக்கொடுத்து, 

இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் நமக்கு ஆன்மீக   உணவாகத் தரவேண்டும்.

நாம் பாவமாசின்றி இந்த திரு விருந்தை அருந்த வேண்டும்.

திவ்ய நற்கருணை மூலம் உலகம் முடியும் வரை இயேசு நம்மோடு இருப்பார்.

3. இயேசு கத்தோலிக்க திருச்சபையை ஏற்படுத்தி, அதன் தலைவராக இராயப்பரை நியமித்தார்.

அவருக்குப் பின் அவருடைய வாரிசாகிய பாப்பரசர் திருச்சபையின் தலைவராக இருப்பார்.

நமது பாவங்களை மன்னிப்பதற்காக பாவ சங்கீர்த்தனத்தை ஏற்படுத்திய இயேசுவை,

திருப்பலியையும், திவ்ய நற்கருணையையும் ஏற்படுத்திய இயேசுவை,

கத்தோலிக்க திருச்சபையையும், அதன் தலைவராக பாப்பரசரையும் ஏற்படுத்திய இயேசுவை 

நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

நாம் ஏற்றுக் கொள்ளும் அதே இயேசுவை நமது பிரிவினை சகோதார்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?

ஏற்றுக் கொண்டால் அவர்கள் நமக்கு சார்பானவர்கள்.

ஏற்றுக் கொள்ளாவிட்டால் எதிரானவர்கள்.

இப்போ சொல்லு, அவர்கள் நமக்கு 

எதிரானவர்களா?
சார்பானவர்களா?"

"ஏற்றுக் கொண்டால் அவர்கள் நம்மைவிட்டு பிரிந்து போயிருக்க மாட்டார்களே!"

",இப்போ சொல்லு, அவர்களுடைய செபக் கூட்டங்களுக்கு நாம் போகலாமா?''

"நிச்சயம் போகக் கூடாது."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment