Tuesday, September 6, 2022

"எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்."(லூக்.6:38)

"எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்."

(லூக்.6:38)


நாம் நம்மை நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்று நமது ஆண்டவர் நமக்கு கட்டளை கொடுத்திருக்கிறார்.

நமக்கு மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நாம் ஆசைப்படுகின்றோமோ அதையே நாம் மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்.

 நாம் மற்றவர்களுக்கு  என்ன செய்கிறோமோ அதையே மற்றவர்கள் நமக்குச் செய்வார்கள்.

நாம் மற்றவர்களுக்குக்   கொடுக்க எந்த அளவைப் பயன்படுத்துகிறோமோ அதே அளவுதான் நமக்கும் கிடைக்கும்.

இவ்வுலகில் நாம் மற்றவர்களுக்கு கொடுத்ததற்கு உரிய பலன் நமக்கு மறுவுலகில் கிடைக்கும்.


 இவ்வுலகில் எந்த அளவையால் மற்றவர்ளுக்கு அளக்கிறோமோ, அதே அளவையால்தான் மறுவுலகில் இறைவன் நமக்கு அளப்பார்.


விண்ணகத்தில் நமக்கு சன்மானம் நிறைய கிடைக்க வேண்டுமென்றால்,


நம்மைப் பகைப்பவர்களையும் நாம் நேசிக்க வேண்டும்.

நம்மைப் பகைப்பவர்களை நாம் நேசிக்காவிட்டால் இறைவனுக்கு எதிராக பாவம் செய்து கொண்டிருக்கும் நாம் எந்த உரிமையில் அவரிடம் மன்னிப்பு கேட்க முடியும்?


நமக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.

நாம் எவ்வளவு தீமைகள் செய்தாலும் கடவுள் நம்மை தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டுதான் வருகிறார். இதை நன்கு உணர்ந்து கொண்டால் நம்மால் நமக்கு எதிராகத்.தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யாமல் இருக்க முடியாது.


கொடுத்ததை திரும்ப தர முடியாதவர்களுக்கு கொடுக்க வேண்டும்.


நமக்கு எதிராக குற்றம் செய்தவர்களை மன்னிக்க வேண்டும். மன்னிப்பவர்களுக்குத்தான் மன்னிப்பு கேட்க உரிமை உண்டு. 
நாம் நமது பாவங்களுக்கு கடவுளிடம் மன்னிப்பு கேட்குமுன் நமக்கு எதிராக குற்றம் செய்த அயலானை மன்னித்து விட வேண்டும்.


ஒன்றும் எதிர்பாராமல் கடன் கொடுக்க வேண்டும். அதற்கு பெயர் தான் உதவி.


நன்றிகெட்டவர்க்கும், தீயவர்க்கும் பரிவு காட்ட வேண்டும்.


எல்லோருக்கும் இரக்கம் காட்ட வேண்டும். கடவுள் நம் மீது காட்டும் இரக்கத்தை நினைத்துப் பார்த்தால் நம்மால் மற்றவர்களுக்கு இரக்கம் காட்டாமல் இருக்க முடியாது.


யாரையும் தீர்ப்பிடக் கூடாது. தீர்ப்பிடும் உரிமை நமக்கு இல்லை.

யாரையும் கண்டனம் செய்யாதிருக்க   வேண்டும்.

இவை எல்லாம் நம் ஆண்டவர் நமக்குத் தந்திருக்கும் அறிவுரைகள்.

ஆண்டவர் அறிவுரைப்படி நடந்தால் தான் விண்ணக வாழ்வு நமக்கு கிடைக்கும்.

ஆண்டவர் அறிவுரைப்படி நடப்போம்.
விண்ணக வாழ்வை அடைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment