Sunday, September 25, 2022

"தங்களுள் பெரியவன் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது." (லூக்.9:46)

"தங்களுள் பெரியவன் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது." (லூக்.9:46)


"மனுமகன் மனிதரிடம் கையளிக்கப்படப் போகிறார்."

என்று இயேசு சொன்னபோது

 அப்போஸ்தலர்கள் அதற்குரிய விளக்கத்தைக் கேட்காமல்,

 அதற்கு சம்பந்தம் இல்லாமல்,

தங்களுள் பெரியவன் யார் என்று விவாதிக்க ஆரம்பித்தார்கள்.

இயேசு பொறுமையுடன்,

ஒரு குழந்தையின் கையைப் பிடித்துத் தம் அருகே நிறுத்தி,

 அவர்களை நோக்கி,

 "என் பெயரால் இக்குழந்தையை ஏற்றுக்கொள்பவன் எவனும் என்னையே ஏற்றுக்கொள்ளுகிறான். 

என்னை ஏற்றுக்கொள்பவன் எவனும் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்ளுகிறான்.

 உங்கள் அனைவருள் சிறியவன் எவனோ, அவனே பெரியவன்"
என்றார்.

குழந்தைகளுக்கு பாவம் செய்யத் தெரியாது.

பாவ மாசு மருவற்ற குழந்தையை ஏற்றுக் கொண்டு அதைப் போல் வாழ்பவன்

பாவத்திலிருந்து நமக்கு விடுதலை தர வந்த இயேசுவையே ஏற்றுக் கொள்கிறான்.

குழந்தையைப் போல் பாவ மாசில்லாமல் வாழ்பவன் தான் பெரியவன் என்று இயேசு சொல்கிறார்.

ஒருவன் சிறியவனா, பெரியவனா அவனுடைய வயதோ, பதவியோ தீர்மானிப்பதில்லை,

குழந்தையைப் போன்ற பாவமான மருவற்ற வாழ்க்கையே தீர்மானிக்கிறது.

வருடங்கள் கழியும் போது, வயது அதிகரிக்கிறது. அது நம்மை வயதானவர்களாக மாற்றும்.

ஆனால் பெரியவர்கள் ஆக்காது.

பதவிகள் உயரும்போது அது உலகில் நமது சமூக அந்தஸ்தை மாற்றும்.

ஆனால் பெரியவர்கள் ஆக்காது.

நிறைந்த படிப்பு நமது அறிவை அதிகரிக்கும்.

ஆனால் பெரியவர்கள் ஆக்காது.

ஆனால் பாவமாசற்ற வாழ்க்கையே நம்மை பெரியவர்களாக்கும்.

இரண்டு வயது பையன், வயதான அவனுடைய தாத்தாவை விட பெரியவன்,

ஏனெனில் அவனால் அந்த வயதில் பாவம் செய்ய முடியாது.

வயதானவர்களும், உயர்ந்த பதவி வகிப்பவர்களும், படிப்பறிவு மிக்கவர்களும் பெரியவர்கள் ஆகலாம்,   

பாவமில்லாமல் வாழ்ந்தால்.

பாவத்தை நீக்கி, இறையன்பிலும், இறையருளிலும் வளர்வோம்.

உலகினர் முன்னிலையில் அல்ல, இறைவன் முன் பெரியவர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment