Friday, July 29, 2022

"கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே.".(1 திமோ2:6)

"கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே.".
(1 திமோ2:6)

"இணைப்பவர் என்றால் என்ன அர்த்தம், தாத்தா?"

", இரண்டு நண்பர்களுக்கு இடையே ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அவர்கள் உறவு முறிந்திருந்தால் 

யார் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு, அவர்களுக்கு இடையே மீண்டும் உறவை ஏற்படுத்துகின்றாரோ

அவர் தான் இணைப்பவர்.(Mediator)

ஆதி மனிதன் செய்த பாவத்தினால் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே இருந்த உறவு முறிந்தது.

பாவப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு, அதாவது, அதற்கான பரிகாரத்தை செய்து,

கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே மீண்டும் உறவை ஏற்படுத்தியவர் 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

அவர் மட்டுமே கடவுளையும் மனிதரையும் இணைப்பவர்."

"அது சரி தாத்தா. இயேசு கடவுள் தானே, ஏன் சின்னப்பர்

"மனிதனான இயேசு கிறிஸ்துவே" என்கிறார்?"

"இரண்டு பேருக்கு இடையே உள்ள பிரச்சனையை தீர்ப்பவர் இரண்டு பேருக்கும் வேண்டியவராக இருக்க வேண்டும்.

கடவுளோடு உள்ள உறவை முறித்தவன் மனிதன்.

உறவை மீண்டும் ஏற்படுத்த விரும்பியவர் கடவுள்.

உறவை மீண்டும் ஏற்படுத்துபவர் கடவுளுக்கும் மனிதனுக்கும் வேண்டியவராக இருக்க வேண்டும்.

ஆகவே கடவுளோடு உறவில் இல்லாத மனிதனால் அது முடியாது.

ஆகவே கடவுளே இணைப்பவர் ஆக தீர்மானித்தார்.

அவர் மனிதன் சார்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அவரே மனிதன் ஆனார்.

மனித உருவெடுத்த இறைமகன் தான் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

பரிசுத்த தம திரித்துவம் ஒரே கடவுள் மூன்று ஆட்கள்.

இறைமகன் ஒரு ஆள், இரண்டு சுபாவங்கள், தேவ சுபாவம், மனித சுபாவம்.

மனித சுபாவத்தில்தான் அவர் பாடுகள் பட்டு, மரித்து நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து
இணைப்பவர் ஆனார்.

ஆகவேதான் புனித சின்னப்பர்,

'மனிதனான இயேசு கிறிஸ்து' என்கிறார்.

மனிதன் செய்த பாவத்திற்கு மனிதன் தான் பரிகாரம் செய்ய வேண்டும்.

ஆனால் மனிதன் அளவுள்ளவன். 
அளவுள்ள மனிதனால் அளவில்லாத கடவுளுக்கு ஏற்ற வகையில் பரிகாரம் செய்ய முடியாது.

பரிகாரம் செய்பவர் மனிதனாகவும் இருக்க வேண்டும்.

கடவுளைப்போல் அளவில்லாதவராயும் இருக்க வேண்டும்.

அப்படிப் பட்ட யாரும் மனுக்குலத்தில் இல்லை.

ஆகவே அளவில்லாத கடவுள் மனிதனாய்ப் பிறந்தார்.

பரிகாரம் செய்தவரும் அவர்தான். பரிகாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியவரும் அவர்தான்."

"தாத்தா, கடவுள் சர்வ அதிகாரம் உள்ளவர்தானே. அவர் நினைத்திருந்தால் பரிகாரம் செய்யாமலேயே பாவங்களை மன்னித்திருக்கலாமே. ஏன் நினைக்கவில்லை?"

", பேரப்புள்ள, கடவுள் தன்னுடைய எல்லா பண்புகளிலும் அளவில்லாதவர்.

அவருடைய அன்பு அளவில்லாதது, 

நீதியும் அளவில்லாதது.

நீதிப்படி குற்றவாளி பரிகாரம் செய்ய வேண்டும்,

அன்புப் படி குற்றவாளி மன்னிக்கப்பட வேண்டும். 

அளவுள்ள குற்றவாளி அளவில்லாத கடவுளுக்கு ஏற்ற பரிகாரம் செய்ய முடியாது.

ஆகவே அன்பின் மிகுதியால் பரிகாரம் செய்யும் பொறுப்பையும் கடவுளே ஏற்றுக் கொண்டார்.

"தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்."
(அரு. 3:16)

நாம் கடவுளுக்கு அன்பு செய்ததில் அன்று அவரே நமக்கு அன்பு செய்து, நம் பாவங்களுக்குப் பரிகாரமாகத் தம் மகனை அனுப்பியதில் தான் அன்பின் தன்மை விளங்குகிறது.
(1அரு.4:10)

"அதாவது நம் மேல் அவர் கொண்டுள்ள அன்பின் காரணமாக நாம் செய்ய வேண்டிய பரிகாரத்தை அவரே செய்தார்."

", Correct."

"ஆனால் தாத்தா, நாம் செய்ய வேண்டிய பரிகாரத்தை அவரே செய்து விட்டாரே, பிறகு நாம் ஏன் பரிகாரம் செய்ய வேண்டும், குறிப்பாக, தபசு காலத்தில்?"

", நாம்தானே பாவிகள். நாம் செய்யும் பரிகாரத்தை அவர் செய்த பரிகாரத்தோடு சேர்த்து கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

அவர் பரிகாரம் செய்திருக்காவிட்டால் நமது பரிகாரத்திற்கு எந்த பலனும் இருக்காது,"

"இப்போது நான் கேட்கப் போகிற கேள்வி என்னுடையது அல்ல, என் நண்பன் என்னிடம் கேட்டது, அதை நான் உங்களிடம் அப்படியே கேட்கிறேன்.

"கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே."

என்று புனித சின்னப்பர் சொல்லியிருக்கிறாரே.

இயேசு ஒருவர் தானே நம்மையும் கடவுளையும் இணைப்பவர்.

நமது ஆன்மீக வாழ்வுக்கு இயேசுவின் உதவி மட்டும் போதாதா?

நம் மீது கொண்ட அன்பினால் மனிதனாக பிறந்து நமக்காக பாடுகள் பட்டு மரித்தவர் நாம் வேண்டினால் கேட்க மாட்டாரா?

ஏன் புனிதர்களையும் உதவிக்கு அழைக்கிறோம்?

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment