Friday, July 22, 2022

"விண்ணரசு புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்." (மத்.13:33)

"விண்ணரசு புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்." (மத்.13:33)

''புளிப்பு மாவுன்னா என்ன தாத்தா?"

", உங்க அம்மா இட்லிக்கு மாவு ஆட்டுவதைப் பார்த்திருக்கிறாயா?"

"பார்த்திருக்கிறேன்."

"ஆட்டிவிட்டு என்ன செய்வாங்க?"

''ஆட்டி எடுத்த மாவுக்குள்ள கொஞ்சம் பழைய புளித்த மாவை ஊத்துவாங்க."

'',அதுக்கு பெயர் தான் புளிப்பு மாவு.''

"அப்படியா. நான் பைபிளில வந்ததால் வேறு ஏதோ ஒரு மாவுன்னு நினைச்சேன்."

", அதை ஊற்றினால்தான் அரைத்த மாவு இட்லி அவிக்கக் கூடிய மாவாக மாறும்."

"எப்படி, தாத்தா, மாறும்?"

", அதிசயமா இருக்குல்ல!"

"ஆமா, தாத்தா."

", அதுக்குப் பின்னால் உள்ள அறிவியல் தெரியாதவர்களுக்கு அது அதிசயம்.

தெரிந்தவர்களுக்கு சாதாரண உண்மை."

"அந்த அறிவியலைக் கொஞ்சம் விளக்குங்களேன்."

"புளித்த மாவுல நிறை நுண்ணியிர்கள் இருக்கும்.

அவை மாவிலுள்ள சர்க்கரையைச் சாப்பிட்டு, அதைச் சாராயமாகவும், கரியமல வாயுவாகவும் மாற்றுகின்றன.

கரியமல வாயு மேல் நோக்கி வரும்போது மாவின் அளவை அதிகரித்து, மேலே குமிழ்களை உண்டாக்கும்."

"எப்படி மாவின் அளவு அதிகரிக்கும்?"

",கரியமல வாயு மேல் நோக்கி வரும்போது மாவின் அடர்த்தி குறையும், கொள்ளளவு அதிகமாகும்."

"அதைப்பற்றி ஆண்டவர் ஏன் பேசுகிறார்?''

"ஆண்டவர் வாழ்ந்த காலத்திலும், பழைய ஏற்பாட்டின் காலத்திலும் வாழ்ந்த யூதர்களுக்கு இட்லி மாவைப் பற்றி தெரிந்திருக்காது.

அவர்கள் புளித்த மாவை அப்பம் (Bread) செய்யப் படுத்தினார்கள்.

அப்ப மாவோடு புளித்த மாவைச் சேர்த்தால் அது மொத்த மாவையும் புளிப்பேற்றுவதோடு அதன் அளவையும் அதிகமாக்கும்."

" ஆனால், தாத்தா, மோயீசன் அவரகளிடம்

 "நீங்கள் புளித்த அப்பத்தை உண்ணாதிருக்கக் கடவீர்கள்."

என்று சொல்லியிருக்கிறாரே."


",ஏழு நாள் புளியாத அப்பத்தை உண்பாய்.

 ஏழாம் நாளோ ஆண்டவரின் திருவிழாவாம்.

ஏழு நாளும் புளியாத அப்பத்தை உண்பீர்கள். 

உன் வீட்டிலோ உன் எல்லைகளிலோ புளித்தது யாதொன்றும் காணப்படலாகாது.
என்று மோயீசன் கூறினார்.",

"புளித்த அப்பத்திற்கும் புளியாத அப்பத்திற்கும் என்ன வித்தியாசம்?"

", அப்ப மாவோடு புளிப்பு மாவைச் சேர்த்து அப்பம் தயாரித்தால் அப்பம் நன்கு உப்பி பெரியதாக. மாறும். உள்ள அடர்த்தி குறைவாக இருப்பதால் சாப்பிட மென்மையாக இருக்கும்.

புளியாத அப்பம் முதலில் வைத்த மாவின் அளவே அப்பமும் இருக்கும்."

'தாத்தா, இயேசு ஏன் விண்ணரசை புளிப்பு மாவுக்கு ஒப்பிடுகிறார்?"

",புளிப்பு மாவிலுள்ள நுண்ணியிர்கள் மிகச் சிறியவை.

அவை சேர்க்கப்பட்ட அப்ப மாவின் அளவை தங்கள் பணியால் அதிகரிக்கின்றன.

அதேபோல் ஆரம்பத்தில் விண்ணரசு மிகச்சிறியதாக இருக்கும்.

"விண்ணரசு புளிப்பு மாவுக்கு ஒப்பாகும். 

அதைப் பெண் ஒருத்தி எடுத்து மூன்றுபடி மாவில் பொதிந்து வைக்கிறாள்.

 மாவு முழுதும் புளிப்பேறுகிறது"

எப்படி மூன்றுபடி மாவில் பொதிந்து வைக்கப்பட்ட புளிப்பு மாவு 

மாவு முழுவதையும் புளிப்பேற்றுகிறதோ 


அப்படியே எந்த மக்கள் மத்தியில் விண்ணரசு சிறியதாக ஆரம்பிக்கிறதோ அந்த மக்கள் அனைவரையும் தன்வசப்படுத்திக் கொள்ளும்.

அதாவது விண்ணரசு பெரியதாகும்."

"உண்மைதான், தாத்தா.

பரிசுத்த ஆவி மாதாவின் மேலும் அப்போஸ்தலர்கள் மேலும் இறங்கி வந்த அன்று திருச்சபை செயல்பட ஆரம்பித்தது.

மாதாவோடும்,  
11 அப்போஸ்தலர்களோடும் ஆரம்பித்த திருச்சபை இன்று எந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோமே.

விண்ணரசின் முழு அளவையும் நாம் விண்ணகம் சென்ற பின்தான் பார்ப்போம்."

", புளிப்புமாவின் பின்னால் உள்ள அறிவியல் அந்தக் கால மக்களுக்குத் தெரியாது. 

ஆகவே மிகச்சிறிய அளவிலான புளிப்பு மாவு மிகப்பெரிய அளவிலான மாவை எப்படி  புளிப்பேற்றுகிறது என்பது அவர்களுக்கு தெரியாத ஒரு அதிசயம்.

திருச்சபையை வழி நடத்துபவர் பரிசுத்த ஆவி. அவருடைய  வல்லமையைப் பற்றி தெரியாதவர்களுக்கு திருச்சபை வளர்ந்த விதமும் ஒரு அதிசயம்.

வெட்டப்பட வெட்டப்பட ஓங்கி வளரும் மரம் போல,

திருச்சபையின் வரலாற்றில்,
கொல்லப்பட கொல்லப்பட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது.

திருச்சபையின் ஆரம்ப கட்டத்தில் ரோமையை ஆண்ட மன்னர்கள் அதை பூமியை விட்டு முற்றிலுமாக அழித்துவிட அவர்களால் இயன்ற அளவு முயன்றார்கள்.

இறந்த வேத சாட்சிகளின் ரத்தத்தில் திருச்சபை வேகமாக வளர்ந்தது."

"மூன்றுபடி மாவில் பொதிந்து வைக்கப் பட்ட புளிப்பு மாவினால் மாவு முழுதும் புளிப்பேறுவது போல

விண்ணரசைச் சேர்ந்த நாம் வாழும் பகுதி வாழ் மக்களிடையே நமது விசுவாசம் பரவ பரிசுத்த ஆவியை வேண்டுவோம்,

நாமும் உழைப்போம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment