Sunday, July 24, 2022

கேட்போம். கிடைத்தாலும் மகிழ்வோம். கிடைக்காவிட்டாலும் மகிழ்வோம்.

கேட்போம். 
கிடைத்தாலும் மகிழ்வோம். கிடைக்காவிட்டாலும் மகிழ்வோம்.

"தாத்தா, 'கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்'  என்று நமது ஆண்டவர் தானே சொன்னார்.

ஆனால் நான் கேட்டதையெல்லாம் தந்தது மாதிரி தெரியவில்லையே!"

",நீ கேட்கக் கூடாததைக் கேட்டிருப்பாய்."

"கேட்கக் கூடாதது என்று எதைச் சொல்லுகிறீர்கள்?"

", எதெல்லாம் நமது ஆன்மீக வாழ்வுக்கு தீங்கு ஏற்படுத்துகிறதோ அதை எல்லாம் நாம் கடவுளிடம் கேட்கக் கூடாது."

"எப்படி, தாத்தா, ஆன்மீக வாழ்வுக்கு தீங்கு செய்வதைக் கேட்பேன்?"

",ஆன்மீக வாழ்வுக்கு தீங்கு செய்வது எது என்று உனக்குத் தெரிந்தால் கேட்க மாட்டாய் என்றே வைத்துக் கொள்வோம்.

ஆனால்  கேட்பது ஆன்மீக வாழ்வுக்கு தீங்கு செய்யுமா செய்யாதா என்பது உனக்கு எப்படி தெரியும்?

ஏதாவது ஒரு ஊருக்குப் போகும்போது ஏதாவது ஒரு வழியை சரியான வழி என்று நாம் நினைத்துக் கொண்டு அவ்வழியே செல்வோம்.

அது வேறு எங்காவது கொண்டு விட்ட பின்பு தான் நாம் வந்தது தவறான வழி என்பதை கண்டு கொள்வோம்.

அப்படி கண்டு கொள்வதால் தவறு சரியாகி விடாது.

சரியான வழியை உறுதி செய்து கொண்டு தான் போகவே ஆரம்பிக்க வேண்டும்.

கடவுள் சர்வ ஞானம் உள்ளவர்.

நாம் கேட்பது சரியானதா, தவறானதா என்பது அவருக்கு தெரியும்.

சரியானதாக இருந்தால் கேட்டதைத் தருவார்.

தவறானதாக இருந்தால் தர மாட்டார்.

சரியானதை தந்தால் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

தவறானதை தராவிட்டாலும் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

கிடைத்தாலும் நன்றி கூற வேண்டும்.

 கிடைக்காவிட்டாலும் நன்றி கூற வேண்டும்.

கடவுளை உண்மையாகவே நேசிக்கின்றவர்கள்

தங்களுக்கு என்ன நேர்ந்தாலும் அவருக்கு நன்றி கூறுவார்கள்."


''என்ன நேர்ந்தாலும் என்றால்?"

",இன்பம் வந்தாலும் நன்றி கூறுவோம், துன்பம் வந்தாலும் நன்றி கூறுவோம்,

நோய் வந்தாலும் நன்றியை கூறுவோம்,
 நோய் குணமானாலும் நன்றியை கூறுவோம்.

ஆசைப்பட்டது கிடைத்தாலும் நன்றியை கூறுவோம், கிடைக்காவிட்டாலும் நன்றி கூறுவோம்.

கொரோனா தொற்றிக் கொண்டாலும் நன்றி கூறுவோம், நாம் அதிலிருந்து தப்பித்துக் கொண்டாலும் நன்றி கூறுவோம்."

"தாத்தா, இயேசு பாடுகள் பட்டு, சிலுவையில் மரித்தது நாம் நித்தியத்திற்கும் பேரின்பமாக வாழ்வதற்காகத் தானே.

 அப்படியானால் சிலுவையின் நோக்கம் பேரின்பம் தானே.

மரணம் மோட்சத்தின் வாசல்.

மோட்சத்திற்குள் நுழையும போது சிலுவை, அதாவது, துன்பம் நம் கூட வராது.

எப்போதும் நம்முடன் இருக்க முடியாத சிலுவைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?"

",நீ ஏன் பக்கத்து வீட்டு பையனுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட உன் தம்பிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாய்?"

"ஏனென்றால் அவன் என் அம்மா அப்பாவின் பிள்ளை."

",நமது வாழ்வின் ஒரே நோக்கம் கடவுள்தான்.

இயேசு சிலுவையில் மரித்ததாலும்,

'சிலுவையைச் சுமந்து என்னிடம் வா' என்று அவர் சொன்னதாலும்

 சிலுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

நாம் சிலுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பது அது சிலுவை என்பதற்காக அல்ல. இயேசுவுக்காக.

இயேசுவே நமக்கு எல்லாம்.

இயேசுவின் சித்தம் நமது பாக்கியம்.

விசுவாசம் இல்லாமல் மீட்பு பெறமுடியாது.

ஆனால் மீட்பு பெற்று மோட்சத்திற்குள் நுழைந்த பின் நம்மோடு விசுவாசம் இருக்காது.

ஆனாலும், இப்போது இயேசுவுக்காக விசுவசிக்கிறோம்.

என்ன நேர்ந்தாலும் ஏற்றுக் கொள்வதும்,

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவதும்

இயேசுவுக்காக மட்டுமே.

இயேசுவிடம் கேட்போம்.

இயேசு தந்தாலும் மகிழ்வோம்.
இயேசு தராவிட்டாலும் மகிழ்வோம்.

இயேசுதான் நமக்கு எல்லாம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment