Friday, July 15, 2022

"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்.''(மத்.12:30)

"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்.''
(மத்.12:30)

"எவனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது.

 ஏனெனில், ஒருவனை வெறுத்து மற்றவனுக்கு அன்பு செய்வான்.

 அல்லது, ஒருவனைச் சார்ந்துகொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான். 

கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது."(மத். 6:24) என்று நம் ஆண்டவர் கூறியிருக்கிறார்.

இருவருக்குமே ஊழியம் செய்யாமல் நடு நிலை வகிக்க முடியுமா, தாத்தா?"

"பொடியா, இயேசுவே இரண்டு தலைவர்கள் என்று கூறி இருக்கிறார்.

நீ நடுநிலை என்ற மூன்றாவது தலைவரை உருவாக்கியிருக்கிறாய்!

இதற்குப் பெயர்தான் அதிக பிரசங்கித்தனம்.

ஒருவன் கடவுளுக்கு ஊழியம் செய்வான், .
அல்லது,

அவருக்கு எதிரானவனுக்கு ஊழியம் செய்வான். .

மூன்றாவது தலைவர் கிடையாது.

கடவுளுக்கு ஊழியம் செய்யாதவன் 

பண ஆசை மூலம் செயல்புரியும் சாத்தானுக்கு ஊழியம் செய்கிறான்.

விண்ணக வாழ்வுக்காக வாழாதவன்

உலக வாழ்வே சதம் என்று வாழ்கிறான்.

புண்ணிய வாழ்வு வாழாதவன்

 பாவ வாழ்வு வாழ்கிறான்."


"அதைத்தான் இயேசு,

என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான்,

என்று கூறியிருக்கிறாரோ?"

", நடு நிலைமைக் கொள்கை இவ்வுலக வாழ்வில்தான்.

ஆன்மீக வாழ்வில் அல்ல.

உலகில் அரசியல்வாதிகள் நடுநிலைமைக் கொள்கையை பின்பற்றுவதாக கூறுகிறார்கள்.

இவ்வுலகில் வாழ்வது வேறு. உலகிற்காக வாழ்வது வேறு.

ஆன்மீகவாதிகளும் லௌகீகவாதிகளும் இவ்வுலகில்தான் வாழ்கின்றார்கள்.

ஆன்மீகவாதிகள் ஆண்டவருக்காக இவ்வுலகில் வாழ்கின்றார்கள்,

லௌகீக வாதிகள் உலகிற்காக இவ்வுலகில் வாழ்கின்றார்கள்.

ஆன்மீகவாதிகள் ஆண்டவரோடு பேரின்ப வாழ்வு வாழவேண்டிய 
விண்ணக வாழ்வுக்காக வாழ்கின்றார்கள்.

லௌகீக வாதிகள் விண்ணக வாழ்வைப் பற்றிக் கவலைப் படாமல் இவ்வுலகே சதம் என்று வாழ்கின்றார்கள்."


"அதாவது ஆன்மீகவாதிகள் இயேசுவோடு இருக்கிறார்கள்.

லௌகீக வாதிகள் அவருக்கு எதிராய் இருக்கிறார்கள்.

சரியா?"

", சரி. இவ்வுலகில் இயேசுவோடு வாழ்பவர்கள் என்றென்றும் அவரோடு வாழ்வார்கள்.  

இவ்வுலகில் இயேசுவுக்கு எதிராய்
 வாழ்பவர்கள் என்றென்றும் 
அவரில்லாமல் வாழ்வார்கள்.

அவரோடு வாழ்வது மோட்ச நிலை.

அவரில்லாமல் வாழ்வது நரக நிலை."

"இவ்வுலகில் இயேசுவோடு வாழ்வது என்றால்,

அவரது கட்டளைகளை அனுசரித்து,

பாவம் இல்லாமல்,

பரிசுத்தர்களாய் வாழ்வது.

கிறிஸ்தவர்கள் என்ற பெயருக்கு ஏற்றபடி வாழ வேண்டும்.

ஞானஸ்தானம் பெற்றுவிட்டு தங்கள் இஷ்டப்படி வாழ்கின்றவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.

 இயேசுவின் இஷ்டப்படி வாழ்கின்றவர்கள்தான் கிறிஸ்தவர்கள்.

தாத்தா, 'என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்' 

என்றால் என்ன அர்த்தம்?"

",இயேசு உலகில் வாழ்ந்தபோது நற்செய்தி அறிவித்ததின் மூலமாகவும், தனது வாழ்க்கையின் மூலமாகவும் 

மக்களைத் தன் பக்கம் ஈர்த்தார்.

இப்போது தனது சீடர்கள் மூலமாக அதே வேலையைச் செய்கிறார்.

இயேசுவை பின்பற்றுகிற ஒவ்வொருவருக்கும் அந்த கடமை இருக்கிறது.

வாய்மொழி வழியே நற்செய்தியை அறிவிப்பதில் மூலமாகவும்,

நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வதன் மூலமாகவும்,

 நாம் மக்களைச் சேகரிக்க வேண்டும்.

நல்ல கிறிஸ்தவர்களாக வாழாதவர்கள் தங்கள் துர்மாதிரிகையான வாழ்க்கை மூலம் மக்களை இயேசுவிடமிருந்து சிதறடிக்கிறார்கள்.

சேகரியாதவர்கள் சிதறடிக்கிறார்கள்.

சேகரியாமலும், சிதறடியாமலும் இருக்க முடியாது.

ஆகவே முன்மாதிரிகையான நல்ல வாழ்வு வாழ வேண்டியது ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமை."

"வீட்டுப் பாடம் படிக்காமல் பள்ளிக் கூடம் சென்றால் எங்கள் ஆசிரியர் கையில் இரண்டு அடி கொடுப்பார். 

ஒன்று பாடம் படிக்காமல் போனதற்கு.

இன்னொன்று துர்மாதிரிகையாய் இருந்ததற்கு."

", நற்செய்தியாளராகச் செயல் படாதவர்கள், அதன் மூலமாகவே சாத்தானாகச் செயல்படுவார்கள்.

 ஆகவே நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையின் மூலமாக நற்செய்தி பணி ஆற்றுபவராகச் செயல்படுவோம்.

இயேசுவோடு இருப்போம், இன்றும், என்றும், என்றென்றும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment