Thursday, April 1, 2021

இயேசு உயிர்த்தபின் தன் தாய்க்குக் காட்சி கொடுத்தாரா?

இயேசு உயிர்த்தபின் தன் தாய்க்குக் காட்சி கொடுத்தாரா?


"Hi, வணக்கம் இராயப்பரே!"

"வணக்கம். இன்று யாரை பார்க்க வேண்டும்? அம்மாவைத்தானே?"

"அது எப்படி உங்களுக்குத் தெரியும்?"

"திரும்பிப் பாருங்க."

"ஹை, அம்மா!"

"ஏண்டா, அங்க இங்க பார்க்க மாட்டியா? நீ வரும் முன்னாலே நான் இங்கேதான் இருக்கிறேன்.

நேரா இராயப்பர்ட்ட போய் மோதுற?"


"சொல்லுங்கம்மா. இந்த ஆள் தொல்லை தாங்க முடியல. வீட்ல நேரம் போகாவிட்டால் நேரே இங்கே வந்துவிடுகிறார்."


"அப்படி சொல்லாதீங்க இராயப்பரே. ஐயோ பாவம்! 36 வருசமா சின்னப் பிள்ளைகள் கூடவே பேசிக்கொண்டிருந்தவர்.

 ஓய்வு பெற்றபின் பேச ஆள் கிடைக்கல.

 அவர்தான் என்ன செய்வார்?

நேரம் போகாவிட்டால் நேரே அம்மாகிட்ட வாடா!

சரி வா, இப்படி உட்கார்.   உயிர்ப்பு திருநாள் வாழ்த்துக்கள்!"

".திருநாள் வாழ்த்துக்கள். இன்றைக்கு பார்த்து ஒருவன் என்னை mood out பண்ணிவிட்டான்.''

"ஏன்? என்ன நடந்தது?''

"அவன் கேட்கிறான்: இயேசுவே அவருடைய அம்மாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.நீங்க ஏண்டா அம்மா அம்மா என்று அலைந்து கொண்டிருக்கிறீர்கள்?

உயிர்த்த பின் மற்றவர்களுக்கெல்லாம் காட்சி கொடுத்த இயேசு 

அம்மாவுக்கு காட்சி கொடுத்ததாக பைபிளில் எங்கேயாவது சொல்லப்பட்டிருக்கிறதா?ன்னு
கேட்கிறான். 

நான் அவனுக்கு என்ன பதில் சொல்லட்டும்?''

"நான் சொல்வதை கவனி.

வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் இருட்டாயிருக்கும்பொழுதே, கல்லறைக்கு வந்த மதலேன் மரியாள் சீடர்களிடம் என்ன சொன்னாள்?"

""ஆண்டவரைக் கல்லறையிலிருந்து எடுத்துவிட்டனர்: அவரை எங்கே வைத்தனரோ, அறியோம்" என்று சொன்னாள்."


"உடனே அவர்கள் என்ன செய்தார்கள்?"

"இராயப்பரும், அருளப்பரும் கல்லறைக்கு ஓடினார்கள்."

"ஓடி?"

"குனிந்து உள்ளே பார்த்தார்கள்.''

"பார்த்து?"

"பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பினார்கள்."


"ஏன்?"

"இயேசு இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழவேண்டும் என்னும் மறைநூல் வாக்கை இதுவரை அவர்கள் உணரவில்லை."

"அதாவது?"

",மரித்த மூன்றாம் நாள் இயேசு உயிர்ப்பார் என்பதை அவர்கள் விசுவசிக்கவில்லை."

"விசுவாசம் இல்லாதவர்கள் அவரைத்தேடி கல்லறைக்கு போனார்கள்.

நான் கல்லறைக்குத்
 தேடிப் போனேனா?"

",இல்லை."

"ஏன்?"

"உங்களுக்கு உங்கள் மகன் மீது அசைக்க முடியாத முழுமையான விசுவாசம் இருந்தது.

இருந்தாலும் அப்போஸ்தலர்கள் படுமோசம்.

 மூன்று ஆண்டுகள் இயேசுவுடனே
 சுற்றி விட்டு அவருடைய வார்த்தைகளை விசுவசிக்கவில்லையே!

நீங்கள் விசுவசித்தீர்கள். ஆகவே அவரைத்தேடி கல்லறைக்கு போகவில்லை."

"நான் அவருடைய அம்மா டா!
இயேசு விண்ணகத்திலிருந்து மண்ணகத்திற்கு வந்த போது முதலில் யாரிடம் வந்தார்?"

", முதலில் உங்களிடம் தான் வந்தார். அதுவும் வான தூதர் மூலம் அறிவித்து விட்டு தான் வந்தார். பத்து மாதங்கள் உங்களது வயிற்றில் இருந்துவிட்டு தான் வெளி உலகத்திற்கு வந்தார்.

அப்போ இயேசு உயிர்த்த பின்பும் முதல் முதல் உங்களைப் பார்க்கத்தான் வந்தார். சரிதானா?"

"நான் சனிக்கிழமை இரவு முழுவதும் தூங்கவில்லை, உனக்கு தெரியுமா?

 எப்போது விடியும் என்று கண்விழித்து பார்த்துக்கொண்டே இருந்தேன். பொழுது புலரவும் இயேசு என் முன்னால் என்றார்.

அதன்பிறகும் என்னை அடிக்கடி பார்க்க வந்தார்."

", நீங்கள் உண்மையிலேயே பாக்கியசாலி. கொடுத்து வைத்தவர்கள்.

நாங்கள் கடவுளைத் தேடி அலைகிறோம். ஆனால் கடவுளே உங்களை தேடி வருகிறார்.

அவர் மனிதன் ஆனதே உங்களிடம் தான். வளர்ந்ததும் உங்களிடம் தான். அவர் உலகில் வாழ்ந்தது 33 ஆண்டுகள். அதில் 30 ஆண்டுகள் உங்களோடுதான் இருந்தார்.

பிறந்தவுடன் இருந்ததும் உங்கள் மடியில். 

கல்லறைக்குப் போகுமுன் இருந்ததும் உங்கள் மடியில்.

உங்களுக்கு அவர் முக்கியத்துவம் தரவில்லை என்று சொல்பவர்கள் முட்டாள்கள்."

"டேய் அப்படியெல்லாம் சொல்லாதே. மற்றவர்களை முட்டாள்கள் என்று அழைக்க நமக்கு அனுமதி இல்லை.

தன்னை காட்டிக் 
கொடுத்தவனையே 'நண்பனே' என்று அழைத்தவர் இயேசு.

நீ அவருடைய சீடன்."

",Sorryம்மா. உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்."

"என் முன்னாலேயே அவரை அடித்தார்கள், மிதித்தார்கள், துப்பினார்கள், சிலுவையைச் சுமக்க வைத்தார்கள், சிலுவையில் அறைந்தார்கள்.

நான் உணர்ச்சி வசப்பட்டேனா?"

",நீங்கள் கடவுளுடைய அம்மா.''

"நீ கடவுளுடைய பிள்ளை இல்லையோ?"

", நீங்கள் கடவுளை பத்து மாசம் வயிற்றில் சுமந்தீர்கள்."

"கடவுள் உன்னை நித்திய காலமாக தனது மனதில் சுமந்து கொண்டிருக்கிறார், தெரியுமா?"

", தெரியும். அவரால் எங்களை மறக்க முடியாது. 

கண் இமைக்கும் நேரம் மறந்தாலும் நாங்கள் ஒன்றும் இல்லாமல் ஆகி விடுவோம்.

 ஆனால் அவரால் யாரையும் மறக்கவே முடியாது."

"வேறு ஏதாவது கேட்க வேண்டுமா?"

", எனது வேலையே கேட்கிறது தானே. கேட்டாத்தானே கிடைக்கும்.

இயேசு உயிர்த்த நாற்பதாவது நாள் விண்ணகத்திற்கு எழுந்தருளினார் என்று பைபிளில் கூறப்பட்டிருக்கிறது.

அப்படியானால் மோட்சம் ஆகாயங்களுக்கு மேலேயா இருக்கிறது?"

", உங்களது உலக அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் பைபிளில் கூறப்பட்டிருந்தால் 

அதை புரிந்துகொள்ளக்கூடிய விதமாய் புரிந்துகொள்ளவேண்டும்.

எழுத்துப்படி (literally) பொருள் கொள்ள கூடாது. 

இவ்வுலகிலுள்ள யாருக்கும் மோட்ச அனுபவம் கிடையாது.

உலக அனுபவப்படி மோட்சத்தை விவரிக்க முடியாது.

ஆகாயங்களுக்கு மேலே இருப்பதற்கு மோட்சம் ஒரு இடம் அல்ல.

உலகில் சகல வாழ்க்கை வசதிகளையும் கொண்ட ஒரு பெரிய அரண்மனையைப் போல மோட்சத்தை கற்பனை செய்யக்கூடாது.

அது ஒரு வாழ்க்கை நிலை."

", புரியுது. 

Heaven is a spiritual state of life,    

 not a material place.

நாங்கள் மரணம் அடைந்தால் எங்கள் ஆன்மா அந்த வினாடியே விண்ணக நிலையை அடையும்.

இயேசு மரித்தவுடன்?"

"இயேசு கடவுள். தேவசுபாவத்தில் அவர் நித்திய காலமாக விண்ணக நிலையில்தான் இருக்கிறார்.

அவரது மனித ஆன்மா மனித உடலைப் பிரிந்தவுடன் அவர் எதற்காக மரித்தாரோ அது நிறைவேறியது."

", அதாவது?"

"அதாவது, மனுக்குலத்திற்கு மீட்பு கிடைத்தது.

இயேசு மரித்தவுடன் மீட்புக்காக காத்திருந்த அத்தனை பழைய ஏற்பாட்டு ஆன்மாக்களும் விண்ணக நிலையை அடைந்தன.

இயேசு, "இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்" என்று யாரிடம் சொன்னார்?"


", நல்ல கள்ளனிடம். அப்படியானால் அவனும் இறந்தவுடன் விண்ணகம் போயிருப்பான்."

"கடவுளே வாக்கு கொடுத்து விட்டாரே!"

", அப்படியானால் அவர் உயிர்க்கும் வரை அவரது உடல் மண்ணிலும் ஆன்மா விண்ணிலும் இருந்திருக்கும்."

"ஆமா."

", உயிர்த்த பின்?"

"உயிர்க்கும் போது சட உடல் ஆன்மீக உடலாக (Spiritual body) மாறிவிடும்.

ஆன்மீக உடல் விண்ணக நிலையைச் சேர்ந்தது.

சட உலகைச் (Material world) சார்ந்தது அல்ல.

விண்ணக நிலையில் இருந்து கொண்டே 40 நாட்கள் எனக்கும், அப்போஸ்தலர்களுக்கும் அவ்வப்போது காட்சி தந்தார்.

40 நாட்களுக்குப் பிறகு விண்ணக நிலையிலேயே இருந்துவிட்டார்.

அதே சமயத்தில் திவ்ய நற்கருணை மூலமாக 

 எனது வயிற்றில் உருவான அதே உடலோடும் அவருடைய ஆன்மாவோடும் உலகிலும் இன்னும் இருக்கின்றார்."

", அதாவது இயேசு இப்போது விண்ணகத்திலும் இருக்கிறார். மண்ணகத்திலும் இருக்கிறார்."

"மண்ணகத்திலும் இருப்பதற்காகத்தான் அவர் தனது பாடுகளுக்கு முன்பு திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்."

", அம்மா, நீங்கள் பாக்கியசாலி.
உங்கள் மகனைப் போலவே நீங்களும் விண்ணகத்தில் ஆன்மாவோடும் சரீரத்தோடு இருக்கிறீர்கள்."

" உலகில் வாழும் நீங்களும் பாக்கியசாலிகள்தான்.

நான் ஒரு பத்து மாதம்தான் இயேசுவை வயிற்றில் சுமந்தேன்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் நான் பெற்றெடுத்த அதே மகனை உணவாக உண்ணும் பாக்கியம் பெற்றிருக்கிறீர்களே!"

", இயேசு விண்ணகம் எய்திய பின் நீங்களும் அப்போஸ்தலர்கள் மூலமாக இயேசுவை உணவாக பெற்று உண்டிருப்பீர்கள்!

அம்மா, உயிர்ப்புத் திருநாள் வாழ்த்துக்கள்!"

"அம்மாவின் வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் எப்போதும் உண்டு!"

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment