Monday, December 28, 2020

வாழ்நாளைல்லாம் கிறிஸ்மஸ்.

    வாழ்நாளெல்லாம் கிறிஸ்மஸ்.


" என்னடா ஆழ்ந்த சிந்தனை? கிறிஸ்மஸ் நல்லபடியா முடிஞ்சு போச்சுல்ல.

அடுத்து ஈஸ்டருக்கு இப்போவே plan போடுறியா? "


"என்ன சொன்ன? கிறிஸ்மஸ் முடிஞ்சு போச்சா?

என்னமோ இன்றைய வியாபாரம் நல்லபடியா முடிஞ்சு போச்சுன்னு சொல்றது மாதிரி சொல்ற!"

"ஆமா. அதுல என்ன தப்பு? 

டிசம்பர் 25 கிறிஸ்மஸ். இன்றைக்கு டிசம்பர் 29,

கிறிஸ்மஸ் முடிந்து 3 நாள் போய் இன்று 4வது நாள்."

"உனக்கு கல்யாணம் முடிஞ்சி போச்சா?'

"என்னடா கேள்வி இது? என்னுடைய மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இதோ எனது பக்கத்தில இருக்காங்க. கண்ணு தெரியல?"

"ஏண்டா, உன்னுடைய மனைவியும், இரண்டு பிள்ளைகளும் எங்கே இருக்காங்கன்னா கேட்டேன்?"


"கல்யாணம் முடியாம எப்படிடா மனைவியும், பிள்ளைகளும் வருவாங்க?"

"ஏம்மா, உன் புருசன் சொன்னதக் கேட்டியா?"

''அவர் இப்படித்தான் ஏதாவது கிறுக்குத்தனமான உளருவாரு.

 முதல் இரவு அன்று முதல் வார்த்தையா , 'அப்போ நமக்கு கல்யாணம் முடிஞ்சு போச்சு. இப்போ சந்தோஷமா?'ன்னு கேட்டாரு.''

"ஆமா. நான் கேட்டதில் என்ன தப்பு? நாலு வருஷம் காதலிச்சோம். எங்க காதல் நல்ல படியா கல்யாணத்துல முடிந்தது."

"கேட்டீங்களா உங்க friend சொல்றத? அப்போ இப்போ காதல் இல்ல, அப்படித்தானே?"

"உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை? முடிஞ்சு போச்சுன்னு சொல்லக்கூடாதா?''

"முடிஞ்சு போச்சுன்னா அது அப்புறம் இருக்காதுன்னு அர்த்தம்.

கல்யாணம் ஆகிவிட்டது என்று சொல்ல வேண்டியது தானே?"

"கிறிஸ்மஸ் முடிஞ்சு போச்சான்னு கேட்டதுக்கு இவ்வளவு விளக்கமா? 

25ம் தேதி கிறிஸ்மஸ். இன்று 29ம் தேதி கிறிஸ்மஸ் இல்லை.
இனி அடுத்த ஆண்டு தானே."

"கிறிஸ்மஸ் ஒரு நிகழ்ச்சி அல்ல, முடிந்து போக.

கிறிஸ்மஸ் ஒரு உண்மை. உண்மைக்கு முடிவு இல்லை.

"நானே வழியும் உண்மையும் உயிரும்" இன்று இயேசுவே கூறியிருக்கிறார்."

"புரியவில்லை. கிறிஸ்து பிறந்தநாள் ஆண்டுக்கு ஒருமுறை தானே வரும்."

"கிறிஸ்து பிறந்தநாள் ஆண்டுக்கு ஒருமுறை தான் வரும்.


ஆனால் கிறிஸ்து ஆண்டுக்கு ஒரு முறையா வருவார்?

விழா கிறிஸ்துவுக்கா? நாளுக்கா?

நாள் வரும், போகும்.

ஆனால் ஒரு முறை நம்மிடம் வரும் கிறிஸ்து நம்முடனே தங்கவேண்டும்.

கிறிஸ்து நம்மிடம் இருக்கும்போதுதான் நாம் கிறிஸ்தவர்கள்."

"கிறிஸ்து கடவுள்தானே. கடவுள்தான் எங்கும் இருக்கிறாரே. நம்மிடமும் இருக்கிறாரே. பிறகு ஏன்
'இருக்கும்போதுதான்' என்கிறாய்?"

"டேய் பொடியா, உங்க வீட்டில கார் இருக்கா?"

"கார் இருக்கு, ஆனால் எனக்கு ஓட்டத் தெரியாது."

"அப்போ காரை எடுத்துக்கொண்டு வா என்று சொன்னால் உன்னால் எடுத்துக்கொண்டு வர முடியாது."

"முடியாது."

"அப்போ காரின் முழு பயனையும் உன்னால் அனுபவிக்க முடியாது."

"முடியாது."

" உன்னுடைய அப்பாவிடம் சொல்லு.''

"என்ன சொல்ல வேண்டும்?"


"கடவுள் எல்லோரிடமும் இருக்கிறார். அவரை நாம் அனுபவிக்கா விட்டால் இருந்தும் இல்லாதது மாதிரிதான்."

"சார் சொன்னது உங்களுக்குக் கேட்டுதா அப்பா?"

"கேட்டுது கேட்டுது. 

கிறிஸ்து நம்மிடம் இருக்கிறார். ஆனால் அவரது பண்புகள் நம்மிடம் இருந்தால் தான் நம்மிடம் கிறிஸ்தவம் இருக்கும்,

 கிறிஸ்தவம் இருந்தால்தான் நாம் கிறிஸ்தவர்கள்.

இதை உனது சாரிடம் சொல்லு."


"கிறிஸ்து 2020 ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் பிறந்து விட்டார்.

 ஆனால் நம் ஒவ்வொருவருள்ளும் அவர் பிறக்க வேண்டும்.

 அவரது பண்புகள் நம்முடைய பண்புகளாக மாறும்போதுதான் அவர் நம்மிடம் பிறப்பதாக அர்த்தம்.
'
 நம்மிடம் கிறிஸ்து பிறந்துவிட்டாரா? அல்லது பிறந்து கொண்டே இருக்கிறாரா?"


"அதென்ன பிறந்து கொண்டே இருக்கிறாரா?"

"அவருடைய எல்லாப் பண்புகளும் நம்மிடம் இருந்தால் அவர் நம்மிடம் பிறந்து விட்டதாக அர்த்தம்.

அன்னை மரியாளிடம் கிறிஸ்துவின் பண்புகள் பரிபூரணமாக இருந்தன.

அதனால்தான் அவளை நாம் அருள் நிறைந்தவள் என்கிறோம்.

நம்மைப் பொறுத்த மட்டில் கிறிஸ்துவின் பண்புகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாக கிரகித்து நமது ஆக்கிக் கொண்டிருக்கிறோம். அதாவது இயேசு நம்மிடம் பிறந்து கொண்டே இருக்கிறார்."

"நீ சொல்றதைப் பார்த்தா நமக்கு வாழ்நாளில் ஒவ்வொரு வினாடியும் கிறிஸ்மஸ்தான்."

"கிறிஸ்மஸ்தான் நமது வாழ்க்கை.

கிறிஸ்துவின் அன்பு, இரக்கம், பரிவு, தாராள குணம், சாந்தம், மன்னிக்கும் பண்பு, எளிமை etc. etc. போன்ற பண்புகள் எல்லாம் நமது பண்புகளாகவும் மாற வேண்டும்.

ஒவ்வொரு பண்பிலும் நாம் வளர வேண்டும். 

வளர்ச்சிக்கு எல்கை கிடையாது. 
.
வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வினாடியும் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

ஒரு அணு அளவு வளர்ந்தாலும், அந்த அளவு கிறிஸ்து நம்மில் பிறக்கிறார்.

அந்த அளவு நாம் கிறிஸ்துவாக மாறிக் கொண்டிருக்கிறோம்.

இயேசுவின் சாயல் நம்மில் மெருகு ஏறிக் கொண்டேயிருக்கும்.

நாம் விண்ணில் பிறக்கும் வரை கிறிஸ்து நம்மில் பிறந்து கொண்டிருப்பார்.

வாழ்நாளைல்லாம் Happy Christmas பாடுவோம்.

லூர்து செல்வம்.

2 comments:

  1. கிறிஸ்துவாய் ஒவ்வொரு நாளும் வா முயல்வோம்

    ReplyDelete
  2. கிறிஸ்துவாய் ஒவ்வொரு நாளும் வா முயல்வோம்

    ReplyDelete