Thursday, December 17, 2020

"யாருக்கு அதிகக் கடனை மன்னித்தானோ அவன்தான் என்று நினைக்கிறேன்" (லூக்.7:43)(தொடர்ச்சி)

http://lrdselvam.blogspot.com/2020/12/743_19.html


"யாருக்கு அதிகக் கடனை மன்னித்தானோ அவன்தான் என்று நினைக்கிறேன்" 
(லூக்.7:43)

(தொடர்ச்சி)



காய்கறிகளுக்குப் பரிசு மோட்சம்!


"இயேசுவின் மரணத்திற்குக் காரணமானவர்கள் அனைவரும் இங்கே தான் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்."

" ஹலோ, மிஸ்டர், இங்கே கொஞ்சம் பாருங்க.

இயேசுவுக் மரணத் தீர்ப்பு அளித்த போஞ்சு பிலாத்து. (Pontius Pilate)"

"ஏதோ இயேசுவிற்கு தின்பண்டம் வாங்கி கொடுத்த போஞ்சு பிலாத்து என்று சொல்வதுபோல் சொல்கிறீர்கள்!"

"உண்மையத்தான் சொன்னேன். இது அவருடைய மனைவி

கிலவுதியா ப்ரோகுலா (Claudia Procula).".

"கிலவுதியா! ஏற்கனவே கேள்விப்பட்ட பெயர் போல் இருக்கிறதே!"

"பைபிளில் வாசித்திருப்பீர்கள்.
சின்னப்பர் திமோத்தியுவுக்கு எழுதிய இரண்டாவது திருமுகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கிலவுதியா நான்தான்.
(2 திமோத்தி. 4:21)

என் கணவர் நான் சொல்லியும் கேளாமல் இயேசுவுக்கு மரண தீர்ப்பு அளித்துவிட்டார்.

சவுலை சின்னப்பராக மாற்றிய அதே இயேசு கிறிஸ்து 

என் கணவரையும் என்னையும் அவருக்காக உயிரை கொடுக்கக்கூடிய அளவுக்கு
.
 துணிச்சலான கிறிஸ்தவர்களாக மாற்றினார்."

"நீங்கள் இருவரும் வேதசாட்சிகளாகவா மரித்து மோட்சத்திற்கு வந்தீர்கள்?"

"ஆமா! நீரோ மன்னன் ஆட்சியில் இருவருமே ஆண்டவருக்காக உயிரைக் கொடுத்தோம்.

இயேசுவின் மரணத்திற்கு காரணமாய் இருந்த என் கணவர், அதே இயேசுவுக்காக தன் உயிரையே கொடுத்து 

தான் செய்த பாவத்துக்கு பிராயசித்தம் செய்தார்.

தீமையிலிருந்து நன்மையை வரவழைக்கும் சர்வ வல்லவ தேவன்

 எனது கணவர் செய்த பாவத்திலிருந்து மனுக்குலதற்கே மீட்பை வரவழைத்திருக்கிறார்."

"நல்ல கள்ளன் தான் குழந்தை இயேசுவுக்குக் கொடுத்த ஒரு முத்தத்திற்காக மோட்சத்தைப் பரிசாக பெற்றதாக சொல்கிறார்.

உங்களுக்கும் இயேசுவோடு பழைய அனுபவம் ஏதாவது இருக்கிறதா?"


"மக்கள் தொகையைக் கணக்கிடும்படி செசார் அகுஸ்துவிடமிருந்து கட்டளை பிறந்த நேரம்.

அது சம்பந்தப்பட்ட பொறுப்புகளோடு எனது தந்தை குடும்பத்தோடு பெத்லகேம் நகருக்கு வந்திருந்தார்.

அப்போது எனக்கு வயசு பன்னிரெண்டு

ஒரு நாள் மாலையில் என்னுடைய அம்மா என்னிடம் கொஞ்சம் பணம் தந்து பக்கத்து ஊருக்கு போய் சமையலுக்கு காய்கறிகள் வாங்கி வரும்படி அனுப்பினார்கள்கள். 

  சத்திரத்திற்கு முன்னால் நடந்து போய் கொண்டிருந்தேன்.

ஒரு வயதான பெரியவர் நிறை மாத கர்ப்பிணி போல் தோன்றிய ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு சத்திரத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்.

வெளியே நின்று கொண்டிருந்த கழுதையின் மீது பெண்ணை ஏற்றி உட்கார வைத்து தெருவிற்கு வந்தார்.

எனது அருகில் அவர்கள் வந்தபோது அந்த பெண்மணி பெரியவரிடம், 

"ஊருக்குள் தங்குவதற்கு இடம் கிடைப்பது மாதிரி தெரியவில்லை.

 நாம் வந்து கொண்டிருந்த பொழுது ஊருக்கு வெளியே ஒரு மாட்டு தொழுவத்தை பார்த்தது ஞாபகம் இருக்கிறதா?"

"நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. அங்கேதான் உனது மகன் பிறக்க வேண்டும் என்று இறைவனுக்கு சித்தமானால் அங்கேயே செல்வோம்."

எனக்கு பாவமாய் இருந்தது. நிறைமாத கர்ப்பிணி குழந்தை பெறுவதற்குக் கூட இடம் கிடைக்காமல் தொழுவதற்கு போகப் போகிறார்கள்.

12 வயது பையனால் அவர்களுக்கு எப்படி உதவ முடியும்?

அவர்களை பின் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தேன்.

ஊருக்கு வெளியேஇருந்த மாட்டுக் தொழுவை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்.
'
அப்போதும் மாலை நேரம். இருட்டு நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.

நான் பக்கத்து ஊருக்கு ஓட்டமும் நடையுமாக சென்று காய்கறி வாங்கி விட்டு திரும்பும்போது நன்கு இருட்டிவிட்டது.

வரவர அந்த தாயைப் பற்றியே நினைத்துக்கொண்டு வந்தேன்.

நம்மால் எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என்று நினைத்து வருந்தினேன்.

வரும்போது நடைபாதையை விட்டு கொஞ்சம் தள்ளி இருந்த மாட்டுத் தொழுவை நோக்கினேன்.

உள்ளே பிரகாசமான ஒளி ஒன்று தெரிந்தது.  

உலகு சம்பந்தப்பட்ட எந்த தீபம் ஏற்றினாலும் இவ்வளவு ஒளி இருக்க வாய்ப்பில்லை.

ஏதாவது தெய்வீக ஒளியாகத்தான் இருக்க வேண்டும்.


தொழுவை நோக்கி நடந்தேன்.  

உள்ள சென்றேன்.

தொழுவத்தின் தீவனத் தொட்டியில் ஒரு குழந்தை படுத்திருந்தது.

அருகில் சென்று அதன் முகத்தை உற்று நோக்கினேன்.

வெகுநேரம் அதன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

குழந்தை என்னை நோக்கி கை கால்களை உயர்த்தி ஆட்டிச்
 சிரித்தது.

குழந்தைக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும். என்னிடம் காய்கறிகள் மட்டுமே இருந்தன.

அவற்றை பையோடு குழந்தையின் கால் மாட்டில் வைத்தேன்.

குழந்தையின் தாயிடம் வந்து,
'
"அம்மா, குழந்தைக்கு என்ன பெயரிடப் போகிறீர்கள்?"

"இயேசு என்று பெயரிட வேண்டும்."

"கடவுளே மனிதனாகப் பிறந்தது போல் இருக்கிறது. 

இவ்வளவு அழகான பிரகாசமாக முகத்தை எங்கும் நான் பார்த்ததே இல்லை"

என்று அம்மாவிடம் சொன்னேன்.

அப்போது சில இடையர்கள் தொழுவுக்குள்ளே வந்துகொண்டிருந்தார்கள்.

"உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார் என்று விண்ணிலிருந்து செய்தி வந்தது.

 அவரை பார்த்து ஆராதிக்க வந்தோம்"

 என்று சொல்லிக்கொண்டே குழந்தையின் முன் முழங்கால் படியிட்டு ஆராதித்தார்கள்.

அவர்களோடு நானும் முழங்கால் படியிட்டேன்.

குழந்தையை மனதார வாழ்த்தினேன்.

 இயேசுவை வாழ்த்திய அதே வாயால் அவருக்கு மரணத் தீர்ப்பிடுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

யூத குருக்கள் அவரை என்னிடம் அழைத்து வந்து அவருக்கு மரண தீர்ப்பிட வேண்டும் என்று கேட்டபோது,

என் மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது.


அவர்கள் அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யானவை என்று எனக்கு தெரியும்.

குற்றமே செய்யாத அவருக்கு எப்படி மரண தீர்ப்பு கூற முடியும்?

அவர் கலிலேயர் என்பதை அறிந்ததும் நான் தப்பித்துக் கொள்வதற்காக அவரை ஏரோதிடம் அனுப்பினேன்.

ஆனால் அவர் என்னிடமே திருப்பியனுப்பி விட்டார்.

இயேசுவைத் தீர்ப்பிட எனக்கு மனது இல்லாவிட்டாலும் 


 யூதர்கள் கத்திக் கொண்டே இருந்ததால் வேறு வழியே இல்லாமல் அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டேன்."

"மனது இல்லாவிட்டாலும இயேசுவுக்கு விரோதமாக செயல்பட்ட உங்களை எப்படி மோட்சத்திற்குள் அனுமதித்தார்?"

"அவர் சிறு குழந்தையாய் இருக்கும்பொழுது அவரை வாழ்த்தி காய்கறிகளை பரிசாக கொடுத்ததை நினைத்து பார்த்து இருப்பார்.

அவ காய்கறிகளைப் பார்த்திருக்க மாட்டார் என்னுடைய குழந்தை மனதை பார்த்திருப்பார்.

"என் சீடன் என்பதற்காக இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(மத்.10:42)

என்று சொன்னவர் அவர்

எனது சிறிய நற்செயலுக்காக எனது பெரிய பாவத்தை மன்னித்து இருப்பார் என்று நினைக்கிறேன்.

அது மட்டுமல்ல. அவர் கடவுள்.

மனுக்குலம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக தன் உயிரையே பலியாக்கவே 
மனிதனாகப் பிறந்தவர்.

நான் அவரை முதலில் சந்தித்தபோதே நான்தான் அவருக்கு மரண தீர்ப்பிடப் போகிறவர் என்று 
தெரிந்திருக்குமே. 

இருந்தாலும் என்னைப் பார்த்து சிரித்தாரே!

நான் அவருக்கு மரண தீர்ப்பிட்டது என் மனைவிக்கு பிடிக்கவில்லை.

 எனது மனைவிக்காக என்னை மன்னித்திருப்பார்.

எல்லாவற்றுக்கும் மேலாக 

தீமை செய்தவருக்கு நன்மை செய்யுங்கள்

 என்ற தனது போதனைக்கு செயல்வடிவம் கொடுத்து, 

 மன்னிப்பு பெற தகுதியற்ற என்னை மன்னித்திருப்பார்."

"என் கணவர் இயேசுவை விசாரித்துக் கொண்டிருந்தபோது

 இயேசுவுக்கு மரணத் தீர்ப்பிடாதபடி தடுக்க எவ்வளவோ முயன்றேன்.

முடியவில்லை.

ஆனாலும் இயேசு எங்களுக்கு நல்வழி காட்டினார்.

என்னது கணவனின் பதவி காலம் முடிந்தபின் அரசன் அவரை நாடு கடத்தி விட்டான்.

நாங்கள் இருவருமே எங்களது பாவங்களுக்காக வருந்தி ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவர்களாக மாறினோம்.

 புற இன மக்களின் அப்போஸ்தலரான புனித சின்னப்பர் தான் எனக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.

இருவருமே நீரோ மன்னன் ஆட்சி காலத்தில் வேத சாட்சிகளாக மரித்தோம்.

இயேசு சிலுவையில் தொங்கி கொண்டிருந்த போது அவரது மரணத்திற்கு காரணமானவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டிய ஜெபத்தினால் 

தந்தை இறைவன் எங்களது பாவங்களை மன்னித்து ஏற்றுக் கொண்டார்."

".ஆச்சரியமாக இருக்கிறது.

இறைவனால் மட்டுமே இப்படி செய்ய முடியும்.

பாவமே செய்யாமல் மோட்சத்திற்கு வந்தவர்களை விட 

பெரிய பெரிய பாவங்கள் செய்து, மனந்திரும்பி, மோட்சத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்."

" நினைப்பது என்ன, உண்மையும் அதுதான்.

பாவமே செய்யாதவர்களுக்கு மட்டும்தான் மோட்சம் என்றால்

 அன்னை மரியாள் மட்டும் தான் இங்கு வந்திருக்க முடியும்."

"இயேசுவின் அன்பு ஒரு தாயின் அன்பைப் போன்றது.

தாய் சுகமாய் இருக்கும் பிள்ளையை விட

 நோயோடு இருக்கும் பிள்ளையைத்தான் அதிகம் கவனிப்பார்.

"நீதிமான்களை அன்று, மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்"
(லூக்.5:32)
என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்."

விண்ணகத்தில் நடந்த இந்த உரையாடலை கேட்ட நமக்குப் புரிய வேண்டியது:

கிறிஸ்மஸ் விழா பாவிகளுக்கான விழா.

அதாவது பாவிகளை பரிசுத்தமானவர்களாக மாற்றும் விழா.

நாம் எல்லோரும் பாவிகள்.

 கிறிஸ்மசை மகிழ்ச்சியுடன் கொண்டாட முழுத் தகுதி பெற்றவர்கள்.


அழுக்குடன் அருவியில் குளித்துவிட்டு அழுக்கு நீங்கி சுத்தமாக வெளியே வருவது போல், 

நமது பாவங்களை எல்லாம் இயேசு பாலனின் பாதங்களில் போட்டுவிட்டு பரிசுத்தராய் வெளியே வருவோம்.

லூர்து செல்வம்.

'

No comments:

Post a Comment