Thursday, December 17, 2020

"யாருக்கு அதிகக் கடனை மன்னித்தானோ அவன்தான் என்று நினைக்கிறேன்" (லூக்.7:43)(தொடர்ச்சி)

http://lrdselvam.blogspot.com/2020/12/743_17.html


"யாருக்கு அதிகக் கடனை மன்னித்தானோ அவன்தான் என்று நினைக்கிறேன்" 
(லூக்.7:43)

(தொடர்ச்சி)



ஒரு முத்தத்திற்கு கிடைத்த பரிசு மோட்சம். 



"ஹலோ! நல்ல கள்ளன்!"

என்று சொல்லிக்கொண்டே வாசலை நோக்கிப் புறப்பட்டவன் திரும்பவும் இராயப்பரிடம் வந்து, 

"நான் உடனே நல்ல கள்ளனைப் பார்த்தாக வேண்டும். மோட்சத்தில் எங்கே சென்று அவரைத் தேடுவேன்?"


"தேடிப் போக வேண்டிய அவசியமில்லை. யாரை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர் பக்கத்தில் நீங்கள் இருப்பீர்கள்."


"Thank you. "ஹலோ! நல்ல கள்ளன்!"

"நீங்கள் முதலில் என்னை கூப்பிட்டபோதே நான் உங்கள் அருகில்தான் இருக்கிறேன்.

நான் மோட்சத்திற்கு வந்தபின்னும் எனது திருட்டுப் பட்டம் மட்டும் போக மாட்டேன் என்கிறது!"

"அது எப்படி போகும்! நீங்கள் மோட்சத்தையே திருடியிருக்கிறீர்களே!"

"நீங்கள் என்னைப்பற்றி அப்படித்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

 ஆனால் உண்மையில் மோட்சம் ஒரு முத்தத்திற்கு எனக்கு கிடைத்த பரிசு என்று 

எனக்கும் இயேசுவுக்கும் மட்டும்தான் தெரியும்!"

"முத்தத்திற்கு கிடைத்த பரிசா?"

"ஆமா.நான் மரித்ததற்கு சரியாக 33 ஆண்டுகளுக்கு முன்னால் ஒருநாள்...

நான் எனது திருட்டு கும்பலோடு ஒரு காட்டில் சுற்றிக் கொண்டிருந்த நேரம்.

காலை ஒன்பது மணி இருக்கும்.

இரவு முழுதும் சுற்றியும் யாரும் அகப்படவில்லை. 

அங்கும் இங்கும் அலைந்து ஒரு குகை முன் வந்து நின்றோம்.

குகையின் நுழைவு பகுதி சிலந்தி வலையால் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தது.

குகைக்குள் யாரும் மாதக்கணக்காக நுழைந்திருக்க மாட்டார்கள்,

அங்கு சில படைவீரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

  அவர்களுள் ஒருவர் எங்களைப் பார்த்து,

" ஒரு வயதான தந்தையும், இளவயது மனைவியும், கைக்குழந்தையோடு இந்த வழியே போனதை பார்த்தீர்களா?"

"இல்லையே. எதற்காகத் தேடுகிறீர்கள்? ''

"அந்த குழந்தையை கொல்ல வேண்டும் என்பது அரசன் உத்தரவு."

"எதற்காக? குழந்தை என்ன குற்றம் செய்தது?"


"அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அரசனின் உத்தரவை நிறைவேற்ற வேண்டியது எங்களது கடமை."

".நாங்கள் யாரையும் பார்க்கவில்லை. இந்த குகைக்குள் சென்று பார்த்தீர்களா?"

"குகையின் நுழைவு பகுதியைப் பாருங்கள். யாரும் உள்ளே சமீபமாக நுழைந்திருக்க வாய்ப்பு இல்லை."

அவர்கள் சென்று விட்டார்கள் அவர்கள் போய் ஒரு கால் மணி நேரம் கழித்து குகைக்குள் இருந்து ஒரு கழுதை சிலந்தி வலையை பிய்த்துக் கொண்டு வெளியே வந்தது. 

எனக்கு ஆச்சரியமாய் இருந்தது இந்த கழுதை குகைக்குள் மாதக் கணக்காய் இருந்திருக்க வேண்டும்.

 அதைத் தொடர்ந்து ஒரு வயதானவரும் கைக்குழந்தையோடு ஒரு இளம்பெண்ணும் வந்து கொண்டிருந்தார்கள்.

நான் ஆச்சரியத்தோடு அவர்களைப் பார்த்து,

" எப்போது உள்ளே போனீர்கள்?"

".நேற்று மாலையில்."

நான் ஆச்சரியத்தோடு அவர்கள் அருகில் சென்று கைக்குழந்தையைப் பார்த்தேன்.

 மிகவும் அழகான குழந்தை,

 தெய்வீக புன்னகையோடு என்னை பார்த்து சிரித்தது.

 எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
'
 "அம்மா, இந்த குழந்தையை ஒரு நிமிடம் என் கையில் தருகிறீர்களா?"

 அந்தப் பெண்மணி தயங்காமல் குழந்தையை எனது கையில் தந்தார்கள். 

நான் குழந்தையை அரவணைத்து, அதன் காலில் ஒரு முத்தம் கொடுத்தேன்.


 நீங்கள் நம்பமாட்டீர்கள்,

 அந்த குழந்தை எனது கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தது.


குழந்தையை விட்டு பிரிய மனம் இல்லாமல் அதன் தாயிடம் கொடுத்தேன்.

"ஏல, குழந்தையின் கழுத்தில் ஏதாவது கிடக்கிறதா என்று பார்க்காமல் கொஞ்சிக் கொண்டிருக்கிறாய்?"

"அதன் முகத்தைப் பார்த்தால் வேறு எதுவும் தோன்றவில்லை."

" அப்போ நீ கொஞ்சிக் கொண்டே இரு,

   எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம்.

 பெரியவரே நாங்கள் திருடர்கள். உங்களைக் கொஞ்ச வரவில்லை.

 கையில் ஏதாவது இருந்தால் அப்படியே கொடுத்து விடுங்கள்.

அல்லது இந்த குழந்தையை நாங்களே எடுத்து படைவீரர்களிடம் சேர்த்து விடுவோம் .

அவர்களிடம் குழந்தைக்கு விலையாக பணத்தை வாங்கிக் கொள்கிறோம்."

 உடனே பெரியவர் சொன்னார், 

"நான் தச்சு வேலை செய்து பிழைப்பவன்,

  என்னிடம் இருப்பதை உங்களிடம் தந்துவிடுகிறேன்.

 குழந்தையை எதுவும் செய்துவிட வேண்டாம். நாங்கள் போகிற இடத்தில் தச்சு வேலை செய்து பிழைத்துக் கொள்வோம்."

"ஐயா பெரியவரே, நீங்கள் எதுவும் தரவேண்டாம்.

 போகலாம்.

 இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்." 

என்று அவர்களை அனுப்பி விட்டு,

"அவர்கள் குழந்தையை காப்பாற்றுவதற்காகவே நாடு விட்டு நாடு போகின்றவர்கள் போல் தெரிகிறது.

 ரொம்ப ஏழைகள் மாதிரியும் தெரிகிறது.

 அவர்களிடமுள்ள பைசாக்களை வாங்கி என்ன செய்யப் போகிறாய்?"

என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த பெண்மணி குழந்தையுடன் திரும்பி வந்து,

  "கடவுள் உங்களைக் காப்பாற்றுவார்"

 என்று சொல்லி விட்டு போனார்கள்.


நான் வாழ்நாளெல்லாம் திருட்டுத் தொழிலையே செய்து கொண்டிருந்தாலும்,

 அந்த குழந்தையின் 
புன்சிரிப்பையும், அது கொடுத்த முத்தத்தையும் என்னால் மறக்கவே முடியவில்லை.

சிலுவையில் என்னுடன் அறையப்பட்டிருப்பது இயேசு என்று எனக்கு தெரியும்.

 ஆனால் நான் முத்தம் கொடுத்த, எனக்கு முத்தம் கொடுத்த குழந்தைதான் அவர் என்று

  சிலுவையின் அடியில் நின்று கொண்டிருந்த தாயின் முகத்தை பார்த்தபின்தான் தெரியும்.

தெய்வக் குழந்தைக்கு நான் கொடுத்த முத்தத்துக்கு பரிசாக எனக்கு கிடைத்ததுதான் எனது மோட்ச வாழ்வு,

இப்போது சொல்லுங்கள் நான் மோட்சத்தை திருடி விட்டேனா என்று."

".நிச்சயமாக இல்லை. சிலுவை அடியில் நின்ற மாதா சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த உங்களைப் பார்த்தார்களா?"

"பார்த்தார்கள். கவலை நிறைந்த அவர்கள் முகத்திலும் என்னை பார்த்தவுடன் எட்டிப்பார்த்த புன்னகையை என்னால் மறக்கவே முடியாது.

மகன் சிலுவையில் மரித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது ஏற்பட்ட அளவிட முடியாத சோகத்தின் இடையேயும் 

நான் இயேசுவோடு விண்ணகத்திற்கு செல்லப் போகிறேன் என்று அறிந்து எனக்காக பட்ட மகிழ்ச்சியும் எட்டிப்பார்க்கிறது என்பதை நினைக்கும் போது 

தாயின் உள்ளத்தை நினைத்து மகிழாமல் இருக்க முடியாது.

 இயேசுவை மட்டுமல்ல என்னையும் அவர்கள் மகனாகத்தான் நினைத்து கொண்டிருந்திருக்கிறார்கள்."

"இயேசுவின் மரணத்திற்குக் காரணமானவர்கள் அனைவரும் இங்கே தான் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்."

" ஹலோ, மிஸ்டர், இங்கே கொஞ்சம் பாருங்க.

இயேசுவுக் மரணத் தீர்ப்பு அளித்த போஞ்சு பிலாத்து. (Pontius Pilate)"

(தொடரும்)

லூர்து செல்வம்.
"

No comments:

Post a Comment