Tuesday, January 24, 2023

"தாத்தா, கணக்குப் புரியாத மாணவன் ஆசிரியரிடம் விளக்கம் கேட்பது போல நான் உங்களிடம் கேட்கிறேன்."(நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி.)

"தாத்தா, கணக்குப் புரியாத மாணவன் ஆசிரியரிடம் விளக்கம் கேட்பது போல நான் உங்களிடம் கேட்கிறேன்."
(நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி.)

"தாத்தா, கணக்குப் புரியாத மாணவன் ஆசிரியரிடம் விளக்கம் கேட்பது போல நான் உங்களிடம் கேட்கிறேன்.

எனக்குப் புரியும் வகையில் உங்களது பதில் இருக்க வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறோம். 

நம்மைப் படைத்த கடவுளை நாம் நேசிக்க வேண்டும்.

ஆனால் நமது அயலானை நாம் ஏன் நேசிக்க வேண்டும்?"

"'கடவுள் நம்மை தனிப்பட்ட மனிதனாக மட்டும் படைக்கவில்லை,

ஒரு சமூகத்தின் உறுப்பினராகவும் படைத்திருக்கிறார்.

Man has been created by God as a social being.

ஆகவே நாம் நம்மைப் படைத்த கடவுளை நேசிப்பதோடு அவரால் படைக்கப்பட்ட சமூகத்தையும் நேசிக்க வேண்டும்.

சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் நம்மை போலவே கடவுளால் படைக்கப்பட்டவர்கள்.

நாம் ஒரு சமூகப் பிராணியாக இருப்பதால்தான், தனிப்பட்ட முறையில் இறைவனை வழிபடுவதோடு 

சமூகமாக இணைந்து கோவிலிலும்  வழிபடுகின்றோம்.

இறைவனை வழிபடுவது நமது ஆன்மா தான்.

ஆன்மாவின் உணர்வுகளை நமது உடல் பிரதிபலிக்கும்.

உடலின் பிரதிபலிப்பை வைத்துதான் ஆன்மாவின் உணர்வுகளின் தன்மையை அறிந்து கொள்ளலாம்."

"நின்று கொண்டு வழிபடுவதற்கும்,

 முழங்கால்படியிட்டு வழிபடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று நினைக்கிறேன்."

"'உறுதியாக. 

நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் செபிக்கலாம்.

ஆனால் இறைவனுக்கு மட்டுமே உரிய ஆராதனையைச் செய்யும்போது முழங்கால் படியிட்டே செய்ய வேண்டும்.

திவ்ய நற்கருணையின் முன் முழங்கால் படியிட்டு ஆராதிப்பது தான் முறை.

திவ்ய நற்கருணைப் பேழையைக் கடந்து செல்லும்போது,

அதன்முன் முழங்கால் படியிட்டுதான் இறைமகன் இயேசுவை  நாம் ஆராதிக்க வேண்டும்."

"அது உங்கள் காலத்தில், தாத்தா.
இப்போது காலம் மாறிவிட்டது.

உங்கள் காலத்தில் நீங்கள் பள்ளிக்கூடத்திற்கு நடந்து போயிருப்பீர்கள்.

இப்போது உங்கள் பேரன் நடந்து போவானா?

ஒரு மணி நேர நடை பயணத்தை பைக்கில் ஐந்து நிமிடத்தில் கடக்கும் காலம் இது.

ஒவ்வொரு முறையும் நற்கருணை பேழையைக் கடக்கும் போது முழங்கால் படியிட்டு எழுந்து சென்றால், பாவம், சக்ரஸ்டியன் என்ன செய்வார்?

சாமியார் பூசையை முடிக்க கூட பத்து நிமிடங்கள் ஆகும்.

நாம் வாழ்வது வேக யுகம். 

முழங்கால் படியிடுவதை விட தலையை மட்டும் வணங்கி சென்றால் மிச்சம் பிடிக்கும் நேரத்தில் வேறு எவ்வளவோ வேலைகள் செய்யலாமே."

"'பேரப்புள்ள, இப்போது நீ என்னோடு பேசிக் கொண்டிருப்பதை வீட்டில் இருந்து கொண்டு phoneல் 
பேசியிருக்கலாமே. நேரம் மிச்சமாகுமே."

''தாத்தா, நேரம் மிச்சம் ஆவதை விட நமது உறவு வளர்வதுதான் முக்கியம்.

நாம் முகத்தோடு முகம் பார்த்து பேசும்போது வளரும் உறவின் அளவுக்கு போனில் பேசினால் வளராது."

"'உள்ளத்தில் இருக்கும் பக்தியின் தன்மை உடலில் 
பிரதிபலிக்கும்போது தெரியும்.

உள்ளத்தில் நற்கருணை ஆண்டவரை ஏற்றுக்கொண்டு, அவரை உண்மையிலேயே ஆராதிக்க விரும்பினால்,

நமது முட்டு தானாகவே வளைந்து பூமியை நோக்கி செல்லும்.

உண்மையிலேயே உள்ளத்தில் பக்தி அதிகமானால் முழங்கால் படியிடு என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

முழங்கால் படியிட்டு ஆராதிப்பவன் தலையை மட்டும் வணங்கி ஆராதிக்க ஆரம்பித்தால் அவனது பக்தி குறைகிறது என்று தான் அர்த்தம்.

திவ்விய நற்கருணை விஷயத்தில் நாம் செய்யும் மாற்றங்கள் நற்கருணை பக்தியைக்' குறைக்கவே உதவுகின்றன.

மாற்றங்கள் பக்தியை அதிகரிக்க வேண்டும்.

பீடத்தின் மையத்தில் இருந்த நற்கருணைப் பேழையை ஒரு பக்கவாட்டில் மாற்றி வைத்திருப்பது எந்த வகையில் பக்தியை அதிகரிக்கிறது?

முழங்கால் படியிட்டு நாவில் வாங்கிய நற்கருணையை 
நட்டமாய் நின்று கொண்டு இடது கையால் வாங்குவது
எந்த அளவுக்கு நற்கருணை பக்தியை அதிகரிக்கிறது?"

"பக்தி மனதில் தானே இருக்க வேண்டும்!"

"'மரியாதை மனதில் தானே இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு

 வகுப்பிற்குள் ஆசிரியர் நுழையும்போது மாணவர்கள் எழுந்து நிற்காவிட்டால் 

அந்த மாணவர்கள் எப்படிப்பட்டவர்கள்?"

"தாத்தா, குருவானவர் 
நடுப்பூசையின்போது அப்பத்தை கையில் எடுத்து,

" இது என் சரீரம்"

 என்று சொல்லும் போது அப்பம் இயேசுவின் சரீரமாக மாறுகிறது. 

அதைக் குருவானவர் விசுவாசிகளுக்கு ஆன்மீக உணவாக அளிக்கிறார்.

நற்கருணைப் பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் ஓஸ்திகளின் எண்ணிக்கை விசுவாசிகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தால் சாமியார் என்ன செய்வார்?"

"'ஒரு ஓஸ்தியைப் பிரித்து எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாமே.

ஒவ்வொரு துண்டிலும் இயேசு முழுமையாக இருக்கிறார்.

துண்டில் மட்டுமல்ல ஓஸ்தியின் ஒவ்வொரு துகளிலும் இயேசு முழுமையாக இருக்கிறார்.
 
Jesus  is present whole and entire even in the smallest portion of the Holy Eucharist."

"தாத்தா, சுவாமியார் விசுவாசியின்  கையில் திவ்ய நற்கருணையை வைக்கும்போது

 அதிலுள்ள துகள்கள், ஒன்றோ, இரண்டோ, கையில் விழ வாய்ப்பு இருக்கிறதா?"

"" இருக்கிறது."

"கையில் உள்ள துகள்கள் தரையில் விழ வாய்ப்பு இருக்கிறதா?"

"" இருக்கிறது."

"தரையில் விழும் துகள்கள் அங்கே நடப்பவர்கள் கால்களில் மிதிபட வாய்ப்பு இருக்கிறதா?"

"" இருக்கிறது."

"அப்படி மிதி பட்டால் 
மிதிபடுபவர் 
நமது ஆண்டவராகிய இயேசு தானே.

 இது நற்கருணையைக் கொடுக்கும் சாமியாருக்கு தெரியுமா?"

"அதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.

பேரப்புள்ள, நான் 14 ஆண்டுகள் தேவ சாத்திரம் படிக்கவில்லை.

ஏதோ பள்ளிப் பருவத்தில் படித்த ஞானோபதேசத்திலிருந்தும், 

சுவாமியார் வைக்கிற பிரசங்கங்களிலிருந்தும் தெரிந்து கொண்டதை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறேன்.

நீ கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் 

படித்து குருப் பட்டம் பெற்ற,

திருச்சபையில் ஆளுமை அதிகாரம் கொண்ட குருக்களிடம்தான்  கேட்க வேண்டும்."

"தாத்தா, நான் தேவ சாத்திரம் சம்பத்தப்பட்ட கேள்வி கேட்கவில்லை.

நான் கேட்பது பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்வி.

அன்று சிலுவையின் பாரம் தாங்க மாட்டாமல் தரையில் விழுந்த அதே இயேசு,

இன்று நாம் செய்யும் தவற்றைத் தாங்க மாட்டாமல் நமது ஆலய தரையில் விழுந்திருக்கிறார்.

அவர் மேல் மக்கள் நடந்தால் மிதியப்படுபவர் அவர் தானே என்று

 அவரையே நமக்கு உணவாகத் தந்த  சாமியாருக்குத் தெரியுமா என்று தான் கேட்டேன்."

"'பேரப்பிள்ளை இயேசுவைக் கையில் வாங்குகிறவர்கள் நாம்,

  தரையில் போடுகிறவர்கள் நாம்,

ஏறி மிதிப்பவர்களும் நாம்.

இந்த உண்மை நமக்குதான் முதலில் தெரிய வேண்டும்.

இயேசுவை அவமானப்படுத்தும் எந்த செயலையும் நாம் செய்யக்கூடாது என்று நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

இத்தகைய அவமானம் இயேசுவுக்கு நேரிடக்கூடாது என்பதை நாம் உணர வேண்டும்.

உணர்ந்தால் நற்கருணையை கையில் வாங்க மாட்டோம், 

நாவில் தான் வாங்குவோம்.

நாம் நமது வாயைத் திறந்து, நாக்கை நீட்டினால் குருவானவர் நற்கருணையை அதில்தான் வைப்பார்.

கையில் வைக்க மாட்டார்.

முதலில் நாம் திருந்துவோம்.

இயேசுவை நாவில் வாங்குவோம்.

 சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அவரை ஆராதிப்போம்.

இன்னும் ஒரு முக்கியமான உண்மை.

நமது திருச்சபையை வழி நடத்துபவர் பரிசுத்த ஆவியானவர் தான்,  மனிதர்கள் அல்ல.

ஆகவே திருச்சபைக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம்.

குருவானவரைத் தாயாக நினைப்போம்.

அவர் தரும் ஆன்மீக உணவை நமது வாயிலையே வாங்குவோம்.

இயேசுவின் உடலை உண்ணும் நாம் அவரோடு என்றென்றும் இறையுலகில் வாழ்வோம்."

''சரி, தாத்தா. நான் நற்கருணையை நாவில் தான் வாங்குகிறேன்.

தொடர்ந்து நாவிலேயே வாங்குவேன்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment