Tuesday, January 17, 2023

ஓய்வுநாளில் எது செய்வது முறை? நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா?" (மாற்.3:4)

"ஓய்வுநாளில் எது செய்வது முறை? நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா?" (மாற்.3:4)


"தாத்தா, "கடவுள் தாம் ஏழாம் நாளிற்கு முன் செய்த வேலைகளையெல்லாம் முடித்து விட்டு ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார்."

"அவ்வேழாம் நாளை ஆசிர்வதித்துப் பரிசுத்தமாக்கினார்."

என்று பைபிள் சொல்கிறது.

கடவுளால் ஓய்வு எடுக்க முடியுமா?"


"'நிச்சயமாக முடியாது. கடவுள் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

 God is always active. 

நாம் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்த பின் ஏழாவது நாள் ஓய்வு எடுக்க வேண்டும்,

 அந்த ஓய்வு நாளை கடவுளுக்காகப் பயன்படுத்த வேண்டும் 

என்ற செய்தியை நமக்குத் தரவே இந்த வசனம் எழுதப்பட்டிருக்கிறது.

வசனங்கள் தரும் செய்தியை மட்டும் பார்க்க வேண்டும்.

அகராதிப்படி அர்த்தம் பார்த்து கொண்டிருக்க கூடாது."

"நாம் வாழ்வதே கடவுளுக்காகத் தானே.

ஓய்வு நாளில் விசேசமாக என்ன செய்ய வேண்டும் ?"

"'நாம் வாழும் ஒவ்வொரு வினாடியும் கடவுளுக்காகத்தான் வாழ்கிறோம்.

நாம் வாழ்வது முழுக்க முழுக்க ஆன்மீக வாழ்வு.

நமது உடலும் ஆன்மாவுக்காகத் தான் வாழ வேண்டும்.

உடல் வாழ உணவு, உடை, இருப்பிடம் போன்ற சில உலக சார்ந்த பொருட்கள் தேவைப்படுகின்றன.

இவற்றுக்காக பொருளை ஈட்ட வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்கிறோம்.

இதை ஆன்மாவுக்கு உதவும் உடலுக்காக செய்வதால் இதுவும் ஆன்மீகப் பணி தான்.

ஆனாலும் பொருள் ஈட்டும் பணிக்கு ஏழாவது நாள் ஓய்வு கொடுத்து விட வேண்டும்.

ஓய்வு நாளில் ஆன்மா சார்ந்த பணிகளை மட்டுமே செய்ய வேண்டும்.

பரிசேயர்கள் ஓய்வு நாள் விஷயத்தில் தேவைக்கு அதிகமான கண்டிப்புடன் இருந்தார்கள்.

இயேசு ஓய்வு நாளில் புதுமைகள் செய்ததை கூட அவர்கள் தவறு என்றார்கள்.

அவர்களைப் பார்த்து தான் ஆண்டவர்,

"ஓய்வுநாளில் எது செய்வது முறை? நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா?"
என்று கேட்கிறார். 

மனிதன் ஓய்வு நாளுக்காக படைக்கப்படவில்லை.

ஓய்வு நாள் மனிதனுக்காக படைக்கப்பட்டது.

ஓய்வு நாளில் ஆன்மாவிற்கு நன்மை பயக்கும் காரியங்களை செய்ய வேண்டும்.

அதற்காகத்தான் ஓய்வு நாள் படைக்கப்பட்டது."

"ஆன்மாவிற்கு நன்மை பயக்கும் என்ன நல்ல காரியங்களைச்
 செய்ய வேண்டும் என்று தாய் திருச்சபை கூறுகிறது?"


":ஆண்டவர் உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தான் நமக்கு ஓய்வு நாள்.

அன்று முழுத் திருப்பலியில் கலந்துகொண்டு ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

பரிசுத்தமான உள்ளத்தோடு திருவிருந்தில் கலந்து கொள்ள வேண்டும்.

முழு திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டுமானால் திருப்பலி ஆரம்பிக்க முன் சொல்லும் செப நேரத்தில் கோவிலுக்கு வந்து விட வேண்டும்.

தேவைப்பட்டால் பாவ சங்கீர்த்தனம் செய்ய அந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

திருப்பலி முடிந்த பின்னும் கொஞ்ச நேரம் கோவிலில் இருந்து

திரு விருந்தின் போது நம்மிடம் வந்த இயேசுவோடு பேசிக்கொண்டிருக்க வேண்டும்.

அதன் பின்பு தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

நற்கருணை அருந்திய உடன் கோவிலை விட்டு வெளியே செல்லக்கூடாது.

அது நம்மிடம் வந்த இறைவனுக்கு நாம் செய்யும் அவ மரியாதை.

சிலர் பிரசங்கம் முடிந்த பின் கோவிலுக்கு வந்து,

 நன்மை எடுத்தவுடன் ஓடி விடுவார்கள்.

திருப்பலி திருச்சபையின் அதிகாரப்பூர்வமான செப வழிபாடு.

Official prayer of the Church.    

அதில் அரைகுறையாய் கலந்து கொள்பவர்கள் திருப்பலியை அவமதிக்கிறார்கள்.

திருப்பலியை அவமதிப்பவர்கள் திருச்சபையையே அவமதிக்கிறார்கள்.

திருச்சபையை 
அவமதிப்பவர்கள் அதன் தலைவராகிய இயேசுவே அவமதிக்கிறார்கள்."

"தாத்தா திருப்பலி ஆரம்பிக்கும் போது கால்வாசி கோவிலில் தான் ஆட்கள் இருப்பார்கள்.

ஆனால் நற்கருணை கொடுக்க ஆரம்பிக்கும் போது கோவில் நிறைய ஆட்கள் இருப்பார்கள்.

நற்கருணை வாங்கியவுடன் சிலர் ஆண்டவரோடு கறிக்கடைக்குச் சென்று விடுவார்கள்."

"'ஆண்டவர் தன்னை தானே சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுப்பதற்கு முன்னால் மூன்று ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்தார்.

அதேபோல திருப்பலியை ஒப்புக் கொடுக்கும் குருவானவர்

நடுப்பூசைக்கு முன்னால்,

நற்செய்தி வாசகங்களை வாசித்து,

அவற்றுக்கு தனது பிரசங்கத்தில் விளக்கம் கொடுக்கிறார்.

நற்செய்தி வாசகங்களிலும், பிரசங்கத்திலும் மிகவும் கருத்தோடு கலந்து கொள்ள வேண்டும்.

எழுத வாசிக்க தெரியாதவர்களுக்கு குருவானவரின் பிரசங்கம் தான் பைபிள்.

குருவானவர் வைக்கும் பிரசங்கத்தின்படி வாழ்பவன் இயேசுவின் நற்செய்தியின் படி வாழ்கிறான்.

திருப்பலியோடு நமது ஓய்வு நாள் பணி முடிந்து விழவில்லை.

நன்கு சாப்பிடுவதற்கும்,
 TV பார்ப்பதற்கும்,
தூங்குவதற்கும் மட்டும் நமக்கு ஓய்வு நாள் தரப்படவில்லை.

அயலானுக்குப் பணிபுரிபவன் ஆண்டவருக்கே பணி புரிகிறான்.

திருப்பலியை நமது மீட்புக்காகவும், இறைவனால் படைக்கப்பட்ட நமது சகோதர சகோதரிகளின் மீட்புக்காகவும் 
ஒப்புக்கொடுத்து விட்டு,

பிறர் சிநேகப் பணியில் நாளை முழுவதும் ஈடுபட வேண்டும்.

நோயாளிகளை சந்தித்தல்,
கஷ்டப்படுபவர்களுக்கு ஆறுதல் கூறுதல்,
தேவைப்படுபவர்களுக்கு நம்மாலான உதவி செய்தல்

இன்னும் இது போன்ற பிறர் அன்பு பணிகளை நமது ஆண்டவருக்காக செய்ய வேண்டும். 

வாரத்தின் ஆறு நாட்கள் நாம் ஈட்டிய பொருள் கொண்டு

 விண்ணக வாழ்வுக்கான நண்பர்களை ஈட்டுவதற்காகவே நமக்கு ஏழாவது நாள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதை ஆண்டவர் விருப்பப்படி பயன்படுத்துவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment