Monday, May 10, 2021

"நான் தந்தையிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார்: அவர் தந்தையிடமிருந்து வரும் உண்மையின் ஆவியானவர். அவர் வந்து என்னைப்பற்றிச் சாட்சியம் கூறுவார்." (அரு.15:26)

"நான் தந்தையிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார்: அவர் தந்தையிடமிருந்து வரும் உண்மையின் ஆவியானவர். அவர் வந்து என்னைப்பற்றிச் சாட்சியம் கூறுவார்." (அரு.15:26)

வார்த்தைகளுக்கான  பொருள் வார்த்தைகளில் இல்லை. சொல்பவர்களிடம்தான் இருக்கிறது.

யார் எதைச் சொன்னாலும் சொல்பவர்களுடைய தன்மையை வைத்துதான் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு பொருள் காண வேண்டும்.

இயேசு என்ன சொன்னாலும் நமது அடிமனதில் அவர் பரிசுத்த  தமதிரித்துவத்தின் இரண்டாவது ஆள் என்பது மனதில் இருக்க வேண்டும்.

 தந்தை, மகன், தூய ஆவி மூவரும் பிரிக்க முடியாத ஒரே கடவுள் என்பது தமதிரித்துவ ரகசியம்.

underline 'பிரிக்க முடியாத.'

ஒரே கடவுளாக இருப்பதால் மூன்று ஆட்களும் பிரிக்க முடியாத அளவிற்கு ஒருவருள் ஒருவர் இருக்கின்றார்கள்.

 மகன் மனிதனாக பிறந்த பின்னும் அவருள் தந்தையும் இருக்கிறார், தூய ஆவியும் இருக்கிறார்.

அதனால் தான் இயேசு உயிர்த்த பின் அப்போஸ்தலர் களுக்கு காட்சி கொடுத்தபோது,

"பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

23 எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்: எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்" என்றார்." (அரு.20:23)

என்றார்.

அவர்கள்மேல் ஊதி, 

"பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்."

என்று சொன்னதிலிருந்து தூய ஆவி இயேசுவிற்குள் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.


"நான் தந்தையிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார்: அவர் தந்தையிடமிருந்து வரும் உண்மையின் ஆவியானவர். அவர் வந்து என்னைப்பற்றிச் சாட்சியம் கூறுவார்."

தன்னிடமே தூய ஆவி இருந்தாலும் இயேசு ஏன்,

"நான் தந்தையிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார்: "

என்று சொல்கிறார்?

இயேசுவின் ஒவ்வொரு  சொல்லுக்கும், செயலுக்கும்  ஒரு காரணமும், நோக்கமும் இருக்கும்.

ஆன்மீகவாதிகளிடம்  இருக்கவேண்டிய மிக முக்கியமான புண்ணியம் தாழ்ச்சி.

இயேசு நமக்கு போதிக்க 
வேண்டியவற்றை முதலில் அவரது செயல் மூலம் காட்டி, பிறகு வார்த்தைகளால்  விளக்குவார்.

தாழ்ச்சியை பற்றி நமக்கு போதிக்கு முன் அதை அவர் வாழ்ந்தே காண்பித்தார்.

சர்வ வல்ல தேவன் சர்வசாதாரணமான மனிதனாக பிறந்து நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்ததிலிலிருந்தே

மீட்புப் பெற தாழ்ச்சி என்ற புண்ணியம் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

தான் பிறப்பதற்கு இடம்தேடி சூசையப்பரை  அலைய விட்டிருக்க வேண்டாம். ஒரு நல்ல இடத்தையாவது காட்டிக் கொடுத்திருக்கலாம்.  

ஆனால் ஒரு மாட்டுத் தொழுவத்தையே காட்டிக் கொடுத்தார். மாட்டுச்சாண நாற்றத்திலேயே அவரும் பிறந்தார். நமக்கு பாடம் கற்பிப்பதற்காக.

நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த காலத்தில் உலகத்தையே படைத்தவருக்கு தலை சாய்க்கக் கூட சொந்த இடம் கிடைக்கவில்லை. நமக்கு பாடம் கற்பிப்பதற்காக.

வாழ்வின் இறுதிக் காலத்தில் படுப்பதற்கு ஒரு கட்டில் கூட கிடைக்கவில்லை. மரச் சிலுவை தான் கிடைத்தது. அதில்தான் உயிரையே விட்டார். நமக்கு பாடம் கற்பிப்பதற்காக.

மக்களிடம் தன்னை பற்றி பேசும்போதெல்லாம் தன் தந்தையை முன் நிறுத்தியே பேசினார்.

தந்தைக்கும் மகனுக்கும் ஒரே சித்தம் தான் என்று அவருக்கும் தெரியும், நமக்கும் தெரியும். 

ஆனாலும் தந்தையின் சித்தத்தையே நிறைவேற்ற வந்ததாக தன்னை தாழ்த்தி மக்களிடம் பேசினார்.


"என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, 

என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்." (அரு.6:38)

"என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்று செபித்தார்." (லூக்.22:42)

உண்மையிலேயே நாம் இயேசுவின் சீடர்களானால் இயேசுவிடமிருந்து மிக முக்கியமான பாடம் ஒன்றை கற்றுக் கொள்வோம்.

அளவற்ற வல்லமையில் மூன்று ஆட்களும் ஒரே கடவுளாக இருக்கின்ற நிலையிலேயே இறை மகன் தாழ்ச்சியுடன் தன் தந்தையை முன்னிறுத்தி பேசும் போது, 

இறைவன் முன் ஒன்றுமே இல்லாத நாம், இருப்பதையெல்லாம் இறைவனிடம் இருந்தே பெற்று கொண்ட நாம் 

நம்மைப் பற்றி என்ன கருத்து கொள்ள வேண்டும்?

உண்மையிலேயே இறைவன் முன் நாம் ஒன்றும் இல்லாதவர்கள்.

இறைவன்தான் நமக்கு எல்லாம் என்பதை ஏற்றுக்கொண்டு அவரது சித்தத்தை நிறைவேற்றுவதே நமது முழு கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டாமா?

நாம் வாழ்வது 100% இறைவனுக்காக மட்டுமே, நமக்காக 0% கூட இல்லை.

நம்மை வாழ வைத்துக் கொண்டிருப்பவர் முழுக்க முழுக்க இறைவன் தான் என்பதை ஏற்றுக் கொண்டால் 

நமக்கு என்ன நேர்ந்தாலும் அது நம்மை படைத்தவர் பாடு என்று எண்ணி நிம்மதியாக இருக்க மாட்டோமா?

நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ, என்ன நேர்ந்தாலும் இறைவன் சித்தம் என்று மகிழ்ச்சியாக இருக்க மாட்டோமா?

நமக்குப் பிடிக்காத ஒரு சிறு நிகழ்வு கூட நமது வாழ்வில் நடந்தால் 
கடவுளைப்பற்றி முணுமுணுக்க ஆரம்பித்துவிடுகிறோமே!

நான் செய்வதெல்லாம் தந்தையின் சித்தப்படிதான் என்று இயேசு கூறியதை போல

நாமும் நாம் செய்ய வேண்டியதெல்லாம் இறைவன் சித்தப்படி நடப்பது மட்டுமே என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தை

இயேசுவின் வார்த்தைகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.


"நான் தந்தையிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார்:"

என்று இயேசு கூறும் வார்த்தைகளுக்கு  பெந்தேகோஸ்தே திருநாள் அன்றுதான் தூய ஆவி  வருவார், தற்சமயம் அவர் உங்களோடு இல்லை என்று அர்த்தமா?

இல்லை.

இயேசு எங்கே இருக்கிறாரோ அங்கேயே பரிசுத்த ஆவியும் அவருடன் இருக்கிறார்.

இயேசுவும் தூய ஆவியும் ஒரே கடவுள்தான்.

மனிதனாகப் பிறந்தது   இறைமகன் மட்டுமே.

பாடுகள் பட்டது இறைமகன் மட்டுமே.

சிலுவையில் பலியானது இறைமகன் மட்டுமே.

ஆனால் மீட்புப்பணி மூவொரு தேவனின் பணி.

இயேசு மனிதனாக பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தது

மூவொரு தேவனின் நித்திய கால திட்டம்.

மூவொரு தேவன் எது எது எப்பபோ நடக்க வேண்டும் என்பதை நித்திய காலமாக திட்டமிடுகிறார்.

திட்டமிட்ட காலம் வந்தவுடன் இறைமகன் மனிதராகப் பிறந்தார்.

திட்டமிட்ட காலம் வந்தவுடன் இயேசு பாடுகள் பட்டு  மரித்தார்.

காலம் வரும் வரை அவரது விரோதிகளால் அவரை பிடிக்க முடியவில்லை.

அவர் பாடுகள் பட்டு மரித்தது மூவொரு தேவனின் திட்டப்படி தான், பரிசேயர்கள் திட்டப்படி அல்ல.

இயேசு மூன்று ஆண்டுகள் அப்போஸ்தலர்களுக்கு போதித்தது அவர்களுக்கு முற்றிலும் புரியவில்லை.  அவர்களது விசுவாசம் கூட அரைகுறையாய் தான் இருந்தது. 

தனது பாடுகளைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும், உயிர்ப்பை பற்றியும் இயேசு பலமுறை அவர்களிடம் கூறியிருந்தும்

  அவர் உயிர்த்தபோது அவர்கள் அதை விசுவசிக்கவில்லை.

விசுவசித்திருந்தால் மதலேன் மரியாள் அவர்களிடம் வந்து 

"ஆண்டவரைக் கல்லறையிலிருந்து எடுத்துவிட்டனர்: அவரை எங்கே வைத்தனரோ, அறியோம்" 

என்று சொன்னபோது இராயப்பரும், அருளப்பரும் கல்லரையை நோக்கி 
 ஓடியிருக்கமாட்டார்கள்.

இயேசு அப்போஸ்தலர்களுக்கு காட்சியளிக்கு முன்னரும், விண்ணகத்திற்கு சென்ற பின்னரும் அவர்கள் யூதர்களுக்கு பயந்து போய்தான் இருந்தார்கள்.

பெந்தேகோஸ்தே திருநாளன்று பரிசுத்த ஆவி அவர்களைத் திடப் படுத்திய பின்புதான் பயம் நீங்கி நற்செய்தியை போதிக்க ஆரம்பித்தார்கள்.

பரிசுத்த ஆவி என்று சொல்லும்போது  மூவொரு தேவனைப் பிரிக்க முடியாது என்ற விசுவாச சத்தியம் நினைவில் இருக்க வேண்டும்.

"நானும் தந்தையும் ஒன்றே."
(அரு.10:30)

நினைவில் கொள்ளவும்:

Because of that unity 

the Father is wholly in the Son and wholly in the Holy Spirit; 

the Son is wholly in the Father and wholly in the Holy Spirit; 

the Holy Spirit is wholly in the Father and wholly in the Son.' [Council of Florence (1442): DS 1331.]"

மூன்று ஆட்களும் ஒருவர் ஒருவருள் முழுமையாக இருக்கிறார்கள்.

ஆகவே பரிசுத்த ஆவிக்குள் தந்தையும் மகனும் முழுமையாக இருக்கிறார்கள்.

ஆகவே பரிசுத்த ஆவி அவர்களை திடப் படுத்தினார் என்று கூறும்போது மூவொரு தேவன் அவர்களை திடப் படுத்தினார் என்பதே பொருள்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment