Thursday, January 30, 2020

வசனங்களுக்கான விளக்கம் வசனங்களில் இல்லை.

வசனங்களுக்கான விளக்கம் வசனங்களில் இல்லை.

*****      *****     *****      *****


"ஹலோ! தம்பி, பைபிளும், கையுமாக வருகிறது மாதிரி தெரியுது!"


"மாதிரி தெரியவில்லை. பைபிளும் கையுமாகத்தான் வருகிறேன்.


இரண்டு வசனங்களுக்கு விளக்கம் தேவை."


"உட்காருங்கள் வசனங்களை வாசியுங்கள்.''


.''வாசிக்கிறேன்."




."கடவுளது அரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. புறத்தே இருப்பவர்களுக்கோ எல்லாம் உவமைகளாயிருக்கின்றன.


12 எதெற்கெனில், ஒருவேளை அவர்கள் மனந்திரும்பி மன்னிப்புப் பெறாதபடி, " பார்த்துப் பார்த்தும் காணாமலும், கேட்டுக் கேட்டும் உணராமலும் இருக்கவே "  என்றார். (மாற்கு, 4:12)




"புறத்தே இருப்பவர்கள் மனந்திரும்பி மன்னிப்புப் பெறாதபடி," 


என்று ஆண்டவர் கூறுகிறாரே,


 எல்லோரும் மனம் திரும்பி மன்னிப்பு பெற வேண்டும் என்பது தானே ஆண்டவரின் ஆசை, 


பின் ஏன் அப்படிக் கூறுகிறார்?"


"பைபிளை வாசிக்கும்போது ஒரு அடிப்படை உண்மையை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


வசனங்களுக்காக விளக்கம் வசனங்களில் இல்லை."


"பின் எங்கே இருக்கிறது?,"


"வசனங்களை கூறுபவரிடம் இருக்கிறது.


 இங்கு இயேசுவிடம் இருக்கிறது."


"இயேசுவிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றால் நான் மோட்சத்திற்குச் சென்ற பின்புதான் கேட்க முடியும்."


"நான் சொல்வது உனக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன்.


நீங்கள் ஒரு ஆசிரியர் தானே.


என்றாவது ஒரு மாணவனிடம்,


'உனக்குப் பாடம் நடத்துவது வேஸ்ட்.  பேசாம ஒரு எருமைமாட்ட பத்திகிட்டு மேய்க்கப் போடா.' ன்னு


 சொல்லி இருக்கீங்களா?"


"இந்த மாதிரி மட்டுமில்ல, இதைவிட கடுமையாகவும் சொல்லியிருக்கிறேன்."


"எந்த பயனாவது அவனுடைய அப்பாவிடம்,


'அப்பா ஒரு எருமை மாடு வாங்கித் தாங்க, மேய்க்கப் போகிறேன்.

வாத்தியார் தான் சொன்னாரு.' என்று சொல்லிருக்கானா?  


"அது எப்படிச் சொல்லுவான்.


 வாத்தியார் அந்த அருத்தத்தில் சொல்லவில்லை என்று அவனுக்குத் தெரியுமே. 


'நேரத்தை  வீணாக்காம பாடத்தை ஒழுங்கா படி'


என்ற அர்த்தத்தில்தான் நான் சொன்னேன் என்று அவனக்கு தெரியுமே.


இதைவிட கடுமையான வார்த்தைகளை என் மனைவி என் மக்களிடம் சொல்லியிருக்கிறாள்.


'உங்கள பார்த்தா என் வயத்தில பிறந்த பிள்ளைகள் மாதிரி தெரியல.


 ஹாஸ்பிட்டலில் இருக்கும்போது யாரோ என் பிள்ளைகளுக்கு பதில் உங்களை போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.''


"ஆனா அந்த அருத்தத்திலா  அவங்க சொன்னாங்க?"


"அதெப்படி? 


தனது நல்ல குணங்கள் எதுவும் பிள்ளைகளிடம் தென்படவில்லையே என்ற வருத்தத்தில் சொன்ன வார்த்தைகள் அவை.


அம்மாவைப் பார்த்து நல்ல குணங்களைக் கத்துக்கங்கடா" 


என்ற  அர்த்தத்தில் தானே அவள் சொன்னாள்.


 சொன்னாலும் அவளுடைய  அன்பும் பராமரிப்பும் கொஞ்சம் கூட குறைய வில்லையே, அதிகரிக்க தானே செய்தன.


"இப்போ தெரிகிறதா, வார்த்தைகளின் அர்த்தம் அவற்றில் இல்லை, அவற்றை சொன்னவரிடம்தான் உள்ளது என்று? 


இயேசுவின் வசனங்களுக்கு பொருள் காண இயேசுவைத்தான் பார்க்க வேண்டும், வசனங்களை அல்ல.


இயேசு கடவுள்,


 சர்வ வல்லவர். 


மனிதனை மீட்பதற்காகவே   மனித உரு எடுத்து,  


பல துன்பங்களுக்கு தன்னையே உட்படுத்திக் கொண்டவர்.


மக்கள் மனந்திரும்பி பாவ மன்னிப்புப் பெற வேண்டும்  என்பதற்காகவே நற்செய்தியை அறிவித்தவர்.


எது நடை பெற வேண்டும்  என்பதற்காக வந்தாரோ, 


அது நடைபெறக் கூடாது என்று அவரே  சொல்லுவாரா?


சிலர் அவர் நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்தபோது


 செய்தியை கேட்டு பயனடைய வேண்டும் என்பதற்காக அவரைப்

 பின்தொடர்ந்தனர். 


அப்போஸ்தலர்களும் சீடர்களும் இந்த வகையினர்.


சிலர் அவரது பேச்சில் குற்றம் குறை காண வேண்டும் என்பதற்காகவே அவரைப் பின் தொடர்ந்தனர்.


அவரது செய்தியைக் கேட்டும் உணரக்கூடாது என்ற கடினமான மனநிலையுடன் அவரை பின் தொடர்ந்தனர்.


பரிசேயரும் சதுசேயரும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.


அவர்களது மனநிலையை கண்டு இயேசு வருந்தினார்.


 தனது வருத்தத்தை இந்த வார்த்தைகளால் வெளிப்படுத்தினார்.


"எல்லோருக்கும் நான்  உவமைகளைப் பயன்படுத்தியே உண்மையை போதிக்கின்றேன்.


 அவர்கள் மனந்திரும்பி


தங்கள் பாவங்களுக்கு. மன்னிப்புப் பெற வேண்டும் என்பதற்காகவே நான் போதிக்கிறேன்.


நான் செய்யும் புதுமைகளைப் பார்க்கும்போது 


அவர்கள் உண்மையை காண வேண்டும். 


என் வார்த்தைகளைக் கேட்கும்போது உண்மையை   உணர வேண்டும்.


அவர்கள்   பார்த்தும் காணாதிருப்பதும் ,  கேட்டும் உணராமல்  இருப்பதும் 

எனக்கு வருத்தத்தை தருகிறது." 


என்ற  பொருளில்தான் நீங்கள் வாசித்த வசனங்களை இயேசு கூறினார்.


 இறை வசனங்களை வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருப்போர் ஒரு அடிப்படை உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்.



பைபிள் வசனங்களில் அடங்கி இருக்கும்  இறைச் செய்திதான் சொற்களை விட முக்கியம். 


சிலர் செய்தியைத் தரும் வார்த்தைகளை மட்டும் பிடித்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருப்பர்.


ஒரு நண்பர் சொன்னார்,


"சார் உங்கள் பைபிள் பொய்யில் தான்  ஆரம்பிக்கிறது அதை நீங்கள் நம்புகிறீர்கள்."


"அப்படியா? எந்த  பொய் 

சொல்லுங்கள். "



"கடவுள்: ஒளி உண்டாகுக என்று உரைத்தார். உரைக்கவே, ஒளி உண்டாயிற்று.


அது எப்படி சார் சூரியன் வருமுன் ஒளி வரும்?


முதலில் ஒளி உண்டாயிற்று என்று சொல்வது பொய்தானே?"


நண்பரின் பிரச்சனைக்கு காரணம் 


அவர் வார்த்தைகளை பிடித்து அகராதிப்படி பொருள்  சொல்லிக்கொண்டு இருப்பதுதான்.


பரிசுத்த ஆவியின் ஏவுதலால் ஆதி ஆகமத்தை எழுதிய மோயீசன் 


பூமி எவ்வாறு உண்டாயிற்று என்ற பூகோள  உண்மையை விளக்குவதற்காக எழுதவில்லை.


அவர் காலத்து மக்களுக்கு பூமி உருண்டை  என்றோ 


அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என்றோ 


அதனால்தான் இரவு பகல் ஏற்படுகிறது என்றோ தெரியாது.


பைபிள் அதைத் தெரியப்படுத்துவதற்காக எழுதப்பட்ட நூல் அல்ல.


ஆதியாகமத்தின் முதல் அதிகாரம் உலகம் எவ்வாறு உண்டானது என்பதைப் பற்றி பூகோள  ரீதியாகவோ, அறிவியல் ரீதியாகவோ மக்களுக்கு எடுத்துரைக்கும் அதிகாரம் அல்ல.


படைப்பு பற்றிய இறைச்செய்தியைத் 

தருவதற்காக மட்டும் எழுதப்பட்டது.


பைபிள் தரும் இறைச் செய்தியை வாசிக்க வேண்டுமே தவிர 


'நமது கருத்துக்களை அதற்குள் புகுத்தக்கூடாது.



முதல் அதிகாரம் கடவுள் தனது வல்லமையால் உலகையும், விண்ணிலுள்ள நட்சத்திரங்களையும் படைத்தார் எந்த இறைச் செய்தியை தருகிறது.


இதன் மூலம் இறைவன் சர்வ வல்லவர் என்பதையும்,


 படைப்புகளுக்கெல்லாம் ஆதி காரணர் என்பதையும் அறிந்து கொள்கிறோம்.


மற்றபடி முதல் அதிகாரத்தை பூகோள கண்ணாலோ அறிவியல் கண்ணாலோ வாசிக்க கூடாது.


பைபிள் ஒரு அறிவியல் நூலும் அல்ல, பூகோள நூலும் அல்ல.


இரண்டாம் அதிகாரம் கடவுள் தனது வல்லமையால் மனிதனைப் படைத்தார் என்ற இறை செய்தியை தருகிறது.


மூன்றாம் அதிகாரம் மனிதன் பாவம் செய்தான் என்ற  செய்தியையும் இறைவன் அவனுக்கு மீட்பரை வாக்களித்தார் என்ற செய்தியையும் தருகிறது.


இந்த இறைச் செய்திகளைத் தவிர வேறு எந்த உலகியல்  செய்தியையும் முதல் மூன்று அதிகாரங்கள் தரவில்லை.


இறைச் செய்திகளைத் தவிர உலகியல் செய்திகளை தருவதற்காக பைபிள் எழுதப்படவில்லை."


"இப்போது புரிகிறது.


 இயேசுவைப் பற்றி முதலில் நன்கு அறிவோம்.


அப்புறம் பைபிள் வாசிப்போம்.


லூர்து செல்வம்

No comments:

Post a Comment