Thursday, January 16, 2020

"ஆண்டவரே பேசும்: உம் அடியான் கேட்கிறான்"(1 சாமு .3: 9)

"ஆண்டவரே பேசும்: உம் அடியான் கேட்கிறான்"
(1 சாமு .3: 9) 
********************************

"அடியே, கொஞ்சம் நிறுத்து,"

"ஏங்க?"

"என்ன சொல்லி என்னைப் Park க்குக் கூட்டிக்கிட்டு வந்த?"

"வீட்டில போரடிக்கிறது. வாங்க, Park க்குப் போய்க் கொஞ்சம் ஜாலியா பேசிக்கிட்டு இருந்துட்டு வருவோம்னு சொன்னேன். அதுக்கு என்ன  இப்போ?"

"என்ன  இப்போவா? நாம் இங்க வந்து எவ்வளவு நேரம் ஆச்சு?."


"ஒரு மணி நேரம் இருக்குமா? "

"இரண்டு மணி நேரம் ஆச்சி."

"அப்படியா? நேரம் போனதே தெரியல. "

"அது எப்படி தெரியும்? இரண்டு மணி நேரமும் ஒரு வினாடி விழாமல் பேசிக்கொண்டே இருந்திருக்கிறாய்.

 எப்படி நேரம் போனது தெரியும்?"

"அதுக்குத் தானங்க வந்தோம்!"

"எதுக்குத் தானங்க?  

வீட்டில போரடிக்கிறது, வாங்க Park ல போய் போரடிப்போம்னு கூட்டிக்கிட்டு வந்து இருக்க."

"நான் ஜாலியாதான  பேசிகிட்டு இருக்கேன்.

 அது உங்களுக்கு போரடிக்குதா?"

"ஏண்டி, ஜாலியா பேசிகிட்டு இருந்த நீ. 

என்ன ஒரு வார்த்தை பேச விட்டியாடி? 

எனக்கு போர் அடிக்காது?"

"சாரிங்க. இப்போ ஒண்ணு  செய்வோம்."

"ஒண்ணும் செய்ய வேண்டாம்.
வா. வீட்டுக்கு போவோம்."

"நான் பேசுவது உங்களுக்கு பிடிக்கலையா?"

"பிரமாதமா பிடிச்சிருக்கு."

"பிறகு ஏன் வீட்டுக்கு கூப்பிடுறீங்க?"

"சரி, வீட்டுக்கு கூப்பிடல.

 நீ உட்கார்ந்து மணிக்கணக்கா பேசிக் கொண்டே இரு,

 நான் வீட்டுக்கு போறேன்."

"மணிக்கணக்கா தனியே பேசிக் கொண்டே இருந்தா பைத்தியம்னு சொல்லுவாங்க.

நானும் உங்க கூட வீட்டுக்கு வருகிறேன்.".

"சரி, வா."

(வீட்டிற்கு வந்து.)

''ஏங்க, ஒண்ணு  சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?"

"இரண்டு  சொன்னாலும் கோச்சுக்க மாட்டேன். சொல்லு."

"நான் பேசுறது உங்களுக்கு போரடிக்கிறதா சொன்னிங்களே 

நீங்க பேசுறது கடவுளுக்குப்  போரடிக்காதா?"

"கடவுளுக்கு யார் பேசினாலும் போரடிக்காது, பேசாவிட்டாலும் போரடிக்காது. 

மனிதனைப் படைக்குமுன்  நித்திய காலத்திலிருந்தே கடவுள் தனியாகத்தானே இருந்தார்.

கடவுள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு யாருடைய உதவியும் தேவை இல்லை."

"நீங்க ஒரு உண்மையை மறந்து விட்டீர்கள்.

 கடவுள் தனியாக இருந்தது உண்மைதான்.

 ஆனால் அவர் தந்தை, மகன் , தூய ஆவி என்று மூன்று  ஆட்களாக இருக்கிறார்.

 அவர்கள் ஒருவரை ஒருவர் அளவில்லாமல்    நேசிக்கிறார்கள். 

அன்பு செய்யும் போது எப்படிங்க போரடிக்கும்?"

..."இப்போ என்ன சொல்ல வர?

 சொல்ல வேண்டியதை நேரடியாகச் சொல்லு. சுத்தி வளைத்து பேசிக்கிட்டு இருக்காதே. இதுவே போர் அடிக்குது."

"சரி நேரடியாகவே விசயத்துக்கு வாரேன். 

 நான் இரண்டு மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தது உங்களுக்குப் போர் அடித்ததாகச் சொன்னீங்களே.

 நீங்கள் கடவுளிடம் மணிக்கணக்கா, அவரைப் பேசவிடாமல், பேசிக்கிட்டு இருக்கீங்களே , அவருக்குப் போரடிக்காதா என்று கேட்டேன்."

"இத கேட்கத்தான் என்ன போரடிக்க வச்சியா?"

"ஆமா, அனுபவம் மூலம் கல்வி."


...."கடவுளுக்கு யார் பேசினாலும் போரடிக்காது, பேசாவிட்டாலும் போரடிக்காது
என்று அப்போவே சொல்லி விட்டேனே,

 திரும்பவும் ஏன் அதே கேள்வி கேட்கிறாய்?"

"சரி நேரடியாகவே விசயத்துக்கு வருவோம்.
செபம் என்ன?"

"கடவுளோடு நாம் செய்யும் உரையாடல்."

"ஒருவர்  மட்டும் பேசிக்கொண்டு இருப்பது உரையாடல் அல்ல.

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருப்பதுதான் உரையாடல்.

செபம் ஒரு உரையாடல் 
என்றால் நீங்கள் கடவுளிடம் பேசுவது போல

 அவரையும் உங்களிடம் பேச அனுமதிக்க வேண்டும்.

 அவரைப் பேச விடாமல் மணிக்கணக்காக நீங்கள் மட்டும் அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

 அது  உரையாடல் அல்ல. சொற்பொழிவு."

....."நீ சொல்வதும் சரிதான். அமைதியில்தான் ஆண்டவர் பேசுகிறார் என்று சொல்கிறார்கள்.

ஆனால் அமைதியாக இருந்தால்தான் தூக்கம் வந்துவிடுகிறதே."

"அது நமது விழுந்த சுபாவத்தின் (fallen nature) இயல்பு.

 ஆனால் நாம் விழுந்தவர்களாகவே இருக்க கூடாது. எழவேண்டும்.

 வெறுமனே அமைதியாய் இருந்தால் தூக்கம் வரத்தான் செய்யும்.

 மனதை இறைவனோடு   ஈடு  படுத்தி இருந்தால் தூக்கம் வராது."

"சரி, இறைவன் எப்படி நம்மோடு பேசுவார் என்று கொஞ்சம் சொல்லேன்."

"அமைதியாக ஆண்டவரை நோக்கி

"ஆண்டவரே பேசும்: உம் அடியான் கேட்கிறேன்" 


என்று கூறிவிட்டு இறைவனையே தியானித்துக் கொண்டு அமைதியாக இருந்தால் 

ஆண்டவர் உள்ளத்தில் தூண்டுதல்கள் (Inspirations) வழியாகப் பேசுவார்.

இறைத் தூண்டுதல்களைப் பெற நமது உள்ளம் இறைவனில் ஒன்றித்து இருக்க வேண்டும்.

 இறைவனைத் தவிர வேறு எண்ணங்கள் நமது மனதில் இருக்க கூடாது.

இறைவன் தரும் தூண்டுதல்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் நமது மனது இருக்க வேண்டும்.

ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நாம் இருக்கும்போது 

இறைவன் நம் உள்ளத்தில் உணர்வுகள் மூலமாக பேசுவதை நான் உணரலாம்.

நாம் இறைவனோடு பேச முயன்று கொண்டிருக்கும்போது

 சாத்தான் ஒருபுறம் இருந்து நமது முயற்சியை வீணடிக்க சோதனைகளைக் கொடுத்துக் கொண்டிருப்பான்.

எது இறைவனின் குரல் எது சாத்தானின் குரல் என்று நமது உள் உணர்வுக்குத் தெரியும்.

இறைவனின் குரலாக இருந்தால் அதை செய் என்ற உத்தரவு மன சாட்சியிடம் இருந்து  வரும்.

சாத்தானுடையதாய் இருந்தால் செய்யாதே என்று உத்தரவு வரும்.

இறைவன் நம் ஒவ்வொருவரின் மன சாட்சியின் வழியே பேசுகிறார்.

செபிக்கும்போது இறைவனின் குரலுக்கு செவிசாய்த்து,

 அதைப்பற்றி தியானித்து, 

அதை செயலாக்க வேண்டும்."

"நீ சொல்வது உண்மைதான்.

 அநேக சமயங்களில் நாம்  நமக்கு அது வேண்டும் இது வேண்டும் என்ற 

 விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதை  மட்டுமே செபம் என கருதுகிறோம். 

ஒரே விண்ணப்பத்தை

 கடவுளிடம் நேரடியாகவும் புனிதர்கள் மூலமாகவும் சமர்ப்பித்து கொண்டிருக்கிறோம்.

 நமது விண்ணப்பம் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றி  நாம் கவலைப்படுவது இல்லை.

உண்மையான செபம் வேண்டியதைக் கேட்பதில் மட்டும் அல்ல,

 கடவுளைப் புகழ்வதிலும்,
'
 அவருக்கு நன்றி கூறுவதிலும், 

அவரது குரலுக்கு செவி சாய்ப்பதிலும்,  

அவரது தூண்டுதலின்படி நடப்பதிலும் அடங்கி இருக்கிறது.

அவரது சித்தப்படி வாழ்வதே மிகப் பெரிய செபம். 

அதேக சமயங்களில் நாம் நம்மை மையப்படுத்தியே இறைவனிடம்  செபிக்கிறோம்.

 உண்மையான செபம் இறைவனை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்.

 அதாவது நமக்கு வேண்டியதைக் கேட்பதைவிட

 அவரது விருப்பத்திற்கு ஏற்ப நாம் நடக்க  

நமக்கு உதவும்படி  கேட்பதுதான் உண்மையான, இறைவனுக்கு பிடித்தமான செபம்."

"very Good. ஆண்டவரோடு உரையாடுங்கள். 

 அதன் மூலம் உறவாடுங்கள்.

லூர்து செல்வம்.

 












.

No comments:

Post a Comment