Monday, April 30, 2018

நம் அன்னையைக் காக்க வேண்டியது நம் கடமை.

நம் அன்னையைக் காக்க வேண்டியது நம் கடமை.
****-*******************--**********

"மாமா பாவ சங்கீர்த்தனம்பற்றி பைபிள் ள இருக்கா கொஞ்சம் காட்டுங்களே."

இது நேற்று எனக்கு வந்த WhatsApp message -அப்படீயே copy எடுத்து போட்டிருக்கிறேன்.

பாவசங்கீத்தன திரு அருட்சாதனம் நம் ஆண்டவர் இயேசுவால்தான் ஏற்படுத்தப்பட்டது என்ற விபரத்தை

28, ஏப்ரல் WhatsApp messageல்

நற்செய்தி ஆதாரத்துடன் குறிப்பிட்டுவிட்டேன். 

இப்போ எனக்கு  விளங்காதது,

நமது பிரிந்து சென்ற சகோதரர்கள் எதற்கெடுத்தாலும்,

"பைபிள்ள இருக்கா"

என்று கேட்பதுதான்.

நமது கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை 'விசுவாசம்'.

நமது விசுவாசப்படி இயேசு கிறிஸ்து ஒருவரே நம் இரட்சகர்.

Jesus alone is our Saviour.

இயேசு  கிறிஸ்து  ஒருவரே.

There is only one Jesus.

அவரால் நிறுவப்பட்டது ஒரு திருச்சபை மட்டுமே. (ஏக திருச்சபை)

Jesus  instituted only
one Church.(not countless ones.)

தாய்த்திருச்சபைக்கு  இயேசுவால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவரே.(இராயப்பர்)

இயேசுவின் கட்டளைப்படி அப்போஸ்தலர்கள் அவரது நற்செய்தியை அறிவித்தார்கள்.

அப்போஸ்தலர்கள் அறிவித்த நற்செய்திதான்

நற்செய்தி நூலாக எழுதப்பட்டது.

இயேசுவால் நிறுவப்பட்ட தாய்த் திருச்சபை முதலில் நற்செய்தியைப் போதித்தாள்,

பிறகு போதித்ததின் ஒரு பகுதியை நூலாக எழுதினாள்.

"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்." (அரு.21:25)

எழுதப்பட்டவையையும், எழுதப்படாதவற்றையும் தாய்த் திருச்சபை போதித்தாள்.

"இதுதான் பைபிள்"  என்று நம்மிடம் பைபிளைத் தந்தவள் தாய்த் திருச்சபைதான்.

பைபிளுக்கு   விளக்கம் தர உரிமை உள்ளவள்

'ஏக,

பரிசுத்த,

அப்போஸ்தலிக்க,

கத்தோலிக்கத்

திருச்சபை மட்டுமே.

விசுவாச சத்தியங்களை

நமது அன்னையாம் கத்தோலிக்க திருச்சபை

சொல்வதால் மட்டுமே ஏற்றுக்கொள்கிறோம்.

பாரம்பரியமும்(Tradition)
பைபிளும்(Bible)

சேர்ந்ததுதான் திருச்சபை.

நமது   தாய் சுட்டிக்காட்டும் ஆளை அப்பா என்று ஏற்றுக்கொள்கிறோம்.

ஏன்?

தாயின்மீதுள்ள நம்பிக்கை.

நாமும் நம் அன்னைத் திருச்சபையை நம்புகிறோம்,

நேசிக்கிறோம்.

நம் அன்னையின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்காகவே

சில எதிர்ச்க்திகள்

நம்மிடையே புகுந்து வேலை செய்வதை

சமீப கால நிகழ்ச்சிகளிலிருந்து யூகிக்க முடிகிறது.

கூட இருந்துகொண்டே குழி பறித்துக்கொண்டிருக்கும் சக்திகளிடமிருந்து

நம் அன்னையைக் காக்க வேண்டியது நம் கடமை.

லூர்து செல்வம்.




தேய்க்கத் தேய்க்கப் பாத்திரம் பளபளக்கும்.


தேய்க்கத் தேய்க்கப் பாத்திரம்  பளபளக்கும்!
***********************************

" அண்ணே!    ஒரு சந்தேகம்.

சாவான பாவம் செய்தவர்கள் மன்னிப்புப் பெற பாவசங்கீத்தனம் செய்யவேண்டும்.

புரிகிறது.

ஆனால் சாமியார் பிரசங்கத்தில்

"அடிக்கடி,

குறைந்தது மாதம் ஒருமுறையாவது

பாவசங்கீத்தனம் செய்யுங்கள்,''  என்று சொன்னார்

அப்படீன்னா 'மாதம் ஒருமுறையாவது சாவான பாவம் செய்யுங்கள்'னு அர்த்தமா? "

"ஹலோ! நீங்க பண்றது அர்த்தமல்ல, அனர்த்தம்.

'சுகமில்லாவிட்டால் டாக்டரைப் பாருங்கள்' என்று சொன்னால்

'டாக்டரைப் பார்ப்பவர்களெல்லாம் சுகமில்லாதவர்கள்'

என்று அர்த்தமா?

சாவான பாவத்திற்கு மன்னிப்புப் பெற மனஸ்தாபத்தோடு சங்கீர்த்தனமும் அவசியம்.

ஆனால் அற்பப் பாவத்திற்கு  மன்னிப்புப் பெற மனஸ்தாபம்
போதுமானது.

ஆனாலும் அற்பப் பாவத்தையும்,  
சங்கீர்த்தனம் செய்யலாம்.

ஆகவே சாவான பாவ நிலையில் இல்லாவிட்டாலும்  அற்பப் பாவங்களுக்காகவும் பாவசங்கீத்தனம் செய்யலாம்."

"ஒருவனிடம் சாவான பாவமே இல்லை.

அவன் அடிக்கடி பாவசங்கீத்தனம் செய்ய வேண்டுமா?

'செய்யலாமா? ' என்று கேட்கவில்லை.

'வேண்டுமா?' என்றுகேட்கிறேன்."

"நான் ஒன்று கேட்கலாமா?"

"சந்தேகம் தவிர என்ன வேண்டுமானாலும் கேளுங்ககள்."

" வங்கி ஒரு அறிவிப்பு வெளியிடுகிறது:

'இன்று முதல்

வங்கிக்கு

எந்த Account holder

எப்போ வந்தாலும்

பணம் பெற்றுக்கொள்ளலாம்.

கணக்கில் பணம் இருந்தால்

இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்துக்கொள்ளலாம்.

பணமே இல்லாவிட்டாலும்

வரும் ஒவ்வொரு முறையும்

ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொள்லாம்.  

எத்தனை முறை வேண்டுமென்றாலும் வரலாம்.'

இந்த அறிவிப்பிற்குப்பின் வங்கி எப்படி இருக்கும்?"

"வங்கியில் கூட்டம் அலைமோதும்.

கணக்கில் பணம் இல்லாதவர்கட்கும்

ஆயிரம் ரூபாய் கிடைத்தால் விடுவார்களா? "

"அதே போன்று பாவசங்கீத்தனம் செய்யும்போது பாவங்கள் மன்னிக்கப்படுவதோடு,

அந்த அருட்சாதனத்திற்கான மற்ற பலன்களும் கிடைக்கின்றன.

புதிதாக பாவம் செய்யாத  ஒருவன் ஏற்கனவே சங்கீர்த்தனம் செய்த பாவங்கட்காக மனஸ்தாபப்பட்டு சங்கீர்த்தனம் செய்தால்,

அதன் மூலம் திரும்பவும் பாவத்தில் விழாமலிருப்பற்கான அருள் வரத்தைப் பெறுகிறான்.

அவனது ஆன்மா பாவத்திற்கு எதிராகப் பலப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு முறை சங்கீர்த்தனம் செய்யும்போதும்

'இனி பாவம் செய்வதில்லை' எனப் பிரதிக்கினை எடுக்கும்போது

அதற்கான அருள்வரத்தையும் வேண்டுகிறான்.

அருள்வரமும் அளிக்கப்படுகிறது.

Every confession strengthens our soul against sin and the desire for sin.

அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்தால்

ஆன்மா அதிக அருள்வரம் பெற்று

அதிக பரிசுத்தம் அடையும்.

புரிகிறதா? "

"புரிகிறது.

தேய்க்கத் தேய்க்கப் பாத்திரம்  பளபளக்கும்.

லூர்து செல்வம்.

Sunday, April 29, 2018

இயேசுவே தந்திருக்கும் தெய்வீக மருந்து.

இயேசுவே தந்திருக்கும்

தெய்வீக மருந்து.

*********************************

"தோனி, லைட்டப் போடு."

"போட்டுட்டேம்மா. எரியமாட்டேங்குதம்மா."

"ஏன்? கரண்ட் இல்லையா? "

"இருக்கும்மா.  T.V ஓடுத."

"அப்போ லைட் மட்டும் ஏன் எரிய? "

Electrician லைன பிரிச்சிப் பார்த்துவிட்டு,

"Madam, லைன் cut ஆயிருக்கு. அதனால்தான் கரண்ட் கிடைக்காம லைட் எரியல."

"சரி பண்ணிடுங்க."

"ஆகட்டும், Madam."
   
*      *       *      *      *   *

"Tankல தண்ணீர் இல்லையோ?"

"இருக்க. கொஞ்சம்
முன்னதானே மோட்டார் போட்டேன்."

"நல்லியில தண்ணீர் வரல?"

"குழாய்ல ஏதாவது அடைப்பு இருக்கும்."

*         *        *           *         *   

"வீட்டுக்குள்ள ஏன் போக முடியல? "

"கதவு பூட்டியிருக்கு."

லைன் கட் ஆய்ட்டா கரண்ட் வராது.

குழாய்ல அடைப்பு இருந்தால்
தண்ணீர் வராது.

கதவு பூட்டியிருந்தால் வீட்டுக்குள்ள போகமுடியாது.

இயேசு கூறியுள்ளபடி,

"கிளையானது திராட்சைக் கொடியில் நிலைத்திருந்தாலன்றி, தானாகக் கனி தரமுடியாது."

மேற்கூறப்பட்டவை எல்லாம்

உவமானங்கள்.

உவமேயம் எது?

நமது ஆன்மீக வாழ்வு வளம் பெற நமது ஆன்மா இறைவனோடு இணைந்திருக்க வேண்டும்.

அப்போதுதான் நமது ஆன்மா என்ற பல்புக்குள் ஆண்டவருடைய அருள் என்ற மின்சாரம் பாய்ந்து ஒளி தரும்.

ஆன்மா என்ற வீட்டிற்குள் ஆண்டவருடைய அருள் நுழைய முடியும்.

ஆன்மா என்ற திராட்சைக் கிளை இறைவன் அருள் பெற்று
நற்செயல்களாம் கனி தரும்.

விசுவாசமும், நற்செயல்களும்

இன்றி இரட்சண்யம் பெற இயலாது.

நாம் செய்யும் எந்த செயலும் நற்செயல் ஆக

நமது ஆன்மாவில்

தேவ இஸ்டப்பிரசாதம் (Sanctifying grace)

என்ற இறை அருள்

இருக்க வேண்டும்.

இந்த அருளுடன்

ஒரு ஏழைக்கு

ஒரு ரூபாய்

தர்மம் செய்தாலும்

அது விண்ணகப் பரிசைப் பெற்றுத் தரும்

ஒரு நற்செயல்.

இந்த அருளின்றி

ஆண்டவருக்கு ஆலயம் கட்ட

ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தாலும்

அதனால் நமது ஆன்மாவிற்கு

ஒரு பயனும் இல்லை.

Whatever is done without sanctifying grace is of no value before God.

நாம் ஞானஸ்நானம் பெறும்போது

முதல்முதல்

தேவ இஸ்டப்பிரசாதத்தைப் (Sanctifying grace) பெற்றோம்.

பெற்ற இந்த இறை அருளை இழக்காமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

நாம் சாவான பாவம் செய்யும்போது இந்த அருளை இழந்துவிடுகிறோம்.

சாவான பாவ நிலையில் நாம் எந்த நற்செயலையும்  செய்ய முடியாது.

சாவான பாவ நிலையில்

நாம் நற்கருணை உட்கொண்டால்

மேலும் ஒரு

சாவான பாவம்

செய்கிறோம்.

சாவான பாவ நிலையிலிருந்து விடுபட

இயேசு தந்திருக்கும்

திரு அருட்சாதனம்தான்

பாவசங்கீத்தனம்.

இக்காலத்தில் அநேகருக்கு பாவசங்கீத்தனத்தின் முக்கியத்துவம் புரிவதில்லை.

அது பாவநோய் தீர

இயேசுவே தந்திருக்கும்

தெய்வீக மருந்து.

இயேசுவை நம் ஆன்மீக வைத்தியராக ஏற்றுக்கொண்டால்

அவர் தரும் மருந்தைச் சாப்பிடவேண்டும்.

இயேசு நம் குருக்களின் உருவத்தில்

நம்மிடையே இன்றும் வாழ்கிறார்.

இயேசு பாவிகளைத் தேடியே இவ்வுலகிற்கு வந்தார், பாவங்களை மன்னிக்க.

ஆகவே குருக்கள் பாவிகளைத் தேடிச் செல்ல வேண்டும், பாவங்களை மன்னிக்க.

நாமும் குருக்களைத் தேடிச் செல்ல வேண்டும், பாவன்னிப்பு பெற.

லூர்து செல்வம்.

Friday, April 27, 2018

Are we true Christians? Let us answer the question ourselves.


Are we true  Christians?

Let us answer the question ourselves.
************************************

The present generation does not seem to give due importance to the Sacrament of Reconciliation.

It may be due to their insufficient understanding of the Sacrament.

The Sacrament of Confession was instituted by Our Lord Jesus Himself,

as were the other Sacraments.

It is called 'the sacrament of divine mercy',

as it has sprung forth from the unlimited mercy of God.

Though we go on insulting God by our sins,

He continues to be merciful towards us

to the extent of forgiving them

however great they may be,

the moment we feel sorry for having insulting Him.

We must see in God's  mercy the unlimited   love that

He has for us,  His sinful creatures.

His love   is gracious enough

  to stoop down

to supply all our needs,

both spiritual and temporal,

no matter how sinful and unworthy we may be.

Through the sacrament of Confession, 

we are  ennobled

with all that we need

to be

and

to act

as God desires us to do.

When we go to Confession,

which is the fountain of Diivine mercy,

the Blood and Water

which came forth from Jesus' heart

always flow down upon our soul cleaning it  and ennobling it.

The sacrament of Confession,

in addition to freeing us from our sins,

enkindles and renews our faith,

making it permeate our thoughts, words and actions,

in short, our life.

With the exception of St. John,

whom we find standing under the cross, 

all other Apostles abandoned Jesus

during His passion.

But the risen Christ did not abandon them.

After rising from the dead,

Jesus  went  searching for them.

It was due to His unlimited mercy which does not abandon anyone.

He appeared to His apostles,  who huddled behind locked doors “for fear of the Jews.”

Whenever He appeared to them

He greeted them with the words,

“Peace be with you.”

We must remember

that Jesus had forgiven their sin of abandonment

when He blessed them with,

“Peace be with you.”

Then He instituted the Sacrament of mercy, by giving them the power to forgive sinners,

saying,

“Whose sins you forgive are forgiven them, and, whose sins you retain are retained.”

Now we understand that the Sacrament of mercy was instituted by Our Lord Himself

in order that our sins are forgiven through His ministers.

In  addition to cleansing our sins,

the sacrament of  divine Mercy   ennobles our souls,

no matter how sinful we have been.

We have also access to every

single grace

and

blessing

that we need,

in our spiritual life.

Just as Jesus went in search of His apostles after His resurrection,

He comes in search of us even now in the form of His priests

to forgive our sins.


We may have  abandoned Him  by sinning against Him.

But He will never abandon us.

His priests,

whom He has empowered to forgive our sins

in His name

are always with us.

Calling ourselves Christians has no meaning

unless we see Jesus in His priests

and get forgiveness for our sins

through the sacrament of Divine Mercy,  confession.

Are we true  Christians?

Let us answer the question ourselves.

Lourdu Selvam.

உம்முடைய இராட்சியம் வருக.

உம்முடைய இராட்சியம் வருக.
*******************************

ஒவ்வொரு நாளும் நாம் விண்ணகத் தந்தையை நோக்கி   செபிக்கும்போது நாம் கூறும் வாழ்த்துரைகளில் இதுவும் ஒன்று:

"Thy Kingdom come."

" உம்முடைய   இராட்சியம் வருக."

"உலகினர் அனைவரும் உமது ஆட்சியின்கீழ் வருக." என்று இறைத் தந்தையை வாழ்த்துகிறோம்.


மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, ஏற்கனவே கோடீஸ்வரனாயிருக்கும் ஒருவனிடம்போய்,

"நீங்கள் கோடீஸ்வரனாக வாழ்த்துகிறேன்.

என வாழ்த்துவது போலிருக்கிறது,

நாம் இறைத் தந்தையை வாழ்த்துவது.

நாம் சொன்னாலும், சொல்லாவிட்டாலும்,

வாழ்த்தினாலும், வாழ்த்தாவிட்டாலும்

இறைவன்தான் அனைத்துலக அரசர்.

ஏனெலில் அனைத்துலகையும்
படைத்து ஆண்டு நடத்துபவர் அவரே.

பூமியில் வாழும் விலங்குகட்கும்,

வானத்துப் பறவைகட்கும் உணவு ஊட்டுபவர் அவரே.

செடிகளை மலர்களாலும், மரங்களை காய்கனிகளாலும் அலங்கரிப்பவர் அவரே.

நமது வாழ்த்துரையால் அவருக்குக் கூடுதலாக எதுவும்
கிடைக்கப் போவதில்லை,

ஏனெனில் அவர் நிறைவானவர்.

நிறைவில் எந்த மாற்றமும் செய்ய இயலாது.

Who is perfect cannot become more perfect.

அப்படியானால் நமது வாழ்த்துரையின் பொருள் என்ன?  நோக்கம் என்ன?

நாம் நமது நண்பர்களை வாழ்த்துகிறோம்:

"தங்கள் காலைப்பொழுது நலம் நிறைந்ததாய்  இருப்பதாக."

"Good morning. "

"தங்கள் பிறந்த நாளில் மகிழ்ச்சி பொங்கட்டும்."

"நீண்ட நாள் வாழ்க."

நமக்குத் தெரியும்

நமது வெறும் வாழ்த்துதலால் மட்டும்

நம்மால் யாருக்கும்

மகிழ்ச்சியையோ,

நீண்ட ஆயுளையோ

தரமுடியாது என்று.

பின் ஏன் வாழ்த்துகிறோம்?

யாருடன் நமக்கு நட்புறவு இருக்கிறதோ,

யாருடைய மகிழ்ச்சியை நாம் விரும்புகிறோமோ,

யாருடைய அன்பு நமக்கு வேண்டுமென விரும்புகிறோமோ

அவர்களைத்தான் வாழ்த்துவோம்.

அவர்கட்கு நம் நல்ல மனதைத் தெரிவிப்பதற்காகவே வாழ்த்துகிறோம்.

இறைவனுக்கும் நமக்கும் இடையே உள்ள அன்பு, சமாதான உறவின் அடிப்படை 'நல்ல மனது'.

  படைப்பின்போது   இறைவனோடு   நாம் கொண்டிருந்த சமாதான உறவை பாவத்தால் நாம் இழந்தோம்.

அதை மீட்க
மனித உரு எடுத்த இயேசு

பிறந்தபோது

நமக்குத் தந்த

முதல் நற்செய்தி

"Glory to God in the highest: and on earth peace to men of good will."

" விண்ணுலகில் இறைவனுக்கு மகிமையும்,

  பூவுலகில் நல்மனத்தோர்க்கு சமாதானமும் உண்டாகுக."
(லூக். 2:14)

முக்கிய வார்த்தைகள்:

"men of good will."

"நல்மனத்தோர்க்கு."

நல்ல மனது உள்ளவர்கட்கு மட்டுமே இறைவன் தரும்
சமாதானம் கிடைக்கும்.

நமது நல்ல மனதை இறைவனுக்குத் தெரிவிப்பதற்காகவே அவரை வாழ்த்துகிறோம்.

இறைவனுக்கு எல்லாம்  தெரியும்.

ஆயினும் நமது மனதை நாமே அவரிடம் திறந்து காட்ட விரும்புகிறார்.

அவர் அன்பளிப்பாக நமக்கு அளித்த

பரிபூரண சுதந்திரத்தைப் பயன்படுத்தி

முழுமையான நல்மனத்துடன்

அவரைத் தேர்ந்தெடுத்து

அவரிடம் தெரிவிக்கவேண்டும்.

"இறைவா,

என் முழு மனதுடன்

உம்மை

விசுவசிக்கிறேன்,

நம்புகிறேன்,

நேசிக்கிறேன்.

ஆராதிக்கிறேன்.

வாழ்த்துகிறேன்."

ஆன்மீக வாழ்வின் ஆரம்பமே நல்மனதுதான்.

சிலசமயங்களில் சில நற்செயல்களைச் செய்ய நம்மால் இயலாதிருக்கலாம்.

அச்சமயங்களில் அவற்றைச் செய்ய விரும்பும் நமது நல்ல மனது நற்செயல்களின் பலனைப் பெற்றுத் தரும்.

ஒரு ஏழை மாணவனுக்கு பண உதவி செய்ய மனது இருக்கிறது.

ஆனால் பணம் இல்லை.

நமது நல்ல மனதுடன் இறைவனிடம் அவனுக்காகச் செபித்தால் அவனுக்கு வேண்டிய உதவி வேறு எந்த வகையிலாவது சென்று செர இறைவன் அருள்வார்.

திவ்ய நற்கருணை பெற மனதில் ஆசை இருக்கிறது.

ஆனால் திருப்பலி காண இயலவில்லை.

மனதில் ஆசை நன்மை மூலம் நற்கருணைநாதரின் அருளைப் பெறலாம்.

இறைவனை நாம் வாழ்த்தும்போது, 

அவரது அருள் பெற்று பயனடைவது நாம்தான்.

இறைவனை வாழ்த்துவோம்,

நம் நல் மனதை அவருக்குத் தெரிவிப்போம்

அவரது அருளில் வளர்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, April 25, 2018

"எங்க அம்மா வேலையை விடப் போராங்க."


"எங்க அம்மா வேலையை விடப் போராங்க.
************************************

"அம்மா! "

"என்னடா? "

"நான் யார்னு தெரியுதா? "

"என்னடா கேள்வி இது?  நீதான அம்மான்னு கூப்பிட்ட . இப்ப 'நான் யார்னு தெரியுதா? 'ன்னு  கேட்கிற?"

"நீங்க யார்னு எனக்கு நல்லாவே தெரியுது. ஆனா நான் யார்னு உங்களுக்குத் தெரிஞ்சது மாதிரி தெரியலிய."

"உன்ன பத்து மாதம் சுமந்து பெத்தவடா நான்."

"கட்டப்பொம்மன்ல சிவாஜி வீர வசனத்த நாங்க ஞாபகத்ல வச்சிருக்கிறது மாதிரி,

தாய்மாரெல்லாம் ஒரு வசனத்த மறக்காம ஞாபகத்ல வச்சிருக்கீங்க,

  'பத்து மாதம் சுமந்து பெத்தவடா நான்' னு.

'பிள்ளைய பெற்றெடுத்தா போதுமா?

பேணி வளர்க்க வேண்டும், தெரியுமா? ...."

"டேய், பாடினது போதும், நிறுத்துடா. நான் வளர்க்காமதான் இவ்வளவு உயரம் வளர்ந்தியா?"

"நிச்சயமா நீங்க போட்ட சோத்துலதான் இவ்வளவு உயரம் வளர்ந்திருக்கேன்.

அதோடு, உங்ககிட்ட ரொம்ப அன்பிருக்காமே, அதக் கொஞ்சம் காண்பிக்கக்கூடாதா?"

"என்னடா இது?  அன்பு என்ன பேனாவா, பென்சிலா எடுத்துக் காண்பிக்கிறதுக்கு?

அது ஒரு சக்திடா. அதுதான் நம்மள இயக்கிக்கிட்டிருக்கு.

உயிரக் கண்ணால பார்க்க முடியுமா?  அதனால அத இல்லேன்னு சொல்ல முடியுமா?"

"உடல் உறுப்புக்கள் அசைஞ்சாத்தான் உயிர் இருக்குன்னு நம்புவாங்க. இல்லாட்டா சந்தேகம் வந்துடும்.

அம்மா உங்கிட்ட அன்பு இல்லேன்னு நான் சொல்லல.

அத ஏன் காட்டலன்னுதான் கேட்டேன்.

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் என்னோடு செலவழிக்கிறீங்க?"

"உன் அப்பாவும், நானும் உனக்காகத்தான் எங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்துக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் இரவு பகல்னு பார்க்காம உழைக்கிறது, பணம் சம்பாதிக்கிறது எல்லாம் உனக்காகத்தானே."

" 'எனக்காக'ன்னு நான் கேட்கல,  'என்னோடு'ன்னு கேட்டேன்.

ஒரு நாளைக்கு ஒரு அரை மணி நேரம் என்னோடு செலவழித்திருக்கீங்ளா?

கடவுள் பத்து மாசக்கணக்க இருபது மாசக் கணக்காப் போட்டிருக்கலாம்.

கூடக் கொஞ்ச நாள் உங்க கூட இருந்திருப்பேன், ஆயாக்கூட இல்லாம."

"உனக்கு என்ன ஆச்சி?   உன் கூடப் பேசிக்கிட்டிருக்காம ஒரு Student க்கு tution எடுத்தேன்னா கிடைக்கிற
fees அ வச்சி உனக்கு ஒரு dress எடுத்திடுவேன்."

"அப்படியா. கொஞ்சம் பொறுங்க........

இந்தாங்க,  நீங்க தந்த பாக்கட் மணி. feesஆ வச்சிக்கோங்க. எனக்கு tution. எடுங்க."

" ஏண்டா,நான் ஏதாவது  வேல ஏவுனாக்கூட 'எக்கச்சக்கமா Home work இருக்கு,  வேல எதுவும் ஏவாத'ன்னு சொல்லுவ.

இப்ப மணிக்கணக்கா பேசிக்கிட்டிருக்க. டீச்சர் வீட்டுப் பாடம் ஏதும் கொடுக்கலியா?"

"இண்ணைக்கு வீட்டுப் பாடம்,

அம்மாவுடன் உரையாடி,

அத வச்சி ஒரு
கட்டுரை எழுதணும்"

"அத ஏன் முதல்லே சொல்லல? "

  "இப்ப சொல்லுங்க.

கடவுள் உங்ககிட்ட கேட்கிறாரு,  'உனக்கு நான் முக்கியமா? உன் வேல முக்கிமா? ' என்ன பதில் சொல்வீங்க? "

"கடவுள்தான் முக்கியமென்பேன்."

"அவர் உங்க வேலையை விட்டிடச் சொன்னா? "

"விட்டிடுவேன்."

"கடவுள் உங்கள்ட கேள்வி கேட்க மாட்டார்ங்கிற தைரியம் ?

பரவாயில்லை.  உங்களுக்கு நான் முக்கியமா?  உங்க வேல முக்கியமா?"

"நீதான் முக்கியம்."

"அப்போ உடனே வேலய விட்ருங்க."

"ஏண்டா. வேல இருந்தால்தானே உன்ன நல்ல படிப்பு படிக்க வைக்க முடியும்."

"நீங்க நினைக்கது தப்பும்மா. அப்பா குடும்பத் தலைவர். உழைத்து குடும்பத்த காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவங்ககிட்ட இருக்கு.

தாய் தன் முழுத்  திறமையைப் பயன்படுத்தி பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்க வேண்டும்.

அநேக பெற்றோர் பிள்ளைகளின் ஒழுக்கத்தைவிட

படிப்புக்கும், வேலைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், 

பிள்ளைகளும் குணத்தைவிட பணத்திற்கு அதிக  முக்கியத்துவம் கொடுத்து

அதை தங்கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு படிக்கிறார்கள்.

பணம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் ஏதோ தாங்கள்தான் சாதிதத்ததாக எண்ணி

பெற்றோரை உதறிவிட்டுப் போய் விடுகிறார்ள்.

பெரிய படிப்பையும், உயர்ந்த சம்பாத்தியத்தையும் விட ஒழுக்கமே சிறந்தது.

அதைப் பிள்ளைகட்குக் கொடுக்கவேண்டியது தாய்தான்.

அவளது வேலை அதற்கு இடைஞ்சலாக இருந்தால்

அதைத் தூக்கி எறிய வேண்டியது அவள் கடமை."

"Very good. அப்போ உன் கட்டுரையின் தலைப்பு? "

"எங்க அம்மா வேலையை விடப் போராங்க."

லூர்து செல்வம்.

எதிர் நீச்சல்.

எதிர் நீச்சல்.
**********************************

மக்கள் இருவகையினர்:

1. ஓடும் தண்ணீரோடு எதிர்ப்பின்றி செல்பவர்கள்.

2.  எதிர்நீச்சல் போட்டு  வெற்றி பெறுபவர்கள்.

முதல் வகையினர்  தங்களைச் சுற்றி தினமும் நடப்பவைபற்றிய காரியங்களின் தன்மை பற்றி கவலைப்படுவதில்லை.

அவை நல்லவையா? கெட்டவையா?

பின்பற்றத் தக்கவையா?  தகாதவையா?

கேள்வி கேட்கப் படத்தக்கவையா?  அப்படியே ஏற்றுக்கொள்ளப்படத் தக்கவையா?

என்றெல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.

அரசியலில் 'ராமன் ஆண்டாலென்ன,  ராவணன் ஆண்டாலென்ன. நாம்பாட்ல சொன்னதக் கேட்டுக்கொண்டே போவோம்' என்ற கருத்து உடையவர்கள்.

சமூகத்தில் சுற்றி நடப்பவன பற்றி கவலைப் படாமல்,  'காலம் மாறிப்போச்சி, நாமும் மாறிக்கொள்வோம்; ஊரோடு ஒத்து வாழ்; யார் எக்கேடு கெட்டால் உனக்கென்ன, உன் சோலியை மட்டும் பார்' போன்ற கருத்துக்களைக் கொண்டவர்கள்.

இத்தகைய எண்ணங்கொண்ட நம்மவர்கள் திருச்சபையின் அனுசரிப்பு முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மை பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

' கோவிலுக்குப் பெண்கள் முக்காடு போட்டு வந்தாலென்ன, போடாமல் வந்தாலென்ன,

நன்மையை நாவினால் வாங்கினாலென்ன, கையில் வாங்கினாலென்ன,

சாமிமார் அங்கி போட்டாலென்ன, Pants, shirt போட்டாலென்ன, 

அவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது, அவர்களுடைய உதவி நமக்குத் தேவை, Appointing and transferring power அவர்களிடம் இருக்கிறது'  என்ற ரீதியில் சிந்திக்கக்கூடியவர்கள்.

இத்தகையவர்கள் எந்த அமைப்பில் என்ன மாற்றம் வந்தாலும்,  வராவிட்டாலும் கவலைப்பட மாட்டார்கள்.

ஒருவன்: அரசியலில் மாற்றம் வரவேண்டும். ஆட்சி மாற வேண்டும்.

முதல் வகை ஆள்: எவன் யோக்கியனாயிருக்கான்?  எவன் ஆண்டாலென்ன, நாம வேல பார்த்தா நமக்குச் சோறு.

ஒருவன்: சமூகம் கெட்டுப் போய்க்கொண்டிருக்கிறது.

முதல் வகை ஆள்: Adjust பண்ணிக்கிட்டு போடா.

ஒருவன்: வரவர பாவசங்கீத்தனங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. கவலையாய் இருக்கு.

முதல் வகை ஆள்: பாவம் செய்வோர் குறைந்திருப்பார்கள். அதுல உனக்கு ஏன் கவலை?

இத்தகையோரால் யாருக்கும் பிரச்சினை இல்லை; பயனும் இல்லை.

இரண்டாம் வகையினர் எதிர்நீச்சல்  போடுபவர்கள்.

எந்த அமைப்பிலும் என்ன மாற்றம் வந்தாலும்,  சிந்தனைக்குப் பின் ஏற்பார்கள், அல்லது நிராகரிப்பார்கள்.

உண்மையான    மாற்றம்  இயற்கையான வளர்ச்சியின் வெளி அடையாளமாய் இருக்கும்.

மாற்றத்திற்காகவே (Change for the sake of change.) செய்யப்படும் மாற்றம் வளர்ச்சியைத் தராது.

உ.ம்

திவ்ய நற்கருணையில் இறைமகன் இயேசு மெய்யாகவே பிரசன்னமாய் இருக்கிறார்.(Jesus is really present in the Holy Eucharist.)

திவ்ய நற்கருணை முன்  முழந்தாள்படியிவது ஆராதனை புரிவதற்கான அடையாளம்.

அதற்குப் பதிலாக நாம் சாதாரண மனிதனுக்குச் செய்துவரும் தலை வணங்குவதைப் புகுத்தியிருப்பது
எப்படி ஆராதனையை அதிகரிப்பதாகும்?

ஆராதனையை வணக்கமாக மாற்றியிருக்கிறோம்.

அதாவது ,  இதை டைப் அடிக்கும்போது விரல்கள் நடுங்குகின்றன, இறைவனும் மனிதனுமானவரை வெறும் மனிதனாக மாற்றியிருக்கிறோம்.

இது heresy in practice.

தாய் தன் குழந்தைக்கு வாயில் உணவூட்டுகிறாள்.

வாயில் உணவு ஊட்டுதல் ஊட்டுபவருக்கும், ஊட்டப்படுபவருக்கும் உள்ள உறவின் நெருக்கத்தைக் காட்டுகிறது.

கையில் எதை வேண்டுமென்றாலும்,  யாருக்கு வேண்டுமென்றாலும் கொடுக்கலாம்.

வாயில் உணவை மட்டுமே ஊட்ட முடியும்.

திவ்ய நற்கருணையைக் குருவானவர் நம் வாயில் ஊட்டும்போது தாய்த்திருச்சபை இறைமகன் இயேசுவை நமது ஆன்மீக உணவாக நமக்கு ஊட்டுகிறாள்.

இது தாய்த் திருச்சபைக்கும்
நமக்கும் இடையே உள்ள உறவின் நெருக்கத்தைக் குறிக்கிறது.

கையால் வாங்கும்போது உறவின் நெருக்கம் குறைகிறது.

பக்தி முயற்சிகளில் மாற்றம் செய்யும்போது பிந்தியதில் முந்தியதை விட பக்தி உணர்வு அதிகரிக்க வேண்டும்.

அம்மாவிடம் போய்  கையை நீட்டும் பிள்ளைக்கும், வாயைத்திறக்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள உணர்வு வித்தியாசத்தைக் கற்பனை செய்து பாருங்கள், புரியும்.

எதிர் நீச்சல் போடுபவர்கள் மாற்றங்கள் வரும்போது எப்படிச் சிந்திப்பார்கள் என்பதைக் காட்டவே மேற்படி உதாரணங்கள்.

ஆனால் சரியான மாற்றங்கள் வரும்போது,  சிந்தனைக்குப் பின் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

எதிர்த்துக்கொண்டே இருப்பது இவர்கள் தொழில் அல்ல.

நற்செயல்கள் புரியும்போது எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும் எதிர் நீச்சல் போட்டு வெற்றியும் காண்பார்கள்.

நமது ஆன்மீக முன்னேற்றத்தில் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் எதிர் நீச்சல் போட்டு வெற்றிபெற இறைவன் அருள்வாராக.

லூர்து செல்வம்.