Friday, May 26, 2023

"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."(அரு.21:25)

"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."(அரு.21:25)

பைபிள் மட்டும் போதும், பாரம்பரியம் தேவையில்லை என்பவர்களுக்கு உண்மையைப் புரிய வைப்பதற்காகவே எழுதப் பட்டுள்ளது இந்த இறைவாக்கு.

 "உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்."

என்று இயேசு தன் சீடர்களுக்கு கட்டளை கொடுத்தார்.

அவர்களும் அவர் சொன்னபடியே செய்தார்கள்.

எல்லோரும் வாய் வழியே போதித்தார்கள்.

சிலர் மட்டும் தங்கள் போதனைக்கு எழுத்து வடிவம் கொடுத்தார்கள்.

அவர்களும் போதித்ததை எல்லாம் எழுதவில்லை.

அதற்கு "இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."

என்ற அருளப்பரின் வசனமே சான்று.

அருளப்பரும், மாற்கும் இயேசு பிறந்த வரலாற்றை எழுதவில்லை.

ஸ்நாபக அருளப்பர் போதிக்க ஆரம்பித்ததிலிருந்து இயேசுவின் வரலாற்றை ஆரம்பிக்கிறார்கள்.

எழுதப்பட்ட போதனைகள் பைபிள் வடிவிலும்,

எழுதப்படாத போதனைகள் பாரம்பரியம் மூலமாகவும் மக்களுக்கு வந்தன.

எழுதப்பட்ட போதனைகளுக்கு பைபிள் வடிவம் கொடுத்ததே பாரம்பரியம் தான்.

நற்செய்தி நூல்களில் இருப்பதெல்லாம் உண்மை.

ஆனால் எல்லா உண்மைகளும் நற்செய்தி நூல்களில் இல்லை.

நற்செய்தி நூல்களில் இல்லாத உண்மைகள் பாரம்பரியத்தில் உள்ளன.

நற்செய்தி நூல்களையும், பாரம்பரியத்தையும் சேர்த்து ஏற்றுக் கொள்ளாதவர்கள்

கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.

கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவர்களை எப்படி கிறிஸ்தவர்கள் என்று ஏற்றுக்கொள்வது?

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment