Sunday, May 28, 2023

"கடவுளின் அரசில் செல்வமுடையவர் நுழைவது எவ்வளவோ அரிது!" (மாற்கு.10:23)

"கடவுளின் அரசில் செல்வமுடையவர் நுழைவது எவ்வளவோ அரிது!" 
(மாற்கு.10:23)

"தாத்தா, நம்மைப் படைத்த கடவுள்தானே உலகத்தையும், அதில் உள்ள அத்தனை பொருட்களையும் படைத்தார்?

"'அதற்கென்ன இப்போ?"

"அவர் படைத்த யாவும் நன்றாகத் தானே இருந்தன."

"'நன்றாகத் தான் இருந்தன, இருக்கின்றன, இருக்கும்."

"செல்வமும் அவர் படைப்புதானே.
செல்வம் நல்லதென்றால் அதை வைத்திருப்பவர்களும் நல்லவர்களாகத்தானே இருக்க வேண்டும்.

பின் ஏன் கடவுளின் அரசில் செல்வமுடையவர் நுழைவது எவ்வளவோ அரிது!" என்று ஆண்டவர் சொல்கிறார்?"

"'கத்தி நல்லதா, கெட்டதா?"

"நமக்குப் பயன்படுவதற்காக அதை நாம் தான் செய்திருக்கிறோம்.
சமையலறையில் அது இல்லாவிட்டால் காய்கறிகள் வெட்ட முடியாது."

'''கோபம் உள்ளவர்கள் கையில் கத்தி இருந்தால்?"

"எனது அம்மா கோபம் உள்ளவர்கள் தான். நன்றாகக் காய்கறி வெட்டுவார்கள்"

"'காய்கறி வெட்ட பயன்படும் கத்தி தான் யாரையும் குத்திக் கொல்லவும் பயன்படும்."

"நல்லவர்கள் கையில் இருக்கும் கத்தி நன்மைகள் பயன்படும். கெட்டவர்கள் கையில் இருக்கும் கத்தி தீமைக்கு பயன்படும்."

"'அதேபோல் தான் நல்லவர்கள் கையில் இருக்கும் செல்வம் நன்மைக்குப் பயன்படும். கெட்டவர்கள் கையில் இருக்கும் செல்வம் தீமைக்குப் பயன்படும்."

"ஆனால் தாத்தா செல்வம் உள்ளவர்கள் எல்லாம் கெட்டவர்களா?"

"'கொஞ்சம் கவனி. நமது ஆன்மா விண்ணிலிருந்து வந்தது. நமது உடல் மண்ணிலிருந்து வந்தது.

ஆன்மாவுக்கு நலம் தருவது இறைவன் அருளும் அருள்.

உடலுக்கு இன்பம் தருவது மண்ணிலிருந்து வரும் செல்வம்.

கடவுள் மண்ணையும் செல்வத்தையும் படைத்தது நமக்கு இறை அருளை ஈட்டுவதற்கு உதவியாக இருப்பதற்காகத்தான்.

இறைவனுக்காக செல்வத்தை பயன்படுத்துவோர் அருள் உடையவர்கள்.

உடல் இன்பத்திற்காக மட்டும் செல்வத்தை பயன்படுத்துவோர் செல்வமுடையவர்கள்.

கோடிக் கணக்காகப் பணம் இருந்தாலும் அவர்கள் அதை இறைப் பணிக்காக 
செலவழித்தால் அவர்கள் அருள் உடையவர்கள்தான்.

கொஞ்சம் பணம் இருந்தாலும் அதை இறைவனுக்காகச்
செலவழிக்காமல் சுய இன்பத்திற்காக மட்டும் செலவழித்தால் அவர்கள் பொருளுடையவர்கள்.

செல்வம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அருள் உடையவர்கள் இறைவனுக்காக மட்டுமே வாழ்வர்.

செல்வம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொருளுடையவர்கள் பொருளுக்காக மட்டுமே வாழ்வர்.

பொருளுக்காக மட்டுமே வாழ்வர்களால் விண்ணரசில் நுழைய முடியாது

 ஏனென்றால் அவர்கள் அதைப்பற்றி அக்கறையின்றி பொருளுக்காக மட்டுமே வாழ்கிறார்கள்.

செல்வத்திற்காக மட்டும் வாழ்பவர்களைத்தான் இயேசு செல்வமுடையவர் என்று குறிப்பிடுகிறார்.

செல்வத்திற்காக மட்டும் வாழாமல் தங்களிடம் இருக்கும் செல்வத்தை பிறர் உதவி பணிகளுக்காக 
செலவழிப்பவர்கள் விண்ணரசில் நுழைவது எளிது.

தாகமாய் இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுப்பவர்கள்,

பசியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பவர்கள்,

உடை இல்லாதவர்களுக்கு உடை கொடுப்பவர்கள்

தங்களிடம் உள்ள செல்வத்தை பிறர் உதவிக்காக பயன்படுத்துகிறார்கள்.

அவர்கள் விண்ணரசைச்
 சேர்ந்தவர்கள்.

புரிகிறதா?"

"இப்போது புரிகிறது. கடவுளுக்காக வாழ்பவர்கள் கையில் இருக்கும் செல்வத்தை கடவுளுக்காகப் பயன்படுத்துவார்கள்.

தங்களுக்காக மட்டும் வாழ்பவர்கள் தங்கள் கையால் செல்வம் ஈட்டி தங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள்.

இறைப் பற்று இன்றி, செல்வப்
 பற்று மட்டும் உள்ளவர்கள் இறைவன் வாழும் விண்ணரசில் நுழைய முடியாது. சரியா?"

"'சரி. நம்மிடம் இருப்பதை இறைவனுக்காக மட்டுமே பயன்படுத்துவோம்.

நாம் உண்பதும், உடுத்துவதும் கூட இறைவனுடைய மகிமைக்காக இருக்க வேண்டும்.

நாம் இவ்வுலகில் வாழ்வதே மறு உலகில் வாழ்வதற்கு நம்மைத் தயாரிப்பதற்காகத்தான்.

நம்மிடம் இருக்கும் செல்வத்தை இறைவனுக்காகப் பயன்படுத்துவோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment