Thursday, February 27, 2020

தவ முயற்சிகளில் சில.(தொடர்ச்சி )

தவ முயற்சிகளில் சில.

(தொடர்ச்சி )
******************************
விவசாயி வயலுக்குள் நுழைவது விவசாயம் சம்பத்தப்பட்ட வேலைகளை செய்ய, 

வீட்டுக் கணக்கு போடுவதற்கு அல்ல.

பள்ளிக்கூடம் போவது பாடங்களை படிக்க, 

படுத்து தூங்குவதற்கு அல்ல. 

தவக்காலத்துக்குள்  நுழைவது தவம் செய்ய,

ஓய்வு எடுக்க அல்ல.

தவக்காலம் தமது ஆன்மா பாவம் நீங்கி பரிசுத்தம் அடைய தரப்பட்டிருக்கும் காலம்.

குளித்துவிட்டு ஒவ்வொரு நாளையும் ஆரம்பிப்பது போலவும்,

கைகளை நன்கு கழுவி விட்டு
சாப்பிட ஆரம்பிப்பது போலவும்,

நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து ஆன்மாவைத் தூயதாக்கி 

பரிசுத்தமான ஆன்மாவோடு தவக்காலத்தை ஆரம்பித்தால்

அதன் ஒவ்வொரு நிகழ்வும் தவ முயற்சியாக மாறி நமக்கு அருள் வரங்களை அள்ளித் தரும்.

நமது அன்றாட வாழ்வில் வரும் சாதாரண நிகழ்வுகளை தவ முயற்சிகளாக மாற்றி,

 ஆண்டவரது அருள் வரங்களை அபரிமிதமாகப் பெறும் சக்தி நம்மிடம்தான் உள்ளது.

அதைப் பயன்படுத்தத் தெரியவேண்டும்.

நமது வாழ்வில் நாம் விரும்பும் காரியங்களும் நடக்கும்,

விரும்பாத காரியங்களும் நடக்கும்.

விரும்பும் காரியங்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவதின் ஆண்டவரின் அருள் வரங்களைப் பெறலாம்.

விரும்பாத காரியங்களைத் தவ முயற்சிகளாக மாற்றுவதன் மூலம் ஆண்டவரின் அருள் வரங்களைப் பெறலாம்.

விரும்பாத நிகழ்வுகள் மாறுவேடத்தில் நம்மை அசத்த வரும் ஆண்டவரின் ஆசீர்வாதங்கள்.

Undesired for happenings are God's blessings in desguise.

நாம் கழிவுப் பொருட்களையும் நமது தாவரங்களுக்கு உணவுப் பொருளாகப் (manure) பயன்படுத்துகிறோம்.

தாவரங்கள் அவற்றை உணவாக மாற்றி நம்மிடமே சாப்பிடத் தருகின்றன.

கழிவுப் பொருட்கள்  கழிவுப் பொருட்கள் அல்ல.

மாறுவேடத்தில் வரும் உணவுப் பொருட்கள்தான்.

நமக்கு வரும் கஷ்டங்களும்,
நஷ்டங்களும் நமக்கு இறைவன் தரும் ஆசீர்வாதங்கள்


உதாரணத்திற்குச் சில.

கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதும், 

அதனால் அடிக்கடி உரசல்கள் ஏற்படுவதும் எல்லா குடும்பங்களிலும் இயல்பானதுதான்.

அவற்றை  ஆசீர்வாதங்களாக மாற்றி மகிழ்ச்சியோடு வாழ்வது எப்படி?

"அடியே, ஒரு கப் காபி கிடைக்குமா?"

"அடிக்கடி காபி குடிக்கிறது உடலுக்குக் கெடுதி. 

தாகமா இருந்தா தண்ணீர் குடிங்க.".

இப்படி ஆரம்பித்த உரையாடல்

" உன் காபியும் வேண்டாம், நீயும் வேண்டாம், சீ,  இனிமேல உங்கிட்ட எதுவும் கேட்டால் செருப்ப கழற்றி அடி"

யில் போய் முடிந்தது.

சாப்பிடாமலேயே ஆபீசுக்குப் போய்விட்டான்.

ஆபீசில் வேலை ஒன்றும் ஓடவில்லை.


தவக்கால ஆரம்பத்திலேயே இப்படி ஆகிவிட்டதே.

எப்படியும் சரி செய்துவிட வேண்டும்.

பூ வாங்கிக்கொண்டு போவோமா?

இல்லை. தபசு காலத்தில் பூ கூடாது.

ஆண்டவரைக் கூட்டிக் கொண்டு போவோம்.

"என்னோடு வாரும் ஆண்டவரே. சமாதானத்தின் ஆண்டவரே, என்னை மன்னித்து எங்களுக்குள் சமாதானத்தை ஏற்படுத்தும்."


ஆண்டவர் வழி காட்டுவார்.

வீட்டிற்குச் சென்றான்.

சமையலறையில் நின்று கொண்டிருந்த மனைவியின் பின்னால் போய்நின்றான்.

அவள் அவனது காற்று பட்டு திரும்பினாள்.

படாரென்று அள்ளி எடுத்து அரவணைத்து கன்னத்தில் முத்தம் ஒன்றைப் பதித்தான்.

பெண்களிடம் ஒரு சுபாவம் உண்டு.

எதைக் கொடுத்தாலும் ஒன்றுக்குப் பத்தாய் திரும்பிக் கொடுப்பார்கள்.

பெற்றுக் கொண்டான்.

போருக்குப் பின்  சமாதானம்.
ஆண்டவர் அருளால்.

ஆண்டவரே நன்றி!

"ஆண்டவரே, இதை என் தவக்காலப் பரிசாக உமக்கு அளிக்கிறேன். ஏற்றுக் கொள்ளும்."

                &

மகன் progress Cardல் மதிப்பெண்கள் குறைவாக இருப்பதைப் பார்த்த அப்பா கோபத்தில் வாயால் மட்டுமல்ல, கையாலும் பேசிவிட்டார்.

மகன் அழுது கொண்டே உட்கார்ந்திருந்தான்..

அப்பாவுக்கு அன்று முழுவதும்  ஒன்றும் ஓடவில்லை.

பையன் கொஞ்சம் அழுது விட்டு, பின் ஏன் அழுதோம் என்பதையே மறந்து விளையாடப் போய்விட்டான்.

மாலையில் அப்பா பையனைக் கூப்பிட்டார். வந்தான்.

உட்கார்ந்து கொண்டு, பையனை மடியில் எடுத்து வைத்துக் கொண்டு  காலையில் அடித்த இடத்தைக் கையால் தடவிக் கொடுத்தார்.

"இனிமேல் நல்ல மார்க் எடுப்பேன் அப்பா."

அவர்களது காவல் சம்மனசுக்கள் மகிழ்ச்சியால் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

இவ்வாறாக உறவுகளுக்குள் ஏற்படும் ஒவ்வொரு உரசலையும் தவமுயற்சியாக மாற்றி ஆண்டவரது அருள் வரங்களை அள்ளலாம்.

குறைந்த முயற்சியில் நிறைந்த அருள் தரும் 'ஆடிக்கழிவு' தவ முயற்சிகள் ஏராளம் உள்ளன.

நம்மைப் பார்த்தவுடன் முறைக்கிறவர்களுக்கு 
.
ஒரு புன்முறுவலைப் பதிலாகக் கொடுக்கலாம்.

12 மணிக்கு சாப்பிடுகிற சாப்பாட்டை 12.15க்குச் சாபாட்டு 15 நிமிடத்தை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கலாம்.

இருமல் வருகிறது, தும்மல் வருகிறது, கால் உளைகிறது, தலைவலிக்கிறது இவை எல்லாம் ஆண்டவருக்கு ரொம்ப பிடிக்கும். வரும் போதெல்லாம் ஒப்புக் கொடுக்கலாம். அதிக அருள் வரம் கொடுத்தே வாங்கிக் கொள்வார்.

பேசுபவர் First person. கேட்பவர் Second person.
பேசப்படுபவர் Third person.

Third person.ன் குறைகளைப் பற்றி பேசாதிருப்பதே கஷ்டமே படாமல் செய்யும் தவ முயற்சி.

திருப்பலி நேரம் முழுவதும் பீடத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பது மிகப்பலன் உள்ள தவ முயற்சி. 

படிப்பில் மோசம் என்று ஆசிரியர் திட்டுகிறாரா?
ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்போம்.

அம்மா Tea யில் Sugar போட மறந்துவிட்டார்களா?
ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்போம்.

அம்மா வைத்த சாம்பார் ருசியாய் இல்லையா?
ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்போம்.


திடீர் என்று மின்சாரம் Cut ஆகிவிட்டதா?
ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்போம்.

நமக்கு விருப்பம் இல்லாதது எது நடந்தாலும்
ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்போம்.

நம் வாழ்வே தவ வாழ்வாக மாறிவிடும்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment