Wednesday, February 19, 2020

விண்ணுலகம் எங்கே இருக்கிறது?

விண்ணுலகம் எங்கே இருக்கிறது?
******************************

நாமே எதிர்பாராமல் நடந்தது நமது பிறப்பு.

அப்படியே நடக்கும் நமது மரணமும்.

பிறக்கும்போது மண்ணுலகிற்குள் நுழையும் நாம் ,

 இறக்கும்போது விண்ணுலகிற்குள் நுழைகிறோம்.

விண்ணுலகம் எங்கு இருக்கிறது?

அருகிலா? வெகு தூரத்திலா?

அருகில், தூரத்தில் என்பவை இட இடைவெளியை (distance between places) குறிப்பவை.

ஆனால் ஆன்மீக உலகமாகிய விண்ணுலகில் தூரமோ, நேரமோ கிடையாது.

ஆன்மாவிற்கு உருவம் இல்லாததுபோலவே ஆன்மீக உலகத்திற்கும் உருவம் இல்லை.

'எங்கே' என்ற வினாச்சொல் இடத்தைக் குறிக்கிறது.

இடமே தேவை இல்லாத பொருளை "எங்கே இருக்கிறது?" என்று கேட்பது பொருளற்றது.

ஆனால் இடத்திற்கும், (Where) நேரத்திற்கும் (When) கட்டுப்பட்டு வாழும் நம்மிடம்

அவற்றுக்கு அப்பாற்பட்டவற்றைப் பற்றி கேட்பதற்கு   வார்த்தைகளே இல்லை.

ஆகவே வேறு வழி இல்லாமல் நமமிடம் உள்ள வார்த்தைகளையே பயன்படுத்துவோம்.

புரிந்துகொள்ள வேண்டிய விதமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் தாயின் வயிற்றில் (வயிறு ஒரு சடப்பொருள், matter) கருத்தரிக்கும் போது

 சடப்பொருளாகிய உலகிற்குள் (Material World) நுழைகிறோம்.

நமது ஆன்மா ஒரு ஆவி. (Spirit). 

நமது உடல் ஒரு சடப்பொருள். (Matter)

ஆகவேதான் இவ்வுலகில் இரண்டு வித வாழ்க்கை வாழ வேண்டியிருக்கிறது.

ஆன்மீக வாழ்க்கை, (Spiritual life)

லௌகீக வாழ்க்கை. (material life)

ஆன்மீக வாழ்க்கை நிரந்தரமானது.

லௌகீக வாழ்க்கை தற்காலிகமானது.

இவ்வுலகில் ஆரம்பித்த நமது 
ஆன்மீக வாழ்க்கை மறுவுலகிலும் தொடரும்.

நாம் உற்பவிக்கும்போது ஆரம்பித்த லௌகீக வாழ்க்கை நமது மரணத்தின்போது முடிந்துவிடும்.

 நாம் , அதாவது, நமது ஆன்மா,
மண்ணுலகில் ஆரம்பித்த ஆன்மீக வாழ்வை இடைவெளி இன்றி,

தேவைப்பட்டால் உத்தரிக்கிற ஸ்தலம் வழியாக,

 விண்ணுலகிலும் தொடர்வோம்.

நமது வாழ்க்கை பரிசுத்தமானது என்ற அடிப்படையில் பேசுகிறோம்.

நாம் பிறக்கும்போது சிரிக்கின்றவர்கள்,

 இறக்கும்போது 

நாம் அவர்களை விட்டு பிரிந்து செல்கிறோம் 

என்று நினைத்து அழுகிறார்கள்.

ஆனால் உண்மையில் நாம் எங்கும் போகவில்லை.

We do not leave them.  We remain with them.

அதெப்படி?

நாம்தான் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்குள் போய் விட்டோமே

உண்மையில் நாம் எங்கும் போகவில்லை என்றால் என்ன அருத்தம்?

ஒரு ஒப்புமை. Analogy.

தகப்பனும், மகனும் இரவில் வெகு நேரம் வரை பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பேசி முடிந்ததும் Good Night சொல்லிவிட்டு அவரவர் அறைகளுககுச் சென்றுவிடுகிறார்கள்.

இரண்டும் பக்கத்து பக்கத்து அறைகள்.

ஒருவரை ஒருவர் பார்க்க முடியாது, ஆனால் அருகருகே தான் இருக்கிறார்கள்.

'அருகருகேதான் இருக்கிறார்கள்' என்பதைப் புரியவைக்க மட்டும் இந்த ஒப்புமை.

இப்போ விசயத்துக்கு வருவோம்.

கணவனும், மனைவியும் ஒன்றாக இருக்கிறார்கள்.

திடீரென்று எதிர்பாராமல் மனைவியின் ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து விண்ணகம் சென்றுவிடுகிறது.

இப்போது மனைவி எங்கே இருக்கிறாள்?

விண்ணகத்தில்.

விண்ணகம் எங்கே இருக்கிறது?

இறைவன் இருக்கும் இடத்தில்.

இறைவன் எங்கு இருக்கிறார்? நம்முடன்தான் இருக்கிறார்.

இங்கு,

கணவனோடு இருக்கிறார்.

விண்ணத்தில் ஆன்மா தனியாக இருப்பதில்லை,

இறைவனோடு இணைந்து இருக்கிறது.

The soul is united with God.

இறைவன் கணவனோடு இருக்கிறார்.

அப்படியானால், மனைவி?

விடையைச் சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம்.

The wife does not leave her husband. 

 She remains with him.

 Because, 

God , with whom she is united, is with him.

மனைவி கடவுளோடு இருக்கிறாள்.

 கடவுள் கணவனோடு இருக்கிறார்.

ஆகவே மனைவி கணவனோடு இருக்கிறாள்.


நமது நடைமுறை வாழ்வில் புனிதர்களோடு எப்படிப் பழகுகிறோம் என்பதை நினைத்துப் பார்த்தால் இது தெளிவாகப் புரியும்.

புனித அந்தோனியார் கடவுளுடன் இணைந்து இருக்கிறார்.

பாவூர்ச்சத்திரத்தில் இருந்து கொண்டு நாம் அவரிடம் செபிக்கிறோம். (பேசுகிறோம்)

நமது செபத்தை அவர் கேட்கிறார். நாம் கேட்ட உதவியைச் செய்கிறார்.

நாம் செபிக்கும் அதே நேரத்தில் அமெரிக்காவில் இருந்து கொண்டும் ஒருவர் அந்தோனியாரிடம் செபிக்கிறார். 

அவரது செபத்தையும் அந்தோனியார் கேட்கிறார்.

அவருக்கும் கேட்ட உதவியைச் செய்கிறார்.



ஒருவர் இருவர் அல்ல, கோடிக்கணக்கான பேர் அந்தோனியாரிடம் ஒரே நேரத்தில் செபிக்கிறார்கள்.

அத்தனை பேரின் செபத்தையும் கேட்டு அத்தனை பேருக்கும் உதவி செய்கிறார்.

இது எப்படி முடிகிறது?

அந்தோனியார் இணைந்திருக்கும் சர்வவல்லப கடவுள் எங்கும் இருக்கிறார்.

நமது செபம் அந்தோனியாரிடம் சென்று கடவுளிடம் வருவதில்லை.

நமது செபம் பயணிக்கிறது என்று கற்பனை செய்து கொண்டால்,

அது கடவுள் வழியாகத்தான் பயணிக்கிறது.

ஏனெனில் அந்தோனியார் கடவுளுக்குள்ளேதான் இருக்கிறார்.

கடவுளுக்குத் தெரியாமல் அந்தோனியாரிடம் செபிக்க முடியாது.

 நாம் செபிப்பதற்கே கடவுளின் தூண்டுதல்தான் முதலில் வேண்டும்.

இது அந்தோனியாருக்கு மட்டுமல்ல, அனைத்துப் புனிதர்களுக்கும் பொருந்தும்.

விண்ணுலகில் இறைவனோடு இணைந்து வாழும் அனைவருமே புனிதர்கள்தான்.

திருச்சபையால் புனிதர் பட்டம் பெற்றவர்களிடம் மட்டுமல்ல

விண்ணுலகிலுள்ள அனைவரிடமும் நாம் செபிக்கலாம்.

எல்லோரும் கிறிஸ்துவின் ஞான உடலைச் சேர்ந்தவர்களே.

All the limbs of the body are  internally connected with one another.

உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது.

இது கிறிஸ்துவின் ஞான உடலுக்கும் பொருந்தும்.

ஆகவே, விண்ணகம் நம் அனைவரிடமும்தான் இருக்கிறது.

விண்ணக வாசிகள் அனைவரும் நம்முடன்தான் இருக்கிறார்கள்.

நாம் எல்லோரும் கிறிஸ்துவுக்குள்  இருக்கிறோம்.

கிறிஸ்துவில் நாம் அனைவரும் உறவினர்கள்.

"புனிதர்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன்.''

நமது விண்ணுலக உறவினர்கள் அனைவரும் நம்மைப் பார்க்கிறார்கள்.

அவர்கள் அனைவரும் இறைவனில் நம் அருகே இருந்தாலும் 

நமது ஊனக்கண்களால் அவர்களைப் பார்க்க இயலவில்லை.

விண்ணகம் சென்றபின் அவர்களை நேருக்கு நேர் பார்ப்போம்.

இப்போது நமது விசுவாசக்  கண்களால் பார்ப்போம்.

அவர்களோடு உரையாடுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment