Thursday, February 13, 2020

"பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று"(மாற்கு, 7:27)

"பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று"
(மாற்கு, 7:27)
******************************.
ஒரு சிறிய ஒப்புமை. (Analogy)

ஒரு குடும்பம். கணவன்  மனைவி பிள்ளைகள்.

அன்பு  கயிற்றால் பிணைக்கப்பட்ட குடும்பம்.

குடும்ப அங்கத்தினர்கள் எல்லோருமே ஒருவரை ஒருவர் ஆழமாக நேசிக்கிறார்கள்.

கணவன் தன்னை நேசிக்கிறான் என்று மனைவிக்கு தெரியும்.

ஆனாலும் தனது அன்பை கணவன் வார்த்தைகளால் மனைவிக்கு வெளிப்படுத்தும்போது அவளுக்கு மகிழ்ச்சி உண்டாகிறது.

மனைவி மட்டும் அல்ல

 குடும்பத்தில் உள்ள அங்கத்தினர்கள் அனைவருமே

 ஒருவருக்கொருவர் தங்களது அன்பை வார்த்தைகளால், முகபாவத்தால், புன் சிரிப்பால்

அடிக்கடி வெளிப் படுத்திக் கொண்டால் குடும்பத்தின் மகிழ்ச்சி வெளிப்படையாகவே அதிகரிக்கும்.

எத்தனையோ காதலர்கள் தங்கள் மனதிலுள்ள காதலை வெளிப்படுத்த தவறியதால் இணையாமல் போயிருக்கிறார்கள்.

"I love you." என்ற எட்டெழுத்து
 மந்திரத்தால் சாதிக்க முடியாத காரியங்களே கிடையாது. 

கடவுள் நமக்கு முழு சுதந்திரத்தைக் கொடுத்திருப்பதே அதைப் பயன்படுத்தி நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.

சுதந்திரமாக நாம் கடவுளை நேசித்தால் மட்டும் போதாது நமது நேசத்தை அவரிடம் அடிக்கடி வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

நாம் கடவுளை நேசிப்பது அவருக்கு தெரியும்.

அவர்மேல் நாம் வைத்துள்ள விசுவாசமும் அவருக்கு தெரியும்.

 ஆனாலும்,

"Jesus, I love you!"

" Jesus, I believe in you!"
இன்று நாம் அடிக்கடி சொல்ல வேண்டும் என்று நம் ஆண்டவர் எதிர்பார்க்கிறார்.

சில சமயங்களில் நாம் எவ்வளவு விசுவாசத்துடன்  ஜெபித்தாலும் நமது ஜெபம் கேட்கப்படாதது போல் தோன்றும்.

நமது விண்ணப்பத்தை அன்பு, விசுவாசம் என்ற  தேனோடு கலந்து நம் ஆண்டவரிடம்  கொடுத்தால்

ஜெபத்தின் சக்தி அதிகரிக்கும். 

சீரோபெனீசிய குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் இயேசுவிடம் வந்து ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கிறாள்.

அவளுடைய மகளை ஒரு
அசுத்த ஆவி பிடித்திருந்தது.


அதை  ஓட்டுமாறு அவரைக் கேட்டுக்கொண்டாள்.

இயேசுவுக்கு அவளுடைய விசுவாசத்தைப் பற்றி நன்கு தெரியும்.

 ஏனெனில் அவர் கடவுள்.

ஆயினும் அவளுடைய வாயிலிருந்து அவளது விசுவாச அறிக்கையை வெளிக்கொணரத் தீர்மானித்தார்.

 அவர் அவளைப் பார்த்து,

 "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று" என்றார்.

இயேசு தேர்ந்தெடுக்கப்பட்ட  யூத குலத்தில் பிறந்திருந்தாலும் அவர் உலக மக்கள் அனைவரது மீட்பிற்காகவும் தான்  பிறந்தார்.

ஆனாலும் அவள் வாயிலிருந்து விசுவாச அறிக்கையை வெளியே கொண்டு வரவே அவ்வாறு கூறினார்.

 அவளோ மறுமொழியாக: "ஆமாம் ஆண்டவரே, ஆனால் மேசைக்கடியில் நாய்க்குட்டிகளும் குழந்தைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்கின்றனவே" என்றாள்.

அவளுடைய இந்த அறிக்கையால் அவளுடைய  ஆழ்ந்த விசுவாசமும் தாழ்ச்சியும் வெளிப்பட்டது.

 அவர், "இவ்வார்த்தையின் நிமித்தம் நீ போகலாம்: பேய் உன் மகளை விட்டுவிட்டது" என்றார்

அவளது விசுவாச அறிக்கைக்கு கிடைத்த பரிசு.

ஆசிரியருக்கு தன் மாணவர்கள் நன்கு படிக்கிறார்கள் என்பது தெரியும்.

 ஆனாலும்  தேர்வு வைத்தால்தான் மாணவர்களுக்கு மதிப்பெண் பதிந்த சான்றிதழ் கொடுக்க  முடியும்.

இறைவனும் நமக்கு அப்பப்போ தேர்வுகள் வைக்கிறார்.

நம்மைப் பற்றி அவர் அறிந்து கொள்வதற்காக அல்ல. நம்மை நாமே அறிந்து கொள்வதற்காக.

உதாரணத்திற்கு,

ஒரு வேலைக்காக நேர்காணலுக்கு போய் வந்திருக்கிறோம்.

 அந்த வேலை கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறோம்.

நமது வேண்டுதல் கேட்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறோம்.

ஆனால் கடவுள் நமக்கு ஒரு தேர்வு வைக்கிறார்.

அந்த வேலையை நமக்குப் பெற்றுத் தரவில்லை.

அப்போது நமது மனதில் ஏற்படும் எதிர்வினை (Reaction) நமது விசுவாச நிலையை நமக்கே வெளிப்படுத்தும்.

வேலை கிடைக்காத போதும் "எது நடந்தாலும் நமது நன்மைக்கே. 

எல்லாம் இறைவன் சித்தம்.

 இறைவனது சித்தத்திற்கு பணிவதே நமது கடமை." 

என்று இறைவன் சித்தத்தை அப்படியே ஏற்றுக்கொண்டால் நாம். உண்மையான விசுவாசிகள். 

அந்நிலையில்  நமக்கு ஆண்டவர் மீது அதிருப்தி ஏற்பட்டால் நாம் பெயருக்குதான் விசுவாசிகள்.

ஒரு முறை மாணவர்கள் தேர்வுக்குத் தயாரித்துக் கொண்டிருந்தபோது ஆசிரியர்  சொன்னார்,

"நீங்கள் படித்தது விரல் நுனியில் தயாராக இருக்க வேண்டும்.

Everything must be ready at the tip of your fingers.

அப்போதுதான் கேள்வியை வாசித்தவுடனே பதில் எழுத முடியும்.'' என்றார்.

தேர்வு எழுதி முடிந்து வந்த ஒரு மாணவனிடம் ஆசிரியர் கேட்டார்,

"எப்படி எழுதி இருக்கிறாய்."

மாணவன் சொன்னான்.

 "நான் படித்த எல்லாவற்றையும் விரல்நுனியில் வைத்திருந்தேன்.

 ஆனால் தேர்வு எழுத செல்லும்போது,

" நகத்தை  வெட்டிட்டுப் போடா, அசிங்கமா இருக்கு." என்று அம்மா சொன்னார்கள்.

 நானும் அவர்கள் சொற்படி நகத்தை வெட்டி விட்டுப் போனேன்.

 விரல்  நுனியில் இருந்ததெல்லாம் நகத்தோடு போய்விட்டது." என்றான்!

அதே போல்தான் சிலரது விசுவாசம் தோல்மேல் இருக்கும். தண்ணீர் பட்டவுடன் போய்விடும்.

ஒரு சிறிய கஷ்டம் வந்தாலும்,

"கடவுள் இருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா? "

என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

உயிருக்கு ஆபத்து வந்தாலும்,

"கொடுத்தது நீர்தானே. தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளும்."

என்று கூறுபவர்களும்    இருக்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தமட்டில்

 'பிறந்தால் இவ்வுலகம்,

 இறந்தால் விண்ணுலகம்.'

அவர்கள்தான் ஆழமான விசுவாசிகள்.

நமது விசுவாசத்தின் ஆழத்தை நாம் தெரிந்து கொள்ளத்தான் 

இறைவன் நமக்கு சோதனைகளையும் துன்பங்களையும் வர விடுகிறார்.

துன்பங்களின் அளவு  அதிகரிக்க அதிகரிக்க நமது அன்பும் விசுவாசமும் அதிகரிக்க வேண்டும்.

சாதாரணமாகச் செல்லும்போது தாயின் கையை மட்டும் பிடித்துச் செல்லும் குழந்தை 

ஏதாவது ஆபத்தைக் கண்டால் தாயைப் பற்றிப்பிடித்துக் கொள்கிறது.

நாமும் ஏதாவது பிரச்சினை வந்தால் 

ஆண்டவரைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

நாம் அவரை இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அதிக துன்பங்களை அனுப்புகிறார்.

சோதனைகள் வரும் போதெல்லாம்

"Jesus, I love you." 
"Jesus, deepen my faith.''

என்று சொல்லுவோம்.

விசுவாசம் என்ற செடி வளர துன்பங்கள் என்ற உரத்தை பயன்படுத்துவோம்.

லூர்து செல்வம்.


No comments:

Post a Comment