Friday, November 22, 2019

அருள் நிறைந்த மரியே, எங்களைக் குழப்புபவர்களுக்காக அதிகமாக வேண்டிக்கொள்ளுங்கள்!




அருள் நிறைந்த மரியே, எங்களைக் குழப்புபவர்களுக்காக அதிகமாக வேண்டிக்கொள்ளுங்கள்!

*   *    *   *   *    *   *    *    *   *   *


நேற்று, YouTube. Video வில ஒரு பிரிவினை சபை


( எந்தப் பிரிவினை என்று தெரியவில்லை. இருப்பது ஒன்றா?  இரண்டா?)


Pastor ஒருவர் பேசுவதைத் தற்செயலாகக் கேட்க நேர்ந்தது.


அவர் அன்னை மரியாளைப் பற்றிப் பேசிய வார்த்தைகள்  என்னை மிகவும் புண்படுத்திவிட்டடன.


அவர்களுக்குத் தாய் தேவை இல்லாமல் இருக்கலாம்.


நமக்கு அப்படி அல்ல. தாய் இல்லாமல் நாம் இல்லை.


நமக்கு இரட்சகரைப் பெற்றுத் தந்தவள் அவள்.


நமது இரட்சகர் நமக்குத் தந்த தாயும் அவள்தான்


அவளைப் பற்றிக் குறைவாகப் பேசுவதைக்  கேட்க முடியவில்லை.


அவர் சொன்னார்,


"இயேசு மரியாளின் வயிற்றில் பிறந்திருக்லாம்.


ஆனால் அதற்காக அவளை மாசு மருவற்றவள் என்று கூற முடியாது.


ஆதாம் செய்த பாவத்திற்காக நாம் எல்லோருமே, மரியாள் உட்பட, சென்மப் பாவத்தோடு பிறந்தோம்.


மரியாள் சென்மப் பாவம் இல்லாமல் உற்பவித்தாள் என்பதற்கு பைபிளில் எந்த ஆதாரமும் கிடையாது."


இதை அவர் சொன்னபோது எனக்குக் கோபம்கோபமாய் வந்தது,


அந்த பாஸ்டர் மீது அல்ல, பாவம், அவர் என்ன செய்வார்,

அவர் பிரிந்து சென்றவர், அப்படித்தானே பேசுவார்.


எனக்கு கோபம் வந்தது நம்ம ஆட்கள் மீது.


ஆதார வசனங்களை அழித்தவர்கள் நம்ம ஆட்கள்தானே!


அதிலும் பெரிய பெரிய படிப்பெல்லாம்  படித்த ஆட்கள்!


மாதாவின் மைந்தனின் திருச்சபையின்  மக்கள்,


வெளிநாடெல்லாம் போய்


பெரிய பெரிய படிப்பெல்லாம்  படித்து விட்டு,


மாதாவின் அமல உற்பவத்தைப் பற்றிய ஆதாரங்களை அழித்த ஆட்களை நினைத்தால் சந்தோசமா வரும்?


நான் சேசுசபையினர் நடத்தும் உயர் நிலைப் பள்ளியில்தான் (St. Mary's,  Madurai) ஞான உபதேசம் படித்தேன்.


மாதாவின் அமல உற்பவத்திற்கு ஆதாரமாக அன்றைய சேசுசபைக் குருக்கள் எங்களுக்குக் காட்டிய பைபிள் ஆதாரங்கள்:


1.அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் பாம்பைப் பார்த்து,


"உனக்கும் பெண்ணுக்கும்,


உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே


பகையை உண்டாக்குவோம்: 


அவள் உன் தலையை நசுக்குவாள்:


நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய்"


என்றார்.(ஆதி.3:15)


நமது முதல் பெற்றோரை ஏமாற்றிப் பாவத்தில் விழத்தாட்டிய சாத்தானுக்கு ஆண்டவர் இட்ட சாபம்:


1. உனக்கும் பெண்ணுக்கும்,

பகையை உண்டாக்குவோம்:


2. உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே 

பகையை உண்டாக்குவோம்:


முதல் பகை


சாத்தானுக்கும் மரியாளுக்கும்.


"அவள் உன் தலையை நசுக்குவாள்."


சாத்தானின் தலையை மாதா

நசுக்குவாள்,


ஆகவே சாத்தானால் மரியாளை பாவத்தில் விழத்தாட்ட முடியாது.


பாவத்தால் அவளை நெருங்க முடியாது.


 தாய் வயிற்றில் உற்பவிக்கும்போதே அவள் பரிசுத்தமாய் இருப்பாள்.


சென்மப் பாவம் அவளைத் தொடாது.


"நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய்"


சாத்தான் மாதாவை பாவத்தில் விழத்தாட்ட முயலுவான். 


ஆனால் முடியாது.


இது கடவுள் மாதாவுக்குக் கொடுத்த வரம்.


ஆகவே மாதா உற்பவிக்கும்போதும்,


வாழ்நாள் முழுவதும் 


பாவ மாசு மரு இன்றி பரிசுத்தமாய் இருந்தாள்.


அடுத்த பகை


பாவத்துக்கும்  இயேசுவுக்கும் உள்ள பகையை நாம் விளக்க வேண்டியதில்லை. இயேசு பாவத்தை வென்றார் என்பதை யாரும் மறுக்வில்லை.



2.அவள் தாவீது குலத்தவராகிய சூசை என்பருக்கு மண ஒப்பந்தமானவள். அவள் பெயர் மரியாள்.


28 தூதர் அவளது இல்லம் சென்று, " அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " என்றார்.(லூக்.1:27, 28)


முதல் ஆதாரத்துக்கு வலுவூட்டும் வகையில் இரண்டாவது ஆதாரம் அமைந்துள்ளது.


கபிரியேல் தூதர் மரியாளை வாழ்த்தும்போது,


"அருள் நிறைந்தவளே"  என்று அழைக்கிறார்.


ஒரு பாத்திரம் ஒரு பொருளால் நிறைந்திருக்கிறது என்றால் அந்தப் பாத்திரத்தில் அந்தப்பொருள் தவிர வேறு எதுவும் இருக்க இயலாது.


மரியாள் அருள் நிறைந்தவள்.


அவளிடம் அருளுக்கு எதிரான பாவத்தின் நிழல் கூட இருக்கமுடியாது.


அருள் நிறைந்தவள் = பாவ மாசு மரு அற்றவள்.


இந்த இரண்டு ஆதாரங்களே


மாதா எப்போதும்  மாசு மரு அற்றவள்


என்று நிரூபிக்க போதும்.


ஆனால் இந்த இரண்டு ஆதாரங்களும்,


பிரிவினை சபையினரை உடன் வைத்துக் கொண்டு செய்யப்பட்ட நமது  புதிய  பொது மொழிபெயர்ப்பில் அழிக்கப்பட்டிருக்கின்றன.


பிரிவினை சபையினருக்கு மாதா பக்தி கிடையாது.


அவர்களைத் திருப்திப் படுத்துவதற்காகத்தான் நம்ம ஆட்கள் பார்த்த வேலையோ இது என்று சந்தேகமாய் இருக்கிறது.


சரி எப்படி அழிச்சிருக்காங்கன்னு பார்ப்போம்.


புதிய மொழிபெயர்ப்பு


பழைய ஏற்பாடு :


உனக்கும் பெண்ணுக்கும்,


உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.


அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்.


நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்.






அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்.


'அவள் வித்து' இயேசு.


புதிய பெயர்ப்புப்படி


மரியாள் சாத்தானின் தலையை  நசுக்கவில்லை!


அதுட்டுமல்ல,


நீ அதன் குதிங்காலைக் "காயப்படுத்துவாய்”


பழைய ஏற்பாட்டு ஆதாரம் Out!


புதிய ஏற்பாடு 


28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி,


"அருள்'மிகப்' பெற்றவரே வாழ்க! 


ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார்.


லூக்கா நற்செய்தி 1:28


'நிறைந்த' போய், 'மிக' வந்திருக்கிறது.


ஒரு பாத்திரத்தில் ஒரு பொருள் மிகுதியாக இருந்தால்,


மீதியுள்ள கொஞ்ச இடத்தில் வேறு பொருள் இருக்கலாம்.


அதாவது, மாதாவிடம்


.999999999999999 அருள் இரருந்தால்கூட

.000000000000001 அற்ப மாசு இருக்கலாம்.


'நிறைந்த போய் 'மிக' வந்ததால் ஏற்பட்ட விளைவு இது!


புதிய ஏற்பாட்டு ஆதாரமும் Out!




பிரிவினை சபையினருக்கு நம்மவர்,


சாதாரண நம்மவர்அல்ல,

மிகப்படித்த நம்மவர்,


புதிய மொழிபெயர்ப்பைச் செய்த நம்மவர்,


எப்படி உதவியிருக்கிறார்கள்

பார்த்தீர்களா!


மாதா மேல இவர்களுக்கு அப்படி என்ன கோபம்?


பழைய மொழிபெயர்ப்பு தவறு என்றால், புதிய மொழி பெயர்ப்பு சரி என்பதற்கு என்ன ஆதாரம்?


அருள் நிறைந்த மரியே எங்கள் எல்லோருக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள்.


எங்களைக் குழப்புபவர்களுக்காக அதிகமாக வேண்டிக்கொள்ளுங்கள்.


லூர்துசெல்வம்

No comments:

Post a Comment