Friday, April 21, 2023

"இயேசுவே அவர்களோடு சேர்ந்துகொண்டு வழிநடக்கலானார்." (லூக்.24:15)

"இயேசுவே அவர்களோடு சேர்ந்துகொண்டு வழிநடக்கலானார்." (லூக்.24:15)

யாரோடு சேர்ந்துகொண்டு இயேசு வழி நடந்தார்?

அவரது உயிர்ப்பில் நம்பிக்கை இல்லாத இரண்டு சீடர்களோடு சேர்ந்து இயேசு வழி நடந்தார்,

அவர்களுக்கு நம்பிக்கை உண்டாக்குவதற்காக.

நமக்கு 1,008 வேலைகள் இருக்கலாம், ஆனால் நம்மைப் படைத்து, மீட்ட இயேசுவுக்கு ஒரே ஒரு வேலைதான், எப்போதும் நம்மோடு இருப்பது.

ஆளுக்குத் தகுந்தபடி, நேரத்திற்கு ஏற்றபடி பேசும் பழக்கம் நம்மிடம் இருக்கலாம்.

நமது பேச்சில் நமக்கே நம்பிக்கை இருக்காது.

ஆனால் இயேசு கடவுள். முக்காலமும் அறிந்தவர். அவரால் படைக்கப் பட்ட நம்மீது அளவு கடந்த அக்கறை உள்ளவர்.

நமது நன்மை கருதி அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மாறாத உண்மை உள்ளது.

"நான் உலகம் முடியுமட்டும் உங்களோடு இருப்பேன்" என்று அவர் சொன்னது அவரது அப்போஸ்தலர்களைப் பார்த்து மட்டுமல்ல,

அவரை விசுவசிக்கும் நம் அனைவரையும் பார்த்துதான்.

அவர் எப்போதும் நம்மோடு இருக்கிறார்.

நாம் நடக்கும்போது நம்மோடு நடக்கிறார்.

நாம் ஓடும்போது அவரும் நம்மோடு ஓடி வருகிறார்.

நாம் நிற்கும் போது அவரும் நம்மோடு நிற்கிறார்.

நாம் உட்காரும்போது அவரும் நம் அருகில் உட்காருகிறார்.

நாம் வேலை செய்யும்போது அவரும் நம்மோடு சேர்ந்து வேலை செய்கிறார்.

நாம் சாப்பிடும்போது நமது உணவை ஆசீர்வதிக்கிறார்.

நாம் படுத்திருக்கும் போதும், தூங்கும்போது நமது தலைமாட்டில் அமர்ந்து, நம்மைத் தடவி விட்டுக் கொண்டிருக்கிறார்.

நாம் ஒவ்வொரு விநாடியும் அவர் பிரசன்னத்தில் இருந்தால் இதையெல்லாம் உணர்வோம்.

தாயுடன் இருக்கும் பிள்ளைக்கு உள்ள உணர்வு நமக்கும் இருக்கும்.

"இயேசுவே உம்மை நேசிக்கிறேன்" (Jesus, I love You.)

என்ற எண்ணம் மனதில் ஓடிக் கொண்டேயிருக்கும்.

இயேசுக்கு எதிரான எந்த எண்ணமும் மனதில் தோன்றாது.

இயேசு நம்மோடு இருக்கும் உணர்வு இருந்தால் பாவத்தில் விழ மாட்டோம்.

அடிக்கடி கோவிலுக்குப் போவோம்.

நற்கருணை நாதரைச் சந்தித்துப் பேசுவோம்.

தினமும் திருப்பலியிலும், திருவிருந்திலும் கலந்து கொள்வோம்.

நாம் யாரைப் பார்த்தாலும் அவரில் இயேசுவைக் காண்போம்.

இயேசுவுக்குச் செய்ய வேண்டியதை எல்லாம் அவருக்குச் செய்வோம்.

சுருக்கமாகச் சொன்னால் விண்ணக வாழ்வின் சுவையை 

மண்ணகத்திலேயே அனுபவிப்போம்.

We will have a pretaste of Heaven in this world itself.

இயேசு நம்மோடு வாழ்வதை உணர்ந்து வாழ்வோம்.

உண்மையில் நாம் வாழவில்லை, அவர்தான் நம்மில் வாழ்கிறார்.

விண்ணக வாழ்வை மண்ணகத்திலேயே ருசிப்போம்.


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment