Sunday, April 30, 2023

கடவுள் எப்படி எங்கும் இருக்கிறார்? (தொடர்ச்சி)

கடவுள் எப்படி எங்கும் இருக்கிறார்? (தொடர்ச்சி)

உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்காகத்தான் மனிதன் மொழியைக் கண்டு பிடித்தான்.

கோடிக்கணக்கான மக்கள் வாழும் உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள்  உள்ளன.

ஒருவரோடு நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் அவருக்குத் தெரிந்த மொழியில் பேச வேண்டும்.

கடவுளோடு பேச மொழி தேவையில்லை.

நாம் பகிர்ந்து கொள்ளாமலேயே நமது எண்ணங்கள் அனைத்தும்,

இனிமேல்தான் நினைக்கப் போகும் எண்ணங்கள் உட்பட,
அவருக்குத் தெரியும்.

அவர் அளவு கடந்த ஞானம் உள்ளவர்.

உள்தூண்டுதல்கள் (Inspirations) மூலம் அவர் நினைப்பதை நம்மோடு பகிர்ந்து சொள்வார்.

உதாரணத்துக்கு நாம் உவரி அந்தோனியார் திருத் தலத்திற்குச் சென்று வர வேண்டும் என்பது அவர்  விருப்பமானால்,

அதற்கான ஆசையை நம் மனதில் தூண்டி விடுவார்.

நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆசைகளைத் தூண்டிவிடுவது இறைவனா அல்லது எதிராளியா என்பதை எப்படிக் கண்டுணர்வது?

யாரை விழுங்கலாம் என்று எதிராளியும் தூங்காமல் அலைந்து கொண்டிருக்கிறான். 

தூண்டுதல்கள் இறைவனது கட்டளைகளுக்கு எதிராக இல்லாமலும், இறை வாக்கின்படியும் இருந்தால் இறைவனுடையவை.

அதைக் கண்டு பிடிக்க நாம் இறைவனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிபவர்களாகவும்,

ஒழுங்காக இறைவாக்கை வாசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

இப்போது மொழிப் பிரச்சனைக்கு வருவோம்.

இயேசுவின் விருப்பப்படி நற் செய்தி அறிவித்துக் கொண்டிருக்கிறோம்.

மோட்சத்தில் நிரந்தரமாக வாழ்வதற்கே படைக்கப் பட்டிருக்கிறோம் என்று சொல்கிறோம்.

நண்பர் கேட்கிறார்.

"மோட்சம் எங்கே இருக்கிறது?"

நாம் ஏற்கனவே சென்று வந்த இடத்தைப் பற்றி ஒருவர் கேட்டால் நமக்குத் தெரிந்ததைச் சொல்லலாம்.

மோட்சத்திற்கு நாமே இனிமேல்தான் செல்ல வேண்டும்.

ஆனாலும் தாய்த் திருச்சபை நமக்குப் போதித்திருப்பதை அவருக்குப் புரியும்படி சொல்ல வேண்டும்.

மோட்சம் நமது உலகைப் போல ஒரு இடம் அல்ல.

உலகம் சடப் பொருட்கள் இருக்கும் இடம்.

சடப் பொருளாகிய நமது உடலை நமது ஆன்மா இயக்கிக் கொண்டிருக்கிறது.

நமது மரணத்தின் போது நமது ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து மோட்சமாகிய பேரின்ப நிலையை அடைகிறது.

மோட்சம் ஒரு பேரின்ப நிலை.

இறைவன் மோட்சத்தில் நித்திய காலமாக பேரின்ப நிலையில் வாழ்கிறார்.

நமது ஆன்மா மோட்சம் சென்றவுடன் கடவுளுடன் இணைந்து (Getting United with God) பேரின்ப நிலையை அடைகிறது.

மனித மொழியில் நாம் இறந்தவுடன் மோட்சத்திற்குச் செல்கிறோம் என்று சொல்கிறோம்.

உலகில் நாம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்கிறோம்.  

ஆனால் நாம் பரிசுத்தமாக இருந்தால் நமது மரணத்தின் போது அது வரை உடலோடு இருந்த ஆன்மா 

மரணித்த விநாடியே மோட்சத்தத்தில் இருக்கும்.

ஒரு மிலி மீட்டர் கூட அது பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு விநாடி கூட அது பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஏனெனில்  மோட்சத்தில் இடமும் கிடையாது,  நேரமும்  கிடையாது.

ஆண்டவர் மனிதனாகப் பிறக்கும் போது விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்தார் என்று சொல்கிறோம்.

 உடனே ஒரு ஏணியைக் கற்பனை செய்து விடக் கூடாது.

அன்னை மரியின் வயிற்றில் கருவுற்றவுடனே,

விண்ணில் வாழும் இறைமகன் மண்ணில் மனித உரு எடுத்தார் எடுத்தார் என்றுதான் அர்த்தம்.

விண்ணில் இடமும், நேரமும் இல்லாததால், நமது புனிதர்கள் (மனித மொழியில்) எந்த வினாடியும் எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் இருப்பார்கள்.

உதாரணத்திற்கு,

இப்போது நாம் புனித அந்தோனியாரை நோக்கி செபித்தால் அவர் நம்முடன் இருப்பார்.

இந்த வினாடியோ, அடுத்த வினாடியோ அமெரிக்காவில் இருக்கும் ஒருவர் செபித்தால்  அவர் அங்கு இருப்பார்.

Flight ஏறி பயணிக்கத் தேவையில்லை.

மரியாள் பரிசுத்த ஆவியால் 
கருத்தரித்தாள் என்ற உண்மைையை  உலகப் பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது.


பரிசுத்த ஆவியின் வல்லமையால் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

எந்த இறைவாக்கை வாசித்தாலும் அதில் அடங்கியுள்ள இறைச் செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வார்த்தைகளின்  அகராதிப் பொருளை வைத்து விளக்கம் கொடுக்கக்கூடாது.

" மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழுள்ள தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்." (யாத்.20:4)

இந்த வசனத்திலுள்ள வார்த்தைகளுக்கு அகராதிப் படியே பொருள் கொடுக்கும் நமது பிரிவினை சகோதரர்கள் உருவங்கள் செய்வதே பாவம் என்கிறார்கள்.

இதற்கு முந்திய வசனங்களையும், அடுத்த வசனத்தையும் வாசித்தாலே இதில் உள்ள இறைச் செய்தி புரியும்.

"நம்மைப் படைத்த கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய ஆராதனையைக் கொடுப்பதற்காக உருவங்கள் எதையும் செய்யக் கூடாது."

இதுதான் இறைச் செய்தி.

வேதாகமம் இறைவனின் தூண்டுதலால் மனிதனால் மனித மொழியில் எழுதப்பட்ட இறைச் செய்தி.

இதில் முக்கியத்துவம் பெற வேண்டியது இறைச் செய்தி மட்டுமே, மனித மொழி அல்ல.

இதை நினைவில் வைத்துக் கொண்டு வேதாகமத்தை வாசிப்போம்.

லூர்து செல்வம்..

Friday, April 28, 2023

கடவுள் எப்படி எங்கும் இருக்கிறார்?

கடவுள் எப்படி எங்கும் இருக்கிறார்?

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சத்தைக் கடவுள் ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்தார்.

கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், அவை ஒவ்வொன்றுக்குமான கோள்களும் இயங்கிக் கொண்டிருக்கும் விண்வெளியைத் தான் பிரபஞ்சம் என்கிறோம்.

விண்வெளியின் பரப்பின் அளவை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

ஒளியின் வேகம் வினாடிக்கு
1, 86, 000 மைல்கள்.

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இறைவனால் படைக்கப் பட்ட சில நட்சத்திரங்களிலிருந்து இதே வேகத்தில் பயணிக்கும் ஒளிக் கதிர்கள் இன்னும் பூமிக்கு வந்து சேரவேயில்லை.

அந்த நட்சத்திரங்களுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

அந்த நட்சத்திரங்கள் பூமியிலிருந்து கோடிக் கணக்கான ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ளன.

ஒரு ஒளி வருடம் 1,86,000 x 60 x 60 x 24 x 365 மைல்களுக்குச் சமம்.

கடவுளால் படைக்கப்பட்ட பிரபஞ்சத்தின் அளவைக் கற்பனை செய்து பாருங்கள்.

கடவுள் எங்கே இருக்கிறார்?

எங்கும் இருக்கிறார்.

நாம் கேட்டிருக்கும் கேள்வி மனித மொழிக்கு உரியது. பதிலும் மனித மொழியில்தான் இருக்கும்.

மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பது சடப் பொருட்களால் ஆன பிரபஞ்சத்தில். (material universe) 

மனிதன் சடப்பொருளாலும், (உடல்) 
ஆவிப் பொருளாலும் (ஆன்மா) ஆனவன்.

ஆனால் அவன் சடப்பொருளால் ஆன உலகத்தில் (Material world) வாழ்ந்து கொண்டிருப்பதால் அவன் பயன்படுத்தும் மொழி சடப்பொருள் சம்பந்தப் பட்டதாகவே இருக்கும்.

அவன் ஆன்மீகம் (Spirituality)
பற்றி பேசும்போதும் சடப் பொருள் மொழியையே (Material language) பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

இதனால் ஆன்மீகத்தைச் சரியாகப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.

'எங்கே' என்ற வினாச் சொல் சடப்பொருள் சம்பந்தப் பட்டது.

"நீ எங்கே வசிக்கிறாய்?"

"பாவூர்ச் சத்திரத்தில்."

பாவூர்ச் சத்திரம் சடப் பொருளால் ஆன ஒரு இடம்.

"எனது புத்தகம் எங்கே இருக்கிறது?"

"எனது பைக்குள் இருக்கிறது.''

இங்கே கேள்வியும், பதிலும் சடப்பொருள் சம்பந்தப்பட்டவை.

ஆகவே புரிந்து கொள்வதில் சிரமம் இல்லை.

'எங்கே' என்ற வினாச் சொல்லைப் போலவே,

 'எங்கும்' என்ற பதிலும் சடப்பொருள் சம்பந்தப் பட்டது.

"நேற்று எங்கும் நல்ல மழை பெய்தது."

ஆனால்,

ஆன்மீகம் சார்ந்த பதிலை எதிர் பார்க்கும்போதும் இதே வினாச் சொல்லைப் பயன்படுத்தும் போதுதான் சிக்கல் ஏற்படுகிறது.

"கடவுள் எங்கே இருக்கிறார்?"
என்று யாராவது கேட்டால்

"கடவுள் எங்கும் இருக்கிறார்" என்று பதில் சொல்வோம்.

கடவுள் ஒரு ஆவி. (Spirit) 

ஆன்மீகம் சார்ந்த கேள்விக்கு சடப்பொருள் சார்ந்த வினாச் சொல்லையும், பதில் சொல்லையும்யும் பயன் படுத்தியிருக்கிறோம்.

கடவுளைச் சார்ந்த மொழி (Divine language) நமக்குத் தெரியாது.

ஆகவே வேறு வழியில்லாமல் நமக்குத் தெரிந்த மனித மொழியைப் பயன் படுத்தியிருக்கின்றோம்.

மனித மொழியில் எங்கும் என்றால் பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் என்று அர்த்தம்.

நான் நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன் என்று சொன்னால்,

நாற்காலி ஒரு சடப் பொருள்,
எனது உடல் ஒரு சடப் பொருள்,

ஒரு சடப் பொருள், இன்னொரு சடப் பொருள் மேல் இருக்கலாம்.

ஆனால் கடவுள் ஆவி.

ஆவி எப்படி பிரபஞ்சம் என்ற சடப்பொருளில் இருக்க முடியும்?

Spirit cannot occupy space.

கடவுள் எங்கும் இருக்கிறார் என்ற வாக்கியத்தில் உள்ள ஆன்மீகப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எங்கும் என்றவுடன் கோடிக் கணக்கான நட்சத்திரங்களும், அவற்றுக்குரிய கோள்களும் உள்ள பிரபஞ்சம்தான் ஞாபகத்துக்கு வரும். 

பிரபஞ்சம் ஒரு சடப் பொருள்தான்.

ஆனால் அதைப் படைத்தவர் ஆவிப் பொருளாகிய கடவுள்.

தனது அளவற்ற வல்லமையால் அதைப் படைத்தார்.

வல்லமை கடவுளுடைய பண்பு.
(Attribute)

தான் படைத்த ஒவ்வொரு பொருளின் ஒவ்வொரு அணுவையும் அவர் நன்கு அறிவார். அது அவருடைய ஞானம்.

ஞானம் கடவுளுடைய பண்பு.

தான் படைத்த ஒவ்வொரு பொருளையும் அவர் நேசிக்கிறார்.

நேசம் (Love) கடவுளுடைய பண்பு.

தனது வல்லமையாலும், ஞானத்தாலும், நேசத்தாலும் தனது படைப்புகளைப் பராமரித்து வருகிறார்.

தனது பராமரிப்பை அவர் நிறுத்தினால் அவருடைய படைப்பு ஒன்றுமில்லாமையாகி விடும்.

அவர் தன்னுடைய வல்லமையாலும், ஞானத்தாலும், அன்பாலும்

தனது படைப்புகளின் ஒவ்வொரு அணுவையும் பராமரித்து வருவதால் அவருடைய பண்புகளால் எங்கும் இருக்கிறார்.


கடவுள் அவருடைய படைப்புகளுக்கு  அப்பாற்பட்டவர்.

ஆனால் அவரால்தான் அவை அனைத்தும் இயங்குகின்றன.

அவர் தனது வல்லமையாலும்,  ஞானத்தாலும், அன்பாலும் இன்னும் மற்ற பண்புகளாலும் எங்கும் இருக்கிறார்.
(தொடரும்)

லூர்து செல்வம்.








Thursday, April 27, 2023

How  is God everywhere?

   How  is God everywhere?

 

God created the universe from nothing.

By universe we refer to the vast space with the millions of stars with their planets which are within it.

We cannot even imagine the vastness of the space.

Light travels at a speed of 1,86,000 miles per second.

Scientists say that the light rays of some stars have not yet reached our planet though they are travelling at this speed right from the time of their creation millions of years ago!

Can we just imagine the distance between them and our planet?

They are innumerable million folds of light years from our planet.

 One light year is equal to 1,86,000 x 60 x 60 x 24 x 365 miles!

Just imagine the size of the universe created by God!

Where is God?

God is everywhere.

The question and answer belong to a human language.

Man is living in the material universe created by God.

Though he is a combination of matter and spirit (body and soul) his language is related to matter as he has to deal with material things all his life.

The trouble is, he has to use the same material language even when he speaks about spirituality.

This is the cause of the confusion in our understanding things spiritual.

We use the question word ‘where’ when we expect an answer referring to a material place.

“Where are you living?”

“I am living in Pavoorchatram.”

“Where is the book I gave you?”

“It is on my table.”

We use the same ‘where’ when expect an answer referring to spiritual things.

“Where is God?”

“Where is heaven?”

“Where will we go after death?”

Just as ‘where’ ‘everywhere’ too refer to a material place.

By ‘everywhere’ we refer to the whole universe.

“God is everywhere’’ means that God is in all the places in the vast universe.

How is God everywhere?

Having no other go but to use a material language to describe things Divine, we must be very careful in understanding what is described.

When we say ‘everywhere’ what comes to our mind is the material universe with its vast space with the million folds of stars in it.

True, God is everywhere in the universe covering a circumference of trillion folds of square miles! 

The same God, who is within and around us, is also in a star which is many trillion light years away from us.

But, how?

The universe we are talking of is a material thing.

But God is a spirit.

 Spirit cannot occupy a matter.

In fact a spirit needs no space for its existence.

We know that it was God who created the space.

God exists from all eternity when space was only an idea in His mind as we too were.

Then how is He in the material universe?

God is everywhere by His power, love, knowledge and other attributes.

Having created the universe He has full power over it.

It is He Who maintains it with the natural laws He made for the purpose.

 He has full power to annihilate the whole universe and turn it into nothing if He wills so.

He loves the whole universe as it is His creation.

He has full knowledge about the universe; He knows the movement of each and every atom in the whole universe.

His being ‘everywhere’ is purely spiritual, not material.

‘I am sitting on my chair.’

Here my body is a matter; it is on a chair, which too is a matter.

As God is everywhere, He is in the chair also, but not in a material sense as I do, but in a spiritual sense, by His attributes.

Lourdu Selvam

Wednesday, April 26, 2023

 "குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்: தடுக்க வேண்டாம். ஏனெனில், கடவுளின் அரசு இத்தகையோரதே."(லூக். 18:16)

 "குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்: தடுக்க வேண்டாம். ஏனெனில், கடவுளின் அரசு இத்தகையோரதே."
(லூக். 18:16)


சிறு பிள்ளைகளைக் கவனித்திருக்கிறீர்களா?

விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

திடீரென்று 'அம்மா' என்பார்கள்.

'என்னடா?'

விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.

தீடீரென்று வந்து அம்மாவைப் பார்ப்பார்கள். 

விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.

அவர்கள் விளையாடும்போது அம்மா அங்கே இருக்க வேண்டும், அவ்வளவுதான்.

நாமும் கடவுள் முன்னிலையில் சிறு பிள்ளைகளைப் போல இருக்க வேண்டும்.

என்ன செய்தாலும் கடவுள் முன்னிலையில் இருக்கும் உணர்வோடு செய்ய வேண்டும்.

அப்படிச் செய்தால்

1. கடவுளுக்கு விரோதமாக எதையும் செய்ய மாட்டோம்.

2. கடவுள் நமக்கு உதவியாக இருப்பார் என்ற உணர்வு மனதில் இருக்கும்.

3.தேவைப் படும் போது உதவி கேட்போம்.

4. நமக்கு ஒரு வித பாதுகாப்பு உணர்வு இருக்கும்.

5. தாயோடு இருப்பது போன்ற உணர்வு இருக்கும்.

6. இதைத்தான் நாம் இறைப் பிரசன்னத்தில் வாழ வேண்டும் என்று தாய்த்திருச்சபை கூறுகின்றது.

எப்போதும் எங்கும் இருக்கும் இறைவன் எப்போதும் நம்மோடும்  இருக்கிறார்.

நமக்கு உள்ளும் இருக்கிறார், புறமும் இருக்கிறார்.

அவருக்குள் நாம் இருக்கிறோம்.

அவரது வேலை நம்மை அன்புடன் பராமரிப்பது மட்டுமே.

அவர் துவக்கமும், முடிவும் இல்லாதவர்.

மாறாதவர்.

ஆரம்பம் இல்லாத காலத்திலிருந்தே (From all eternity) நாம் அவர் உள்ளத்தில் எண்ணமாக இருந்தோம்.

நாம் ஒரு வீடு கட்ட வேண்டுமானால் முதலில் திட்டம் போடுகின்றோம்.

பிறகு செயல் படுத்துகிறோம்.

சில சமயங்களில் செயல் படுத்தும் போது திட்டத்தில் மாற்றங்கள் செய்கிறோம்.

சில சமயங்களில் திட்டத்தையே மாற்றுகின்றோம்.

ஆனால் கடவுள் அளவில்லாத ஞானம் உள்ளவர்.  முக்காலமும் அறிந்தவர். அவர் போட்ட திட்டத்தை மாற்ற மாட்டார்.

அவருடைய திட்டம் நமது நலனையே மையமாகக் கொண்டிருக்கும்.

நாம் நமது சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவோம் என்று அவருக்கு முன்கூட்டியே தெரியுமாகையால்

அதை அனுசரித்தே அவருடைய திட்டமும் இருக்கும்.

நாம் நமது சுதந்திரத்தை எப்போதும் அவரது விருப்பப் படியே பயன்படுத்தினால் 

அவரது திட்டப்படியும், நமது விருப்பப்படியும் நமது வாழ்க்கை அமையும்.

நமது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால், 

நமது முதல் பெற்றோரைப் போல,

பிரச்சனை வரும்.

ஆனால் அதற்கும் நித்திய காலத்திலிருந்தே ஒரு தீர்வு கடவுளிடம் இருக்கும்.

மனுக்குலத்தைப் படைக்கத் திட்டமிடும்போதே இறைமகன் மனுமகனாகப் பிறக்கும் திட்டமும் போடப்பட்டு விட்டது.

இரண்டு திட்டங்களுமே நித்தியமானவை.

நமது நலனையே மையமாக வைத்து திட்டம் தீட்டி, செயல் படுத்தி வரும் கடவுள் கையில் நமது வாழ்க்கை இருக்கும்போது நாம் எதற்கு அஞ்ச வேண்டும்?

நமக்கு முக்காலமும் தெரியாதாகையால் பிரச்சனைகள் வருவது போல் தோன்றும்.

நாம் கடவுளிடம் வேண்டும் போது நமது பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

நாம் கடவுளிடம் வேண்டும் போது நமது பிரச்சனைகள் தீர்ந்து விட்டால், கடவுள் மாறுகிறார் என்றுதானே அர்த்தம்!

இல்லை.

நமக்கு முக்காலமும் தெரியாதாகையால் அப்படித் தோன்றும்.

ஆனால் நாம் இப்போது வேண்டுவது கடவுளுக்கு நித்திய காலமும் தெரியும்.

ஆதவே தீர்வும் நித்திய காலத்திலிருந்தே போடப்பட்டு விடும்.

நித்திய காலத் தீர்வு கடவுள் குறிப்பிட்டிருக்கும் நேரத்தில் செயலுக்கு வரும்.

இயேசு பாடுகள் பட்டதும், மரித்ததும் கூட, அவர் நித்திய காலமாய் குறிப்பிட்டிருந்த நேரத்தில் தான்

கடவுள் மாற மாட்டார்.

நாம் பிறக்கு முன்பே யார் வயிற்றில், எப்போது பிறப்போம்,

எப்படி வளர்வோம், நாம் யாரைத் திருமணம் முடிப்போம்,

நமக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கும்,

நமது சந்ததியினர் எப்படி இருப்பார்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்.

நாம் கடவுள் விருப்பப்படி,

 அதாவது பாவம் செய்யாமல்
வாழ்ந்தால்,

நாம் கவலைப் பட வேண்டிய அவசியமே இல்லை.

நமக்கு என்ன நடந்தாலும் அது கடவுள் திட்டப்படிதான் நடக்கும்.

நாம் கீழே விழ நேர்ந்து, வெகு நாள் நடக்கக்கூட முடியாமலிருந்தாலும்,  

அதுவும் கடவுள் திட்டப்படி, நமது நன்மைக்கே.

என்ன நன்மைக்கு என்று நன்மை வரும் போதுதான் தெரியும்.

நாம் கடவுளுடைய பிரசன்னத்தில், அவரது விருப்பப்படி நடந்தால்,

எதைப் பற்றியும் கவலைப் பட வேண்டாம்.

மகிழ்ச்சியோடு வாழலாம்.

மரணம் வந்தாலும் கவலைப் பட வேண்டாம்.

ஏனெனில் நித்திய பேரின்ப வாழ்வுக்கான வாசல்.

அதைக் கடந்ததும் நித்திய பேரின்ப வாழ்வு ஆரம்பமாகும்.

இறைவன் கரத்தில் கவலை இன்றி வாழ்வோம்,

அம்மாவின் அருகில் விளையாடும் குழந்தைகளைப் போல.

 "குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்: தடுக்க வேண்டாம். ஏனெனில், கடவுளின் அரசு இத்தகையோரதே."

லூர்து செல்வம்.

Tuesday, April 25, 2023

"ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."(அரு.6:68)

"ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."
(அரு.6:68)

திவ்ய நற்கருணை மீது நம்பிக்கை இல்லாத மக்கள் இயேசுவை விட்டுப் பிரிந்து சென்ற போது,

அவர் பன்னிருவரை நோக்கி, "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா ?" என்றார்.

அதற்கு இராயப்பர்,

"ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன."

என்று பதில் அளித்தார்.

 நாம் இராயப்பர் பக்கம்.

'இயேசு வாழ்வு தரும் உணவு'  

என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

இவ்வுலக உணவு நமது உடலுக்கு வளர்ச்சியையும், பலத்தையும் கொடுக்கிறது.


இயேசு ஆன்மீக உணவு.

நமது ஆன்மா விண்ணகப் பாதையில் தைரியமாக நடப்பதற்குத் தேவையான சகல விதமான ஆன்மீக சக்திகளையும் நமக்கு உணவாக வரும் இயேசு தருகிறார்.

பாவச் சோதனையை எதிர்த்து நின்று வென்று, பாவத்தில் விழாதிருக்க வேண்டிய அருள் வரங்களைத் தருகிறார்.

துன்பங்களைச் சிலுவைகளாக ஏற்று, தைரியமாகச் சுமப்பதற்குத் தேவையான அருள் வரங்களைத் தருகிறார்.

நமது மனதை நோகச் செய்தவர்களை மன்னிக்க வேண்டிய நல்ல மனதைத் தருகிறார்.

நாமும் அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்து, பாவ மன்னிப்புப் பெற்று, ஒரு தேவத் திரவிய அனுமானத்துக்கு உரிய அருள் வரங்களை அள்ளி வருவதற்கான மனதையும் தருகிறார்.

இயேசு சமாதானத்தின் தேவன். அவரை அடிக்கடி உணவாக உட்கொள்வோர் இறைவனோடும், அயலானோடும் சமாதானமாக வாழ்வார்கள். 

அவர் சர்வத்தையும் படைத்த கடவுள். அவர் நமது உணவாக நம்மிடம் வரும்போது உச்சக் கட்ட மரியாதையுடன் அவரை வரவேற்போம்.

அவரைக் கையால் தொடுவதற்கு குருக்களின் கரங்கள் அபிசேகம் செய்யப் பட்டுள்ளன.

மிட்டாயைக் கையால் வாங்கி வாயில் போட்டுக் கொள்வது போல அவரைக் கையில், 
அதுவும் இடது கையில் வாங்கி,
வாயில் போட்டுக் கொள்வது 

உலகைப் படைத்த கடவுளுக்குச் செய்யும் அவமரியாதை.

தாய் தன் குழந்தைக்கு வாயில் உணவு ஊட்டுவது போல,

நமது தாய்த் திருச்சபை தனது குருக்கள் மூலம் இயேசுவை உணவாக ஊட்ட,

அவரை வாயைத்திறந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

நற்கருணை நாதர் நம்முள் வந்தவுடன் தகுதியற்ற நம்மிடம் வந்ததற்கு நன்றி கூறுவதோடு,

நமது ஆன்மீக வாழ்வுக்குத் தேவையான அருள் வரங்களைக் கேட்டுப் பெற வேண்டும்.

நற்கருணை வாங்கியவுடன் Cell phone ஐ எடுத்துக் கொண்டு வெளியே ஓடுவது ஆண்டவருக்குச் செய்யும் மிகப் பெரிய அவமரியாதை.

நமது நண்பன் நம்மை வரவேற்று வீட்டில் உட்காரவைத்து விட்டு வெளியே சென்று விட்டால் நமக்கு எப்படி இருக்கும்?

நன்மை வாங்கியவுடன் வீட்டுக்கோ, கடைக்கோ போவது அதை விடப் பெரிய அவமரியாதை.

திருப்பலி முடியுமுன் கோவிலை விட்டு வெளியேறக் கூடாது.

கால் பைசாவுக்குப் பெறாத நண்பர்களுடன் மணிக்கணக்காய் பேசிக் கொண்டிருக்கும் நமக்கு

நம்மைப் படைத்தவருடன் பேச சங்கடமாக இருக்கிறது.

நம் ஆண்டவர் திருவிருந்தின் போது நம்மிடம் வருவது மட்டுமின்றி,

நமது வருகைக்காக நாள் முழுவதும் நற்கருணைப் பேழையில் காத்துக் கொண்டிருக்கிறார்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோவிலுக்குச் சென்று நற்கருணை நாதருடன் உரையாட வேண்டும்.

நற்கருணைப் பேழையில் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஆண்டவரைப் பார்த்துக் கொண்டேயிருப்பதில் கூட பேரானந்தம் இருக்கிறது.

நாம் அவரைப் பார்க்க, அவர் நம்மைப் பார்க்க,

பார்வையில் நடைபெறும் மொழியில்லாத உரையாடலில் கிடைக்கும் பேரானந்தம் வேறு எதிலும் கிடையாது.

விண்ணக வாசிகள் தங்கள் பார்வையால் தானே இறைவனை நித்திய காலமாக இரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடவுளோடு பேச வார்த்தைகள் தேவையில்லை.

நாம் நினைப்பதை அவர் அறிவார். அவர் நினைப்பதை நாம் அறிவோம். 

மனங்களின் உரையாடலுக்கு நிகர் எதுவும் இல்லை.

செபக் கூட்டங்களை வழி நடத்துபவர்கள் பேசுவதைப் போல நமக்குப் பேசத் தெரியவில்லையே என்ற கவலை வேண்டாம்.

உள்ளத்தில் உறைபவர் கடவுள். உள்ளங்கள் கலக்க மொழி எதற்கு?

இறைவனோடு ஒன்றிப்பதே செபம்.

"தந்தை, மகன், தூய ஆவி" என்று நினைத்துக் கொண்டிருந்தால்,

கொஞ்ச நேரத்தில் அவர் நம்மை அவருக்குள் இழுத்துக் கொள்வார்.

நற்கருணை நாதரை நினைத்துக் கொண்டிருந்தால் போதும், நாம் அவரோடு ஒன்றித்து விடுவோம்.


"யாரிடம் செல்வோம், இறைவா? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன!"

நற்கருணை நாதரிடம் செல்வோம். முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் அவரிடம்தான் உள்ளன!

லூர்து செல்வம்.

Monday, April 24, 2023

"உங்கள் கவலைகள் அனைத்தையும் அவர் மேல் சுமத்தி விடுங்கள்: உங்கள் மீது அவருக்கு அக்கறை உண்டு." . (1இராய.5:7)

"உங்கள் கவலைகள் அனைத்தையும் அவர் மேல் சுமத்தி விடுங்கள்: உங்கள் மீது அவருக்கு அக்கறை உண்டு."
(1 இராய.5:7)

தாயின் மடியில் இருக்கும் குழந்தை சாப்பாட்டைப் பற்றிக் கவலைப் படாது.
அழுதவுடன் பால் கிடைக்கும்.

பெற்றோரின் பாதுகாப்பில் உள்ள பிள்ளைகள் தங்கள் எதிர் காலம் பற்றிக் கவலைப் பட மாட்டார்கள்.
பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடப்பார்கள்.

நல்ல ஆசிரியரிடம் படிக்கும் மாணவர்கள் தங்கள் தேர்வைப் பற்றிக் கவலைப் பட மாட்டார்கள்.
அவர் சொன்னபடி படிப்பார்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள்.

தங்கள் கவலைகளை எல்லாம் கடவுள் மேல் போட்டுவிட்டு, அவர் சொற்படி நடப்பார்கள்.

கவலைகள் இருவகை,

உலகைச் சார்ந்த கவலைகள்,

உயிர்வாழ எதை உண்பது, 
எதைக் குடிப்பது, 
உடலை மூட எதை உடுப்பது, 
எங்கே வாழ்வது,
வாழ்வதற்குத் தேவையான பொருளை எப்படி ஈட்டுவது, 
ஈட்டியதை எப்படிச் செல்வழிப்பது போன்றவற்றைச் சார்ந்த கவலைகள்.

ஆன்மீகத்தைச் சார்ந்த கவலைகள்,

கடவுளைத் திருப்திப் படுத்த எப்படி வாழ்வது,
பாவச் சோதனைகளை எப்படி வெல்வது,
பாவத்தில் விழுந்து விட்டால் எப்படி எழுவது,
விண்ணுலக வாழ்வை அடையத் தேவையான புண்ணியங்களை எப்படி ஈட்டுவது,
பாக்கியமான மரணத்திற்கு எப்படி எப்போதும் தயாராக இருப்பது போன்றவற்றைச் சார்ந்த கவலைகள்.

அநேகருக்கு ஆன்மீகம் என்றால் என்னவென்றே தெரியாது.

உலகம்தான் அவர்களுக்கு எல்லாம்.

மறுவுலகம் ஒன்று இருக்கிறது என்று சொல்வதை குருட்டு நம்பிக்கை என்பார்கள்.

ஆண்டவருடைய புத்திமதியால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

சிலர் முழுக்க முழுக்க ஆன்மீகவாதிகள்.
உலகை முற்றும் துறந்தவர்கள்.
அவர்கள் இறைவாக்கால் மட்டுமே இயக்கப் படுவவர்கள்.
இறைவாக்கையே வாழ்பவர்கள்.
 
அநேகர் இரண்டு வித கவலைகளும் கலந்த சாதாரண மக்கள்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். கடவுளை நேசித்து, அவருக்கு சேவை செய்து விண்ணகம் செல்லவே தாங்கள் படைக்கப் பட்டிருப்பது அவர்களுக்குத் தெரியும். அதற்காகவே வாழ்வார்கள்.

ஆனாலும் உலகில் இருக்கும் வரை அதையும் அனுபவிக்க வேண்டுமே என்ற ஆசை இருக்கும்.

அவர்கள் கவலைகள் சம்பந்தப் பட்ட இறை வாக்கை நன்கு வாசித்து தியானிக்க வேண்டும்.

ஆண்டவருடைய போதனையின் அடிப்படையில் நமது முதல் திருத் தந்தை இராயப்பர் சொல்கிறார்,

"உங்கள் கவலைகள் அனைத்தையும் அவர் மேல் சுமத்தி விடுங்கள்: "

உலகைச் சார்ந்த கவலைகளாக இருந்தாலும், மறுவுலகைச் சார்ந்த கவலைகளாக இருந்தாலும்

அவை அனைத்தையும் கடவுள் மேல் சுமத்தி விட வேண்டும்.

அதாவது, எதைப் பற்றியும் நாம் கவலைப் படக் கூடாது.

நமது கவலைகளை அவர் பார்த்துக் கொள்வார்.

நாம் என்ன செய்ய வேண்டும்? எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார் என்று

 வீட்டில் போய்த் தூங்க வேண்டுமா?

நமது சுமையை அவர் முன் இறக்கி வைத்து விட்டு,

அவர் சொன்னபடி செய்ய வேண்டும்.

கசப்பான பொருளைக் கொடுத்து விட்டு அதற்குப் பதிலாக இனிப்பைத் தந்தால் யாரும் வேண்டாம் என்று சொல்வார்களா?

நாம் அவர் முன் இறக்கி வைத்து விட்ட கவலைகளுக்குப் பதிலாக அவர் இரண்டு இனிய கட்டளைகள் கொடுக்கிறார்.

"மகனே/மகளே, உனது கவலைகளைப் பற்றி நீ கவலைப் படாதே.

நித்திய காலமாய் நான் உன்னை நேசிக்கிறேன். நீ என்னை நேசி.

உன்னை நேசிப்பது போல உனது பிறனையும் நேசி.

நேசிப்பதற்கென்றே படைக்கப் பட்டது நமது இதயம்.

நேசிப்பதை விட வேறு இனிமையான செயல் இருக்க முடியுமா?

What can be sweeter than to love 💓?

புனித அகுஸ்தினார் சொல்கிறார்,

"Love and do as you like."

"அன்பு செய். அன்புக்குப் பாதகம் இல்லாமல் என்ன வேண்டுமானாலும் செய்."

"அன்பு பொறுமையுள்ளது,

 பரிவுள்ளது. 

அன்பு அழுக்காறு கொள்ளாது.

 பெருமை பேசாது, 

இறுமாப்பு அடையாது,


 இழிவானதைச் செய்யாது,

 தன்னலத்தைத் தேடாது,

 சீற்றத்திற்கு இடந்தராது, வர்மம் வைக்காது.

அநீதியைக் கண்டு மகிழ்வுறாது:

 உண்மையைக் கண்டு உளம் மகிழும்.

அனைத்தையும் தாங்கிக்கொள்ளும்: 

பிறர் மீது நல்லெண்ணம் இழப்பதில்லை: 

நம்பிக்கையில் தளர்வதில்லை:

 அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்.

அன்புக்கு என்றும் முடிவு இராது: 
(1கொரி.13:4-8), 

அன்பால் ஆகாதது எதுவுமில்லை.

இறைவனை முழுமையாக அன்பு செய்தால் அவருக்காகவே வாழ்வோம்.

என்ன செய்தாலும் அவருக்காகவே செய்வோம்.

அவருக்காக பாவம் செய்ய முடியாது.

அவருக்குரிய ஆராதனையைக் குறைவில்லாமல்.

திவ்ய நற்கருணை நாதரை நேசித்தால் அவரை முழந்தாள் படியிட்டு ஆராதிப்போம்.

இடது கையால் வாங்கி அவரை அவமானப் படுத்த மாட்டோம்.

கடவுளை அன்பு செய்தால் அதன் காரணமாகவே நமது அயலானை அவருக்காக அன்பு செய்வோம்.

அன்பு செயல்வடிவம் பெறும்போது நாட்டில் நற் செயல்களுக்குப் பஞ்சமே இருக்காது.

ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வோம்.

சமூகத்தில் ஒற்றுமையும், சமாதானமும் நிலவும்.

நாம் எதை உண்ண வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்று கடவுளுக்குத் தெரியும்.

நமது தேவைகளை அவரே   
நிவர்த்தி செய்வார்.

இறைப்பற்று உள்ளவன் உலகைச் சார்ந்த செயல்களையும் கடவுளுக்காகவே செய்வான்.

கடவுளுக்காகச் செய்யப்படும் எல்லாம் ஆன்மீக வாழ்வாக மாறிவிடும்.

அந்த வகையில் நாம் மூச்சு விடுவது முதல்,

உண்பது, உடுப்பது, உறங்குவது கூட ஆன்மீகச் செயல்களாக மாறிவிடும்.

இறைவனுக்காக வாழ்பவனிடம் பேராசை இருக்காது.

உழைப்பான். கிடைப்பதை வைத்து சிக்கனமாக வாழ்வான். அயலானோடு பகிர்ந்து வாழ்வான்.

துறவிகள் கடவுளுக்காக மட்டும் வாழ்கிறார்கள்.

கடவுளுக்காக மட்டும் வாழ்பவர்கள் அனைவரும் துறவிகள் தான்.

வேண்டாததைத் துறந்து வாழ்பவர்கள் எல்லாம் துறவிகள் தான்.

துறவற மடங்களில் மட்டுமல்ல, 
வீட்டில் வாழ்பவர்களும் தேவை இல்லாதவற்றைத் துறந்து வாழ்ந்தால்  துறவிகள் தான்.

இறைவனுக்காக மட்டும் வாழ்ந்தால் நாம் அனைவரும் கவலை இல்லாத மனிதர்கள்தான்.

நாம் நமது கவலைகள் முழுவதும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டால் அவர் தன்னை முழுவதும நம்மிடம் ஒப்படைத்து விடுவார்.

அப்புறம் வாழ்வது நாம் அல்ல, 
 கடவுளே நம்மில் வாழ்வார்.

லூர்து செல்வம்.

Sunday, April 23, 2023

இயேசு நிறுவிய திருச்சபை எது?(தொடர்ச்சி)

இயேசு நிறுவிய  திருச்சபை எது?
(தொடர்ச்சி)

"இதோ! கடவுளுடைய செம்மறி: இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்" (அரு.1:29) 

என்று ஸ்நாபக அருளப்பர் இயேசுவை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இயேசுவை ஏன்  உலகின் பாவங்களைப் போக்க வந்த இறைவனின் ஆட்டுக் குட்டி என்கிறோம்?


பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேலர்கள் எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்ற நாளில்

அவர்கள் ஒரு ஆட்டுக் குட்டியை வெட்டி,

 அதன் இரத்தத்தை வீட்டின் நிலைக் காலில் பூசி விட்டு,

கறியை உண்டார்கள். 

விடுதலை அன்று அவ்வாறு உண்டது  ஆண்டவருடைய பாஸ்கா எனப்பட்டது.

விடுதலை பெற்ற இஸ்ரயேலர்கள் கானான் நாட்டுக்கு வந்த பின்

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றதன் ஞாபகமாக

 ஒவ்வொரு ஆண்டும் பாஸ்கா திருநாளை  கொண்டாடினார்கள். 

அன்று ஒரு ஆட்டுக் குட்டியை இறைவனுக்குப் பலியாக ஒப்புக் கொடுத்து விட்டு,

அதன் கறியை புளியாத அப்பத்தோடு உண்டார்கள்.

இயேசு திருக்குடும்பத்தோடு வாழ்ந்த போதும், அதன் பின்னும் இந்த விழாவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடியிருக்கிறார்.

33வது ஆண்டில், அதாவது, அவரது வாழ்வின் இறுதியில் இந்த விழாவைக் கொண்டாடியதில் ஒரு விசேசம் இருக்கிறது.

பழைய ஏற்பாட்டில் இஸ்ரேல் மக்கள் எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து மீண்டபோது

பலியிடப்பட்ட ஆட்டுக் குட்டியைப்
 பாஸ்கா விருந்தாக உண்டார்கள்.

புதிய ஏற்பாட்டில் உலக மக்கள் பாவத்தின் அடிமைத் தனத்திலிருந்து தன்னால் மீட்கப் படப் போவதை

பாஸ்கா விழாவாகக் கொண்டாட இயேசு தீர்மானித்தார்.

இதில் விசேசம் என்னவென்றால் பலியிடப்பட்டு, சாப்பிடப் படப் போகும் ஆட்டுக் குட்டி  இயேசுதான்!

அவர் தான் உலகின் பாவங்களுக்குப் பரிகாரமாகப் பலியிடப் படப்போகும் ஆட்டுக் குட்டி!

பலியிடப் படப்போவது வெள்ளிக் கிழமை.

வெள்ளிக் கிழமை பலியிடப் படப் போகும் ஆட்டுக் குட்டியாகிய தன்னைத்தான் வியாழக் கிழமையே தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுக்கிறார்.

வெள்ளிக்கிழமைப் பலியிடப் படப் போகும் ஆட்டுக் குட்டியை எப்படி வியாழக் கிழமையே உணவாகக் கொடுக்க முடியும்?

அதற்காகத் தான் திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

"அவர்கள் உண்ணும்பொழுது,

 இயேசு அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி, பிட்டு, தம் சீடருக்கு அளித்து, 

"இதை வாங்கி உண்ணுங்கள், இது என் உடல்" என்றார்.


 பின்னர், கிண்ணத்தை எடுத்து, நன்றிகூறி, அவர்களுக்கு அளித்து,

 "இதிலே அனைவரும் பருகுங்கள்.

 ஏனெனில், உடன்படிக்கைக்கான என் இரத்தம் இது:

 பாவமன்னிப்புக்கென்று பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்."

மறுநாள் பலியிடப்படப் போகும் உடலையும், சிந்தப்படப் போகும் இரத்தத்தையும்

முந்திய நாளே சீடர்களுக்கு உணவாகக் கொடுப்பதற்காகத் தான்

அப்பத்தைத் தனது உடலாகவும், ரசத்தைத் தனது இரத்தமாகவும் மாற்றுகிறார்.

இது எல்லாம் வல்ல கடவுளாகிய அவரால் மட்டுமே முடியும்.

சீடர்கள் உண்டது இயேசுவின் உண்மையான உடலையும், இரத்தத்தையும் தான்,

அதாவது இயேசுவைத்தான்.

கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் திருப்பலியை நிறைவேற்றிய முதல் குரு இயேசு தான்.

"இதை என் நினைவாகச் செய்யுங்கள் " என்ற வார்த்தைகள் மூலம் தனது சீடர்களுக்குக் குருப் பட்டம் கொடுத்தார்.

அப்பத்தைத் தன் உடலாகவும், இரசத்தை தனது இரத்தமாகவும் மாற்றும் தனது வல்லமையைத் தன் சீடர்களோடு பகிர்ந்து கொண்டார்.

கத்தோலிக்கத் திருச்சபையின் குருக்கள் ஒவ்வொரு நாளும் திருப்பலியின் போது இயேசு கூறிய அதே வசீகர வார்த்தைகளைக் கூறி,

அப்பத்தை இயேசுவின் உடலாகவும், ரசத்தை இயேசுவின் இரத்தமாகவும் மாற்றி,

திரு விருந்தின்போது நமக்கு அளிக்கிறார்கள்.

திருப்பலி தான் திருச்சபையின் அதிகாரப் பூர்வமான செப வழிபாடு.

எங்கே திருப்பலி இல்லையோ அங்கு இயேசு நிறுவிய திருச்சபை இல்லை.

எங்கே அப்போஸ்தலர்களின் வாரிசுகளாகிய குருக்கள் இல்லையோ, அங்கே   இயேசு நிறுவிய திருச்சபை இல்லை.

எங்கே பாவசங்கீர்த்தனம் இல்லையோ,  அங்கே   இயேசு நிறுவிய திருச்சபை இல்லை.

73 புத்தகங்களோடு கத்தோலிக்க 
 திருச்சபை பைபிளை ஏற்றுக் கொண்டது.

அதிலிருந்து தங்களுக்குப் பிடிக்காத ஏழு புத்தகங்களை வெளியே எறிந்து விட்டு,

மீதி 66 புத்தகங்களை மட்டும் வைத்துக் கொண்டு,

"பைபிளில் எல்லாம் இருக்கிறது" சொல்லித் திரிகிறார்கள் பிரிவினை சபையினர்.

இது ஒரு நாற்காலியின் ஒரு காலை ஒடித்து எறிந்து விட்டு, 

மூன்று காலோடு இருப்பதைக் காண்பித்து,

"இதுதான்  நாற்காலி" என்று சொல்வது போலிருக்கிறது.

பிரிவினை சபையார்  கையில் இருப்பது முழுமையான பைபிள் அல்ல.

முழுமையான பைபிளை உருவாக்கிய கத்தோலிக்கத் திருச்சபைக்குத்தான் அதற்குப் பொருள் கூறும் உரிமை உண்டு.

இஷ்டப்பட்ட புத்தகங்களை மட்டும் வைத்துக் கொண்டு,

அவற்றுக்கு தங்கள் இஷ்டம் போல பொருள் கூறுவோர் உண்மையான திருச் சபையினர் அல்லர்.

இயேசு ஏற்படுத்திய ஏழு தேவத் திரவிய அனுமானங்களையும்,

முழுமையான பைபிளையும்,

திருச்சபையின் பாரம்பரியத்தையும் ஏற்றுக் கொண்டு,

அன்னை மரியிடமிருந்து பெற்ற அதே உடலோடு திவ்ய நற்கருணையில் வாழும் இயேசுவுடன் நடைபோடும் 
திருச்சபைதான்  இயேசு நிருவிய திருச்சபை.

அது கத்தோலிக்கத் திருச்சபை மட்டுமே.

லூர்து செல்வம்..

இயேசு நிறுவிய திருச்சபை எது?

இயேசு நிறுவிய திருச்சபை எது?



"கடவுளுக்கேற்ற செயல்களைச் செய்ய நாங்கள் என்ன செய்யவேண்டும் ?" 

என்று மக்கள் கேட்டபோது இயேசு,

"அவர் அனுப்பியவரை விசுவசிப்பதே கடவுளுக்கேற்ற செயல்" என்றார்.

அவர்கள், "உம்மை நாங்கள் விசுவிசிக்க ஓர் அருங்குறி பார்க்கவேண்டும்: என்ன அருங்குறி செய்வீர் ? என்ன செயல் ஆற்றுவீர் ?

 " அவர்கள் உண்பதற்கு வானத்திலிருந்து உணவு அருளினார் " என்று எழுதியுள்ளதற்கேற்ப எங்கள் முன்னோர் பாலைவனத்தில் மன்னாவை உண்டனரே" என்று கேட்டனர்.

அதாவது,

"நாங்கள் உம்மை விசுவசிக்க வேண்டுமானால் எங்கள் முன்னோருக்கு பாலைவனத்தில் மன்னாவை அருளியது போல 

நீரும் ஒரு அருங்குறி செய்ய வேண்டும்."

என்று கேட்டனர்.

முந்திய நாள் தான் இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு 5000க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவளித்தார்.

அதுவே ஒரு பெரிய புதுமை.

அது போன்ற இன்னொரு 
புதுமையையும் செய்ய வேண்டும் என்று மக்கள் ஆசைப்பட்டார்கள்.


"வானினின்று இறங்கி வந்து உலகிற்கு உயிர் அளிப்பவரே கடவுள் தரும் உணவு" 

என்று இயேசு சொல்ல,
.
 அவர்களோ, "ஆண்டவரே, இவ்வுணவை எப்பொழுதும் எங்களுக்குத் தாரும்" என்றனர்.


அதற்கு இயேசு கூறினார்: "நானே உயிர் தரும் உணவு."


இங்கே ஒரு உண்மையை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

மக்கள் தாங்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால்

 அவர் அவர்களுக்கு உயிர் அளிக்கும் உணவை எப்போதும் தர வேண்டும் என்று கேட்டார்கள்.

அதற்கு அவர் அளித்த பதில்,

"நானே உயிர் தரும் உணவு."


அவர் அளித்த இந்த பதில் தான் இந்த காலக்கட்டத்தில் உலகில் நாற்பதாயிரத்தையும் தாண்டி பிரிந்து கிடக்கும் பிரிவினை சபையினருக்கு

எது இயேசு நிறுவிய உண்மையான திருச்சபை என்று 

விளக்க நமக்கு உதவியாக இருக்கிறது.

எல்லோருமே "இயேசுவே எங்கள் மீட்பர்" என்று கூறுகிறார்கள்.

ஆனால் அவர்கள் கூறும் இயேசு 
உண்மையாகவே விண்ணிலிருந்து நம்மை மீட்க இறங்கி வந்த இயேசுவா,

அல்லது அந்தப் பெயரை தாங்கள் பிழைப்பதற்கு இவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களா  

என்பதை புரிய வைக்க இயேசு மக்களுக்கு கூறிய இந்த பதில் உதவி செய்கிறது.

கொஞ்சம் யோசித்தால் புரியும் முழு உண்மையும்.

யோசிக்காவிட்டால் உண்மையை புரிந்து கொள்ள ஆசை இல்லை என்று அர்த்தம்.

1.திவ்ய நற்கருணை.

2. திருப்பலி

3. குருத்துவம்.

4. பாவ சங்கீர்த்தனம்.

ஆகிய நான்கையும் எந்த சபை ஏற்றுக் கொள்கிறதோ அதுதான் இயேசுவால் நிறுவப் பட்ட உண்மையான திருச்சபை.

எல்லா சபைகளும் இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொள்வதாக சொல்கின்றன.

உண்மையான திருச்சபை தனது தசையையும் இரத்தத்தையும் நமக்கு உணவாக தரக்கூடிய இயேசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உண்மையாகவே தன்னுடைய தசையையும் இரத்தத்தையும்,

வெறும் அடையாளமாக அல்ல.

எந்த உடல் நமக்காக சிலுவையில் அறையப்பட்டதோ அதே உடல், ரத்தத்துடன்,

The very same body with blood.

திவ்ய நற்கருணையில் இயேசு மெய்யாகவே பிரசன்னமாய் இருக்கிறார்.

இயேசு நிறுவிய திருச்சபை திவ்ய நற்கருணையை ஏற்றுக் கொள்ளும்.

2, 3. திவ்ய நற்கருணையை ஏற்றுக் கொண்டால் திருப்பலியையும், குருத்துவத்தையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

புனித வியாழனன்று இயேசு திவ்ய நற்கருணையை ஏற்படுத்தியது மட்டுமல்ல

தொடர்ந்து உலகம் முடியும் மட்டும் மக்கள் அவரை உணவாக பெறுவதற்காக 

குருத்துவம் என்ற தேவ திரவிய அனுமானத்தையும் நிறுவினார்.

அப்போஸ்தலர்கள்தான் அவர் கையால் பட்டம் பெற்ற குருக்கள்.

அவர்களுடைய வாரிசுகளுக்கு,

 அதாவது ஆயர்களுக்கு,

 அவர்கள் குருப் பட்டம்
 கொடுத்தார்கள்.

இயேசு நிறுவிய திருச்சபையில் அவருடைய காலத்திலிருந்து இன்றுவரை குருப் பட்டம் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த குருக்கள் நிறைவேற்றும் திருப்பலியின் போதுதான்,

இயேசுவால் செய்யப்பட்டது போல,

அப்பம், இயேசுவின் திரு உடலாகவும்,  

திராட்சை இரசம் இயேசுவின் திரு இரத்தமாகவும் மாற்றப் படுகின்றன.

அன்று அப்போஸ்தலர்கள் இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் உணவாக உட்கொண்டது போல,

இன்று திருப்பலியின் போது கொடுக்கப்படும் திரு விருந்தில் கலந்து கொள்வோர் இயேசுவை உணவாக உட்கொள்ளுகிறார்கள்.

இன்று உலகம் முழுவதும் வாழும் இலட்சக்கணக்கான குருக்களால்

ஒவ்வொரு வினைாடியும் இயேசு தந்தைக்கு நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆண்டின் ஒவ்வொரு வினாடியும் ஒரு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

4. பாவசங்கீர்த்தனம்:

இறைமகன் மனு மகனாகப் பிறந்ததின் நோக்கமே மக்களுக்குப் பாவ மன்னிப்பு அளிப்பதுதான்.

இந்த நோக்கத்தோடு தான் இயேசு பாவசங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தை நிறுவினார்.


"எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்: எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்" 

அப்போஸ்தலர்களை நோக்கி இயேசு கூறிய இவ் வார்த்தைகள்

  அவர் பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தை ஏற்படுத்தினார் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

குருவானவர் திருப்பலி நிறைவேற்ற வேண்டுமென்றாலும்,

நாம் திவ்ய நற்கருணை உட்கொள்ள வேண்டும் என்றாலும் 

ஆத்துமம் பாவ மாசு இல்லாமல் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

அதற்காகத்தான் பாவ சங்கீர்த்தனம்.

கனமான பாவத்தோடு

 திருப்பலி நிறைவேற்றினாலும்,

திவ்ய நற்கருணை உட்கொண்டாலும் பாவம்.

யூதாஸ் பாவத்தோடு இயேசுவை உணவாக உட்கொண்டான்.

விளைவு?

அவனுள் சாத்தான் புகுந்தது.

ஆக, திவ்ய நற்கருணையும், திருப்பலியும், குருத்துவமும், பாவ சங்கீர்த்தனமும் நெருங்கிய. தொடர்புடையவை.

இந்த நான்கையும் எந்த சபை ஏற்கிறதோ அதுவே மீட்பர் இயேசு நிறுவிய சபை.

ஏக, பரிசுத்த, கத்தோலிக்க அப்போஸ்தலிக்கத் திருச்சபை மட்டுமே இந்த நான்கையும் ஏற்கிறது.

அது மட்டுமே இயேசுவால் நிறுவப்பட்ட சபை.

மற்ற சபைகள் கூறும் இயேசு, இறைமகன் இயேசு அல்ல.

அந்த சபையினர் வைத்திருப்பது உண்மையான பைபிளும் அல்ல.

அவர்கள் போதிப்பது இயேசுவின் போதனையும் அல்ல.

ஸ்டாலின் என்ற பெயர் வைத்திருப்பவர்கள் எல்லாம் முதல் அமைச்சர் ஆகிவிட முடியுமா?

(தொடரும்)

லூர்து செல்வம்.

Friday, April 21, 2023

"இயேசுவே அவர்களோடு சேர்ந்துகொண்டு வழிநடக்கலானார்." (லூக்.24:15)

"இயேசுவே அவர்களோடு சேர்ந்துகொண்டு வழிநடக்கலானார்." (லூக்.24:15)

யாரோடு சேர்ந்துகொண்டு இயேசு வழி நடந்தார்?

அவரது உயிர்ப்பில் நம்பிக்கை இல்லாத இரண்டு சீடர்களோடு சேர்ந்து இயேசு வழி நடந்தார்,

அவர்களுக்கு நம்பிக்கை உண்டாக்குவதற்காக.

நமக்கு 1,008 வேலைகள் இருக்கலாம், ஆனால் நம்மைப் படைத்து, மீட்ட இயேசுவுக்கு ஒரே ஒரு வேலைதான், எப்போதும் நம்மோடு இருப்பது.

ஆளுக்குத் தகுந்தபடி, நேரத்திற்கு ஏற்றபடி பேசும் பழக்கம் நம்மிடம் இருக்கலாம்.

நமது பேச்சில் நமக்கே நம்பிக்கை இருக்காது.

ஆனால் இயேசு கடவுள். முக்காலமும் அறிந்தவர். அவரால் படைக்கப் பட்ட நம்மீது அளவு கடந்த அக்கறை உள்ளவர்.

நமது நன்மை கருதி அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மாறாத உண்மை உள்ளது.

"நான் உலகம் முடியுமட்டும் உங்களோடு இருப்பேன்" என்று அவர் சொன்னது அவரது அப்போஸ்தலர்களைப் பார்த்து மட்டுமல்ல,

அவரை விசுவசிக்கும் நம் அனைவரையும் பார்த்துதான்.

அவர் எப்போதும் நம்மோடு இருக்கிறார்.

நாம் நடக்கும்போது நம்மோடு நடக்கிறார்.

நாம் ஓடும்போது அவரும் நம்மோடு ஓடி வருகிறார்.

நாம் நிற்கும் போது அவரும் நம்மோடு நிற்கிறார்.

நாம் உட்காரும்போது அவரும் நம் அருகில் உட்காருகிறார்.

நாம் வேலை செய்யும்போது அவரும் நம்மோடு சேர்ந்து வேலை செய்கிறார்.

நாம் சாப்பிடும்போது நமது உணவை ஆசீர்வதிக்கிறார்.

நாம் படுத்திருக்கும் போதும், தூங்கும்போது நமது தலைமாட்டில் அமர்ந்து, நம்மைத் தடவி விட்டுக் கொண்டிருக்கிறார்.

நாம் ஒவ்வொரு விநாடியும் அவர் பிரசன்னத்தில் இருந்தால் இதையெல்லாம் உணர்வோம்.

தாயுடன் இருக்கும் பிள்ளைக்கு உள்ள உணர்வு நமக்கும் இருக்கும்.

"இயேசுவே உம்மை நேசிக்கிறேன்" (Jesus, I love You.)

என்ற எண்ணம் மனதில் ஓடிக் கொண்டேயிருக்கும்.

இயேசுக்கு எதிரான எந்த எண்ணமும் மனதில் தோன்றாது.

இயேசு நம்மோடு இருக்கும் உணர்வு இருந்தால் பாவத்தில் விழ மாட்டோம்.

அடிக்கடி கோவிலுக்குப் போவோம்.

நற்கருணை நாதரைச் சந்தித்துப் பேசுவோம்.

தினமும் திருப்பலியிலும், திருவிருந்திலும் கலந்து கொள்வோம்.

நாம் யாரைப் பார்த்தாலும் அவரில் இயேசுவைக் காண்போம்.

இயேசுவுக்குச் செய்ய வேண்டியதை எல்லாம் அவருக்குச் செய்வோம்.

சுருக்கமாகச் சொன்னால் விண்ணக வாழ்வின் சுவையை 

மண்ணகத்திலேயே அனுபவிப்போம்.

We will have a pretaste of Heaven in this world itself.

இயேசு நம்மோடு வாழ்வதை உணர்ந்து வாழ்வோம்.

உண்மையில் நாம் வாழவில்லை, அவர்தான் நம்மில் வாழ்கிறார்.

விண்ணக வாழ்வை மண்ணகத்திலேயே ருசிப்போம்.


லூர்து செல்வம்.

Thursday, April 20, 2023

"அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்:,"(அரு.6:27)

"அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்:,"(அரு.6:27)

"தாத்தா, நீங்கள் ஒரு மாதம் கஷ்டப்பட்டு உழைத்த பின் மாதக் கடைசியில் சம்பளம் எவ்வளவு வரும்?"

"'30,000 ரூபாய்."

"அதாவது கையில் 30,000 இருக்கும்."

"'ஆமா."
 
"அடுத்த மாதம் கஷ்டப்பட்டு உழைத்த பின் மாதக் கடைசியில் சம்பளம் எவ்வளவு வரும்?"

"'30,000 ரூபாய்."

"அப்போ அடுத்த மாதக் கடைசியில் உங்கள் கையில் எவ்வளவு இருக்கும்?"

"'30,000"

"கணக்குத் தெரியவில்லையா? அல்லது பொய் சொல்கிறீர்களா?"

"'எது பொய்?"

"தாத்தா, முந்திய மாதக் கடைசியில் 30,000 இருந்தது.

அடுத்த மாதக் கடைசியில் 30,000 வந்தது. அப்போ கையில் 60,000 இருக்க வேண்டுமே.

நீங்கள் 30,000 என்று சொன்னால் அது பொய்தானே!"

"அட மடையா, ஒரு வருடம் கழித்துக் கேட்டாலும் அதையேதான் சொல்லுவேன்.

ஒரு மாதம் வாங்குகிற பணம் அடுத்த மாதம் செலவழிந்து போகும்."

"செலவு...அழிந்து போகுமா? அழிந்து போகிற பணத்திற்காக ஏன் கஷ்டப் பட்டு உழைக்க வேண்டும்?"

"'இங்கே பார். நீ வாழ்நாள் முழுவதும் எவ்வளவு கஷ்டப் பட்டு உழைத்தாலும் நீ சாகும் போது கையில் ஒரு பைசா கூட இருக்காது."

"அழிந்துபோகும் பணத்திற்காக ஏன் உழைக்க வேண்டும்?"

"'இவ்வுலகைச் சார்ந்த எல்லா செல்வங்களும் அழிந்துதான் போகும்.

மறுவுலகைச் சார்ந்த செல்வங்கள் அழியாது.

அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்:,"

என்று ஆண்டவரே சொல்லியிருக்கிறார்."

"உணவுக்காக என்று தானே சொல்லியிருக்கிறார்.

செல்வங்களுக்காக என்று சொல்லவில்லையே!"

"'அவர் மட்டும் தான் அழியாத உணவு. 

அவர் மட்டும் தான் அழியாத செல்வம்.

இவ்வுலக உணவுக்காகவும், இவ்வுலக செல்வங்களுக்காகவும் வாழ்வோர் இவ்வுலகோடு அழிந்து போவார்கள்.

திவ்ய நற்கருணையில் அவரையே உணவாக உட்கொண்டு,

அவருக்காக மட்டும் உழைத்தால் 

நாம் அழிவுறாது எந்நாளும் நிலையாக வாழ்வோம்."

"அவரையே உணவாக உட்கொண்டு என்பது புரிகிறது.

திவ்வ நற்கருணை உட்கொள்ளும்போது அவரையே
உணவாக உட்கொள்ளுகிறோம் என்பது புரிகிறது.

ஆனால் அவருக்காக மட்டும் (Underline மட்டும்) எப்படி உழைப்பது?

முதலாவது நாம் உண்ண, உடுக்க, வாழ உழைக்கிறோம்.

(உண்ணாமல் உழைக்க முடியாது.)

நமது உறவினர்களுக்காக உழைக்கிறோம்.

இயேசுவை ஆராதிக்க, அவருக்கு ஊழியம் செய்ய உழைக்கிறோம்.

ஆனால் அவருக்காக மட்டும்  உழைப்பது எப்படி?

அதுதான் புரியவில்லை."

"'ஒருவர் தன் மனைவிக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து விட்டு இறந்து விடுகிறார்.

அவர் இல்லாமல் வாழ அவளுக்கு விருப்பம் இல்லை.

ஆனால் குழந்தைக்காக வாழ வேண்டியிருக்கிறது.

குழந்தைக்காக மட்டுமே வாழ வேண்டியிருக்கிறது."

"நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரிகிறது.

குழந்தைக்காக வாழ்ந்தாலும்,
வாழ்வதற்கு அவள் உண்ண வேண்டியதிருக்கிறது.

அவள் உண்பது, உடுப்பது, வாழ்வது எல்லாம் தனது குழந்தைக்காகத்தான்.

அதேபோல் இயேசுவுக்கு ஊழியம் செய்வதற்காக மட்டும் நாம் வாழ்ந்தால்,

நாம் இயேசுவுக்காக மட்டும் வாழ்கிறோம்.  சரியா?"

"'இயேசுவுக்கு ஊழியம் செய்வது என்றால்,

அவரை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிப்பது,

நம்மை நாம் நேசிப்பதுபோல நமது பிறனையும் நேசிப்பது,

இயேசுவின் மகிமைக்காக பிறருக்கு உதவிகள் செய்வது,

சுருக்கமாக இயேசுவின் மகிமைக்காக வாழ்வது.

இயேசுவின் மகிமைக்காக வாழ்வது மட்டுமே வாழ்க்கை.

இயேசுவின் மகிமைக்காக  மட்டும் வாழ்ந்தால் நமக்கு அழியாத நித்திய நிலை வாழ்வு சன்மானமாகக் கிடைக்கும்.

இவ்வுலக செல்வங்களுக்காக மட்டும் வாழ்ந்தால், நிலை வாழ்வு கிடைக்காது.


ஆகவே இயேசுவின் மகிமைக்காக மட்டும் வாழ்வோம்.

நிலை வாழ்வு வாழ்வோம்.


லூர்து செல்வம்.

Wednesday, April 19, 2023

இங்கே ஒரு பையனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பமும் இரண்டு மீனும் உள்ளன. ஆனால், இத்தனை பேருக்கு இது எப்படி போதும் ?" என்று சொன்னார்."(அரு.6:9)

"இங்கே ஒரு பையனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பமும் இரண்டு மீனும் உள்ளன. ஆனால், இத்தனை பேருக்கு இது எப்படி போதும் ?" என்று சொன்னார்."(அரு.6:9)

ஆன்மீக உணவாகிய நற்செய்தியைக் கேட்க வந்த ஐயாயிரத்துக்கும் மேலான மக்களுக்கு,

சரீரத்துக்கு உரிய உணவாகிய அப்பத்தையும், மீனையும் கொடுத்து

அவர்களது பசியை ஆற்றுகிறார் நம் ஆண்டவர்.

ஒரே வார்த்தையால் ஒன்றுமில்லாமையிலிருந்து அகில உலகையே படைத்த அவரால் ஐயாயிரம் பேருக்கான உணவை ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்திருக்க அவரால் முடியும்.

ஆனாலும் அதற்கு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பயன்படுத்திக் கொண்டார்.

ஏன்?

இந்நிகழ்ச்சி கூறப்பட்டிருக்கும் அருளப்பர் 6ஆம் அதிகாரத்தை முழுவதையும் வாசித்தாலே ஏன் என்பதற்கான விடை கிடைக்கும்.

இயேசு செய்த அத்தனை செயல்களும் நித்திய காலமாக திட்டமிடப் பட்டவை.

ஒன்றோடொன்று காரண காரியத் தொடர்பு உடையவை.

இயேசுவிடமிருந்து உண்ண உணவைப் பெற்ற அத்தனை மக்களும் மறுநாள் காலையில் 

படகுகளில் ஏறிக் கப்பர்நகூமுக்கு அவரைத் தேடிவந்தார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து,

"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:

 நீங்கள் என்னைத் தேடுவது அருங்குறிகளைக் கண்டதாலன்று,

 அப்பங்களை வயிறார உண்டதால்தான்.

அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்:

 முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள். 

அதை மனுமகன் உங்களுக்குக் கொடுப்பார்: " என்றார்.

அழிந்து போகும் உணவுக்காக அல்ல, அழியாத உணவுக்காகவே உழைக்க வேண்டும் என்று அவர் கூறியது,

அழியாத உணவு எது என்பதை அவர் சொல்வதற்கான முன்னுரைதான்.


"நானே உயிர் தரும் உணவு. என்னிடம் வருகிறவனுக்குப் பசியே இராது: 

என்னில் விசுவாசங்கொள்பவனுக்கு என்றுமே தாகம் இராது." (35)

வானினின்று இறங்கிவந்த உணவு நானே" (45)

நானே உயிர் தரும் உணவு. (48)

நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான். நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே." (51)

உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுமகனின் தசையை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய உங்களுக்குள் உயிர் இராது.

 என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான். நானும் அவனைக் கடைசி நாளில் உயிர்ப்பிப்பேன்.

என் தசை மெய்யான உணவு, என் இரத்தம் மெய்யான பானம்.


என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்."
 (53-56)

திவ்ய நற்கருணை மூலம் தன்னையே உணவாகத் தர விருக்கும் செய்தியை மக்களுக்குத் தெரிவிப்பதற்கு முன் தயாரிப்பே ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது.

ஆனால் இயேசு தனது உடலையே உணவாகத் தரவிருப்பதை பல மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆகவே பலர் அவரை விட்டுப் பிரிந்தனர்.

மக்களுக்கு உணவளிக்க ஏன் அப்பத்தைப் பயன்படுத்தினார் என்று புரிந்திருக்கும்.

பெரிய வியாக்கிழமை திவ்ய நற்கருணைக்கு அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் இயேசு பயன்படுத்தினார்.

33 ஆண்டு காலம் உலகில் வாழ்ந்த இயேசு, 

தன்னுடைய உடலோடும், ஆன்மாவோடும் 

உலகம் முடியுமட்டும் நம்மோடு வாழ்வதற்காகத்தான் திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

திருவிருந்தின்போது நம்மிடம் வருவது 

அன்னை மரியாள் பெற்றடுத்த,

30 ஆண்டுகள் தன்னுடைய பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடந்த,

மூன்று ஆண்டுகள் நற்செய்தி அறிவித்து, நோயாளிகளைக் குணமாக்கிய,

இறுதியில் பாடுகள் பட்டு, சிலுவையிலே தன்னையே பலி கொடுத்த,

மரித்த மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த 

அதே இயேசு தான் (The very same Jesus) என்று நமக்குத் தெரியும்.

திவ்ய நற்கருணை மூலம் நம்மைத் தேடி வருபவர் நம்மைப் படைத்த கடவுள் என்று தெரிந்திருந்தும்,

கடவுளுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறோமா,

அல்லது,

ஏனோதானோவென்று நடந்து கொள்கிறோமா

என்று மனசாட்சியைத் தொட்டு சிந்திப்போம்.

ஏதோ தின்பண்டத்தை வாங்குவது போல வரிசையில் நின்று,

 திவ்ய நற்கருணையை 

இடது கையால் வாங்கி வலது கையால் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு போகிறோமே, 

இதில் இயேசுவுக்கு எவ்வளவு அவமரியாதை செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறோமோ,

அல்லது

தெரிந்தும் தெரியாதது போல் செய்கிறோமா?

ஓஸ்தியின் ஒவ்வொரு துகளிலும் இயேசு முழுமையாக இருக்கிறார்.

கையில் வாங்கும்போது கீழே விழ நேரிடும் துகள்கள் எத்தனை பேருடைய கால்களால் மிதிபட நேரிடும் என்பதை எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?


கையில் வாங்குவதை நிறுத்தி,
நாவினால் நற்கருணையை வாங்குவோம்.

நம்மைப் படைத்து, மீட்ட சர்வ வல்லப தேவன் இயேசு என்பதை நாம் ஏற்றுக் கொள்வதற்கு இது ஒரு சிறிய அடையாளமாய் இது இருக்கட்டும்.

லூர்து செல்வம்

Monday, April 17, 2023

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."(அரு. 3:17)

"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."
(அரு. 3:17)

முதலில் ஒரு ஒப்புமை. (Analogy)

ஆசிரியர் எதற்காகப் பள்ளிக் கூடத்துக்கு வருகிறார்?

மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு அறிவு புகட்டி,

இறுதித் தேர்வில் அவர்களைத் தேர்ச்சி பெற வைக்கவா?

அல்லது,

இறுதித் தேர்வில் அவர்களுக்கு தோல்வி மதிப்பெண் கொடுத்துப் பாழாக்கவா?

ஆண்டு முழுவதும் பாடம் போதிக்கிறார்.

35 மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றால் வெற்றி என்ற நிபந்தனையுடன் அவர்களைப் பொதுத் தேர்வு எழுத அனுப்புகிறார்.

பேப்பர் திருத்தும் ஆசிரியர் விடைத்தாளில் இருக்கும் பதில்களுக்கு ஏற்ப மதிப்பெண் போடுகிறார்.

தேர்வில் ஒரு மாணவன் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அதற்குக் காரணம் அவன் எழுதிய பதில்களே தவிர மதிப்பீடு செய்த ஆசிரியர் அல்ல.

விடைத்தாளில் எழுதப்பட்டிருக்கும் பதில்களுக்கு மட்டுமே மதிப்பெண் போடுவார்.

இறைவன் நம்மைப் படைத்து, கீழ்ப்படிந்து நடக்க கட்டளைகளைக் கொடுத்தது,

நாம் அவற்றின்படி வாழ்ந்து, 
நித்திய பேரின்ப வாழ்வை அடைவதற்காகத்தான்.

 கட்டளைகளை மீறுபவர்கள் இறைவனோடு அவர்களுக்கு உள்ள உறவை முறித்துக் கொள்கிறார்கள்.

உறவை முறித்துக் கொள்பவர்கள் கட்டளைகளை மீறுபவர்கள்தான், கடவுள் அல்ல.

கடவுள் மாறாதவர். நம்மீது அவருக்கு உள்ள அன்பு ஒருபோதும் மாறாது.

கட்டளைகளை மீறி, முறிந்த உறவோடு மரிப்பவர்கள், நித்தியத்துக்கும் இறை உறவு இல்லாமல் வாழ்வார்கள்.

அதற்கு முழுப் பொறுப்பு அவர்கள்தான். கடவுள் அல்ல.

இறைவனது கட்டளைகளை மீறுவதைத்தான் பாவம்  என்கிறோம்.

மனிதர்களைப் பாவத்திலிருந்து மீட்டு, 

அவர்கள் முறித்துக் கொண்ட இறை உறவை மீண்டும் அவர்களுக்கு அளித்து,

 அவர்களை விண்ணக வாழ்வுக்கு அழைத்துச் செல்லவே இறைமகன் மனிதனாகப் பிறந்தார்,

அவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு அளிப்பதற்காக அல்ல.

மனிதனுக்கு பாவத்திலிருந்து மீட்பு அளிப்பதற்காகத்தான்,

வேதனை மிகுந்த பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு,

தன்னையே பலியாகத் தந்தைக்கு ஒப்புக் கொடுத்தார்.

பாவிகளுடைய பாவங்களை மன்னிப்பதற்காகத்தான் பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தை ஏற்படுத்தினார்.

அதைப் பயன்படுத்தி பாவ மன்னிப்பு பெறுவோர் மீட்கப் படுவர். 

அதைப் பயன்படுத்த மறுப்பவர்களின் நிலைமைக்கு அவர்கள்தான் பொறுப்பு.

இறைமகன் மனு மகனாகப் பிறந்தது மக்களைப் பாவத்திலிருந்து மீட்பதற்காகத் தான்,

மீட்கப்பட மறுப்பவர்களைத் தீர்ப்பிடுவதற்காக அல்ல.

 எப்படி சுதந்திர உணர்வோடு கடவுளை ஏற்றுக் கொள்பவர்கள்
மீட்கப் படுகிறார்களோ,

அவ்வாறே ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் அவர்களாகவே கடவுளை விட்டுப் போய் விடுகிறார்கள்.

வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பவன்,

"நான் என் ஆசிரியரின் சொற்படி நடந்தேன், இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன்" என்பான்.

வாழ்க்கையில் மோசமான நிலையில் இருப்பவன்,

"நான் எந்த ஆசிரியரையும் மதிக்கவில்லை, ஆகவே என் நிலை இப்படி இருக்கிறது," என்பான்.

விண்ணகத்தில் இருப்பவனிடம்,

"நீ எப்படி இங்கே வந்தாய்?" என்றால்,

"இயேசுவைப் பின் பற்றி நடந்தேன், மீட்கப் பட்டேன்," என்பான்.

எதிர் அகத்தில் இருப்பவனிடம்,

"நீ எப்படி இங்கே வந்தாய்?" என்றால்,

"என் இஷ்டப்படி வாழ்ந்தேன், இங்கே வந்தேன்," என்பான்.

இயேசு நம்மை மீட்கவே உலகிற்கு வந்தார்.

அவரைப் பின்பற்றுவோம், மீட்கப் படுவோம்.

லூர்து செல்வம்.

Abstract  and  concrete.

--

Abstract  and  concrete.

*************************

Concepts are abstract ideas that are in our thought.

They cannot be seen with our material eyes.

‘Love’ is a concept.

We cannot see it with our eyes; but we can feel it in our heart.

‘Goodness’ is a concept.

We cannot see goodness; but we know what goodness is.

Suppose we have love for somebody.

We tell him that we have plenty of love for him.

He asks us to show the love which we have for him.

Can we take some love from our pocket and show it to him?

We cannot, because love is not something that can be seen with our eyes.

But when we love others we must show them our love.

How to show it if it cannot be seen?

Only concrete things can be seen, not abstract ones.

So to be seen, the concept must be translated into visible action.

To show our love we must first translate it into acts of love.

Let us take God’s love for example.

God is love.

He loves us unlimitedly.

How do we know His unlimited love?

Because of His acts of love.

His love for us can seen in His acts of love for us.

First He created the universe for us to live in.

He gave us the power and right to rule over the universe and to use the things of the universe.

 

 “And God pronounced his blessing on them, Increase and multiply and fill the earth, and make it yours; take command of the fishes in the sea, and all that flies through the air, and all the living things that move on the earth. 29 Here are all the herbs, God told them, that seed on earth, and all the trees, that carry in them the seeds of their own life, to be your food;30 food for all the beasts on the earth, all that flies in the air, all that creeps along the ground; here all that lives shall find its nourishment.”(Gen.1:28-30) 

In spite of  God’s so many acts of love for us we were ungrateful and sinned against Him by breaking His commandment.

But God did not stop His love for us.

He showed His unending love for us by sending His only son to atone for our sins.

Jesus atoned for our sins by sacrificing Himself on the cross.

His love is so great that He prayed His Heavenly Father to forgive those who crucified Him.

By His death on the cross He atoned for the sins of the whole human race.

He forgives our sins through confession.

He gives us Himself as our spiritual food through Eucharist.

By His real presence in the Holy Eucharist He is always living with us.

If we continue to note down all His acts of love for us it will be an unending job.

God wants us to love Him as He loves us.

In fact He created us to love Him and to live for Him.

Just as He showed and is showing His love for us by His acts   of love, He wants us too to show our love for Him by our acts of love.

But what kind of acts of love can we do for Him?

Being perfect, He cannot be in need of any help from us.

Whatever good we have is from Him.

The whole universe belongs to Him.

Whatever we may desire to offer Him is His already.

How can we help Him?

 

“And thou shalt love the Lord thy God with thy whole heart and with thy whole soul and with thy whole mind and with thy whole strength. This is the first commandment. And the second is like to it: Thou shalt love thy neighbour as thyself. There is no other commandment greater than these”Mark.12:30,31)

 

Jesus has commanded us to love God and our neighbour.

Love for God and love for our neighbour go together.

 One cannot love God without loving one’s neighbour.

What we think love for our neighbour is not true love if we don’t love God.

Our Lord has said that what we do to our neighbour is done to Him.

So acts of love done for our neighbour are acts of love done for God.

Service done to our neighbour is service done to God.

Let us love God.

Let us love our neighbour.

Let us give expression to our love by our acts of love and kindness for our neighbour.

Let us please God by pleasing our neighbour.

Lourdu Selvam

"விசுவாசம் அற்றவனாயிராதே, விசுவாசங்கொள்." (அரு20:27)

"விசுவாசம் அற்றவனாயிராதே, விசுவாசங்கொள்." (அரு20:27)

புனித தோமையாரைப் பார்த்து இயேசு சொன்ன வார்த்தைகள்.

இயேசு உயிர்த்து விட்டார் என்று மற்ற அப்போஸ்தலர்கள் சொன்னதை நம்பாத தோமையார், 

இயேசு தோன்றி, தனது ஐந்து காயங்களையும் காண்பித்த பிறகே நம்பினார்.

அப்போது இயேசு அவரைப் பார்த்து, 

"விசுவாசம் அற்றவனாயிராதே, விசுவாசங்கொள்." என்றார்.

நம்மைப் பார்த்தும் இயேசு இதே வார்த்தைகளைக் கூற சந்தர்ப்பங்கள் அதிகரித்துக் கொண்டு வருவது போல் தெரிகிறது.

நம்மைப் பொறுத்த மட்டில் நாம் செய்வதற்கு ஆயிரக்கணக்கான வேலைகள் காத்துக் கொண்டிருப்பதாக நாம் நினைக்கிறோம்.

ஒவ்வொரு வேலையையும் எப்படி செய்வது என்று திட்டம் போடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்.

கடவுளைப் பற்றி நினைக்கிறோமா?

நினைக்கிறோம்.

 ஆனால் நமது திட்டத்தின் ஒரு பகுதியாகவே நினைக்கிறோம்.

 அதாவது நமது திட்டங்கள் நாம் நினைக்கிற படி நிறைவேற கடவுள் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். 

அதற்காகவே அவரிடம் வேண்டுகிறோம்.

நமக்காக ஆயிரம் வேலைகள் காத்துக்கொண்டிருக்கும் போது கடவுளுக்கு ஒரே ஒரு வேலை தான்.

நம்மைக் கண்காணிப்பதும், பராமரிப்பதும் மட்டுமே அவர் வேலை.

நாம் நமது வேலைகளில் அவ்வப்போது கடவுளை நினைப்போம்.

ஆனால் கடவுள் ஒவ்வொரு வினாடியும் நமது நினைவாகவே இருக்கின்றார்.

நாம் நம்மைப் பற்றி நினைப்பதற்கும்,

கடவுள் நம்மைப் பற்றி நினைப்பதற்கும்,
 வித்தியாசம் இருக்கிறது.
 
நமது திட்டங்கள் நாம் விரும்புகிறபடி நிறைவேற வேண்டும் என்று ஆசைப் படுகிறோம்.

ஆனால் கடவுள் அவர் விருப்பப்படி நாம் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்று ஆசைப் படுகிறார்.

நமது செயல்பாடுகளில் ஏதாவது பிரச்ச்னைகள் ஏற்பட்டால், நாம் உடனே நினைக்க வேண்டியது கடவுளைத்தான்.

கடவுளை நினைத்தால் அவரது குரல் நமது மனதில் ஒலிக்கும்:

"விசுவாசம் அற்றவனாயிராதே, விசுவாசங்கொள் ."

"நான் உன்னைப் படைத்தவர்.
நீ செயல்பட வேண்டியது என் விருப்பப்படி, உனது இஷ்டம் போல் அல்ல."

கடவுளது விருப்பத்துக்கு ஏற்ப நமது செயல் திட்டங்களை மாற்றிக் கொண்டால்,

அவரது விருப்பத்திற்கு ஏற்ப எல்லாம் வெற்றிகரமாய் நடக்கும்.

நமது வாழ்க்கைத் திட்டங்களில் பிரச்சினை எதுவும் ஏற்படாலிருக்க வேண்டுமானால்

திட்டங்கள் தீட்டு வதற்கு முன்பேயே,

இறைவனை வேண்டி,

அவரது சித்தத்தை அறிந்து திட்டங்களைத் தீட்ட வேண்டும்.

அதன்பின், ஒவ்வொரு விநாடியும் அவர் நம்மைக் கண்காணித்து வருவது போல,

நாமும் ஒவ்வொரு விநாடியும் அவரது பிரசன்னத்திலேயே வாழ வேண்டும்.

அப்படி வாழ்ந்தால் கடவுளுக்கு எதிரான எந்த பிரச்சனையும் நமது வாழ்வில் ஏற்படாது.

இறைவனை விசுவசிப்போம்.

அதன்படி வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Friday, April 14, 2023

"அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை." (மாற்.16:13)


"அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை."  
(மாற்.16:13)


இயேசு தனது பொதுவாழ்வின் போது சந்தித்த அனைத்து நோயாளிகளையும் குணமாக்கினார்.

ஒவ்வொரு முறை குணமாக்கும் போதும், "உனது விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்பார்.

விசுவாசம் யாரிடம் இருந்தாலும் அது இறைவன் கொடுத்த நன்கொடை.

இறைவன் கொடுத்த நன்கொடையைப் பயன்படுத்தியோர் பயனடைந்தார்கள்.

இயேசுவின் சீடர்களும் அவரை இறைமகன் என்று விசுவசித்து தான் அவரைப் பின்பற்றினர்.

ஆனால் பெற்ற விசுவாசத்தில் ஆண்டவர் எதிர் பார்த்த அளவு வளர்ந்தார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ஒரு முறை தூங்கிக் கொண்டிருந்த ஆண்டவரோடு படகில் பயணித்துக் கொண்டிருந்த போது, புயற்காற்று வீச

சீடர் அவரிடம் வந்து அவரை எழுப்பி, "ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்: மடிந்துபோகிறோம்" என்றனர்.

இயேசு அவர்களை நோக்கி, "குறைவான விசுவாசம் உள்ளவர்களே, ஏன் இவ்வளவு பயம் ?" என்று கூறி, எழுந்து காற்றையும் கடலையும் கடியவே, பேரமைதி உண்டாயிற்று.

ஆண்டவர் எதிர்பார்த்த அளவு அவரை அவர்கள் விசுவசிக்கவில்லை.

உண்மையாக விசுவசிப்பவர்களுக்கு கடுகளவு கூட சந்தேகம் வரக்கூடாது.

தான் பாடுகள் பட விருப்பதையும், மரிக்க விருப்பதையும், மரித்த மூன்றாம் நாள் உயிர்க்க விருப்பதையும் தான் பாடுகள் படுவதற்கு முன்பேயே ஆண்டவர் சீடர்களிடம் கூறிவிட்டார்.

ஆண்டவருடைய வார்த்தையை விசுவசித்திருந்தால் 

ஆண்டவர் அடக்கம் செய்யப்பட்ட பின் அதைப் பற்றி கவலைப் படாமல் 

அவர்களது அறையில் உட்கார்ந்து 

மூன்றாவது நாள் அவரை எதிர் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

அன்னை மரியாள் கல்லறைப் பக்கமே வரவில்லையே.

அவளுடைய விசுவாசம் முழுமையானது.

ஆனால் சீடர்கள் இயேசு உயிர்ப்பார் என்று விசுவசிக்கவில்லை.

உயிர்த்த இயேசுவைக் கண்ட மதலேன் மரியாள் 

சீடர்களிடம் போய் இதை அறிவித்தாள். 

அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தனர்.

அவள் சொன்னதை அவர்கள் நம்பவில்லை.

அவர்களுள் இருவர் நாட்டுப்புறத்திற்கு நடந்துபோகையில், அவர்களுக்கு வேற்றுருவில் தோன்றினார்.


 அவர்களும் வந்து மற்றவர்களுக்கு அறிவித்தார்கள். அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை.


இறுதியாக, பதினொருவரும் உண்ணும்பொழுது அவர் தோன்றி,

 உயிர்த்தெழுந்த தம்மைக் கண்டவர்கள் சொன்னதை நம்பாத 

அவர்களுடைய விசுவாசமின்மையையும் பிடிவாதத்தையும் கடிந்துகொண்டார்.


இயேசுவின் பொது வாழ்வின் போது அவருடன் நாம் சென்றிருந்தால் மூன்று வகையான ஆட்களைச் சந்தித்திருப்போம்.

1.இயேசுவின் நற்செய்தியைக் கேட்கவும், அவர் கையால் நோய் நீங்கிக் குணம் பெறவும் விசுவாசத்தோடு அவரைத் தேடி வந்த சாதாரண மக்கள்.

2. அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட, எப்போதும் அவரோடு இருந்த அவருடைய சீடர்கள்.

3. அவரைக் கொல்வதற்கு வழிதேடி அவர் சென்ற இடமெல்லாம் சென்ற பரிசேயர்கள், சதுசேயர்கள், யூத மதத் தலைவர்கள்.

இவர்களில் நமது அனுதாபத்துக்கு உரியவர்கள் தங்கள் நோய்கள் குணமாகவும், இயேசுவின் நற்செய்தியைக் கேட்கவும் அவர் சென்ற இடமெல்லாம் சென்ற சாதாரண மக்கள் தான். ஏனெனில் நமது நிலையும் அதுதான்.

இயேசு உலகில் தனது பணியை முடித்து, விண்ணகம் சென்ற பின் உலகெல்லாம் சென்று நற்செய்தி அறிவிக்கும் பணியைத் தொடர்ந்து செய்ய பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தவர்கள் அவருடைய சீடர்கள்.

புத்தியே இல்லாத சாத்தானால் வழி நடத்தப் பட்டவர்கள் பரிசேயர்களும், சதுசேயர்களும், யூத மதத் தலைவர்களும்.

காரணத்தோடுதான் புத்தியே இல்லாத சாத்தானால் என்று சொன்னேன்.

மனுக்குலத்தையே பாவத்தில் விழத்தாட்டியவன் சாத்தான்.

மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக மனிதனாய்ப் பிறந்தவர் இறைமகன் இயேசு.

சாத்தானுக்குப் புத்தி இருந்திருந்தால் மனுக்குலத்தை பாவத்திலிருந்து மீட்க இயேசுவுக்கு உதவியிருப்பானா?

இயேசுவின் பாடுகளுக்கும், மரணத்திற்கும் பரிசேயர் கூட்டத்தின் மூலம் உதவியவன் சாத்தான் தானே.

மீட்க வந்தவரைக் கொன்று விட்டால் நமக்கு மீட்புக் கிடைக்காது என்று தப்புக் கணக்கு போட்டு,

தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டான் சாத்தான்.

இப்போ எதற்கு இந்தக் கதையெல்லாம்?

பைபிளை வாசிப்பதும், பைபிள் நிகழ்ச்சிகளைப் பற்றி பேசுவதும் வெறும் பொழுது போக்குக்காக அல்ல.

நமது ஆன்மீக பாதையில் நாம் ஒழுங்காக நடப்பதற்கு நமக்கு உதவுவதற்காகத்தான் பைபிளை வாசிக்கிறோம், வாசித்ததை தியானிக்கிறோம்.

நாம் எப்படி வாழக்கூடாது என்று தங்கள் நடத்தை மூலம் நமக்கு அறிவுரை கூறுபவர்கள் பரிசேயர் கூட்டம்.

இயேசுவைத் தலைவராக ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது,

அவரது வார்த்தைகளை முழுமையாக விசுவசிக்க வேண்டும் என்று தங்கள் நடத்தை மூலம் நமக்கு அறிவுரை கூறுபவர்கள் இயேசுவின் சீடர்கள்.

அவர்களது விசுவாசப் பற்றாக்குறை பரிசுத்த ஆவி அவர்கள் மேல் இறங்கும் வரைதான் நீடித்தது.

பரிசுத்த ஆவியின் வருகையின் போது அவர்கள் எல்லா வகையிலும் உறுதி அடைந்தார்கள்.

முழுமையான உற்சாகத்தோடு நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார்கள்.

கத்தோலிக்க திருச்சபை பிறந்து வளர ஆரம்பித்தது.

அன்றிலிருந்து திருச்சபையை வழி நடத்துபவர் சர்வ வல்லபரான பரிசுத்த ஆவியானவர்தான்.

இதை நமக்கு உணர்த்துவதற்காகத்தான் குறைகள் உள்ள தனது சீடர்கள் வசம் தனது திருச்சபையை ஆண்டவர் ஒப்படைத்தார்.

இன்று நம்மை ஆளும் குருக்கள், ஆயர்கள், பாப்பரசர் ஆகியோர் நம்மைப் போன்ற மனிதர்களாக இருக்கலாம்.

ஆனால் அவர்களைக் கரம் பிடித்து வழி நடத்துபவர் பரிசுத்த ஆவியானவர்தான்.

ஆகவே நம்பிக்கையோடு அவர்கள் காட்டும் வழியே நடக்கலாம்.

விசுவாசிகளான நமது நிலை

 இயேசுவின் நற்செய்தியைக் கேட்கவும், 

தங்கள் நோய்களிலிருந்து குணம் பெறவும்  

இயேசு சென்ற இடத்திற்குச் சென்ற சாதாரண மக்களின் நிலைதான்.

நமது முதல் கடமை இயேசுவின் நற்செய்தியைக் கேட்க வேண்டும்.

அடுத்து பாவ நோயிலிருந்து ஆன்மா குணம் பெற பாவ மன்னிப்புப் பெற வேண்டும்.

குணமடைந்த ஆன்மா ஆன்மீகத்தில் வளர வேண்டும்.

இவற்றிற்கு நம்மிடம் இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதி விசுவாசம்.

"உனது விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று," என்று ஆண்டவர் சொல்லுமளவுக்கு நம்மிடம் விசுவாசம் இருக்க வேண்டும்.

விசுவாசம் விசுவாசப்
பிரமாணத்தை வாயினால் சொல்வதில் அடங்கவில்லை,

அதை வாழ்க்கையில் வாழ்வதில் அடங்கியிருக்கிறது. 

விசுவாசத்தை வாழ்பவன் தான் விசுவாசி.

விசுவாசியின் வாழ்வில் நல்லது மட்டுமே நடக்கும்.

அதாவது விசுவாசியின் வாழ்வில் என்ன நடந்தாலும் அது நல்லதாகவே இருக்கும்.

விசுவாசியின் வாழ்வில் நடப்பதை ஆன்மீகக் கண் கொண்டு பார்க்க வேண்டும்.

நமது ஆண்டவராகிய இயேசு பாடுகளின்போது அடிக்கப்பட்டார்,
உதைக்கப்பட்டார், துப்பப்பட்டார், ஆணிகளால் அறையப்பட்டார், இறுதியில் கொல்லப்பட்டார்.

இவற்றையெல்லாம் இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஏற்றுக் கொண்டார்.

இயேசுவின் பாடுகளுக்குக் காரணமானவர்களுக்கு அது பாவம்.

ஆனால் தீமையிலிருந்தும் நன்மையை வரவழைக்க இயேசுவுக்குத் தெரியும்.

யூத மதத் தலைவர்கள் அவரைப் படுத்திய பாட்டிலிருந்து அவர் நமக்கு மீட்பை வரவழைத்தார். 


ஒரு விசுவாசியின் வாழ்வில் எது நடந்தாலும் அது இயேசுவின் சித்தப்படி தான் நடக்கும்.

ஆகவே விசுவாசிகள் வாழ்வில் என்ன நடந்தாலும் அது நல்ல நிகழ்வே.

ஆகவே தான் புனிதர்கள் தங்கள் வாழ்வின் போது ஏற்பட்ட எல்லா கஷ்டங்களையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்கள்.

விசுவாசி என்ற முறையில் நாமும் அப்படியே செய்ய வேண்டும்.

ஆயர் ஒருவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது,

"இன்னும் ஐந்து நிமிடத்தில் உங்களுக்கு மரணம் வரப்போகிறது.

இப்போது என்ன செய்வீர்கள்?"

அவர் பதில் சொன்னார்,

"மரணம் வரும் வரை எனது தோட்ட வேலை தொடரும்."

அவர் தான் உண்மையான விசுவாசி.

லூர்து செல்வம்.

“Do not judge others.”

“Do not judge others.”


Once a teacher was going to school by his bicycle. He had to be at school at 9.30 a.m, failing which he would have to sign in the late-comers register.

 On the way he saw an accident happening right before his eyes.

 Two bikes clashed with each other resulting in fall of their riders. 

One rider, somewhere around 25 by his look, was not so seriously wounded.

 He got up himself with a few scratches, with a few drops of blood peeping out here and there in his body.

 But the other, who might be around 60, was a bit seriously wounded.

 The teacher forgot his school, got down from his bicycle, rushed towards the wounded man and inspected the damages the fallen driver had met with. 

He stopped the taxi coming that way and took the wounded man to the nearby hospital, leaving the bike and bicycle behind to take care of themselves.

At school he was absent.

 The H.M did not know what to do with no leave or permission letter.

 He cannot mark C.L with no leave letter.

 If he marked ‘absent’ the teacher’s service might be affected.

  He left the to-be signed-space in the Masters’ blank and continued his other duties. 

At about 11.30 the Manager entered the Headmaster’s room.

 After inspecting the late comers’ register, he opened the Masters’.

 The blank space attracted his eyes.

“Why hasn’t Mr. X signed?”

“He has not come to school.”

“C.L?”

“He has not given C.L letter.”

The Manager was angry.

“He has broken the rules. He will have to give an explanation for his act. Tomorrow don’t allow him entry without my permissive letter.”

He left the room with an angry face.

 

Around 4 in the evening the Manager’s phone was ringing.

‘Any call from the absent teacher?’ he thought.

But it was from his dad.

“Hello dad!”

“Hi. Just now I am in …….Hospital. Come at once.”

“Hospital? Anybody is ill?”

“Come first. …….Hospital.”

He hurried to the hospital in his bike.

He phoned his dad enquiring where he was.

“Come to I. C.U.”

“I. C.U? Who is there?”

Without waiting for a reply he went to the room and slowly opened the door. He was shocked to see his father in bed with a few bandages. Tears peeped out from his eyes.

“What happened, dad?”

“A minor accident in the morning.”

“So many bandages for a minor accident? What happened?”

He explained what happened on the road.

“God be praised, a man took me here in a taxi, shared some of his blood with me and helped me survive. The helmet could not save my leg from a fracture.”

“Fracture in the leg?”

“Yes; that caused some blood loss. But don’t worry, now I am alright.”

“Where is the man who helped you in time?”

“He has gone to the medical store.”

Before finishing his sentence the man entered the room.

The Manager was shocked at the sight of the man. The absent teacher!

“Sorry, sir. I had to take leave without your permission.”

“Sorry? Thank you very much. I can never forget your help.”

His remembered the words of Jesus,

 “Do not judge others.”

Lourdu Selvam.

Thursday, April 13, 2023

"உங்களுக்குச் சமாதானம்"(லூக்.24:36).

"உங்களுக்குச் சமாதானம்"
(லூக்.24:36).

"தாத்தா, இயேசுவின் நற்செய்திக்கும், உயிர்த்த பின் அவர் சீடர்களை வாழ்த்திய   சமாதானத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்."

"'உனது அப்பாவுக்கும், அம்மாவின் கணவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதோ?"

"தொடர்பா? இருவரும் ஒருவர் தான்."

"'அப்படித்தான் சமாதானமும், நற்செய்தியும்.

நற்செய்தியின் நாயகன் இயேசு பிறந்த அன்று விண்ணவர் பாடிய பாடல் ஞாபகத்தில் இருக்கிறதா?"

"வானதூதர்    தங்கள் கிடைக்குச் சாமக் காவல் காத்துக் கொண்டிருந்த இடையர்களைப் பார்த்து,

" அஞ்சாதீர், இதோ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார்."

என்று சொன்னவுடன் 

வானோர் படைத்திரள் அத்தூதரோடு சேர்ந்து,

 " உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக. உலகிலே நன்மனது உள்ளவரகளுக்கு சமாதானம் உண்டாகுக! "

என்று பாடினார்கள்."

"'அவர்கள் கொண்டு வந்த நற்செய்தி என்ன?"

"தாவீதின் ஊரில் மீட்பர் பிறந்திருக்கிறார்.

விண்ணகத்தில் கடவுளுக்கு மகிமையும்,

பூமியில் நல்ல மனது உள்ளவர்களுக்கு சமாதானமும் உண்டாகட்டும்."

"'மீட்பர் எதற்காகப் பிறந்துள்ளார்?"

"கடவுளை மகிமைப் படுத்தவும்,
உலகில் சமாதானத்தை ஏற்படுத்தவும்."

"'கடவுள் மனிதனைப் படைக்கும் போது இருவருக்கும் இடையே சமாதானமான உறவு இருந்தது.

மனிதன் செய்த பாவத்தினால் 
சமாதான உறவு முறிந்தது.

முறிந்த உறவை மீண்டும் ஏற்படுத்தவே இறைமகன் மனிதனாய்ப் பிறந்தார்.

அவர் போதித்த நற்செய்தி சமாதானத்தின் நற்செய்தி.

அன்பு மட்டும்தான் சமாதானத்திற்கு உயிர்.

இயேசுவின் போதனையின் அடிப்படை அன்பு மட்டும் தான்.

அன்பு மட்டும் தான் இறைவனுக்கும் நமக்கும்  இடையே உள்ள சமாதான உறவையும்,

அயலானுக்கும் நமக்கும் இடையே உள்ள சமாதான உறவையும் காப்பாற்றுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசிக்க வேண்டும் என்பதும்,

நம்மைப் போல நமது அயலானை நேசிக்க வேண்டும் என்பதும் சமாதான நற்செய்திதானே.

நம்மைப் பகைப்பவர்களையும் அன்பு செய்ய வேண்டும் என்பதும் சமாதான நோக்கத்தோடுதானே.

நமக்குத் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்வதும் சமாதானமாக வாழ்வதற்காகத்தானே.

நற்செய்திப்படி வாழ்பவன் நல்ல மனம் உள்ளவனாக இருப்பான்.

நல்ல மனம் உள்ளவனாக இருப்பவன் சமாதானம் உள்ளவனாக இருப்பான்."

"இப்போது நாம் யாரையாவது முதல் முதல் சந்திக்கும் போது,

'Praised be Our Lord Jesus Christ' என்கிறோம்.

"உங்களுக்குச் சமாதானம்" என்று சொல்வது சிறந்ததா?

Praised be Our Lord Jesus Christ' என்று சொல்வது சிறந்ததா?"

"'இரண்டுமே சிறந்ததுதான்.

"உங்களுக்குச் சமாதானம்" 
என்பது ஆண்டவர் சொல்லித் தந்தது.

அப்படி வாழ்த்தும் போது,

"ஆண்டவர் தனது பாடுகளாலும், மரணத்தாலும் பெற்றுத் தந்த சமாதான உறவு நம்மிடையே இருப்பதாக" என்று வாழ்த்துகிறோம்.

Praised be Our Lord Jesus Christ' என்று வாழ்த்தும் போது 

"இறைவன் இயேசுவுக்கு மகிமை உண்டாகுக என்று வாழ்த்துகின்றோம்.

இரண்டுமே இயேசு பிறந்த அன்று வானவர் பாடிய கீதங்கள் தான்.

இரண்டில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்."

"இயேசுவுக்கு மகிமையும், நமக்குள் சமாதானமும் நிலவுவதாக!''

லூர்து செல்வம்.

Wednesday, April 12, 2023

வெள்ளியோ பொன்னோ என்னிடம் இல்லை: என்னிடம் உள்ளதை உனக்குக் கொடுக்கிறேன்: நாசரேயராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட! " ( அப். 3:6)

"வெள்ளியோ பொன்னோ என்னிடம் இல்லை: என்னிடம் உள்ளதை உனக்குக் கொடுக்கிறேன்: நாசரேயராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட! " ( அப். 3:6)

இராயப்பரும் அருளப்பரும் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

பிறவியிலேயே முடவனாயிருந்த
 ஒருவன் அவர்களைப் பார்த்துப் பிச்சை கேட்டான்.

இராயப்பர் அவனைப் பார்த்து,

"வெள்ளியோ பொன்னோ என்னிடம் இல்லை: என்னிடம் உள்ளதை உனக்குக் கொடுக்கிறேன்: நாசரேயராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட!"  என்றார்.


அவன் துள்ளி எழுந்து நடக்கத்தொடங்கினான்: துள்ளி நடந்து கடவுளைப் புகழ்ந்துகொண்டே அவர்களுடன் கோயிலுக்குள் சென்றான்.

அதைப் பார்த்து ஆச்சரியத்துடன் இராயப்பரைப் பின் தொடர்ந்த மக்களிடம் அவர் இயேசுவைப் பற்றி போதிக்கத் தொடங்கினார்.

ஒரே கல்லில் பல மாங்காய்கள் விழுவது போல,

ஒரே நற்செயலால்

ஒரு பிறர் சிநேக உதவி,

இயேசுவின் பெயரால் நடந்த புதுமையால் அவருக்குப் புகழ்,

நற்செய்தி அற்விப்பு,

மக்களிடம் வேரூன்றிய விசுவாசம்

ஆகியவை விளைந்தன.

இராயப்பரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்,

பிறருக்கு உதவி செய்வதற்கு கையில் பணம் இருக்க வேண்டிய அவசியமில்லை.

உள்ளத்தில் விசுவாசமும், ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளும் இருந்தாலே போதும்.

உள்ளத்தில் இருக்கும் வார்த்தைகள் உதடுகளின் வழியே வெளியே வரவேண்டும்.

வார்த்தைகளால் நாம் செய்யும் உதவியை இயேசுவின் பெயரால் செய்ய வேண்டும்.   

விசுவாசமும், வார்த்தைகளும் இயேசுவின் பெயரும் சேர்ந்து கொண்டால் விளைவது புதுமைதான்.

உடல் நோய்கள் மட்டுமல்ல, ஆன்மீக நோய்கள் வார்த்தைகளால் குணமாவதும் புதுமைதான்.

இயேசுவின் பெயரால் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் கேட்போருடைய உள்ளத்தில் இயேசுவுக்கு விருப்பமான மாற்றங்களை ஏற்படுத்தும்.

அம்மாற்றங்கள் அவர்களுடைய ஆன்மாக்களை உலக நாட்டங்களிலிருந்து இயேசுவை நோக்கித் திருப்பும்.

இதற்குப் பெயர் தான் மனமாற்றம் அல்லது மனம் திரும்புதல்.

இயேசு அவருடைய போதனைகளால் இதைத்தான் செய்தார்.

இவ்வுலகப் பொருட்களால், அல்லது பணத்தால் செய்யப்படும் இவ்வுலகைச் சார்ந்த எந்த உதவியும்,

அதில் ஆன்மீகம் கலந்திருக்கா விட்டால்,

நீடித்த பலன் தராது.

இறைவனுக்காக, அவரது மகிமைக்காக செய்யப்படும் எந்த உதவியும்,

 அது எவ்வளவு சிறியதாய் இருந்தாலும்,

நித்திய பலனைத் தர வல்லது. 

"என் சீடன் என்பதற்காக இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்." (மத்.10:42)

இயேசு அளிக்கும் கைம்மாறு நித்திய பேரின்பமாகத்தான் இருக்கும்.

ஆகவே அயலானுக்குப் பெரிய அளவில் உதவிகள் செய்வதற்குரிய பண வசதி இல்லையே என்று வருத்தப் பட வேண்டியதில்லை.

அன்பான பார்வையாலும், அன்பான வார்த்தையாலும் 

உள்ளத்தைத் தொட்டு உதவி செய்யத் தேவைப் படுவது அன்பு மட்டும்தான். 

இத்தகைய உதவியை நாம் அனைவருக்கும் செய்யலாம்.

நம்மை பகைப்பவர்கள் மனதிலும் கூட இது நம் மீது அன்பை விதைக்கும்.

ஒரு முறை புனித பிரான்சிஸ் அசிசி தனது சகோதரர்கள்  மூவரிடம்,

"வாருங்கள், நற்செய்தி அறிவித்து விட்டு வருவோம்" என்றார்.

நால்வரும் அமைதியாக, பராக்குக்கு இடம் கொடாமல் செபித்துக் கொண்டே சில தெருக்கள் வழியே நடந்து சென்று, வீட்டுக்குத் திரும்பி விட்டனர்.

ஒரு சகோதரர் பிரான்சிசிடம் கேட்டார்,

"சகோதரரே, நாம் செபித்துக் கொண்டுதானே போனோம், நற்செய்தி அறிவிக்கவில்லையே" என்றார்.

"ஆண்டவரிடம் அமைதியாகப் பேசிக்கொண்டே தெருவழியே எப்படி நடப்பது என்ற செய்தியை செயல் மூலம் காட்டினோமே,..."

"அது நற்செய்தியா?"

"ஆன்மீகம் சார்ந்த செய்தி எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதை வாழ்ந்து காண்பிப்பது நற்செய்தி போதனைதான்.

நாம் துறவிகள். நமது ஒவ்வொரு அசைவும் மற்றவர்களுக்கு முன் மாதிரிகையாக இருக்க வேண்டும்."

நமது நடை, உடை, பாவனையில் மற்றவர்கள் கிறிஸ்துவைக் காண வேண்டும்.

அதற்காகத்தான் துறவிகளுக்கும் , குருக்களுக்கும் தனி உடை கொடுத்திருக்கிறார்கள்.

பொதுமக்கள் மத்தியில் தங்களது துறவற, குருத்துவ உடையுடன் நடமாடுவதே ஒரு நற்செய்தி அறிவிப்புப் பணி தான்.

நற்செய்தியைப் போதிக்க வேண்டியது குருக்களுடைய கடமை மட்டுமல்ல,

இயேசுவைப் பின்பற்றும் அனைவருடையவும் கடமை.

கிறிஸ்துவை அனைவருக்கும் அறிவிக்கும் நோக்கத்தோடு,

நாம் முன்மாதிரிகையான கிறிஸ்தவ வாழ்வு வாழ்வதோடு,

நம்மால் இயன்ற அளவு மற்றவர்களுக்கு உதவிகரமாய் இருக்க வேண்டும்.

இயேசுவை நேசிப்போம்.

அவருக்காக நமது அயலானை நேசிப்போம்.

அவரோடு இணைந்து எல்லோரும் என்றென்றும் விண்ணகத்தில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, April 10, 2023

"அப்போது, அவர்கள் கண்கள் திறக்கப்பட, அவரைக் கண்டுகொண்டனர். அவரோ அவர்களிடமிருந்து மறைந்துபோனார்."(லூக்.24:31)

"அப்போது, அவர்கள் கண்கள் திறக்கப்பட, அவரைக் கண்டுகொண்டனர். அவரோ அவர்களிடமிருந்து மறைந்துபோனார்."
(லூக்.24:31)

இயேசு உயிர்த்ததை நம்பாத இரண்டு சீடர்கள் எம்மாவுஸ் நோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.

ஒரு வழிப்போக்கன் போல வந்த இயேசுவும் அவர்களோடு பேசிக்கொண்டே நடந்தார்.

ஆனால் அவர்களால் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப எம்மாவூசில்  அவர்களோடு தங்கச் சென்றார். 

அங்கு உணவு அருந்தப் போகும் நேரத்தில்     அவர்களுடன் பந்தியமர்ந்த  இயேசு

 அப்பத்தை எடுத்து, இறைபுகழ் கூறி, பிட்டு, அவர்களுக்கு அளித்தார்.

அதாவது புனித வியாழனன்று சீடர்கள் முன் திருப்பலி நிறைவேற்றியதுபோல் அவர்கள் முன்பு நிறைவேற்றினார்.

அப்போது, அவர்கள் கண்கள் திறக்கப்பட, அவரைக் கண்டுகொண்டனர். 

அவரோ அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.

அதுவரைத் திறக்காத கண்கள் அவர் திருப்பலி நிறைவேற்றிய போது திறந்தன.

ஆதித் திருச்சபையில் திருப்பலியை  அப்பம் பிட்குதல் என்று தான் அழைப்பார்கள்.

இப்போதும் குருவானவர் அப்பத்தைப் பிட்டு,

"இது என் சரீரம்."
என்பதும்,

இரசத்தை எடுத்து

"இது என் இரத்தம்."

என்பதும் தான் திருப்பலி.

அதற்கு முன் செய்யப்படுவது எல்லாம் அதற்கான தயாரிப்பு.

அதற்குப் பின் வருவது திரு விருந்து.

நாம் நமது கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு தான் திருப்பலிக்குச் செல்கிறோம்.

திருப்பலி ஒரு ஆன்மீக நிகழ்ச்சி.
திருப்பலியின்போது நமது கண்கள் திறக்கின்றனவா,

அதாவது எம்மாவுஸ் சென்ற சீடர்களின் கண்கள் திறந்தது போல.

உடலைச் சார்ந்த கண்கள் திறப்பதற்கும், ஆன்மீகக் கண்கள்
 திறப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

 இயேசு அப்பம் பிட்கும் வரை எம்மாவுஸ் சீடர்களின் உடலைச் சார்ந்த கண்கள் மட்டும் திறந்திருந்தன.

ஆகவேதான் அவரை வழிப்போக்கனாக மட்டும் பார்த்தனர்.

ஆனால் அப்பம் பிட்கும் போது அவர்களது ஆன்மீகக் கண்கள் திறந்தன.

இப்போது இயேசுவைக் கண்டு கொண்டனர்.

நமது உடலை சார்ந்த கண்களை மட்டும் திறந்து வைத்துக்கொண்டு திருப்பலிக்குச் சென்றால்,

பீடத்தில் திருஉடை அணிந்த ஒரு மனிதரையும்,  அவர் கையில் கோதுமை அப்பத்தையும் மட்டுமே பார்ப்போம்.

ஆன்மீகக் கண்களை  திறந்து வைத்துக்கொண்டு திருப்பலிக்குச் சென்றால்,

பீடத்தில் இயேசுவின் பிரதிநிதியைப் பார்ப்போம்.

எழுந்தேற்றத்திற்குப் பின் அவர் கையில் இயேசுவைப் பார்ப்போம்.

நாம் 33 ஆண்டுகள் உலகில் வாழ்ந்து, பாடுகள் பட்டு, சிலுவையில் மரித்து, உயிர்த்த அதே இயேசுவைப் பார்க்கின்றோமா,

அல்லது வெறும் கோதுமை அப்பத்தைப் பார்க்கின்றோமா என்பது நமது நடவடிக்கைகளிலிருந்து தெரியும்.

இயேசுவைப் பார்த்தால் அவரை உணவாகப் பெறும்போது

கடையில் பொருட்கள் வாங்கும் போது நிற்பது போல

நின்று, இடது கையால் வாங்க மாட்டோம்.

நம்மைப் படைத்த கடவுளாகிய அவரை முழந்தாள் படியிட்டு  நாவில் வாங்குவோம்.

கொரோனாவைக் காரணம் காண்பித்து கையால் வாங்க ஆரம்பித்த நாம்,

கொரோனா போன பிறகும் அப்படியே வாங்கினால் என்ன அர்த்தம்?

நாம் இயேசுவைப் பார்க்கவில்லை என்றுதான் அர்த்தம்.

ஆன்மீகக் கண் தெரியாத குருடர்கள் என்றுதான் அர்த்தம்.

நாவினால் வாங்கினால் நோய் பரவி விடுமாம்.

எல்லோரும் சுவாசிக்கிற அதே காற்றை சுவாசிக்கும் போது பரவாத நோய்,

இயேசுவை நாவினால் வாங்கினால் பரவி விடுமாம்.

எல்லோரும் நடக்கும் அதே தெருவில் நடக்கும்போது பரவாத நோய்

இயேசுவை நாவினால் வாங்கினால் பரவி விடுமாம்.

எல்லோரும் பயணிக்கும் பேருந்தில் பயணிக்கும் போது பரவாத நோய்

இயேசுவை நாவினால் வாங்கினால் பரவி விடுமாம்.

எல்லோரும் சாப்பிடும் ஹோட்டலில் சாப்பிடும் போது பரவாத நோய்

இயேசுவை நாவினால் வாங்கினால் பரவி விடுமாம்.

இப்படி சொல்வதைத்தான் தமிழில் 'நொண்டிச் சாக்கு' என்று சொல்வார்கள்.

ஆன்மீகக் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு வாழ்ந்தால்,
 ஒவ்வொரு வினாடியும் இயேசுவும் நம்மோடு வாழ்வது நமக்குத் தெரியும்.

ஆன்மீகக் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு வாழ்ந்தால்,
நமக்கு வரும் துன்பம் இயேசுவே சுமந்த சிலுவை என்பது நமக்குத் தெரியும்.

ஆன்மீகக் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு வாழ்ந்தால், நமது அயலானில் இயேசுவைக் காண்போம்.

ஆன்மீகக் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு வாழ்ந்தால், மோட்சத்திற்கான பாதையை விட்டு மாற மாட்டோம்.

ஆன்மீகக் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு வாழ்ந்தால், நம்மை பகைப்பவர்கள் கூட நமக்கு நண்பர்களாகவே தோன்றுவார்கள்.

ஆன்மீகக் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு வாழ்ந்தால்,  மோட்ச வாசல் நெருங்கும் போது மட்டற்ற மகிழ்ச்சி அடைவோம்.

உடலைச் சார்ந்த கண்கள் நமது மரணத்தோடு மூடிவிடும்.

ஆன்மீக கண்கள் நித்தியத்துக்கும் இறைவனைப் பார்த்து அனுபவிக்கும் பேரின்பத்தைத் தரும்.

ஆன்மீக கண்களால் எப்போதும் ஆண்டவரைப் பார்த்துக் கொண்டே வாழ்வோம்.

லூர்து செல்வம்.