Sunday, February 26, 2023

"சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்." (மத்.25:40)

"சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்." (மத்.25:40)

"தாத்தா, தாத்தா.... நேரம் இப்போது பிற்பகல் 4.14. தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்."

"'நான் தூங்கிக் கொண்டிருக்கவில்லை.
தூக்கம் தான் என்னைக் கொண்டிருக்கிறது."

"என்ன சொல்கிறீர்கள்?"

"'எனது விருப்பத்திற்கு மாறாக தூக்கத்தின் கையில் மாட்டிக் கொண்டேன்."

"முதலில் எழுந்திருங்கள். நான் உங்களைக் கூப்பிடும்போதே தூக்கம் உங்களை விட்டுப் போய்விட்டது."

"'ஏதாவது சந்தேகமா?" 

"நீ பிச்சையிடும்பொழுதோ, உன் வலக்கை செய்வதை இடக்கை அறியாதிருக்கட்டும். என்று இயேசு ஏன் சொன்னார்?"

"' நாம் விளம்பரத்திற்காக நற்செயல்கள் புரிய கூடாது என்பதற்காகத்தான். 

நாம் எதை யாருக்குச் செய்தாலும் இறைவனுக்கே செய்கிறோம்.

இறைவனுக்கு செய்வதை அவர் மட்டும் அறிந்தாலே போதும்.

விளம்பரத்திற்காக செய்யப்படும் நற்செயல் நற்செயலே அல்ல.

நற்செயல்களுக்கான சம்பாவனை நிலை வாழ்வு.

நமக்கு நிலை வாழ்வைத் தருவது இறைவன் மட்டும்தான்.

விளம்பரத்திற்காக நற்செயல் செய்தால் அதனால் கிடைக்கும் அற்பப் புகழ்தான் நமக்குக் கிடைக்கும் சம்பாவனை.

அது நீடிக்காது.''

"அயலானுக்குக் கொடுக்காமல் நேரடியாகக் கடவுளுக்குக் கொடுத்தால்?"

"' நம்மால் நேரடியாகக் கடவுளுக்குக் கொடுக்க முடியாது.

நமது ஊனக் கண்களால் கடவுளை பார்க்க முடியாத போது எப்படி அவருக்கு நேரடியாக கொடுக்க முடியும்?

அதனால்தான் நமது அயலானுக்குக் கொடுப்பதன் மூலம் தனக்கு தரச் சொல்லியிருக்கிறார்."

"கோவிலில் நாம் போடும் காணிக்கை அவருக்கு நேரடியாக கொடுப்பது இல்லையா?"

"'கோவிலில் நாம் போடும் காணிக்கையைத் திருச்சபை ஏழை எளியவர்களின் நலனுக்காகத்தான் பயன்படுத்துகிறது.

இவ்வுலக பொருள்களை மட்டும் தான் கடவுளுக்கு நேரடியாக கொடுக்க முடியாது.

ஆனாலும் அவரது அளவற்ற அன்புக்கு நன்றியாக நமது அன்புடன், நம்மை முழுவதும் அவருக்கு அர்ப்பணித்து விடலாம்.

நாம் விடும் மூச்சு முதல் கொண்டு நமது அனைத்து செயல்களையும் அவருக்கு அர்ப்பணித்து விடலாம்.

அதன்பின் நமது அன்னை  மரியாள் வாழ்ந்தது போல நாமும் இறைவனது அடிமைகளாக 

அவருக்காக மட்டுமே வாழ வேண்டும்."

"தாத்தா, முன்னுக்குப் பின் முரணாக பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

நமது அயலானுக்குப் பணி புரிவதுதான் இறைவனுக்கு செய்யும் பணி என்கிறீர்கள்.


அடுத்த நிமிடம் இறைவனுக்காக மட்டுமே வாழ வேண்டும் என்கிறீர்கள்.

மட்டுமே என்ற வார்த்தைக்கு பொருள் தெரியவில்லையா?" 

''பேரப்புள்ள, ஒரு காலத்தில் இறைவன் மட்டுமே இருந்தார்.

படைப்புகள் அனைத்தும் அவரது உள்ளத்தில் திட்ட வடிவிலேயே இருந்ததன.

அவரது திட்டங்களைச் செயல்படுத்தும் விதமாக  நாம் வாழும் பிரபஞ்சத்தையும், நம்மையும் படைத்தபோது

அவர் படைத்த அனைத்தும் அவருக்கே உரிமை பொருள்களாக இருந்தன, இருக்கின்றன, இன்னும் இருக்கும்.

நாம் அவரை மட்டும் நேசிப்பது என்றாலே அவரையும் அவரால் படைக்கப்பட்ட அனைத்தையும் நேசிப்பது என்பதுதான் பொருள்.

அவரது படைப்புகளை நேசிக்காமல் தனியாக அவரை மட்டும் நேசிக்க முடியாது.

ஒரே நேசத்தைத்தான்

இறை நேசம், பிறர் நேசம் என்று கடவுள் விளக்கமாகச் சொல்லுகிறார்.

கண்ணால் காண முடியாத கடவுளை நேசிக்கும் நாம்

 அந்த நேசத்தை  கண்ணால் காணக் கூடிய நமது அயலானிடம் வெளிப்படுத்த வேண்டும்.

நமது அயலானுக்கு என்னவெல்லாம் செய்கிறோமோ அதையெல்லாம் கடவுளுக்கே செய்கிறோம்.

நமது அயலானுக்கு என்னவெல்லாம் செய்யவில்லையோ அதையெல்லாம் கடவுளுக்கும் செய்யவில்லை."

"கடவுளே இல்லை என்பவர்கள் தங்களது அயலானை மட்டும் நேசித்து அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை எல்லாம் செய்தால் 

அந்த நேசம் கடவுளுக்கு பிடிக்குமா? பிடிக்காதா?"

"'இறையன்பு இல்லாதவர்களிடம் உண்மையான அன்பு இருக்க முடியாது.

பள்ளிக்கூடத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எத்தனை பாடங்களை படித்தாலும் அவர்களால் தேர்வு எழுத முடியாது.

தேர்வுகளால் கிடைக்கும் பலன் எதுவும் அவர்களுக்கு கிடையாது.

இறைவனை ஏற்றுக் கொள்ளாதவர்களால் இறைவனால் படைக்கப்பட்டவற்றை உண்மையாக அன்பு செய்ய முடியாது.

தாங்கள் செய்வதற்கு அன்பு என்றும்,
 சேவை என்றும் அவர்கள் பெயர் சூட்டியிருக்கலாம்.

ஆனால் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத கடவுள் முன் அது அன்பும் அல்ல, சேவையும் அல்ல.

இறைவனை ஏற்றுக் கொள்பவர்களும் 

தங்கள் பிறனை இறைவனுக்காக நேசிக்க வேண்டும்,

இறைவனுக்காக சேவை செய்ய வேண்டும்,

அப்போதுதான் அந்த நேசத்துக்கும், சேவைக்கும் கடவுள் முன் பலன் உண்டு.

சுய திருப்திக்காக நாம் செய்யும் எந்த செயலுக்கும் இறைவன் முன் எந்த பலனும் இல்லை."

"இறைவனுக்காக வாழ்பவர்களால் மட்டுமே இறைவனோடு வாழ முடியும்."


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment