Saturday, May 28, 2022

"உமது வார்த்தையை அவர்களுக்கு அளித்தேன், உலகமோ அவர்களை வெறுத்தது: ஏனெனில், நான் உலகைச் சார்ந்தவனாய் இராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்." (அரு. 17:14)

"உமது வார்த்தையை அவர்களுக்கு அளித்தேன், உலகமோ அவர்களை வெறுத்தது: ஏனெனில், நான் உலகைச் சார்ந்தவனாய் இராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்."
(அரு. 17:14) 

"தாத்தா, இந்த வசனத்தை வாசியுங்கள்."

", உனக்கு என்ன பிரச்சனை?"

"எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, தாத்தா.

உனக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள்."

",உனக்கு என்ன வேண்டும்?"

"இயேசு அவருடைய சீடர்களுக்கு தன் தந்தையின் வார்த்தையை அளித்தபோது உலகம் ஏன் அவர்களை வெறுக்க வேண்டும்?"

", நமது வாழ்க்கையில் இரண்டு சக்திகளைச் சந்திக் வேண்டியிருக்கும், ஆன்மீக சக்தி, லௌகீக சக்தி. 

ஆன்மீக சக்தி ஆன்மாவைச் சார்ந்தது. நம்மை கடவுளை நோக்கி வழிநடத்தக் கூடியது.

இதன் துணை கொண்டு வாழ்வோர் ஆன்மீகவாதிகள்.

லௌகீக சக்தி உடலைச் சார்ந்தது. மண்ணிலிருந்து எடுக்கப் பட்ட உடலின் நலனை மட்டும் நோக்கமாகக் கொண்டது.

இதன் துணை கொண்டு வாழ்வோர் லௌகீக வாதிகள்.

இவர்களைத்தான் ஆண்டவர் உலகம் என்று அழைக்கிறார்.

ஆன்மீக வாதிகள் தங்கள் விண்ணகம் நோக்கிய பயணத்திற்கு உடலைப் பயன் படுத்திக் கொள்வர்.

ஆனால் லௌகீக வாதிகள் உடல் இன்பம் பெறுவதற்கு தங்கள் ஆன்மாவை பாவத்தால் கொன்று விடுவர்,

நமது முதல் பெற்றோர் கேவலம் ஒரு பழத்திற்காக தங்கள் ஆன்மாவைப் பாவத்தால் கொன்றது போல.

இயேசு அனைவரையும் ஆன்மீகப் பாதைக்குத் திருப்பி, விண்ணகம் அழைத்துச் செல்லவே மனிதனாய்ப் பிறந்தார்.

விண்ணகம் செல்ல விரும்புவோர் அவரது வருகையையும், போதனையையும் ஏற்றுக் கொண்டனர்.

லௌகீக வாதிகள் அவரது வருகையையும், போதனையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆகவேதான் இயேசு அவருடைய சீடர்களுக்கு தன் தந்தையின் வார்த்தையை அளித்தபோது உலகம் இயேசுவையும், அவர்களையும் வெறுத்தது. 

லௌகீக வாதிகளைத்தான் இயேசு உலகம் என்கிறார்.

ஏனெனில் அவர்கள் விண்ணக வாழ்வை வேண்டாம் என்று கூறிவிட்டு அதற்குப் பதிலாக உலகத்தைத் தேர்ந்து கொண்டார்கள்."

"தாத்தா, ஒரு பொடி சந்தேகம்

  உலகத்தையும், அதில் வாழும் அனைத்து மக்களையும் படைத்து பராமரித்து வருபவர் கடவுளே.

அவர் பாவிகளைத் தேடித்தானே உலகிற்கு வந்தார்.

லௌகீகவாதிகள் பாவிகள்தானே.  

அவர்களைத் தேடி வந்தவர் ஏன் அவர்களைச் சார்ந்தவர் அல்ல என்கிறார்?"

", உலகை கடவுள் எதற்காகப் படைத்தார்?"

"மக்கள் பயன்படுத்த."

", எதற்காகப் பயன்படுத்த?"

"ஆன்மீக வாழ்வுக்குப் பயன் படுத்த."

", உதாரணம் கொடு."

"இறைவழிபாட்டுக்கு ஆலயம் கட்ட உலகப் பொருட்களைத்தான் பயன் படுத்துகிறோம்.

கோயிலில் காணிக்கை போடவும், அயலானுக்கு உதவி செய்யவும பணத்தைப் பயன் படுத்துகிறோம்."

", கடவுள் எல்லோரும் இறைப் பணியில் பயன்படுத்தவே எல்லோருக்கும் உலகப் பொருட்களைக் கொடுத்திருக்கிறார்.

அதற்காகத்தான் முதலில் உலகத்தைப் படைத்து விட்டு, பிறகு மனிதனைப் படைத்தார்.

 மனிதர்களுள் ஒரு பிரிவினர் இறைப் பணிக்கு உலகத்தைப் பயன்படுத்தினர்.

ஒரு பிரிவினர் உலகத்தில் இன்பமாக வாழ்வதற்காக மட்டும் 
உலகத்தைப் பயன்படுத்தினர்.

உலகைப் படைத்த கடவுள் யார் பக்கம் இருப்பார்?"

"உலகப் பொருட்களை எந்த நோக்கத்திற்காக படைத்தாரோ அதற்காகப் பயன் படுத்துவோர் பக்கமே கடவுள் இருப்பார்."

", அதாவது, அவர்களையே சார்ந்திருப்பார்.

லௌகீக வாதிகளைச் சார்ந்திருக்க மாட்டார்.

அதனால்தான் ஆண்டவர்,

"நான் உலகைச் சார்ந்தவனாய் இராததுபோல்"

என்கிறார்.

இப்போது புரிகிறதா?"


"புரிகிறது.

அதாவது இயேசு பாவிகளை வெறுக்கவில்லை. பரிசுத்தர்களை நேசிப்பது போலவே பாவிகளையும் நேசிக்கிறார்.

ஆனால் பாவத்தை அவரால் நேசிக்க முடியாது. 

அவர் மனிதனாய்ப் பிறந்ததே பாவத்தை அழிக்கவே.

அதனால்தால்

"உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே" என்று இயேசுவை அழைக்கிறோம்."


", இயேசு பாவிகளை நேசிக்கிறார்.

பாவிகளோ அவரை வெறுக்கிறார்கள்.

இயேசுவின் மேல் உண்மையான அன்பு உள்ளவர்கள் அவருக்கு எதிராக பாவம் செய்ய மாட்டார்கள்.

பாவம் செய்பவர்கள் அன்பு செய்யவில்லை."

"தாத்தா, ஒரு சின்ன சந்தேகம்.

லௌகீக வாதிகள் ஞானஸ்நானம் பெற்றவர்களிலும் இருக்கிறார்களா?"

", கிறிஸ்தவர்களில் பாவிகள் இல்லையா?

இருப்பதினால்தானே அவர்களுக்காக,

 அவர்கள் பாவ மன்னிப்பு பெறுவதற்காக,

இயேசு பாவசங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தை ஏற்படுத்தினார்.

இயேசு பாவிகளைத் தேடி வந்தது அவர்களைப் பரிசுத்தவான்கள் ஆக்குவதற்காகத்தான்.

விண்ணக வீடு பரிசுத்தவான்களுக்கு மட்டுமே உரியது."

"உலகம் நம்மை வெறுக்கிறதே."

", கவலைப்பட வேண்டாம். நம்மை வெறுப்பதற்கு முன்பே அது இயேசுவை வெறுத்துவிட்டது.

அவர்களை மனம் திருப்புவதற்காகத்தான் இயேசு அப்போஸ்தலர்களை அனுப்பினார்.

நம்மையும் அதற்காகத்தான் அனுப்புகிறார்."

"அது அப்போஸ்தலர்களைக் கொன்றுவிட்டது. நம்மையும் கொல்லும்."

", இயேசுவுக்காக துன்புறுவோரும், உயிரைக் கொடுப்பவர்களும் பாக்கியவான்கள்.

"என்பொருட்டுப் பிறர் உங்களை வசைகூறித் துன்புறுத்தி, உங்கள்மேல் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லும்போது, நீங்கள் பேறுபெற்றோர்.

அகமகிழ்ந்து களிகூருங்கள். ஏனெனில், வானகத்தில் உங்கள் கைம்மாறு மிகுதியாகும்."
(மத்.5.11:12)

இயேசுவுக்காக உயிரையும் கொடுப்போம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment