Thursday, May 12, 2022

"தந்தை என்மேல் அன்புகூர்ந்ததுபோல நானும் உங்கள்மேல் அன்புகூர்ந்தேன். என் அன்பில் நிலைத்திருங்கள்."(அரு.15: 9)

"தந்தை என்மேல் அன்புகூர்ந்ததுபோல நானும் உங்கள்மேல் அன்புகூர்ந்தேன். என் அன்பில் நிலைத்திருங்கள்."
(அரு.15: 9)


"தாத்தா, நாம் நம்மை அன்பு செய்வது போல, நமது பிறனை 
அன்பு செய்ய வேண்டும் என்று நமது ஆண்டவர் கூறியிருக்கிறார்.

அவர் நம்மை எப்படி அன்பு செய்கிறார்?"

",அதை அவரே கூறியிருக்கிறாரே.

"தந்தை என்மேல் அன்புகூர்ந்ததுபோல நானும் உங்கள்மேல் அன்புகூர்ந்தேன்.

என் அன்பில் நிலைத்திருங்கள்." 

"தாத்தா, நம்மால்  அவர் அன்பு செய்யும்  அளவுக்கு அன்பு செய்ய முடியுமா?

தந்தையின் அன்பும்,  மகனின் அன்பும்,  தூய ஆவியின்  அன்பும் ஒரே அன்பு.

அளவு இல்லாத அன்பு.

அவர் நம்மை அளவில்லாத விதமாய் அன்பு செய்கிறார்.

அளவுள்ள நம்மால் அவரை அளவில்லாத விதமாய் அன்பு செய்ய முடியுமா?"

",.கடவுளின் அளவில்லாத அன்பையும் நமது அளவுள்ள அன்பையும் ஒப்பிட முடியாது.

ஆனால் அவருடைய அன்பில் வாழ்ந்து அதை அனுபவிக்கலாம்.

அவருடைய அன்பிற்குள் நாம் இருந்தால் அதை நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அவ்வளவு அனுபவிக்கலாம்.

அவருடைய கட்டளைகளை அனுசரிப்பதன் மூலம் அவருடைய அன்பில் நாம் நிலைத்திருக்க வேண்டும்.

நமது அன்பை அளப்பதற்கு அளவு கோல் ஒன்றும் இல்லை.

 எந்த அளவிற்கு நாம் அவரை நேசிக்கிறோமோ

அந்த அளவுக்கு அவரது கட்டளைகளை  அனுசரிப்போம். .

அவரது கட்டளைகளையும், அவரது திருச்சபையின் கட்டளைகளையும் அனுசரிப்பதன் மூலம்

அவருடைய அன்பில் நிலைத்திருக்கிறோம்.

அவரது கட்டளைகளை ஒழுங்காக அனுசரிக்காமல் அவரை அன்பு செய்கிறேன் என்று கூறுவதில் உண்மை இருக்க முடியாது.

நமது பகைவர்களை நேசிக்க வேண்டும், அவர்கள் நமக்கு தீமை செய்தால் அவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும்  என்பது அவரது கட்டளை.

நமக்கு தீமை செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்காக நாம் நீதிமன்றம் சென்றால்,

 நாம் கடவுளை நேசிக்கவில்லை. 

இறையன்பில் நிலைத்திருப்பவன் பிறரன்பிலும் நிலைத்திருப்பான்.


"கடவுள் நம்மிடம் அன்புகூர்வதுபோல நாமும் ஒருவர் ஒருவரிடம் அன்புகூரவேண்டுமென்பதே எனது கட்டளை."

கடவுள் நம்மிடம் அளவில்லாத விதமாய் அன்பு செய்கிறார்.

நாம் நமது அன்புக்கு அளவு வைக்காமல் நம்மால் எவ்வளவு அதிகமாக அன்பு கூற முடியுமோ அவ்வளவு அதிகமாக அன்பு கூற வேண்டும்.

கடவுளால் இயல்வது அளவில்லாத அன்பு.

நாம் நம்மால் இயன்றவரை அன்பு செய்ய வேண்டும்.

நமது அன்பு பிறரன்பு செயல்களில் வெளிப்பட வேண்டும்.

நூற்றுக் கணக்கில் வருமானம்  உள்ளோர் நூற்றுக் கணக்கில் பிறர் உதவி செய்ய வேண்டும்.

ஆயிரக் கணக்கில் வருமானம்  உள்ளோர் ஆயிரக் கணக்கில்
பிறர் உதவி செய்ய வேண்டும்.

இலட்சக் கணக்கில் வருமானம்  உள்ளோர் இலட்சக் கணக்கில்
பிறர் உதவி செய்ய வேண்டும்.

கோடிக் கணக்கில் வருமானம்  உள்ளோர் கோடிக் கணக்கில்
பிறர் உதவி செய்ய வேண்டும்.

கடவுள் நம்மை அன்பு செய்வது போல நாமும் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும்.

நாம் கடவுளை பாவ நிலையில்   அன்பு செய்யாதிருக்கும் போதும், கடவுள் நம்மை அன்பு செய்கிறார்.

மற்றவர்கள் நம்மைப் பகைத்து அன்பு செய்யாவிட்டாலும், நாம் அவர்களை அன்பு செய்ய வேண்டும்.


"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை." 

இயேசு நமக்காக தனது உயிரைக் கொடுத்தார்.

நாமும் மற்றவர்களுக்காக நமது உயிரை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்."

"தாத்தா, நாம் கடவுளின் கட்டளைகளை அனுசரிப்பதால் அவரை நேசிக்கிறோமா?

அல்லது,

கடவுளை நேசிப்பதால் அவரது கட்டளைகளை அனுசரிக்கிறோமா?"


",கடவுளை நேசிப்பதால்தான் அவரது கட்டளைகளை அனுசரிக்கிறோம்.

கடவுளை நேசிக்காதவர்கள் கட்டளைகளை அனுசரிக்க மாட்டார்கள்.

ஒருவன்  கடவுளது கட்டளைகளை  அனுசரிக்கிறானா, இல்லையா என்பதை வைத்து 

அவன் கடவுளை நேசிக்கிறானா, இல்லையா என்பதைக் கண்டுகொள்ளலாம். 

அவருடைய கட்டளைகளை அனுசரிப்பதன் மூலம் அவருடைய அன்பில் நாம் நிலைத்திருக்கிறோம்."

"உள்ளத்தில் அன்பு இருந்தால் அது கட்டளைகளை அனுசரிப்பதில் செயல்வடிவம் பெறும். சரியா?"

", சரி. இறைவனை அன்பு செய்வோம்.

அவரது கட்டளைகளை அனுசரிப்போம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment