Friday, May 20, 2022

"உங்களுக்கு என்மேல் அன்பிருந்தால், நான் தந்தையிடம் போவதுபற்றி மகிழ்வீர்கள். ஏனெனில், ஏனெனில், தந்தை என்னிலும் மேலானவர்.(அரு.14:28)

"உங்களுக்கு என்மேல் அன்பிருந்தால், நான் தந்தையிடம் போவதுபற்றி மகிழ்வீர்கள். ஏனெனில், ஏனெனில், தந்தை என்னிலும் மேலானவர்.(அரு.14:28)

"தாத்தா, பரிசுத்த தம 
திரித்துவத்தில், மூன்று ஆட்களும் ஒருவரை விட ஒருவர் பெரியவரோ, சிறிவரோ அல்ல,

'மூவரும் சமமானவர்கள் என்பதுதானே திருச்சபையின் போதனை.

இயேசு தந்தை என்னிலும் மேலானவர் என்று கூறியிருக்கிறாரே."

",என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்."
(அரு. 6:38)

"மனுமகன் பாடுகள் பல படவும். மூப்பராலும் தலைமைக்குருக்களாலும் மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டு, கொலையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும்" என்று சொன்னார்.".
(லூக்.9: 22)

இந்த இரண்டு வசனங்களிலும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?"

"முதல் வசனம் 'என்னை'யில் ஆரம்பிக்கிறது.

இயேசுவை அனுப்பினவர் அவருடைய தந்தை."

",அப்படியானால் இயேசு யார்?"

"தந்தையின் மகன், அதாவது இறைமகன். அதாவது கடவுள்"


", இரண்டாவது வசனம்?"

''மனுமகனில் ஆரம்பிக்கிறது.
மனுமகனும் இயேசு தான்."

",இறைமகனும் இயேசு தான். மனுமகனும் இயேசு தான்.

இறைமகனுக்கும், மனுமகனுக்கும் என்ன வித்தியாசம்?''

"பரிசுத்த தம திரித்துவத்தின் இரண்டாவது ஆள் மகன்.

முதல் ஆளோடும், மூன்றாவது ஆளோடும் இறைமகன் ஒரே கடவுள்.

இறைமகன் முழுக்க முழுக்க கடவுள். (fully God)

மனுமகன் மனித குலத்தில் மனிதனாகப் பிறந்த இறைமகன்.

இறைமகன் மனிதனாகப் பிறந்த போது மனுமகன் ஆனார்.

மனுமகன் மனிதன். (Fully Man)

இறைமகனும், மனு மகனும் ஒரே ஆள்தான், இறைத் தந்தையின் மகனாகிய தேவ ஆள்.

இறைமகன் மனித உரு எடுக்கு முன் அவருக்கு இருந்தது தேவ சுபாவம் மட்டுமே.

மரியாளின் வயிற்றில் மனுவுரு எடுத்த வினாடியிலிருந்து அவருக்கு இரண்டு சுபாவங்கள்.

ஆள் ஒன்று, சுபாவங்கள் இரண்டு
.
தேவசுபாவத்திலும் அவர் கடவுள் தான்.
மனித சுபாவத்திலும் அவர் கடவுள் தான்.

இயேசு மெய்யாகவே கடவுள்.
இயேசு மெய்யாகவே மனிதன்.''

'',இறைமகன் எப்போது மனுமகன் ஆனார்?"

"மரியாளின் வயிற்றில் மனுவுரு எடுத்த வினாடியில்."

".அவரை ஏன் மனுமகன் என்கிறோம்?"

"மரியாள் முதல் மனிதனாகிய ஆதாமின் வம்சத்தில் பிறந்தவள்.

மனித சுபாவத்தில் அவருக்கு தந்தை இல்லை.

தாய் மனித வம்சத்தினள். ஆகவே
அவரை மனுமகன் என்கிறோம்."

", இயேசுவுக்கு தேவ சுபாவத்தில் தாய் இல்லை, மனித சுபாவத்தில்
தந்தை இல்லை.

தன்னுடைய பாடுகளைப் பற்றி பேசும்போதெல்லாம்

'மனுமகன் பாடுகள் பல படவும்.' என்றுதான் ஆரம்பிப்பார்.

ஏனெனில் பாடுகள் பட்டது, மரித்தது, உயிர்த்தது எல்லாம் மனித சுபாவத்தில்தான்.

தேவ சுபாவத்தில் பாடுகள் பட முடியாது.

தேவன் மனித சுபாவத்தில் பாடுகள் பட்டார்.

பாடுகள் பட்டது கடவுள்தான், ஆனால் மனித சுபாவத்தில்.

சிலுவையில் அறையப்பட்டது கடவுள்தான், ஆனால் மனித சுபாவத்தில்.

மரணம் அடைந்தது கடவுள்தான், ஆனால் மனித சுபாவத்தில்."

"எல்லாம் புரிகிறது, தாத்தா. நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை.

 "தந்தை என்னிலும் மேலானவர்"
என்று என்ன அர்த்தத்தில் சொன்னார்?"

"ஏன் சொன்னார் என்று கேள்.''

"சரி. தந்தை என்னிலும் மேலானவர்" என்று ஏன் சொன்னார்?"

", தேவ சுபாவத்தில் இயேசுவுக்கு துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை,

அவர் நித்திய கடவுள்.

ஆனால் மனித சுபாவத்தில் துவக்கமும் இருந்தது, முடிவும் இருந்தது.

கி.பி. 0 ல் பிறந்து, 
33 ஆண்டுகள் வாழ்ந்து,
கி.பி.33 ல் இறந்தார்.

தந்தைக்கு ஒரு சுபாவம்தான், தேவசுபாவம்.

மகனுக்கு இரண்டு சுபாவங்கள்.

"உங்களுக்கு என்மேல் அன்பிருந்தால், நான் தந்தையிடம் போவதுபற்றி மகிழ்வீர்கள். ஏனெனில், தந்தை என்னிலும் மேலானவர்."

என்று இயேசு சொன்னது

 தான் மனித சுபாவத்தில் பாடுகள் பட்டு மரிப்பதற்கு முந்திய நாள், வியாழக்கிழமை.

இயேசு மெய்யாகவே முழுமையான மனிதன்,

அதாவது பாவம் தவிர மற்ற எல்லாவற்றிலும் அவர் மனிதன்.

மனிதன் மரித்த பின்புதான் இறைவனிடம் செல்ல முடியும்.

மனிதனாகிய இயேசு சிலுவையில் மரித்தவுடன் தந்தை இறைவனிடம் சென்று விடுவார்.

 உயிர்த்த பின் ஆன்ம, சரீரத்தோடு தந்தையிடம் சென்று விடுவார்.

தந்தை நித்தியர்.
மனிதனாகிய இயேசு 33 ஆண்டுகளே வாழ்ந்தவர்.

கடவுளாகிய இயேசு நித்தியர்.
மனிதனாகிய இயேசு மனிதரைப் போலவே துவக்கமும் முடிவும் உள்ளவர்.

இப்போ யோசி, "தந்தை என்னிலும் மேலானவர்." என்று அவர் சொன்னதன் பொருள் புரியும்.

 தான் மெய்யாகவே கடவுளாக இருப்பது போலவே 

மெய்யாகவே மனிதனாகவும் இருப்பதை  நமக்கு முழுமையாக புரிய வைக்கவே இவ்வாறு சொன்னார்."

"இதைக் கேட்ட அப்போஸ்தலர்களும் ஓருண்மையை புரிந்து கொண்டிருப்பார்கள்.

இயேசு மரித்து தந்தையிடம் செல்வது போலவே தாங்களும் போவோம் என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள்.

இந்த புரிதல் நற்செய்தியை அறிவித்த காலத்தில் இயேசுவுக்காக மரிக்க உந்துதல் கொடுத்திருக்கும்."

"நாமும் மரணத்தை கண்டு பயப்படக்கூடாது, ஏனெனில் அதுதான் நம்மைத் தந்தையுடன் சேர்க்கும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment