Tuesday, May 10, 2022

கத்தோலிக்க குருவானவர் யார்?(தொடர்ச்சி.)

கத்தோலிக்க குருவானவர் யார்?
(தொடர்ச்சி.)



''தாத்தா, உங்கள் very good ஒருபக்கம் இருக்கட்டும்.

'உலகம் முடியுமட்டும் உங்களுடனே இருக்கிறேன்' என்று இயேசு கூறியபோதே அப்போஸ்தலர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் இயேசு அவர்களோடு இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் நான் ஒவ்வொரு முறை அவர்களது பணியைக் கூறிய போதெல்லாம் 

'நமக்கும் அது பொருந்தும்' என்று கூறினீர்களே, அது ஏன்?"

", நான் 'அவர்கள் மட்டுமே செய்யக் கூடிய பணிகளை ஒவ்வொன்றாக கூறு' என்று சொன்னேன்.

திருப்பலி நிறைவேற்றுவதும், பாவங்களை மன்னிப்பதும் மட்டும்தான் அவர்கள் மட்டுமே செய்யக் கூடிய பணிகள்.

குருவானவர் இல்லாவிட்டால்

 திருப்பலி நிறைவேற்ற முடியாது, பாவசங்கீர்த்தனமும் கேட்க முடியாது.

ஆன்மீக உணவும் கிடைக்காது. பாவமன்னிப்பும் கிடைக்காது. 

'உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்' என்று இயேசு அவர்களிடம் தான் சொன்னார்.

ஆனாலும்,

"ஆகையால், இச்சின்னஞ் சிறு கட்டளைகளில் ஒன்றையேனும் மீறி, அப்படியே மனிதர்க்கும் போதிப்பவன், விண்ணரசில் மிகச் சிறியவன் எனப்படுவான்.

 அவற்றைக் கடைப்பிடித்துப் போதிப்பவனோ, விண்ணரசில் பெரியவன் எனப்படுவான்."
(மத். 5:19) 

இவ்வார்த்தைகளை இயேசு யாரிடம் கூறினார்?"

"இயேசு திரளான கூட்டத்தைக் கண்டு, மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரை அணுகினர்.
2 அவர் திருவாய் மலர்ந்து போதிக்கலானார்:"
(மத். 5:1,2)

"இயேசு இவ்வார்த்தைகளைச் சொல்லி முடித்ததும் மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு மலைத்துப்போயினர்."
(மத். 7:28)

மலைப் பிரசங்கத்தில் மக்களைப் பார்த்து கூறினார்."

", அதாவது, மக்களும் கட்டளைகளைக் கடைப்பிடித்துப் போதிக்க வேண்டும்.

ஆகவே, குருக்கள் நமக்குப் போதிக்கும் நற்செய்தியை,

நாம் அனுசரிவிப்பதோடு,
 மற்றவர்களுக்கும் போதிக்க வேண்டும்.

நற்செய்தி அறிவிக்கும் பணி குருக்களுக்கும், நமக்கும் பொதுவானது.

பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் ஞானோபதேசம் போதிக்கிறார். இது நற்செய்திப் பணிதானே.

நாம் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறோமே, இதுவும் நற்செய்திப் பணிதானே."

"துறவற  சபைக் குருக்கள் கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் வார்த்தைப் பாடு கொடுக்கின்றார்கள்.

நாம் கொடுப்பதில்லையே."

", துறவற சபைக் குருக்கள் கற்பு வார்த்தைப் பாடு கொடுக்கிறார்கள்.

அதாவது திருமணம் முடிக்காமல், இயேசுவைப் போலவே வாழ வார்த்தைப் பாடு கொடுக்கிறார்கள்.

ஆனாலும் கற்பு என்ற வார்த்தை பொதுவானது.

கற்பு நம் எல்லோரின் பொக்கிஷம்.

நாம் அனைவரும்,

திருமணம் ஆனவர்களும், ஆகாதவர்களும் கற்பு நெறி காக்க கடமைப் பட்டிருக்கிறோம்.

துறவறசபையை சேர்ந்த குருக்கள் ஏழ்மை வார்த்தைப்பாடு கொடுக்கிறார்கள்.

சபையைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமாக எதுவும் கிடையாது.

அவர்கள் உபயோகிப்பவை அனைத்தும் சபைக்குச் சொந்தமான பொருட்கள்.

Superior க்குத் தெரியாமல் 
சொந்தமாக எதையும் வாங்கி உபயோகிக்க முடியாது.

நாம் யாராவது ஒருவருக்கு ஒரு பரிசு கொடுத்தால் அதை அவர்கள்
Superiorடம் கொடுக்க வேண்டும்.

அதை அவர் கொடுத்தால் வாங்கி உபயோகிக்கலாம்.

ஆண்டவரின் போதனைப் படி,
நாமும் ஏழ்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நாம் பொருட்களைச் சம்பாதிக்கலாம். உபயோகிக்கலாம். ஆனால் அவற்றின் மேல் பற்று வைக்கக் கூடாது.

ஒரு பொருள் மீது பற்று வைத்திருந்தால் நம்மால் அதை மற்றவர்கட்கு உதவியாகக் கொடுக்க முடியாது, ஆண்டவருக்காக தியாகம் செய்யவும் முடியாது.

"எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே."

என்ற வார்த்தைகளும் மலைப் பிரசங்கத்தின் போது இயேசு மக்களைப் பார்த்து கூறியவைதான்.

எந்த உலகப் பொருட்கள் மீதும் மனத்தளவில் பற்று அற்றவர்களே எளிய மனத்தோர். (Poor in spirit)"

"தாத்தா நமக்கு உலகப் பொருட்களின் மீது பற்று இல்லை என்பதை நாம் எப்படி கண்டுபிடிக்கலாம்?"

",உன்னிடம் ஆயிரம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

நீ பள்ளிக்கூடத்திற்கு போய்க்கொண்டிருக்கும் போது அது எங்கேயோ விழுந்து தொலைந்து விட்டது.

பள்ளிக்கூடத்திற்குப் போன பின்புதான் அதை நீ கண்டுபிடிக்கிறாய்.

இப்போது நீ என்ன செய்வாய்?"

"அழுவேன்."

"ஏன் அழுவாய்?"

"காணாமல் போனது என்னுடைய ரூபாய்."

",உன் வகுப்பைச் சேர்ந்த இன்னொரு பையன் அவனது ரூபாயை தொலைத்துவிட்டான். நீ அழுவாயா?"

"'ஐயோ பாவம் ' என்று சொல்வேன். அழமாட்டேன்."

",உன்னுடைய ரூபாய் காணாமல் போனபோது மட்டும் ஏன் அழுகிறாய்?".

"ஏனென்றால் அது என்னுடைய ரூபாய்."

",அதுமட்டுமல்ல, அதன்மேல் உனக்கு பற்று இருக்கிறது.

சீப்பினால் தலை சீவும்போது தலைமுடி ஒன்று சீப்பில் வந்துவிட்டால் அழுவாயா?"

"ஒரு முடிக்காக யாரும் அழுவார்களா?

இப்போது புரிந்து விட்டது. பற்றுள்ள பொருளை இழக்க விரும்ப மாட்டோம்.

பற்றில்லாத பொருளை
இழந்தாலும் கவலைப்பட மாட்டோம்.

உலகப்பற்று உள்ளவன் சாக விரும்பமாட்டான்.

உலகப்பற்று இல்லாதவன் சாவைப் பற்றி கவலைப்பட மாட்டான்.

எப்போது சாவோம் என்பது முக்கியமல்ல, 

எப்படிச் சாவோம் என்பதுதான் முக்கியம்.

விண்ணகத்தின் மேல் பற்று உள்ளவர் ஒவ்வொரு வினாடியும் நல்ல மரணத்திற்குத் தயாராக இருப்பான்.

நமக்கு இறைவன் மீது பற்று இருந்தால் இவ்வுலகப் பற்று காணாமல் போய்விடும்.

இறைவனோடு எப்போது இணைவோம் என்று எதிர்பார்த்துக் கொண்டேயிருப்போம்."

", You are correct.
நாம் இறைவனைப் பற்றிக் கொண்டால் உலகப்பற்று நம்மை பற்றாது.

அடுத்து,

துறவற சபையினர் கீழ்ப்படிதல் வார்த்தைப்பாடு கொடுக்கின்றனர்.

தங்கள் சபைத் தலைவருக்கு எல்லா வகையிலும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

நாமும் தாய்த் திருச்சபைக்குக் கீழ்ப்படிந்து நடக்க கடமைப் பட்டிருக்கிறோம்."

"அப்படியானால், தாத்தா, அவர்களுக்கும், நமக்கும் என்ன வித்தியாசம்?"

", திருமணம் முடித்தவர்களுக்கும், முடியாதவர்களுக்கும் என்ன வித்தியாசம்?"

"திருமணம் முடிக்கும்போது கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர்
பிரமாணிக்கமாக இருப்பதாக வார்த்தைப்பாடு கொடுக்கிறார்கள்.

ஒருவருக்கொருவர் துரோகம் செய்யக்கூடாது.

திருமணம் முடிக்காதவர்கள் யாருக்கும் வார்த்தைப்பாடு கொடுப்பதில்லை.

ஆனாலும் யாருக்கும் துரோகம் செய்யக்கூடாது."

", அதாவது?"

"திருமணம் முடித்தோர் திருமண ஒப்பந்தத்தால் கட்டுப் பட்டிருக்கிறார்கள்,

முடிக்காதோர் எந்த ஒப்பந்தத்தாலும் கட்டுப் படவில்லை.

ஆனால் அனைவரும் இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள்.

நீ ஒரு துறவற சபையில் சேர்ந்து விட்டால் திருச்சபையின் ஒழுங்குமுறைகளோடு, சபையின் ஒழுங்குகளுக்கும் கட்டுப்பட்டிருப்பாய்.

சேராவிட்டால் திருச்சபையின் ஒழுங்குகளுக்கு மட்டும் கட்டுப்பட்டிருப்பாய்.

இப்போது நீ இஷ்டப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
பாவம் மட்டும் செய்யக்கூடாது.

நீ துறவற சபையில் சேர்ந்து விட்டால் உன் இஷ்டப்படி என்ன வேண்டுமானாலும் செய்ய முடியாது. சபையின் இஷ்டப்படிதான் எதுவும் செய்யமுடியும்.   

பாவம் செய்யக்கூடாது என்பது எல்லோருக்கும் பொதுவான விதி. 

ஏதாவது புரிந்திருக்கிறதா?"

"எல்லோரும் திருச்சபையில் இருக்கிறோம்.

வார்த்தைப்பாடு கொடுத்தவர்கள்
திருச்சபைக்குள் உள்ள துறவற சபையில் இருக்கிறார்கள்.

எல்லோரும் இயேசுவுக்குள் தான் இருக்கிறோம்."

", மேற்றிராசனக் குருக்கள்?"

"அவர்கள் அப்போஸ்தலர்களின் நேரடி வாரிசுகள்.

அவர்களும் கற்பு வார்த்தைப் பாடு கொடுக்கிறார்கள்.

ஆயருக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும்
 வார்த்தைப் பாடு கொடுக்கிறார்கள். 

நாமும் ஆயருக்குக் கட்டுப் பட்டவர்கள்தான்."

", அனைவரும் கிறிஸ்துவின் ஞான உடலைச் சேர்ந்தவர்களே." 

"நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லலாம் அல்லவா?"

", தாராளமாகச் சொல்லலாம்.

பங்கு குரு நமது தந்தை.

நாம் அவரது பிள்ளைகள்.

நமது ஆன்மாவை பாவசங்கீர்த்தனம் என்னும் தண்ணீரால் குளிப்பாட்டி,

நமக்கு இயேசுவை உணவாக அளிப்பது நமது பங்குத் தந்தை தான்.

வீட்டில் உடல் ரீதியாக அம்மா செய்கின்ற வேலையை,

திருச்சபையில் ஆன்ம ரீதியாக
பங்குத் தந்தை செய்கிறார்."

"கத்தோலிக்க குருவானவர் யார்? என்ற கேள்விக்குப் பதில்,

கத்தோலிக்க குருவானவர் நமது ஆன்மீகத் தந்தை.

நமது ஆன்மா பரிசுத்தம் அடையவும்,

நமக்கு ஆன்மீக உணவு கிடைக்கவும் 

குருவானவர் உருவில் நம்மோடு வாழ்ந்த இயேசுவை அணுகுவோம்.

இயேசுவின் சொற்படி நடப்போம்.

மீட்பு அடைவோம்.

லூர்து செல்வம்.



.

No comments:

Post a Comment