Saturday, May 21, 2022

நாம் ஏன் பிறந்தோம்?

நாம் ஏன் பிறந்தோம்?

"தாத்தா, ரெடியா?"

", வாடா, பொடியா, எதுக்கு ரெடியான்னு கேட்கிற?"

"விடிய விடிய யோசிச்சி சில கேள்விகளைத் தயாரித்து வைத்திருக்கிறேன். பதில் சொல்ல ரெடியா?"

", நீ விடிய விடிய யோசிச்சி சில கேள்விகளைத் தயாரித்து வைத்திருந்தால் பதில யோசிக்க பகல் முழுவதும் வேண்டுமே."

"தேவையில்லை. பொடிப் பொடி கேள்விகள்தான்."

",சரி, கேளு."

"எதற்காக இரயிலில் ஏறுகிறோம்?"

",பயணம் செய்வதற்கு."

"தவறு."

"இறங்குவதற்கு."

"கரெக்ட்."

", பயணம் செய்யாமல் எப்படிடா இறங்க முடியும்?"

"எதற்காக என்றால் என்ன நோக்கத்திற்காக என்று அர்த்தம்.

ஏறுவதின் நோக்கமும், பயணிப்பதின் நோக்கமும் இறங்குவதுதான்.

பயணிப்பதற்காகவே ஏறினால் இறங்க வேண்டிய இடம் வரும்போது அழுகை வரும்.

சரி. அடுத்த கேள்வி.

எதற்காகப் பிறக்கிறோம்?"

", சாவதற்கு."

"கரெக்ட். எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?"

", உனது முதல் கேள்விக்குரிய பதிலிலிருந்துதான்."

"இப்படித்தான் அனுபவம் மூலம் ." பாடம் கற்க வேண்டும். அநேகருக்கு இது புரிவதில்லை.

அடுத்த கேள்வி.

பயணம் செய்வோர் எத்தகைய Luggage ஐ எடுத்துச் செல்ல வேண்டும்?"

", குறைந்த. Less luggage, more comfort என்று இரயிலில் எழுதிப் போட்டிருப்பாங்களே."

"தாத்தா, நான் எவ்வளவு என்று கேட்கவில்லை. எத்தகைய என்று கேட்டேன்."

", இறங்கும்போது கொண்டு போக முடிந்த."

"Super correct தாத்தா. 

வாழும்போது எத்தகைய 
சொத்துக்களைச் சம்பாதிக்க வேண்டும்?"

", சாகும்போது கொண்டு போகக் கூடிய சொத்துக்களை."

"கரெக்ட். சாகும்போது கொண்டு போக முடியாத சொத்துக்களுக்கு
இரண்டு உதாரணங்கள்...''

", பணம், நிலபுலன்கள், வீடுகள்."

"கரெக்ட். சாகும்போது கொண்டு போகக் கூடிய சொத்துக்களுக்கு உதாரணம் கொடுங்கள்."

", புண்ணியங்கள், கடவுளுடைய அருள்."

"புண்ணியங்களைச் சம்பாதிப்பது எப்படி?''

", தேவைப்படுவோருக்குக் கொடுப்பதன் மூலம்."

"எதைக் கொடுப்பதன் மூலம்?"'.

",தேவைப் படுவதை."

"இறையருளை எப்படிச் சம்பாதிப்பது?"

", செபிப்பதன் மூலம்."

"எப்படிச் செபிப்பது ?"

", கடவுளோடு ஒன்றித்து வாழ்வதன் மூலம்." 

"கடவுளோடு ஒன்றித்து வாழ்ந்தால் எப்படி  அருள் கிடைக்கும்?'"


", கடவுள் தான் அருளின் ஊற்று.
அருளின் ஊற்றோடு ஒன்றிக்கும் போது நாம் அருளோடுதானே இருப்போம்."

"கடவுளோடு எப்படி ஒன்றிப்பது?"

". நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் கடவுள் இருக்க வேண்டும்."

"இறப்பதற்காக பிறக்கிறோம்.

இறப்போடு எல்லாம் முடிந்து விடுகிறதா?"

", இல்லை. இறப்பில்தான் நமது வாழ்க்கையேஆரம்பிக்கிறது."

"இறந்தவுடன் நம்மை அடக்கம் செய்து விடுவார்கள். மண்ணுக்குள் எப்படி வாழ்வது?"

".நம்மை அடக்கம் செய்ய முடியாது . நமது உடலை மட்டும் அடக்கம் செய்வார்கள்.

 நாம், அதாவது, நமது ஆன்மா விண்ணகம் சென்று விடும்."


"விண்ணகம் எங்கே இருக்கிறது?"

", எங்கேயும் இல்லை."

"இல்லாத இடத்திற்கு எப்படி போவது? எப்படி வாழ்வது?"

",விண்ணகம் ஒரு இடமே இல்லை. எங்கே என்ற வினாச் சொல் நாம் இப்போது வாழும் இடமாகிய உலகத்திற்கு மட்டுமே பொருந்தும்.

இடமே இல்லாத விண்ணகத்திற்கு பொருந்தாது.

விண்ணகம் ஒரு வாழ்க்கை நிலை. 

அதைப்பற்றி நாம் பேசும்போது பயன்படுத்தும் உலக வார்த்தைகள் எதுவும் அதற்கு பொருந்தாது.

 வேறு வழி இல்லாமல் நமக்கு தெரிந்த இவ்வுலக மொழியை பயன்படுத்துகிறோம்.

உலக மொழியின் அர்த்தத்தில் நாம் அங்கு போகவும் முடியாது, வரவும் முடியாது.

 போக்குவரத்து இடத்திற்கு மட்டுமே பொருந்தும்.

சடப் பொருளாகிய இவ்வுலகம் மட்டுமே இடம்.

இங்கு மட்டுமே நேற்று, இன்று, நாளை என்று காலமும், நேரமும் உண்டு.

விண்ணக வாழ்வில காலம், நேரம் கிடையாது.

நாம் வாழ்வோம். அன்பு செய்வோம். நினைப்போம். எண்ணங்களை பகிர்ந்துகொள்ள மொழி தேவை இல்லை."

"மொழி இல்லாமல் எப்படி எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முடியும்?"

", உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள மொழி எதற்கு?

இவ்வுலகில் மொழியைப் பயன்படுத்தாமல் பார்வையின் மூலம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறோமா இல்லையா?

அங்கு பார்வையும் இல்லை. ஆகவே மனதிற்கு மனம் எண்ணங்களை பகிர்ந்து கொள்வோம்."

"யாரோடு பகிர்ந்து கொள்வோம்?"

", இறைவனோடு, விண்ணகத்தில் வாழும் மற்றவர்களோடு, உலகில் வாழ்பவர்களோடு.

இப்போது கூட செபம் என்பது நமது மனதில் உள்ள எண்ணங்களால் கடவுளோடும், புனிதர்களோடும் இணைந்திருப்பதுதானே.

விண்ணுலக வாழ்வு இறைவனையும் மற்றவர்களையும் நேசிப்பதில் தான் அடங்கி இருக்கிறது. நேசிக்க மனம் போதுமே. வார்த்தைகள் எதற்கு?"

"விண்ணக வாழ்விற்கும் இவ்வுலக வாழ்விற்கும் எந்த வித்தியாசம்?"

",இவ்வுலக வாழ்வு முடிவுக்கு வரக்கூடியது . விண்ணக வாழ்வு நிரந்தரமானது.

இவ்வுலக வாழ்வு துன்பங்களும், சோதனைகளும் நிறைந்தது.
விண்ணக வாழ்வு பேரின்பகரமானது.

இவ்வுலக வாழ்வில் இறைவனை நோக்கி செபிக்கிறோம்.
மறுவுலக வாழ்வில் இறைவனோடு ஒன்றித்திருக்கிறோம்.

இவ்வுலக வாழ்வில் பாவம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
விண்ணக வாழ்வில் நம்மால் பாவம் செய்ய முடியாது."

" சரி, தாத்தா, இன்றைக்கு இவ்வளவு போதும்."

", இன்னும் ஒரு கேள்வி கேளுடா."

"ஒரு கேள்வி போதுமா?"

",இந்த கேள்வியே போதும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment