Tuesday, May 10, 2022

கத்தோலிக்க குருவானவர் யார்?

கத்தோலிக்க குருவானவர் யார்?

"தாத்தா, உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை."

", உன்னுடைய வாய் உங்கிட்டதானே இருக்கிறது."

"தாத்தா, அது எனக்குத் தெரியும். தாத்தா, ஒரு அறைக்குள்ளே போக வேண்டும் என்றால் அதற்கு உரிய வாசல் வழியே போக வேண்டும்.

உங்களிடமிருந்து ஒரு விசயத்தை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்குப் பொருத்தமான கேள்வியை கேட்க வேண்டும்.

அந்தக் கேள்வி எது என்று தெரியவில்லை."

", என்ன விசயத்தை?"

"நமது குருக்களைப் பற்றி."

", கேள்வி வேண்டாம். அவர்கள் மட்டுமே செய்யக் கூடிய பணிகளை ஒவ்வொன்றாகக் கூறு."

" குருக்கள் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்."

",நமக்கும் அந்த கடமை இருக்கிறது."

"நம்மை ஆன்மீகத்தில் வழிநடத்த வேண்டும்."

",நமது பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளை ஆன்மீகத்தில் வழிநடத்த வேண்டிய கடமை இருக்கிறது."

"குருக்கள் திருமணம் செய்யாமல், கற்பு நெறியில் வாழ வேண்டும்."

", நாமும் திருமணம் செய்தாலும், செய்யாவிட்டாலும் கற்பு நெறியில் தான் வாழ வேண்டும்."

"குருக்கள் பணத்தின் மீது பற்றில்லாமல் ஏழ்மையில் வாழ வேண்டும்."

",ஏழைகள் பாக்கியவான்கள் என்று இயேசு சொன்ன வசனம் நமக்கும் பொருந்தும்."

"மேற்றிராசனக் குருக்கள் தங்கள் ஆயருக்கும், துறவற சபைக் குருக்கள் தங்கள் சபைத் தலைவருக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்."

",நாமும் நமது தாய் திருச்சபைக்கு கீழ்ப்படிந்து தான் நடக்க வேண்டும்."

"என்ன தாத்தா நான் எதைச் சொன்னாலும் நாமும் அப்படித்தான் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்?" 

",அவர்கள் செய்து நாம் செய்ய முடியாத காரியங்களை சொல்லு." 

"நீங்களே சொல்லுங்கள்."

". குருக்கள் அப்பத்தையும் ரசத்தையும் இயேசுவின் சரீரமாகவும் இரத்தமாகவும் மாற்றி நமக்கு ஆன்மீக உணவாக தருகிறார்கள்.

நடுத் திருப்பலியின்போது குருவானவர் அப்பத்தை எடுத்து

 "இது என் சரீரம்" என்கிறார்.

உடனே அது இயேசுவின் சரீரமாக மாறிவிடுகிறது.

ரசத்தை எடுத்து 

"இது என் ரத்தம்" என்கிறார்.

உடனே அது இயேசுவின் ரத்தமாக மாறிவிடுகிறது.

",என் சரீரம்"

என்று சொல்லும்போது அது இயேசுவின் சரீரமாக மாறினால் என் என்ற வார்த்தை யாரை குறிக்கும்?"

"இயேசுவைக் குறிக்கும்."

", இங்கே "என்" என்று சொல்வது யார்?"

"குருவானவர்."

",அப்படியானால் குருவானவர் யார்?''

"இயேசு."

",பீடத்தில் குருவானவரின் உருவத்தில் நின்று பலியை ஒப்புக் கொடுப்பவர்  

அன்று சிலுவையில் பலியான அதே இயேசு தான்.

நாம் குருவானவரை பார்க்கும் போது அவர் உருவத்தில் இயேசுவை பார்க்கிறோம்.

குருவானவர் அல்லாத ஒருவர் அப்பத்தை எடுத்து,

" இது என் சரீரம்" என்று சொன்னால் அது இயேசுவின் சரீரமாக மாறுமா?"

"மாறாது."

", குருவானவர் செய்து நாம் செய்ய முடியாத ஒரு செயல் 

அப்பத்தை இயேசுவின் சரீரமாகவும், ரசத்தை இயேசுவின் இரத்தமாகவும் மாற்றும் செயல்."

"தாத்தா, இன்னொரு செயலை நான் சொல்லட்டுமா?"

", சொல்லு."

" நாம் பாவசங்கீர்த்தனம் செய்யும்போது நமது பாவங்களை குருவானவர் மன்னிக்கிறார்.

 பாவங்களை பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே உண்டு.

அப்படியானால் நமது பாவங்களை மன்னிப்பவர் குருவானவர் உருவத்தில் பாவ சங்கீர்த்தன தொட்டியில் அமர்ந்திருக்கும் இயேசுவே தான்."

"பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

23 எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:"
(அரு. 20:22, 23)

இவை இயேசு சீடர்களை நோக்கி கூறிய வார்த்தைகள்.

முக்கியமான ஒரு இறை இயல் உண்மையை மனதில் வைத்துக்கொண்டு இந்த வசனத்திற்குப் பொருள் காண வேண்டும்.

பரிசுத்த தம திரித்துவத்தில் மகன்
தந்தையினுள் இருக்கிறார்.

தந்தை மகனுள் இருக்கிறார்.

அதே போல்,

மகன் பரிசுத்த ஆவிக்குள் இருககிறார்.

பரிசுத்த ஆவி மகனுள் இருக்கிறார்.

மகன் இருக்கும் இடத்தில் தந்தையும் இருக்கிறார்.

தூய ஆவி இருக்கும் இடத்தில் மகனும் இருக்கிறார்.

அப்படியானால்

 இயேசு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்

என்பது 

என்னைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் பொருள்படும்.

இயேசு சீடர்களுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை கொடுக்கும் பொழுது அவரே சீடர்களுக்குள் வந்துவிடுகிறார்.

சீடர்கள் மூலமாக மன்னிப்பவர் இயேசுவே.


சீடர்களின் வாரிசுகள் தான் குருக்கள்.

குருக்கள் மூலமாக பாவங்களை மன்னிப்பவர் இயேசுவே.

பாவசங்கீர்த்தனத் தொட்டியில் குருவின் உருவத்தில் இருப்பவர் இயேசுவே.

நாம் குருவானவரைப் 
பார்க்கும்போது இயேசுவைத்தான் பார்க்க வேண்டும்."

", very good."

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment