Sunday, April 17, 2022

விண்ணுலக வாழ்வு.

விண்ணுலக வாழ்வு.

"தாத்தா..."

", என்னடா, ஏதாவது சந்தேகமா?"

"இல்லை, தாத்தா. சில விஷயங்களைப் பற்றி விளக்கம் கேட்க வேண்டியதிருக்கிறது."

", சரி, கேள்."

"இயேசு பாடுகள் பட்டு மரித்தார், முன்றாம் நாள் உயிர்த்தார் என்று கிளிப்பிள்ளை மாதிரி சொல்லி விடுகிறோம்.

அதற்குள் இருக்கும் இறையுண்மைகளை கொஞ்சம் விளக்குங்கள்."

", முதலில் சில அடிப்படை உண்மைகளைச் (Basic facts)
சொல்லிவிடுகிறேன்.

நாம் வாழ்வது மண்ணுலகில்.
இறைவன் வாழ்வது விண்ணுலகில்.

மண்ணுலக வாழ்வு 
இடம், நேரத்துக்கு உட்பட்டது.
Subject to Space and time.

நாம் இருப்பது இடத்தில். (Material place)

ஒரு இடத்தில் இருக்கும் பொருள் இன்னொரு இடத்தில் இருக்க முடியாது.

நாம் ஒரே நேரத்தில் இரண்டு ஊர்களில் இருக்க முடியாது.

 ஒரே நேரத்தில் நாற்காலியிலும், கட்டிலிலும் இருக்க முடியாது.

பொருள் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும்.

 ஒரு பொருள் அடைத்துக் கொண்டிருக்கும் இடத்தில்  இன்னொரு பொருள் இருக்க முடியாது.

'
இடத்துக்கு இடம், பொருளுக்குப் பொருள் தூரம் உண்டு.

சடப் பொருட்களுக்கு காலம், நேரம் உண்டு.

காலத்துக்கு துவக்கமும் முடிவும் உண்டு.

ஆகவே காலத்தில் வாழும் மனிதனுக்கும் துவக்கமும் முடிவும் உண்டு.

காலத்தை ஒரு நீள கோட்டிற்கு ஒப்பிட்டால், இரண்டு புள்ளிகளுக்கு இடையே (Between two points of time) இடைவெளி (Length of time) உண்டு.

விண்ணுலகம் ஒரு இடம் அல்ல. அங்கு நேரமும் கிடையாது.

மண்ணுலகில் வாழும் சடப் பொருட்களால் விண்ணுலகில் வாழ முடியாது, ஆவிகள் மட்டுமே வாழ முடியும்.

இறைவன் ஒரு ஆவி. சம்மனசுக்கள் ஆவிகள்.

மனிதன் சடப்பொருளாகிய உடலும், ஆவியாகிய ஆன்மாவும் இணைந்தவன்.

உலக வாழ்வின் இறுதியில் ஆன்மா உடலை மண்ணுலகில் விட்டு விட்டு விண்ணுலகிற்குச் சென்று விடும்.

மண்ணுலகில் நாம் இடத்தையும், நேரத்தையும் பயன்படுத்தி வாழ்வதுபோல,

விண்ணுலகில் வாழ முடியாது.

அங்கு  நாம் அனுபவிக்க இருப்பது வாழ்க்கை நிலையைத்தான்.

அங்கு உலக அனுபவத்தில் உள்ள எங்கு, எப்போது, என்ற கேள்விகளே கேட்க முடியாது.

ஏனெனில் அங்கு இடமும் இல்லை, நேரமும் இல்லை.

இயேசு மனிதனாய் பிறக்கும் போது தேவ சுபாவத்தில் நித்தியத்தில் வாழ்ந்து கொண்டே,

மனித சுபாவத்தில் துவக்கமும் முடிவும் , இடமும், நேரமும் 
உள்ள காலத்திற்குள் நுழைந்தார்.

இடத்தைப் பொறுத்த மட்டில் பெத்லகேமில் பிறந்தார்,

 நசரேத் ஊரில் வாழ்ந்தார், யூதேயாவிலும்,
கலிலேயாவிலும் நற்செய்தி அறிவித்தார், 

ஜெருசலேமில் உள்ள கல்வாரி மலையில் சிலுவையில் மரித்தார்.

காலத்தைப் பொறுத்த மட்டில் 33 ஆண்டுகள் வாழ்ந்தார்.

33வது ஆண்டு அவர் மரிக்கும்போது அவரது ஆன்மா உடலை உலகில் விட்டு விட்டு விண்ணகத்திற்குள் துழைந்தது."

"தாத்தா, கத்தோலிக்க விசுவாசப் பிரமாணத்தில்

"இயேசு பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து .
உயிர்த்தெழுந்தார்."

என்றுதான் சொல்கிறோம்.

நீங்கள் 'விண்ணகத்திற்குள் துழைந்தது என்று சொல்கிறீர்கள்?"

",முதலில் பாதாளத்தில் என்ற வார்த்தையை விளக்கி விடுகிறேன். மற்றவற்றை நீயே புரிந்து கொள்வாய்.

எப்படி மோட்சம் என்பது ஒரு இடம் இல்லை, வாழ்க்கை நிலையோ (State of life)

அதேபோல பாதாளம் என்பதும் ஒரு இடம் இல்லை, வாழ்க்கை நிலைதான்.

இயேசு சிலுவையில் நமது பாவங்களுக்கு பரிகாரமாக உயிர் விட்ட வினாடிதான் மனுக்குலம் மீட்பு பெற்றது.

அதுவரை வாழ்ந்து  மரித்த பரிசுத்தவான்களின்  வாழ்க்கை நிலைதான் பாதாளம்.

இயேசு சிலுவையில் மரித்த வினாடியே அவர்கள் மீட்பு பெற்று விட்டார்கள்,

அதாவது இறைவனோடு இணைந்து வாழும் மோட்ச நிலையை அடைந்து விட்டார்கள்.

இதைத்தான் நமக்கு புரியும் வகையில் நமது மண்ணக மொழியில் 

இயேசு பாதாளத்தில் இறங்கி அங்குள்ள ஆன்மாக்களை மோட்சத்திற்கு அழைத்து சென்றார் என்று கூறுவோம்.

நாம் புரிந்துகொள்ள வேண்டியது

 பாதாள நிலையில் இருந்த ஆன்மாக்கள் மோட்ச நிலைக்கு மாறினார்கள், 

அதாவது, மீட்பு அடைந்தார்கள்.

உலக கணக்குப்படி இறந்த மூன்றாம் நாள் இயேசு  உயிர்த்தார்.

உயிர்க்கும்போது அவரது சட நிலையில் இருந்த உடல் ஆன்மீக நிலைக்கு மாறியது.

His material body became a spiritual body.

உயிர்த்தபின் இயேசு ஆன்மாவுடனும், உடலுடனும் விண்ணுலகில் வாழ்கிறார்."

"இயேசு  உயிர்த்த நாற்பதாவது நாள்தான் விண்ணகம் எய்தினார் என்று நாம் விசுவாசிக்கிறோம்.

நீங்கள் உயிர்த்தவுடனே என்கிறீர்கள்?"

"இயேசு உயிர்த்த பின் நாற்பது நாட்கள் அப்போஸ்தலர்களுக்கு காட்சிகள் கொடுத்து

அவர்களோடு பேசினார்.

 நாற்பது நாட்களுக்குப் பின் அவர்களுக்கு காட்சி கொடுத்து பேசவில்லை.

இயேசு மரித்த பின் அதற்கு முன்னால் உலகில் வாழ்ந்தது போல வாழவில்லை.

உலக கணக்குப்படி நாற்பது நாட்களும் அப்பப்போ அப்போஸ்தலர்களுக்கு காட்சி கொடுத்தார்.

அதற்குப் பிறகு பரிசுத்த ஆவி அப்போஸ்தலர்கள் மீது இறங்கி வந்தபின் அவர்களது உள்ளத்தில் பேசி அவர்களை வழி நடத்தினார், இன்றும் அவர்களது வாரிசுகளை வழி நடத்திக்கொண்டு வருகிறார்."

"தாத்தா, இறந்தவர்களுக்கு இடம், நேரம் கிடையாது என்றீர்கள், ஆனால் இயேசு அப்போஸ்தலர் இருந்த இடங்களுக்குச் சென்று காட்சி கொடுத்திருக்கிறார்? 

(கலிலேயாவின் மலை
(மத்.28:16-20)

எம்மாவுஸ் (லூக்.24:15 - 31)

. ஜெருசலேம் (லூக்.24:36-49)

திபேரியாக் கடலருகே 
(அரு.21:3-14)


", விண்ணக வாசிகளுக்கு தான் இடம், நேரம் கிடையாது.

அப்போஸ்தலர்கள் மண்ணக வாசிகள். அவர்களுக்கு இடம், நேரம் உண்டே!"

"அங்கே இயேசு எப்படிப் போனார்? போக நேரம் பிடிக்குமே."

",நீ  எங்கே இருக்கிறாய்?"

" .இந்தியாவில்."

", அண்ணன் எங்கே இருக்கிறான்?"

"அமெரிக்காவில்." 

", இரண்டு பேருக்கும் அந்தோனியார் மீது பக்தி உண்டா?"

"உண்டு."

",அவர் எங்கே இருக்கிறார்?"

"மோட்சத்தில்."

",நீங்கள் இருவரும் அந்தோனியாரை நோக்கி செபிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

 யாருடைய செபத்தை அந்தோணியார் கேட்பார்?"

"இருவருடைய செபத்தையும்தான்."

", உன்னுடைய செபத்தைக் கேட்க அவர் இந்தியாவில் இருக்க வேண்டும்.

 உன்னுடைய அண்ணனுடைய செபத்தைக் கேட்க அவர் அமெரிக்காவில் இருக்க வேண்டும்.

 எப்படி ஒரே நேரத்தில் இரண்டு பக்கமும் இருக்கிறார்?"

"மோட்சத்தில்  இடமும் நேரமும் இல்லை.

நாங்கள் இருவர் மட்டும் அல்ல, உலகிலுள்ள அத்தனை பேரும் அவரை நோக்கி செபித்தாலும் அனைவருடைய செபத்தையும் அவர் கேட்பார்.

யாரெல்லாம் தன்னை நோக்கி செபிக்கிறார்களோ அவர்களிடாமல்லாம் அவர் இருப்பார்."

", ஒரே நேரத்தில்?"

"அவருக்குதான் இடமும், நேரமும் கிடையாதே."

",இப்போது இயேசுவையும் அப்போஸ்தலர்களையும் நினைத்துப்பார்."

"இப்போ புரிகிறது. இயேசு யாருக்கெல்லாம் காட்சி கொடுக்க விரும்புகிறாரோ 

அங்கே இருப்பார்.
 
உலக முடிவில் நம் எல்லோரையும் கடவுள் உயிர்ப்பிப்பார்.

அதன் பின் இயேசுவையும், மாதாவையும் போல் நாமும் ஆன்ம சரீரத்தோடு விண்ணுலகில் வாழ்வோம்."

விண்ணக வாழ்வுதான் நமது நிரந்தர வாழ்வு என்பதை நினைவில் வைத்துக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment