Wednesday, March 27, 2019

அன்பைப் பார்க்கப் பாவமாயில்லை?

அன்பைப் பார்க்கப் பாவமாயில்லை?
**************************

அளவு கடந்த அன்பு தன்னையே பகிர்ந்து அளிப்பதற்காக மனிதனைப் படைத்தது.

அன்பின் காரணமாகவே தன்னுடைய சுதந்திரத்தையும் அவனோடு பகிர்ந்துகொண்டது.

மனிதன் தன் சுதந்திரத்தைப் பயன்படுத்தி  அன்பிற்கு விரோதமாகப் பாவம் செய்தான்.

அன்பு சர்வ வல்லமையுள்ளது.

தான் நினைத்திருந்தால் தன் சர்வ வல்லமையைப் பயன்படுத்தி மனிதனைப் பாவம் செய்யவிடாமல் தடுத்திருக்கலாம்.

ஆனால் அப்படிச் செய்வதாயிருந்தால் மனிதனுடைய சுதந்திரத்தில் குறுக்கிட வேண்டியதிருந்திருக்கும்.

தான் கொடுத்த சுதந்திரத்தில் தானே குறுக்கிடுவது அன்பின் சுபாவமல்ல.

ஆயினும் அன்பு மனிதன் செய்த பாவத்தை மன்னிக்கத் துடித்தது.

அன்பின் மற்றொரு பண்பு நீதி.

நீதி மன்னிப்புக்குமுன் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட வேண்டும் என்றது.

மனிதன் செய்த பாவத்துக்கு மனிதன்தான் பரிகாரம் செய்ய வேண்டும்.

பாவத்திற்கான பரிகாரத்தைச் செய்ய தானே மனிதன் ஆக  முடிவெடுத்தது அன்பு.

  பாவத்தை மன்னிக்கத் துடித்த

  கடவுளாகிய அன்பு

மனித உருவெடுத்து

மனித சுபாவத்தில்

சொல்லண்ணா  பாடுகள்பட்டு,

சிலுவையில் தன்னையே உயிர்ப்பலி கொடுத்து, 

மனிதன் செய்ய வேண்டிய பரிகாரத்தைத்

மனிதனும் ஆகிய தானே செய்து

மனிதன் செய்த பாவத்தை மன்னித்தது.

என்னே அன்பின் இரக்கம்!

நம்மைப் படைத்ததற்காக சர்வ வல்லப கடவுளாகியஅன்பு பட்ட கஷ்டங்களைப் பார்த்தீர்களா?

நமக்கு வாழ்வு தந்தவருக்கு சிலுவை மரணத்தை அளித்திருக்கிறோம்!

அன்பைப் பார்க்கப் பாவமாயில்லை?

நம்மைப் படைத்த கடவுளுக்கு நன்றி சொல்வதற்குப்பதில் அவரைச் சிலுவைச் சாவு வரை இழுத்து வந்துவிட்டோம்.

முதலில் நாம் செய்த எல்லா பாவங்களுக்கும் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்போம்.

அப்புறம் நன்றி சொல்வோம்.

அப்புறம் நன்றியுடன் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment