Friday, August 30, 2019

"நீங்கள் பரிசுத்தராவதே கடவுளின் திருவுளம்." (1தெச.1:3)

"நீங்கள் பரிசுத்தராவதே கடவுளின் திருவுளம்."
(1தெச.1:3)
----------           ---------        ----------

நண்பர் ஒருவர் கவலையோடு உட்கார்ந்திருந்தார்.

"என்னாச்சி?  கப்பல் ஏதாவது கவுந்திட்டா?"

"கப் Dining table ல்லதான் இருக்கு. ஒரு பல்தான் கவுந்துட்டு! "

"ஐயோ!  கொஞ்சம் வாயத் திறங்க."

"எதுக்கு?  கவுந்த பல்லப் பார்க்கிறதுக்கா?

அது உங்களால் முடியாது."

"கொஞ்சம் வாயைத் திறங்க. முடியுமா? முடியாதா? ங்கிறத நான் பார்த்துக்கிறேன்."

"அது முடியாது ,சார்.  கவுந்தது என் பல்லல்ல."

"அப்புறம் யார் பல்லு? "

"அது தெரியாமதான் கவலையாய் இருக்கிறேன்."

..."கவலைய விடுங்க, சார். யார் பல்லோ விழுந்ததுக்கு நீங்க ஏன் கவலப் படணும்? "

"நீங்க கவலப் படணும்னு நான் சொல்லவே இல்லையே.

நான்தான் கவலப் படணும்."

..."நீங்கன்னா நான்தானே, சார்."

"திரும்பச் சொல்லுங்க."

..."சாரி. கொஞ்சம் விளக்கமா சொல்லி இருக்கணும்....."

"இல்ல. நீங்க சொன்னதுதான் சரி.

சொன்னத அப்படியே திரும்பச் சொல்லுங்க!"

..."நீங்கன்னா நான்தானே."

"Correct. நீங்கன்னா நான்தான்.

நான்னா தீங்கதான்.

Problem solved.  

Thank you for reminding the truth, which should not have been forgotten."

..."எனக்கு ஒண்ணுமே புரியல."

..."ஆனால் எனக்குப்புரிஞ்சிட்டு.

சார் 'நேற்று நான் நெல்லையிலிருந்து பேருந்துல வந்து கொண்டிருந்தபோது

என்னோடு அருகில் அமர்ந்து பயணித்த நண்பர்,

(நான் அவரை 'நண்பர்' என்றது மரியாதை அடிப்படையில்.)

தன் சொந்தக்கதை, சோகக்கதையை எல்லாம்

என்மேல் கொட்டிக் கொண்டிருந்தார்.

அவரை எனக்கு முன்னப் பின்னத் தெரியாது.

ஆனாலும்,

மழை நம் மேல் கொட்டும்போது,

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நனைவது போல,

அவர் சோகம் என்னையும் தொற்றிக்கொண்டது.

சோகம் மாற வேண்டுமென்றால் யாரென்றே தெரியாத அவரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

எல்லோரும் ஒரே குலம்தானே!"

..."நீங்க உண்மையிலேயே பெரிய மனுசன்தான் சார்."

"மனுசன் தமிழ் வார்த்தைதானே, சார்?"

..."அதில என்ன சந்தேகம்? "

"சந்தேகமே இல்லை. அது ஆங்கிலம் கலந்த தமிழ் வார்த்தை.

ஒரு பெரிய செய்தியைச் (Message) சுமந்துவரும் வார்த்தை.

நீங்க மனுசன்தானே?"

..."அதில என்ன சந்தேகம்?"

"நானும்  மனுசன்தானே?"

"நீங்க பேசுவதைப் பார்த்தா..."

"பார்த்தா இல்லை, கேட்டா.

பேசுவதைக் கேட்கதான் முடியும்."

..."சார், உங்கள் முகத்தில் இருந்த சோகம் பறந்து விட்டது.

அதுக்குக் காரணம் என்ன."

"மனுசன்தான். அந்த வார்த்தையைக் கவனிங்க,

ஆங்கிலம் கலந்த தமிழ்,

அல்லது

தமிழ் கலந்த ஆங்கிலம்!

மனுson!

அதாவது  'மனு மகன்'!"

..."Super! அதெப்படி திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டது? "

"அதைப்பற்றி அப்புறம் ஆராய்வோம்.

இப்போ விசயத்துக்கு வருவோம்.

இறை மகன் இயேசு
'மனு மகன்'ஆனார்!

நாமும் தன்னைப்போல ஆக வேண்டும் என்பதுததானே இயேசுவின் விருப்பம்!

அப்படி ஆவதில் முதல் படி எடுத்து வைத்து விட்டோம்.

அதாவது நமக்கு நாமே மனுSon பெயர் சூட்டிக்கொண்டோம்."

..."அடுத்தபடி அவரைப்போல் ஆவதுதான்."

"கரெக்ட். அவரைப்போல் ஆனால்தான்

வாழ்க்கையின் சோகத்தில் மாட்டிக் கொண்டிருப்பவர்களை

வெளியே கொண்டுவர முடியும்.

இயேசு இறைமகன் மனுமகன் ஆனார்.

நாம் எப்படி...?"

..."இறை மகன் ஆக முடியும்னு கேட்கிறீங்களா?

இயேசுவே நம்மை இறைமக்கள் ஆக்கிவிட்டாரே!

அவரைப் பெற்ற தந்தையை நோக்கி,

'விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே'

என்று அழைக்கச் சொன்னாரே!

நம் எல்லோரையும் தனது சகோதரர்கள் ஆக்கிக்கொண்டாரே!

இயேசு பிறப்பினால் இறைமகன்.

நாம் சுவீகாரத்தினால் இறைமக்கள்!

ஆக, நாமும் இறைமக்கள்தான்!

ஆனால் பெயரளவில்  இறைமக்களாக இருந்தால் போதாது.

நமது எண்ணம், சொல், செயலிலும் இறைமக்கள் ஆக வேண்டும்.

இது விசயத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை புனித சின்னப்பர் கூறியுள்ளார்.

..."நீங்கள் பரிசுத்தராவதே கடவுளின் திருவுளம்."
(1தெச.1:3)

அதாவது நாம் எல்லோரும் பரிசுத்தர்களாய் வாழவேண்டும்.

பாவ மாசு அற்ற நிலையே பரிசுத்தம்.

இறைவன் பரிசுத்தர்.

அவரால் பாவம் செய்ய இயலாது.

இறைவனது கட்டளைகளுக்கு எதிராகச் செயல்படுவதுதான் பாவம்.

கடவுள் அவரது சித்தப்படிததான் செயல்படுகிறார்.

அவருக்கு எதிராக அவரே செயல்பட முடியாது.

அவரது சித்தமே அவரது செயலாகிறது.

நாமும் அவரது சித்தப்படி செயல்பட்டால் நாமும் பரிசுத்தர்ளாய் வாழலாம்.

இயேசு தந்தையின் சித்தப்படி செயல்பட்டார்.

இயேசுவின் சித்தமும், பிதாவின் சித்தமும் ஒன்றுதான்.

(ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே ஞானம், ஒரே தேவசுபாவம்)

நமது சித்தமும்  தந்தையின் சித்தமும் ஒரே சித்தம் அல்ல.

நாம் கடவுளின் சித்தத்தை நமது சித்தமாய் ஏற்றுக்கொண்டு,

அதன்படி வாழ்ந்தால் பரிசுத்தர்களாய் வாழ்கிறோம்.

இறைவன் சித்தத்திற்கும் நமது சித்தத்திற்கும் இடையில் இடைவெளி எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ

அவ்வளவுக்கவ்வளவு பரிசுத்தத்தனத்தின் அளவு அதிகமாகும்.

அதாவது இறைவனுனக்கும், நமக்கும் உள்ள உறவின் நெருக்கமே

நமது பரிசுத்தத்தனத்தின் அளவைத் தீர்மானிக்கும்.

இறைவன் அன்புமயமாவர்.

அவரது அன்பு அளவற்றது.

நமக்கும், இறைவனுக்கும் இடையே உள்ள அன்பின் அளவுக்கு ஏற்ப

உறவின் நெருக்கமும் இருக்கும்.

நமது  அன்பின் அளவு கூடும், குறையும்.

அன்பின் அளவுக்கு ஏற்றபடி

இறைவன் முன் நமது அன்புச் செயல்களின் மதிப்பு இருக்கும்.

அன்புச் செயல்களின் மதிப்பு விண்ணகத்தில் நமது பேரின்பத்தின் அளவைத் தீர்மானிக்கும்.

ஆக, நமது ஆன்மீக வாழ்வில் எப்பபோதும் நமது கவனத்தில் இருக்கவேண்டியவை,

1விசுவாசம்.(Faith)

2.இறைவனோடு நமக்குள்ள உறவு.(Relationship)

3.அன்பு (Love).
.
4.பரிசுத்தத்தனம்.(Holiness)

.5. நற்செயல்கள்.(Good works)

விசுவாசம்தான் ஆன்மீக வாழ்வின் அடிப்படை.

சாவான பாவம் இல்லாதிருந்தால் மட்டுமே உறவு இருக்கும்.  அற்பப் பாவங்களும் இல்லாதிருந்தால் உறவு நெருக்கமாகும்.

அன்புதான் இறை உறவு.

அன்பு அதிகமானால் பாவங்கள் குறையும்.

பாவங்கள் குறைய குறைய
பரிசுத்தத்தனம் அதிமாகும்.

அன்பு அதிகமாக அதிகமாக நற்செயல்கள் அதிகமாகும்.

நற்செயல்கள் விண்ணகத்தில் சம்பாவனையை ஈட்டித்தரும்.

மேற்கூறப்பட்டவை எல்லாம் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை."

"ஆக,

நாம் இறைமக்களாய் வாழவேண்டுமென்றால்,

பரசுத்தத்தனம்,

அன்பு,

பிறருக்கு உதவுதல், (நற்செயல்கள்)

ஆகிய இறைப் பண்புகள் நம்மிடமும் இருக்கவேண்டும்.

நான் உடனடியாகச் செய்ய வேண்டிய வேலை.

எனது பேருந்து நண்பரைக்  கண்டுபிடிப்பதுததான்.

வருகிறேன்."

..."வாங்க."

இரை மக்களாய் அல்ல,

இறை மக்களாய் வாழ்வொம்.

லூர்து செல்வம்.

Blessed are the poor in spirit; the kingdom of heaven is theirs. (Matthew. 5:3)

  Blessed are the poor in spirit; the kingdom of heaven is theirs. (Matthew. 5:3)
*************        ************

On the basis of economic condition the human race can be divided into two categories: the rich and the poor.

The rich are those people who are economically well to do with more than enough of money and wealth.

The poor are those people who are either below the poverty line or just above the poverty line, including the middle class ones.

Based on the spiritual condition the human race can be divided into two categories: the rich in spirit and the poor in spirit.

The rich in spirit are those people who want themselves to be economically rich; they may be economically rich or poor.

That means, some people are attached to the wealth they have and this attachment makes them slaves of their wealth.

Some people have no wealth,

but spiritually attached to the wealth they don’t have.

Such economically poor people love wealth

and are ready to resort to any means, moral or immoral, to earn it.  

 

The poor in spirit may be economically rich or poor, but they are detached from the wealth they may or may not have. 

They are attached only to God and things pertaining to God.

We cannot serve two masters.

We can serve either God or money.

If we are attached to money we cannot serve God.

If we are attached to God we will use the money we have in the service of God.

 

Jesus is the owner of the whole universe as He is its creator, but He has no attachment to it.

He chose to be born of a poor Virgin in a stable,

grow as a poor carpenter,

live with no placc to lay His head during His public life,

die on a wooden cross

and be buried in another man's grave.

He uses the universe for us, His human brothers and sisters.

King Herod who tried to kill Him lived in a magnificent palace,

but Jesus chose to be born in a poor stable.

 

He wants His followers to be like Him.

That was why He said, “Blessed are the poor in spirit.”

We may be very rich with plenty of money and property.

But we must be poor in spirit.

We must have no attachment to money.

We must use the money we have both for our welfare and our neighbours’ welfare.

We should share what we have with the have-nots.

One who has no attachment to money will not be worried even if it is lost.

He will say with Job, “God gave me, God has taken it away, praised be His name.”

Such people may be in the world, but they are not of the world.

Jesus has said “It is easier for a camel to pass through a needle’s eye, than for a man to enter the kingdom of God when he is rich”.(Mark.10:25)

It is possible for the rich to enter the kingdom of heaven

if they are poor in spirit, in obedience to the words of Jesus.

“Oh Jesus, we are by our fallen nature attached to the worldly things.

Kindly give us your grace to detach ourselves from this world and live for You and You alone.

Make us poor in spirit so that we may be rich in heaven.”

Lourdu Selvam.

Thursday, August 29, 2019

நான் இப்படிச் சொல்றது பிடியாதவங்க மன்னிக்கணும்.

நான் இப்படிச் சொல்றது பிடியாதவங்க மன்னிக்கணும்.
--------       -------      ----------       ------

என்னடா இவன் ஒண்ணும் சொல்லாமலே 'சொல்றது பிடியாதவங்க மன்னிக்கணும்'னு சொல்றானே'ன்னு  நினைக்கிறீங்களா?

நினையுங்க, தப்பே இல்லை.

உங்களுக்குப் பிடிக்காததைத்தான் சொல்லப்போறேன்.

ஒருவன் வாய் கிழிய 'கத்தி',

'கத்தி' வியாபாரம் பண்ணிக்கிட்டிருந்தான்.

அதன் பயன்பாடு  கருதி நானும் ஒன்று வாங்கினேன்.

வீட்டுக்குக் கொண்டுவந்து மனைவியிடம் கொடுத்தேன்.

புதிய கத்தி.

வாங்கி சமையல் அறையில் வைக்க வேண்டிய இடத்தில் வைத்தாள்.

என் மகன்,  பொடியன், ஓடிவந்தான்.

"என்னடா, விளையாடி முடிச்சாச்சா?"

"இல்லப்பா. நீங்க எதையோ அம்மாட்ட கொடுத்தீங்க, அவங்க உள்ளே கொண்டுபோய் வச்சாங்களே, என்னப்பா அது? "

"அது உனக்குச் சம்பந்தம் இல்லாதது. சமையல் வேலைக்கு உரியது. நீ போய் விளையாடு."

"அது எப்படி எனக்குச் சம்பந்தம் இல்லாமல் போகும்?

எனக்குச் சாப்பாடு இரும்புக் கடையிலிருந்தா வருகிறது?

புதுக் கத்தி, நல்லா தெல்லாங்குச்சி சீவும்."

சொல்லிக் கொண்டே ஓடிவிட்டான்.

மறுநாள் லீவு நாள். நான் ஒரு வேலையா தென்காசிக்குப் போய்விட்டு வந்தால், வீடு பூட்டியிருக்கு.

பக்கத்து வீட்டில் விசாரித்தேன்.

அம்மாவும் பையனும் மருத்துவ மனைக்குப் போயிருக்காங்க.

மருத்துவ மனைக்குப் போனேன்.

பையன் கட்டிலில் கையில் கட்டுடன் படுத்திருந்தான்.

"என்னடி ஆச்சி?"

"நீங்க எதுக்காகப் புதுக்கத்தி வாங்கிட்டு வந்தீங்க? நான் கேட்டேனா? "

"பையனுக்கு என்னாச்சின்னு கேட்டா கத்தியைப்பற்றி பேசற?"

"எனக்குத் தெரியாம சமையலறைக்குள்ள போய் கத்தியை எடுத்திட்டுப்போய் தெல்லாங்குச்சி சீவியிருக்கான்.

கையில் கத்திபட்டு பயங்கர ரத்தம்.

கடவுள் அருளால விரல் போகல. உடனே இங்கே கூட்டிவந்து விட்டேன்."

"இனிமே கத்தியத் தொடமாட்டேம்பா.   மன்னிச்சிடுங்கப்பா."

இப்ப எதுக்கு இந்தச் சொந்தக் கதை, சோகக் கதை எல்லாம்?

அனுபவத்திலிருந்து பாடம் கற்கணுங்க.

கத்தி நல்லதுதான். ரொம்ப நல்லது. அது இல்லாம காய்கறி வெட்டமுடியாது.

காய்கறி வெட்டாம சாம்பார் வைக்கமுடியாது.

ஆனால் நல்லது என்கிறதுக்காகப் பயன்படுத்தத் தெரியாதவங்க கையிலெல்லாம் கத்தியைக் கொடுத்தால் என்னாகும்?

டாக்டர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

பைபிள் இறைவனின் வார்த்தை.

எல்லோரும் அறிந்து,

பின்பற்றி,

வாழ்ந்து,

மீட்புப் பெறுவதற்காக

இறைவன் தந்த வார்த்தை.

வார்த்தையை அறியவேண்டும்.

அறிந்ததை நமது வாழ்வாக்க வேண்டும்.

அதன் மூலமாக மீட்புப் பெறவேண்டும்.

ஆனால் பைபிளை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாதவர்களெல்லாம்

அதைக் கையில்   எடுத்ததன் விளைவுகளைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

சிலர்

பைபிளை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு,

தாய்த்திருச்சபையை விட்டு பிரிந்து சென்று,
,
பைபிள் வசனங்களுக்கு அவரவர் இஸ்டப்படி அர்த்தம் கொடுத்துக்கொண்டு,

சமாதானத்தின் தேவனையே சண்டைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோமே!

தங்கள் எதிர் எதிரான கருத்துக்களுக்கு ஆதரவாக

ஒரே பைபிளைப் பயன்டுத்திக் கொண்டிருப்பது வேடிக்கையாக
இல்லை!

நாம் =  கத்தோலிக்க திருச்சபை.

அவர்கள் =  பிரிந்து சென்றோரில் சிலர்.

பைபிளை ஆதாரமாக வைத்துக்கொண்டு

1.நாம் இறை மகன் நித்தியர்னு சொல்லுகிறோம்.

அவர்கள் மகனுக்குத் துவக்கம் உண்டு என்கிறார்கள்.

2. நாம் கன்னி மரியாளை இறைவனின் தாய் என்கிறோம்.

அவர்கள் இல்லை என்கிறார்கள்

3.நாம் மாதாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

அவர்கள் மாதா பெயரைச் சொன்னாலே  மூஞ்சைத் தூக்குககிறாகள்.

4. நாம் திவ்ய நற்கருணையில் உண்மையிலேயே இயேசு இருக்கிறார் என்கிறோம்.

அவர்கள் அது  வெறும் அடையாளம என்கிறார்கள்.

5.நாம் பாவசங்கீர்த்தனம் வேண்டும் என்கிறோம்.

அவர்கள் கடவுளோடு நேரடியாகவே பேசிக்கொள்வோம் என்கிறார்கள்.

6.நாம் உத்தரிக்கிற ஸ்தலத்தை ஏற்றுக்கொள்கிறோம்.

அவர்கள் இல்லை என்கிறார்கள்.

பட்டியலை நீட்டினால் உலகத்தின் சுற்றளவைத்தாண்டும்.

பிரிவினை   சபையினரே

ஒரே பைபிளை அவர்கள் விருப்பத்திற்கு மொழி பெயர்த்து  வைத்துக் கொண்டு,

சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு விசயத்தில் மட்டும் ஒற்றுமையாய் இருக்கிறார்கள்.

காணிக்கை வசூலிப்பதில்!

அவர்கள் பைபிளும் கையுமாக அலைவதைப் பார்த்து,

நம்மவர்களும் பைபிளும் கையுமாக திவ்யபலி பூசைக்கு வருபவர்கள்தான் நல்ல கிறிஸ்தவர்கள் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதைச் சொல்லும்போது அநேகருக்கு என் மேல் கோபம் வரும்.

அதனால்தான் முதலிலேயே
"நான் இப்படிச் சொல்றது பிடியாதவங்க மன்னிக்கணும்."
என்று சொல்லி ஆரம்பிச்சேன்.

'கோவிலுக்கு பைபிள் கொண்டுவரக்கூடாது' என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை.

ஆனால் திவ்ய பலி பூசையில் நமது பங்கு என்ன என்று யார் வேண்டுமானாலும் கூறலாம்.

திவ்ய பலி பூசையை நாம் 'குருவோடு சேர்ந்து ' கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

அதாவது திருப்பலி நிகழ்ச்சிகளில் நாம் குருவோடு ஒன்றித்திருக்க வேண்டும்.

குரு செய்யும் ஒவ்வொரு செயலிலும் நமது கண்ணும் கருத்தும் ஒன்றிக்க வேண்டும்.

அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் நமது காதும்,
கருத்தும் ஒன்றிக்க வேண்டும்.

அவர் பைபிளிலிருந்து வாசிக்கும்போது நாம் கூர்ந்து கேட்கவேண்டும்.

அவர் நற்செய்தியை பிரசங்கத்தில் விளக்கும்போது காது கொடுத்து கேட்கவேண்டும்.

திருப்பலியின்போது குருவானவர்தான் கிறிஸ்து.

கிறிஸ்துவோடு நாம் ஒன்றித்திருக்க வேண்டும்

பைபிள் என்ற புத்தகத்தில் இருப்பது இறைவார்த்தையின் அடையாளங்கள்.

ஆனால் கிறிஸ்துவின் வாயிலிருந்து வருவது உண்மையான இறை வார்த்தை.

குருவானவரில் கிறிஸ்துவைப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே இது புரியும்.

'இது என் சரீரம்.'

'இது என் இரத்தம்.'

இவ்வசீகர வார்த்தைகளில் 'என்' எனப்படுவது யார்?

குருவானவரா?

இல்லை.

அவருக்குள் இருந்து செயல்படும் கிறிஸ்து!

கிறிஸ்து பேசும் இடத்தில் புத்தகத்துக்கு என்ன வேலை?

சிலர் பூசை நேரத்தில் பீடத்தில் கண்வைக்காமல்,

அதாவது குருவோடு ஒன்றிக்காமல்

கையிலுள்ள பைபிளை புரட்டிக் கொண்டிருப்பார்கள்.

அவர்கள் பலியோடு எப்படி ஒன்றிக்க முடியும்?

பூசைக்கு வெளியே எங்கு வேண்டுமென்றாலும் பைபிளைக் கையில் வைத்திருக்கலாம், வாசிக்கலாம்.

ஆளுக்கொரு பைபிள் வைத்திருக்கலாம், நல்லது.

ஆனால் அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்தத் தெரியாமல் பயன்படுத்தினால்

பொடியன் கையில் கிடைத்த கத்தி மாதிரிதான்.

நமது குருக்கள் வருடக்கணக்காய்க் குருமடத்தில் பைபிளை வாசிக்கவும், பொருள் கொள்ளவும் பயிற்சி பெறுகிறார்கள்.

நாம் எழுத வாசிக்கத் தெரியும் ஒரே தைரியத்தில்

பைபிளை வாசித்து,

அதற்கு நமக்குத் தோன்றுகிற பொருளைக் கொடுத்து

அதன்படி வாழ்ந்தால்

விளைவு எப்படி  இருக்கும்?

பொடியன் கத்தியால் பட்ட பாடுபோல் இருக்கும்!

நண்பர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை பூசைக்குப் பிந்தி வந்தார்.

கடைசி ஆசீர்வாதத்திற்கு உள்ளே வந்து,

'சென்று வாருங்கள்' என்று சொன்னவுடனே வெளியே வந்துவிட்டார்.

"ஏன் பூசைக்கு லேட்? அப்படி என்ன அவசர வேலை? "ன்னு கேட்டேன்.

"இன்று காலையில் வாசித்த பைபிள் பகுதியிலிருந்து ஒரு உண்மையைத் தெரிந்து கொண்டேன்.

ஒரு திராட்சைத் தோட்ட

முதலாளி  வேலைக்கு வந்தவர்களுக்கு

கடைசியானோர் முதல்
முதலானோர் வரை ஒரே சம்பளம் கொடுத்த உவமையை நீ வாசித்திருக்கிறாயா?

நான் காலையில் வாசித்தேன்.

அதன்டி நம் இருவருக்கும் ஒரே பலன்தான்.

அது மட்டுமல்ல நான்தான் முதலானவன்!

"கடைசியானோர் முதலாவர், முதலானோர் கடைசியாவர்"

என்று ஆண்டவரே கூறியிருக்கிறாரே! "

இவனைப் பொறுத்தமட்டில் பைபிள் பொடியன் கையில் கிடைத்த கத்தி!

ஒரு பையனிடம்,

"தியான முடிவில் பாவசங்கீத்தனம் செய்தாயா?" என்று கேட்டேன்.

அவன்,

"இயேசு பாவசங்கீத்தனம் கேட்டதா பைபிளில் இருக்கா சார்?

இராயப்பர் இயேசுவை மறுதலித்து எவ்வளவு பெரிய பாவம் செய்தார்!

அழுததோடு சரி. பாவசங்கீத்தனம் செய்ததா பைபிளில் இருக்கா சார்?

நானும் அழுதேன். அது போதும்.

பைபிள்தான் இறைவார்த்தை, அதில இல்லாதத ஏன் சார் செய்யச் சொல்றாங்க? "

இவனைப் பொறுத்தமட்டிலும் பைபிள் பொடியன் கையில் கிடைத்த கத்தி!

என்னுடைய அம்மாவுக்கு ஆனா ஆவன்னா தெரியாது.

பைபிளத் தொட்டுப்பார்த்ததுகூட கிடையாது.

வாரத்திற்கு ஒரு முறை ஞாயிற்றுக் கிழமை பாவசங்கீத்தனம் செய்வாங்க.

இப்போதுள்ள பைபிள் கிறிஸ்தவர்களை விட

அந்தக்காலத்து படிப்பறிவில்லா கிறிஸ்தவர்கள்

எவ்வளவோ மேல்!

பைபிள்  வைத்திருப்பவர்களுக்கு அதைச் சரியாக வாசிக்கப் பயிற்சி அளிக்க வேண்டும்.

மக்கள் ஒழுங்காகப் பூசைக்கு வந்து

பூசையில் வாசிக்கப்படுன்ற வாசகங்களையும், 

அவற்றுக்குச் சாமியார் பிரசங்கத்தில் கொடுக்கிற விளக்கங்களையும்

ஒழுங்காகக் கவனித்துக் கேட்டாலே நல்ல பயிற்சி கிடைக்கும்.

மேலும் பைபிளைக் கொடுக்கும்போது

அதற்கான விளக்க நூல்களையும் சேர்த்துக் கொடுத்தால்

வாசிப்பவர்கள் உண்மையான பொருளைப் புரிந்துகொள்ள ஏதுவாயிருக்கும்.

பொடியன் கையில் அகப்பட்ட கத்தியைப்போல்

பைபிள் ஆகாமல் பார்த்துக்கொள்வது சம்பந்தப்பட்டவர்களின் கடமை.

திரும்பவும் சொல்கிறேன்,

நான் இப்படிச் சொல்றது பிடியாதவங்க மன்னிக்கணும்!

லூர்து செல்வம்.

Tuesday, August 27, 2019

Grace and life.

         Grace and life.
         *****     ******
Grace is a supernatural gift of God,

which enables us to live

in His loving presence,

carrying out His will,

in our thoughts, words and actions.

We reveal that God is present in us by our words and actions.

By our earnest prayer to God,

who is present in us,

we earn God’s grace abundantly

and

the grace earned reveals itself in our good and moral life,

which is lived for God, the source of the grace.

God’s grace is the life giving force of our moral life.

If Our Lady could lead a dedicated life without even a stain of sin in her

it was because she was full of grace.

God’s grace helps us to lead a good moral life

and

our good moral life earns more and more grace from God.

 By moral life I mean a life led as per the God given moral laws.

Our life is the visible expression of the invisible grace in us.

God’s grace in us has its effect on our thoughts, words and actions. 

Even those who don’t worry about God’s grace think, speak and act.

But the thoughts, words and actions of those

who are activated by God’s grace

are different from those who live without grace.

The former’s thoughts, words and actions reflect God,

where as the latter’s reflect themselves.

Our Lady, who was full of grace thought, spoke and acted according to the will of God.

Of course we are not full of grace as Our Lady was.

That was a special gift given to her as His Mother.

Our life will reflect God in proportion to the amount of God’s grace in us.

If the water tank is dirty the water it contains also will be dirty.

To store clean water the tank must be cleaned first.

Our mind decides our behaviour.

As we think so we speak and act.

A clean life requires a clean mind

because our mind is the birth place of our thoughts,

which express themselves in our words and actions.

Only by the grace of God we can keep our mind clean.

Whatever we pray for or for not,

we should pray for God’s grace to keep us in touch with Him.

 
'Sanctifying grace’.
---------------------------

The grace that maintains our relationship with God is called ‘sanctifying grace’.

Only this grace can keep our soul pure and make our actions meritorious before God.

 Only if we maintain our relationship with God throughout our life,

our death will serve as a gateway to heaven.

If we die without ‘sanctifying grace’,

we will have to live for ever without beatific vision.

‘Sanctifying grace’ is a free gift of God granted us at baptism.

We will lose this gift when we commit a mortal sin.

But we can get it back by true contrition and confession.

We must be careful to maintain our relationship with God

by remaining in the state of ‘sanctifying grace’ all our life.

Only prayer which keeps us in the presence of God can help us to keep this free gift of God safe.

 

Actual grace.
------------

There is another grace called ‘actual grace’

which is also given free to do a good act successfully as per the will of God.

When we want to buy something, what do we do?

Do we not ask our father to give us sufficient money to buy it?

In the same way when we begin to do ‘something good’

we must pray to our Heavenly Father

to help us with sufficient actual grace

to do it successfully as per His Will.

 

In short, grace is a supernatural gift of God given to us free to help us in our spiritual life.

It is a food to our spiritual life.

Lourdu Selvam.

Monday, August 26, 2019

எது பெரிது? பொன்னா? பொன்னைப் பரிசுத்தமாக்கும் ஆலயமா?"(மத்.23:17)

"எது பெரிது? பொன்னா? பொன்னைப் பரிசுத்தமாக்கும் ஆலயமா?"(மத்.23:17)
......................................................

..."ஹலோ! வந்த இடத்துக்குப் போகாம இங்கேயே நின்னுட்டீங்க!"

"இங்க கொஞ்சம் வாங்க."

..."உங்களுக்குக் கம்பெனி கொடுக்கவா?

என்ன விசயம்?"

"இந்தச் சுவரைக் கொஞ்சம் பாருங்க."

..."கோவில் கட்ட நிதி கொடுத்து உதவிய நன்கொடையாளர்கள் பெயர்கள்.

அதைத்தான் தலைப்பில எழுதியிருக்கிறார்களே.

வாசிக்கத் தெரியலியா?"

"தெரிஞ்சதினாலதான் கேட்கிறேன்."

..."இன்னும் ஒண்ணும் கேட்கலிய."

"சாரி. கேள்வி மனசுக்குள்ள இருக்கு."

..."அங்கேயே இருக்கட்டும். கோவிலுக்குள்ளபோய் யாரைப் பார்க்க வந்தோமோ அவரைப் பார்த்துப் பேசிட்டு,

அப்புறம் வெளியே வந்து வேறு விசயம் இருந்தா பேசுவோம். வாங்க."
*             .*             *             *

..."வாங்க, உட்காருங்க.

ஆண்டவர்ட்ட ரொம்ப சீரியசா ஏதோ பேசிக் கொண்டிருந்தது மாதிரி தெரிந்தது."

"ரொம்ப சீரியசாதான் பேசிக்கொண்டிருந்தேன்.

என் மனதுக்குள்ளே இருந்த கேள்வியை ஆண்டவரிடம் கேட்டேன்.

அவரும் ரொம்ப சீரியசாதான் பதில் சொன்னார்."

..."நீ என்ன கேட்ட? ஆண்டவர் என்ன சொன்னார்? "

"நான் சுவரிலே பார்த்த காட்சியைக் குறித்து ஆண்டவரிடம் கேட்டேன்.

அவர் நான் சமீபத்தில் வாசித்த நற்செய்தி வாசகத்தை ஞாபகப்படுத்தினார்."

..."என்ன வசனம்?''

" 'மூடரே, குருடரே,

எது பெரிது?

பொன்னா?

பொன்னைப் பரிசுத்தமாக்கும் ஆலயமா?'

இதுதான் அந்த வசனம்.

அதைப்பற்றிக் கொஞ்சம் பேசலாமா? "

..."கொஞ்சம் என்ன, நிறையவே பேசலாம்.

இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என்று ஆண்டவரே கூறியிருக்கிறார்.

அதாவது

இவ்வுலக செல்வங்களுக்கும்,

கடவுளுக்கும்

ஊழியம் செய்ய முடியாது."

"இவ்வுலக செல்வங்களை நமக்கு அளித்தவர் கடவுள்தானே."

..."நிச்சயமாக! 

இவ்வுலக செல்வங்கள்

இறைவனுக்கு ஊழியம் செய்யப்

பயன்படுத்தப்படுவதற்காக

நம்மிடம் தரப்பட்டுள்ளன.

அவைகளுக்கு ஊழியம் செய்ய இறைவனைப் பயன்படுத்தக்கூடாது."

"இறை ஊழியத்தில் பணத்தை எப்படிப் பயன்படுத்துவது? "

..."கடவுள் தந்த இரண்டு கட்டளைகளிலே,

(அதாவது,இறைவனை நேசி,
உன் அயலானை நேசி,)

இறை ஊழியம் அடங்கி இருக்கிறது.

தனிப்பட்ட முறையில்

இறைவனை

முழு இருதயத்தோடு நேசிக்கவும்,

அவரை ஆராதிக்கவும்

பணம் தேவை இல்லை.

சமூகமாக வழிபடத்தான் ஆலயம் தேவைப்படுகிறது.

ஆலயம் கட்ட பணம் 'பயன்படுகிறது'.

அயலானை நேசிப்பதும், அவனுக்கு சேவை செய்வதும் இறை ஊழியம்தான்.

நேசிக்கப் பணம் தேவை இல்லை.

சேவை செய்யப் பணம் பயன்படுகிறது."

"பணத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக

பணத்தைச் சம்பாதித்து, சேமித்து, அதில் இன்பம் காபதற்காக

மற்றவர்களைப் பயன்படுத்தும்போது

பணத்திற்கு ஊழியம் செய்கிறோம்.

அதாவது வாழ்வதற்குப் பணத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக,

பணத்திற்காக வாழும்போது நாம் பணத்திற்கு அடிமையாகிறோம்.

அவைகளுக்கு ஊழியம் செய்ய இறைவனைப் பயன்படுத்தக்கூடாது."

"இறைவனைப் பயன்படுத்துவது பற்றி உங்கள் கருத்து?"

..."இறைவனையும், பணத்தையும் பற்றிப் பேசும்போது வார்த்தைகளை மிகக் கவனமாகக் கையாளவேண்டும்.

ஏனெனில் இறைவனுக்கும் ஊழியம் பண்ணுவோரில் ,

நம்மைபோல சாதாரணமானவர்ளும்,

இறை  ஊழியத்திற்காகத் தம் வாழ்வையே முற்றிலும் அர்ப்பணித்தவர்களும்

அடங்குவர்

நான் கூறப்போவது நபர்களைப்பற்றி அல்ல, பயன்பாடு பற்றி.

நமக்குச் சுகமில்லை என்று வைத்துக்கொள்வோம்.

நற்சுகம் பெற இறைவனை வேண்டுகிறோம்.

நமக்கு நேர்ச்சைகள் செய்யும் பழக்கம் இருக்கிறது.

அதன்படி,

'இறைவா, எங்களுக்கு நற்சுகம் தாருங்கள்,

நற்சுகம் கிடைத்தவுடன் நமது ஆலயத் திருப்பணிக்கு ஆயிரம் ரூபாய் நன்கொடையாகக் கொடுத்துவிடுகிறோம்

என்று வேண்டுகிறோம்,

அதாவது ஆயிரம் ரூபாய் நேர்ச்சை.

இங்கு இறைவனுக்கு முக்கித்துவம் கொடுக்கிறோமா,

அல்லது

பணத்திற்கு  முக்கித்துவம் கொடுக்கிறோமா

என்பது நமது கண்ணோக்கில் அடங்கி இருக்கிறது.

இறைவன் செய்யும் உதவிக்கு நன்றியாகக் காணிக்கை என்று பணத்தை நோக்கினால் இறைவனுக்கு முக்கியத்துவம்.

அதாவது, இறைவன் நம் மன்றாட்டைக் கேட்பார் என்று விசுவசித்தால்

இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

''நாம் ஆயிரம் ரூபாய் நேர்ந்திருக்கிறோம் ஆகவே  நம் மன்றாட்டைக் கேட்பார்'

என்று நினைத்தால் நான் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

உதவிக்கு காணிக்கை.

காணிக்கைக்காக உதவி இல்லை.

நன்றி?  

என்ன நேர்ந்தாலும் நன்றி!

ஆலயம் எழுப்ப நன்கொடை?

'நன்கொடை' என்பதை விட 'காணிக்கை' என்பதே பொறுத்தமான வார்த்தை.

இறைவனுக்கு நன்கொடை கொடுக்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது?

இல்லாத நிதியை உருவாக்க மனிதருக்குக் கொடுப்பது நன்கொடை.

பக்தர்கள் இறைப்பணிக்காக செலுத்துவது (கொடுப்பது அல்ல) காணிக்கை.

இறைப்பணிக்காக காணிக்கை செலுத்துவது சுய விளம்பரத்துக்காக அல்ல.

நாம் விளம்பத்தை விரும்பினால் அது காணிக்கை அல்ல.

வியாபாரம்!

காசு கொடுத்து விளம்பரதை வாங்குவது!"

"அப்போ கோவில் சுவரில் எழுதியிருக்கும் நன்கொடைப் பட்டியல்?"

"கொடுத்தவர்களின் நோக்கத்தை வைத்துதான் அவர்களின் நிலைமையைத் தீர்மானிக்கலாம்.

சுவரில் எழுதியவர்களின் நிலைமையை அவர்களின் நோக்கத்தை வைத்துதான் தீர்மானிக்கலாம்.

நம்மவர்களிடையே ஒரு வேண்டாத பழக்கம் இருக்கிறது.

ஒரு திருத்தலத்தின் பெருமையை அங்கு வரக்கூடிய மக்களின் எண்ணிக்கையை வைத்தும்

பிரியக்கூடிய காணிக்கையை
வைத்தும் தீர்மானிப்பது.

இது திருத்தல புனிதரைவிட பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகிவிடாதா?

உண்மையில் பயன் பெருவது திருப்பயணிகள்.

அது அவர்களின் விசுவாசத்தின் அளவைப் பொறுத்தது.

அது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

நாம் அதிகக் காணிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் 

கடவுளுக்கு முன்னால் பணத்தை வைக்கிறோம்.

'எது பெரிது?

பொன்னா?

பொன்னைப் பரிசுத்தமாக்கும் ஆலயமா?'

என்று இயேசு

மறைநூல் அறிஞரையும், பரிசேயரையும்

பார்த்து கேட்டபோது,

காணிக்கையை விட

ஆலயத்துக்குதான்

அதாவது

ஆலயத்தில் உறையும் கடவுளுக்குதான்

முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்
என்கிறார்.

மறைநூல் அறிஞரும், பரிசேயரும்
ஆலயத்தைவிட அங்கிருந்த பொன்னுக்கே (Gold)  அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

இறைவன் காணிக்கையின் அளவைவிட பக்தனின் உள்ளத்தையே பார்க்கிறார்.

"இயேசு சீடர்களைத் தம்மிடம் அழைத்து, "காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட எல்லாரிலும் இந்த ஏழைக் கைம்பெண்ணே அதிகம் போட்டாள் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.


44 ஏனேனில், மற்ற எல்லாரும் தங்களிடம் மிகுதியாயிருந்த பணத்திலிருந்து போட்டனர். இவளோ தன் வறுமையிலும் தான் வைத்திருந்த யாவும், தன் பிழைப்புக்கானது முழுவதுமே போட்டுவிட்டாள்" என்றார்.'
(மாற்கு.12:43, 44)"

காணிக்கையின் அளவு சிறியது

(இரண்டு செப்புக் காசுகள்)

உள்ளம் பெரியது. ( பிழைப்புக்கானது முழுவதுமே போட்டுவிட்டாள்)"

"ஆகவே ஒருவன் தரும் காணிக்கையின் அளவை வைத்து அவனது பக்தியின் அளவை அளவிடக்கூடாது."

..."மொத்தத்தில் யாரையும் அளவிடக்கூடாது.

Who are we to judge others?"

லூர்து செல்வம்.