Tuesday, December 31, 2019

Hi all! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Hi all!  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
*   *    *  *    *   *   *    *   *   *    *  *

"ஹலோ! புத்தாண்டு வாழ்த்துக்கள்!"

"யாருக்கு? எனக்கா?"

"ஆமாங்க. நீங்கதான என் முன்னால நிற்கிறீங்க!"

"அது சரி. ஆனா புத்தாண்டு பிறக்கலிய."

"ஹலோ! 19 போய்ட்டுங்க.
20 வந்தாச்சி.

நீங்க எந்த உலகத்தில இருக்கீங்க?"

"நான் நீங்க இருக்கிற அதே உலகத்திலதான் இருக்கிறேன்.

19 எங்கே போனது? 20 எங்கே வந்தது?"

"Something is wrong. "

" No,  Everything is wrong."

"புரியவில்லை."

..."அப்போ புரியாமல்தான் பேசிக்கிட்டிருக்கீங்களா?"

"நீங்க சொல்றது புரியல."

..."19, 20, இரண்டும் என்னது?."

"வருடங்கள், அதாவது காலம்."


..."அதாவது காலம் மாறிப்போச்சின்னு சொல்றீங்க."

"ஆமா."

..."இங்கே பாருங்க. காலம் ஒவ்வொரு வினாடியும் மாறிக்கிட்டுதான் இருக்கு.

 ஆனால் மாற வேண்டியது நாம்.

காலம் மட்டும் மாறி நமக்கு என்ன பிரயோஜனம்?

 நாம் மாறணுங்க."

"இப்போ புரியுது.

அதாவது, நமது குணம் மாற வேண்டும். அது உண்மைதான். 

காலம் மாறிப்போச்சு 

ஆனால் மனிதன் மாறவே இல்லை."

..."அப்படி சொல்வதும் தப்பு.

 ஏனெனில் மனிதன் மாறிக் கொண்டுதான் இருக்கிறான்.

 ஆனால் எப்படி மாற 
 வேண்டுமோ அப்படி 
மாறவில்லை."

"எப்படி மாறவேண்டும்?"

..."இயேசு எதற்காக மனிதனாகப் பிறந்தார்? "

"நம்மை பாவத்திலிருந்து மீட்க.

நம்மை நல்லவர்களாக மாற்ற.

நம்மை இரட்சிக்க,

நமது பாவங்களுக்குப்  பரிகாரம் செய்ய.

 அதாவது  நம்மை  பாவத்தில் இருந்து மீட்டு

 புண்ணியவான்கள் ஆக மாற்ற. 

இவ்வுலகில் பாவம் செய்யாமல் நம்மை காத்து

 இறுதியில் நம்மை மோட்ச பேரின்ப வாழ்விற்கு அழைத்துச்செல்ல."

..."கரெக்ட். 

ஆனால் உலகத்துல பாவம் குறைந்திருக்கிறதா?.

 கொஞ்சம் யோசிச்சு பாருங்க."

"குறையவா? நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது."

..."சரி, உலகத்தை  விட்டுவிடுங்க,


 நம்மை மட்டும் பார்ப்போம்.

 நாம் எப்படி?  பாவத்தை விட்டு விட்டோமா?  நமது குணத்தை மாற்றி இருக்கிறோமா?

 நல்லவங்களா மாறி இருக்கிறோமா?"

"அதுக்கு நாம் ஒவ்வொருவரும் நமது ஆன்மாவைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்."

..."நாம் புத்தாண்டில்,

நமது உடலை மூட புதிய டிரஸ் எடுப்பதிலேயே குறியாக இருக்கிறோம்.

 ஆனால் நமது ஆன்மாவுக்கு புதிய உடை வாங்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை.

பாவமாகிய பழைய உடையை கழற்றி எறிந்துவிட்டு

 புண்ணியமாகிய புது உடையை அணியவேண்டும்.

நாம்  தங்கும் அறையை   தூசி தட்டி, பெறுக்கி சுத்தம் செய்கிறோம். 

நமது வீட்டையும் வெள்ளையடித்து,   அல்லது கலர் அடித்து  அலங்காரமாக வைத்துக் கொள்கிறோம்.

 ஆனால் நமது ஆன்மாவில் படிந்துள்ள குற்றம் குறைகள் ஆகிய தூசியை தட்டி விட்டு.

 அதைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோமா? 

 இல்லையே.

 வெளிப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டு

 உட்புறத்தை நாறவிட்டால்

 அதுவே வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறை. 

 புத்தாண்டில் மட்டுமல்ல, எப்போதுமே 

நமது ஆன்மாவைப் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை.

 நமது உடலைப்பற்றி மட்டும்தான் சிந்தித்துக்கொண்டு இருக்கிறோம்.

நாம் புதிய மனிதர்களாக மாற வேண்டும்."

" இதை பற்றி எல்லாம்  நினைக்காமலே புத்தாண்டு பிறந்து விட்டது.

 பரவாயில்லை காலம் கடந்து போகவில்லை.

 இன்றே நன்கு ஆன்ம பரிசோதனை செய்து

 நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து 

நமது ஆன்மாவை சுத்தப்படுத்தி 

புதிய ஆண்டில் நல்ல

 மனிதர்களாக வாழ ஆரம்பிப்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வருகிறேன்,

பழைய ஆண்டில் சந்திப்போம்."

..."என்னது பழைய ஆண்டிலா?"

" ஆமா.
 இன்றைக்கு புத்தாண்டு.

 நாளைக்குப்  பழைய ஆண்டு தானே!"

..."அதுவும் சரிதான்.

 உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.!"

லூர்து செல்வம் 







Monday, December 30, 2019

ஒரே குடும்பம்.


ஒரே குடும்பம்.
*   *    *  *    *   *   *    *   *   *    *  *

என்னுடைய friend ஒருத்தன் அடிக்கடி சொல்கிறான்:

"என்னுடைய அப்பாதான்  என்னைப்  பெற்றவர்.

நான் அவரை நேசிக்கிறேன்.

எனக்கு அவர் மட்டும்தான் வேணும்.

அவரோடு மட்டுமே பேசுவேன்

உறவினர் யாரும் எனக்குத் தேவை இல்லை.

அப்பா தவிர வேறு யாரோடும் பேசமாட்டேன்.

அவர் என்னுடைய மனதில் இருக்கிறார்.


அது போதும்.

அவருடைய
 புகைப்படத்தைக் கூட  நான் வைத்துக் கொள்வதில்லை.


நான் சொல்கிறேன்:

என்னுடைய அப்பா அம்மாதான் என்னைப்  பெற்று வளர்த்தார்கள்.

நான் அவர்களை நேசிக்கிறேன்.

அவர்கள் என்னிடம் கூறினார்கள்,

"மகனே, எங்களை நேசி.
.
அதோடு நமது உறவினர்கள் அனைவரையும் நேசி. 

அவர்கள் எல்லோரும் நமது இரத்தம்தான்.

நமது வீட்டிற்கு அவர்களும் வரவேண்டும்."

எனது பெற்றோர் விருப்பப்படி நான் உறவினர் அனைவரையும் நேசிக்கிறேன்.

அவர்கள் எனக்கு உதவுகிறார்கள்,

நான் அவர்களுக்கு உதவுகிறேன்.  


யார் அந்த நண்பன் என்று கேட்டு விடாதீர்கள்.

இது ஒரு analogy.

உண்மையை விளக்க கூறப்படும் ஒரு ஒப்புமை.


இயேசு ஒரே திருச்சபையை மட்டும் நிறுவினார்.

அதை இராயப்பர் என்னும் பாறைமீது நிறுவினார்.

பைபிளை ஒழுங்காக வாசிப்பவர்களுக்கு இது புரியும்.

அவர் என்னை மட்டும் அன்பு செய்யுங்கள் என்று கூறவில்லை.

"உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு உள்ளத்தோடும் உன் முழு ஆன்மாவோடும் உன் முழு மனத்தோடும் உன் முழு வலிமையோடும் அன்பு செய்வாயாக" என்பது முதல் கட்டளை.

31 "உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் 
அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக" என்பது இரண்டாம் கட்டளை. இவற்றைவிடப் பெரிய கட்டளை வேறில்லை" என்றார்.

நாம் கடவுளை நேசிக்க வேண்டும்.

அவரால் படைக்கப்பட்ட அனைத்து மக்களையும் நேசிக்க வேண்டும்.

எல்லோரும் போகவேண்டியது ஒரே விண்வீட்டிற்கு தான்.

இறைவனில் மனிதர் அனைவரும் உடன்பிறந்தோரே.

இன்று மோட்சத்தில் இருப்பவர்களும்,

உத்தரிக்கிற ஸ்தலத்தில் '
இருப்பவர்களும்

நமது உடன்பிறப்புக்களே.

எல்லோரும் சேர்ந்து இறைவனில் ஒரே குடும்பம்.

எல்லோருக்கும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள முழு உரிமை உண்டு.

" இது பைபிளில் எங்கு இருக்கிறது?" என்று யாராவது கேட்டால்,

"ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள  உரிமை இல்லை" என்று பைபிளில் எங்கு இருக்கிறது?"

என்றுதான் கேட்க வேண்டியிருக்கும்.

கொள்கை அடிப்படையில் பிரிந்து கிடக்கும் 38000 பிரிவினரும் ஒரே பைபிளை வைத்துதான் போதித்துக் கொண்டிருககிறார்கள்.

அவரவர்  அவரவர் இஸ்டப்படி பைபிளை மொழிபெயர்த்துக் கொண்டு 

இஸ்டம் போல் விளக்கம் கொடுத்துக்  கொண்டிருக்கிறார்கள்.

நம்மைப் பொறுத்த மட்டில் இராயப்பர் என்னும் பாறைமேல் கட்டப்பட்ட திருச்சபை கொடுக்கும் விளக்கமே உண்மையான விளக்கம்.

'விண்ணக வாசிகளும், நாமும் ஒரே குடும்பத்தினர் என்பதால் நாம் அவர்களோடு பேசலாம், 

அதாவது,

அவர்களை நோக்கி செபிக்கலாம்.

அவர்களுக்கு விழா எடுக்கலாம்.

அவர்கள் நமக்காக ஆண்டவரிடம் பேசலாம்.

ஆண்டவரின் தாய் நமது தாய்.

புனிதர்கள் அனைவரும் நமது சகோதர சகோதரிகள்.

 அம்மாவுடனும் , சகோதரரிடமும் பேசுவது தப்பு என்று பேசுவவர்கள் 

இயேசுவின் கட்டளைகளை அவமதிக்கிறார்கள்.

எல்லோரையும் நேசிக்கச் சொன்னவர் பேசாதிருக்கச் சொல்லவில்லை.

மரியாளை அவமதிக்கிறவர்கள் மரியாளின் மைந்தனை அவமதிக்கிறார்கள்.

பைபிள் மட்டும் போதும் என்பவர்களிடம்  ஒரே ஒரு கேள்வி, 

 பைபிள் மட்டும் போதும் என்றால்  சபை எதற்கு? 

அதை மட்டும் வைத்துக் 
கொண்டு நாமாகவே  வாழலாமே!

பைபிள் மட்டும் போதும்  என்று சொல்லிக்கொண்டு இன்றைய தேதியில் 38000  சபைகள் இருக்கின்றன.

ஒரே பைபிளுக்கு 38000 விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன.

இறைவார்த்தையை அவரவர் விளையாடும் கைப்பொம்மை போல் ஆக்கிவிட்டார்கள்.


எங்களைப் பொறுத்த மட்டில் பைபிள் கட்டாயம் வேண்டும்,

அதற்கு  விளக்கம் சொல்ல 'இயேசுவால் இராயப்பர் என்ற பாறைமீது கட்டப்பட்ட' ஒரே திருச்சபை'  வேண்டும்.

அந்த திருச்சபை இயேசுவின் காலம் தொட்டு,

அவரால் நியமிக்கப்பட்ட அப்போஸ்தலர்கள் வழியாக

தொடர்ந்து இயங்கி வரும் சபையாக இருக்கவேண்டும்.

இயேசு திருச்சபையைக் கட்டியது இராயப்பர் என்ற பாறைமேல்.

அவர்தான் திருச்சபையின் உலகத் தலைவர்.

இராயப்பரின் வாரிசான பாப்பரசர்தான் திருச்சபையின் இன்றைய தலைவர்.

அவரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இயேசுவின் நியமன அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

அதாவது இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

தந்தையின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாமல் பிரிந்து சென்றவன் தந்தையை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதேபோல் இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இயேசுவையே ஏற்றுக்
கொள்ளவில்லை.

இயேசுவால் நிறுவப்பட்ட ஒரே திருச்சபை வழியாகத்தான் இரட்சண்யம்.

திருச்சபை வழியாகத்தான் பாவமன்னிப்பு.

திருச்சபை வழியாகத்தான் திருவிருந்து.

விண்ணகம் செல்லும்போது இயேசுவோடு 

அவரால் இரட்சிக்கப்பட்ட அனைவரும் 

ஒரே குடும்பமாய் 

ஒருவரோடு ஒருவர் பேசி

 மகிழ்ச்சியாய் வாழ வேண்டும்.

எல்லா புனிதர்களும் நமது உறவினர்கள்.

இயேசுவின் தாய் நமது தாய்.

இதைத் தடுக்க எந்தக் கொம்பனாலும் முடியாது.


லூர்து செல்வம்.

"அனைவருக்கும் குழந்தையைப்பற்றி எடுத்துரைத்தாள்." (லூக்.2:39)

"அனைவருக்கும் குழந்தையைப்பற்றி எடுத்துரைத்தாள்." (லூக்.2:39)
*   *    *  *    *   *   *    *   *   *    *  *

" கண்ட பின்னர், அப்பாலனைப் பற்றித் தமக்குக் கூறப்பட்டதைப் பிறருக்கு அறிவித்தனர்." (லூக்.2:17)

  உலக மீட்பர் பிறந்த செய்தி முதன் முதல் அறிவிக்கப்பட்டது, 

 மிக ஏழைகளான இடையர்களுக்கு,

நேரடியாக விண்ணக தூதர்களால்.

அவர்கள் இயேசு பாலனைச் சந்தித்து ஆராதித்துவிட்டு சும்மா இருக்கவில்லை

தாங்கள் கேட்டதை கண்டதை
பிறருக்கு அறிவித்தனர்.

திருச்சபை வரலாற்றில் முதல் நற்செய்திப் பணியாளர்கள் ஏழைகளான இடையர்களே!

அவர்கள் நற்செய்தியை அறிவிப்பதற்காக தேவசாத்திரம், தத்துவ சாத்திரம் ஒன்றும் கற்றுத் தேர்ந்திருக்கவில்லை.

அவர்கள் செய்ததெல்லாம:

"கண்ட பின்னர்,

 அப்பாலனைப் பற்றித்

 தமக்குக் கூறப்பட்டதைப்

 பிறருக்கு அறிவித்தனர்."

இறைத்தூதர்கள் தங்களுக்குக் கூறியபடி சென்று இயேசு பாலனைக் கண்டார்கள்.

நிச்சயமாக மாதாவும் சூசையப்பரும் பாலனது பிறப்புப் பற்றிய அன்றைய அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்திருப்பார்கள்.

  இடையர்கள்    
தூதர்கள் கூறியவற்றையும் மாதா கூறியவற்றையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.

நிச்சயமாக இந்த இறை அனுபவப் பகிர்வை தங்கள் வாழ்நாளெல்லாம் செய்திருப்பார்கள்.

ஏனெனில் இது சாதாரண அனுபவமல்ல.

விண்ணிலும் மண்ணிலும் இருந்து கிடைத்த அனுபவம்.

அடுத்து ஒருவர் மாதாவுக்கே ஒரு நற்செய்தியை அறிவிக்கிறார்.

அவர் சிமியோன் என்னும்   நீதிமான், கடவுள் பக்தர்.

எட்டாம் நாளில் மாதாவும் சூசையப்பரும் குழந்தையுடன் கோவிலுக்கு   வந்து,

 குழந்தைக்கு   " இயேசு " என்னும் பெயரை  இட்டார்கள்.

அப்போதுதான் சிமியோன் மாதாவுக்கு ஒரு நற்செய்தியை அறிவித்தார்.

"இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு

 வீழ்ச்சியாகவோ

 எழுச்சியாகவோ

 அமைந்துள்ளான்:

 எதிர்க்கப்படும் 

அறிகுறியாக இருப்பான்"

இயேசு நற்செய்தி அறிவித்து மக்களை மீட்கவே வந்தார்.

ஆனாலும் நற்செய்திப்படி வாழ்பவர்கள் மீட்கப்படுவார்கள், 

வாழாதவர்கள் வீழ்ச்சி அடைவார்கள்.

இந்த இரண்டு வகையினரும் இருப்பார்கள் என்ற செய்தியை சிமியோன் மாதாவுக்கு அறிவிக்கிறார்.


இந்தச் செய்தியை இயேசுவே அவரது நற்செய்தி அறிவிப்புக் காலத்தில் உறுதிப்படுத்துகிறார்.


"நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்? 

இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன்."

என்ன செய்வது?

 சட்டம்   உறுவாக்கப் படும்போதே

 சட்டத்தை அனுசரிப்பவர்களும்,

 மீறுபவர்களும் வந்து விடுகிறார்களே!

ஆனால் இயேசு பிரிவினையை உறுவாக்க வரவில்லை.
 
ஒற்றுமையை ஏற்படுத்தி 
மீட்கவே வந்தார்.

அது அவருக்கே தெரியும்.

ஆனாலும் நடக்கப்போகும் உண்மை நடப்பை முன்னாலேயே   நமக்குத் தெரியப் படுத்தவே இவ்வாறு கூறுகிறார். 

இது ஒரு அப்பா 
சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பிள்ளைகளைப் 
பார்த்து,

"உங்கள் சண்டைகளுக்கு நான்தான்ல காரணம். நான் தான உங்களைப் பெற்றேன்"

 என்று சொல்வது மாதிரி.

அடுத்து அன்னாள் என்னும் விதவை ஆண்டவருக்கு பெயர் சூட்டும்போது கோவிலில் இருந்தாள்.

38 அவளும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து, யெருசலேமின் விடுதலையை எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் குழந்தையைப்பற்றி எடுத்துரைத்தாள்
." (லூக்.2:38)

அன்னாள் ஆண்டவருடைய வருகையை எதிர்பார்த்திருந்த

 அனைவருக்கும் குழந்தையைப்பற்றி எடுத்துரைத்தாள்.


வந்தோம் பார்த்தோம் புகழ்ந்தோம் போனோம்
என்றிராமல்

மெசியாவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களிடம் சென்று

" நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மெசியா பிறந்துவிட்டார்",

என்ற நற்செய்திச் செய்தியை அறிவித்தாள்.

நாம் பார்த்த, இடையர், சிமியோன், அன்னாள் ஆகியோர் 

இயேசு குழந்தையாய் இருக்கும்போதே 

" நற்செய்தி அறிவியுங்கள்" 

என்று கூறுமுன்னாலேயே,

 தாங்களாகவே தங்களுக்குத் தெரிந்த நற்செய்தியை

 தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு அறிவித்தார்கள்.

இதை நாம் நற்செய்தி நூலில் வாசிக்கிறோம்.

வாசித்துவிட்டு?

பைபிளை மூடிவிடுகிறோம். 

சாமியார் தினமும் பைபிள் வாசிங்கன்னு சொன்னார்,

வாசித்துவிட்டோம். அவ்வளவுதான்.


நற்செய்தியை அறிவிக்க வேண்டியது சாமிமார் மட்டுமல்ல,

அதை அறிந்த அனைவருக்கும் அந்த உரிமை உண்டு .

நான் அதைக் கடமை என்று கூறவில்லை.

கடமைக்காகச் செய்வதை விட உரிமையோடு செய்வதுதான் 

அதிக பலன் தரும்.

நாம் கடவுளுக்கு உரியவர்கள். ஆகையினால்தான் அவரை உரிமையோடு அப்பா என்கிறோம்.

நமது தந்தையை அறியாதவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்த நமக்கு முழு உரிமையுண்டு.

நற்செய்தி அறிவிப்பதற்கு பெரிய படிப்பெல்லாம் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

நாம் கடவுளை அறிந்திருக்க வேண்டும்,

அவரை நேசிக்க வேண்டும்,

பிறரையும் நேசிக்க வேண்டும்.


இடையர்களோ, அன்னாளோ நற்செய்தி வகுப்புகள் நடத்தவில்லை, 

நற்செய்திக் கூட்டங்கள் போடவில்லை.

தாங்கள் அறிந்ததை தாங்கள் சந்தித்தவர்களிடம் கூறினார்கள்,

இயல்பாக, திட்டம் போட்டல்ல.

இயல்பாகச் சொல்லுவது தான் மனதைத் தொடும்.

யாரையாவது பார்த்து 

" இங்கே வாருங்கள், உட்காருங்கள், நான் உங்களுக்கு இயேசுவைப் பற்றி சொல்லப் போகிறேன்" 

ஆரம்பித்தால், உடனே ஓடிப் போய்விடுவார்கள்.

இயல்பாகப் பேசும்போதே ,

 நம்முடைய  இறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

அனுபவப் பகிர்வின்போது இயேசுவைப் பற்றி, நமது இரட்சண்யம் பற்றி, நமது சமைய உண்மைகள் பற்றி பேசுலாம்.

ஒரே நாளில் அல்ல , எப்பப்போ , சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அப்பப்போவெல்லாம்.

நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு விதை.

 விதையை நண்பர்களின் மனமாகிய நிலத்தில் விதைக்கிறோம்.

சதர்ப்பம் கிடைக்கும்போது விதை முளைத்து வளரும்.

நாம் எல்லோருமே நற்செய்திப் பணியாளர்கள்தான்.

முதன்முதல் இடையர்கள் நற்செய்தியைப் பரப்பினார்கள்.

இயேசுவும்  தன்னை ஒரு இடையனாக (ஆயன்) உருவகித்துக் கொண்டார். 

நற்செய்தியைப் பொறுத்தமட்டில் நாமும் இடையர்களாக மாறுவோம்.

லூர்து செல்வம்.




Saturday, December 28, 2019

இயேசுவை நமது வாழ்வாக்குவோம்.

இயேசுவை நமது வாழ்வாக்குவோம்.
*   *    *   *   *    *  *   *    *   *   *    *
நாம் நமது வாழ்வின் நடவடிக்கைகளில்  கெளரவம்      (prestige) பார்க்கிறோம்.

நம்மை விட ஏதாவது ஒரு வகையில் குறைந்தவர் நம்மை ஒரு வேலை ஏவினால் அது நமது கெளரவத்தைப் பாதிக்கிறது.

நமது கெளரவத்தைப் பாதிக்கும் வகையில் யாராவது பேசினால்கூட நமக்குக் கோபம் வருகிறது.

ஆனால் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும்    கௌரவமே பார்க்காத ஒருவர் இருக்கிறார்.

அவர்தான் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.   

இப்பபிரபஞ்சத்தையே படைத்து ஆண்டுவருகிற சர்வ வல்லப கடவுளாக இருந்தாலும்

 தன்னால் படைக்கப்பட்ட சாதாரண மனித குலத்தில் மனிதனாகப் பிறந்து மனிதர்களோடு வாழ விரும்பினார்.

உலகத்திலுள்ள அத்தனை செல்வங்களுக்கும் ஏக உரிமையாளர் அவர்தான்.

ஆயினும் ஒரு ஏழைக் கன்னியையே தன் தாயாகவும்,

ஒரு ஏழைத் தச்சனையே தன் வளர்ப்புத் தந்தையாகவும் தேர்ந்தெடுத்தார்.

திருக்குடும்பத்தின் தலைவராகிய சூசையப்பர் ஒரு உழைப்பாளி.

மரியாளின் வயிற்றில் வளர்ந்தது இறைமகன் என்பது அவருக்குத் தெரியும்.

அதற்காக இறைவனிடமிருந்து விசேச சலுகை எதையும் எதிர் பார்க்கவில்லை.

நசரேத்திலிருந்து பெத்லகேமுக்கு தூரம்157கி.மீ.

 மக்கட் தொகைக் கணக்கெடுபிற்காக நடந்தே  சென்றார்,

நிறைமாதக் கற்பிணியான மாதாவைக் கழுதையில் ஏற்றிக் கொண்டு. 

தங்க இடம் கிடைக்காமல் மாடடைக் குடிலில் தங்குகிறார்கள்.

இயேசு பிறக்கிறார் நடுங்கும் குளிரில்.

இயேசு கடவுள் என்று இருவருக்கும் தெரியும். 

ஆனால் தாங்கள் கஸ்டப்பட நேர்ந்தமைக்காக அவரிடம் முறையிட்டார்களா?

அல்லது

கஸ்டத்தை நீக்கும்படி. அவரிடம் கேட்டார்களா?

இல்லை. ஏனெனில் கஸ்டத்தை தேர்ந்தெடுத்தவரே அவர்தான் என்று அவர்கட்குத் தெரியும்.

சூசையப்பரைப் பொறுத்த மட்டில் சம்மனசு என்ன சொன்னாலும் ஏன், எதற்கு என்று கேட்காமல் கீழ்ப்படிபவர்.


"சூசையே, தாவீதின் மகனே, உம்முடைய மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்."

மறு பேச்சின்றி ஏற்றுக் கொண்டார்.

"எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம். 

நான் சொல்லும்வரை அங்கேயே இரும்."

மறு பேச்சின்றி சொன்னபடியே செய்தார்.

"எழுந்து, பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ராயேல் நாட்டுக்குச் செல்லும்."

சென்றார்.

"கலிலேயா நாட்டுக்குச் செல்லும்."

சென்றார்.

" நான் கடவுளுக்கே வளர்ப்புத் தந்தை. நீர் அவருடைய தூதர் மட்டுமே. உமக்கெல்லாம் கீழ்ப்படிந்தால் என் கௌரவம் என்னாகிறது?"

என்று கேட்டாரா?

மாதா 'இதோ ஆண்டவருடைய அடிமை' என்று சொல்லிவிட்டு கீழ்ப்படிந்தார்.

ஆனால் சூசையப்பர் சொல்லாமலே கீழ்ப்படிந்தார்! 

திருக்குடும்பமே இறைவன் சித்தத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடந்தது.

நாம் ஒவ்வொரு ஆண்டும் இயேசுவின் பெயராலும், மாதாவின் பெயராலும், மற்ற புனிதர்கள் பெயராலும் எண்ணிறந்த விழாக்கள் கொண்டாடுகிறோம்.

எதற்காக?

நாம் கொண்டாடும் விழாக்கள் நம் வாழ்வில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறதா?

டிப்டாப்பா உடையணிந்து கந்தல் துணியால் போர்த்தப்பட்டிருக்கும் ஏழைச் சிறுவனைப் பார்க்கப் போகிறோம்.

அவர் பசியால் அழுதுகொண்டு இருப்பதைப் பார்த்துக்கொண்டே, 

அவர் பெயரால் விதவிதமான உணவு வகைகளை உண்கிறோம்.

ஒரு ஏழைச் சிறுவன் பெயருக்கு விழா எடுக்க இலட்சக் கணக்கில் செலவழிக்கிறோம்.

கேட்டால் அந்த ஏழைச் சிறுவனைப் பின்பற்றுபவர்கள்(followers) என்கிறோம்.

விழா எடுப்பது பின்பற்றுதல் அல்ல.

யாருக்கு விழா எடுக்கிறோமோ அவர்களின் நற்பண்புகளை 

நமது பண்புகளாக ஏற்று வாழ்வதுதான் உண்மையான சீடனின் குணம்.

இவ்வுலகச் செல்வங்கள் மீது பற்று இல்லாதவன்தான் இயேசுவின் சீடனாக இருக்க முடியும்.

ஆண்டவரின் அடிமையாக வாழ்பவன்தான் மாதாவின் பிள்ளையாக  இருக்க முடியும்.

கேள்வி கேட்காமல் திருச்சபையின் சொற்படி நடப்பவன்தான் சூசையப்பரின் பக்தனாக இருக்க முடியும்.

கடவுளாகிய இயேசுவே இரண்டு மனிதர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்.

நாம் கீழ்ப்படிதலை கௌரவ குறைச்சல் என்று எண்ணுகிறோம்.

இயேசு மற்றவர்கட்காக நிறைய புதுமைகள் செய்தார்.

தனது அம்மாவுக்காகவோ வளர்த்த தந்தைக்காகவோ ஒரு புதுமை கூட செய்யவில்லை.

ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார்.

ஆனால் அவர் வீட்டில் உழைத்துதான் சாப்பாடு.

எண்ணற்ற மக்களின் நோய்களை புதுமைகள் செய்து குணமாக்கினார்.

ஆனால் சூசையப்பருக்கு வாதநோய் வந்தபோது அதைக் குணமாக்கவில்லை.

இறந்த பலருக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

ஆனால் சூசையப்பர் இறந்த போது , அவரை எழுப்பவில்லை.

இதை எல்லாம் நமக்குப் பாடமாகத்தான் செய்தார்.

நாம் அவரது வாழ்விலிருந்து பாடம் கற்றிருக்கிறோமா?

சிந்திப்போம்.

இந்த ஆண்டு கடந்துவிட்டது.

புத்தாண்டிலாவது இயேசுவை நமது வாழ்வாக்குவோம்.

லூர்து செல்வம்

Friday, December 27, 2019

"ஆனால் உள்ளே நுழையவில்லை." (அரு.20:5)

"ஆனால் உள்ளே நுழையவில்லை." (அரு.20:5)
*   *    *  *    *   *   *    *   *   *    *  * 

"ஆண்டவரைக் கல்லறையிலிருந்து எடுத்துவிட்டனர்: அவரை எங்கே வைத்தனரோ, அறியோம்"  

என்ற செய்தியைக் கேட்டவுடன் இராயப்பரும், அருளப்பரும் ஓடினார்கள், கல்லரையை நோக்கி.

இருவரும் ஏன் ஓட வேண்டும்? 

ஆண்டவரை யாரோ எப்படி எடுத்து விட்டுப் போயிருக்க முடியும்?

 

 ஏற்கனவே ஆண்டவர்  'மரித்த மூன்றாம் நாள் உயிர்ப்பேன்'னு சொல்லியிருக்கிறார். 

ஞாபகமில்லையா?

 அல்லது 

விசுவாசம் இல்லையா?"

விசுவாசம் இருந்தது, ஆனால் போதிய அளவு இல்லை.

இருந்திருந்தால் செய்தி வந்தவுடன்

"உடலைக் காணவில்லையா?
மகிழ்ச்சி. ஆண்டவர் சொன்னபடி உயிர்த்து விட்டார்.

நம்மைத் தேடி வருவார். அருளப்பா, உட்காருங்கள்.

உடனே வருவார். அவர் வரும்போது நாம் இங்கே இருக்க வேண்டும்."

என்று மகிழ்ச்சியோடு இருந்திருக்க வேண்டுமே! 

"அற்ப விசுவாசிகளே" என்று ஆண்டவர் சொன்னது சரிதான்!

அருளப்பர் இராயப்பரை விட வயதில் குறைந்தவர். ஆகவே அவரைவிட வேகமாக ஓடி முதலிலேயே கல்லரையை அடைந்து விட்டார்.

குனிந்து உள்ளே பார்த்தார். 

 தரையில் துணிகள் கிடக்கக் கண்டார். 

ஆனால் உள்ளே நுழையவில்லை.

ஓடிவந்த வேகம்  நுழைவதில்  இல்லை.

ஏன் நுழையவில்லை?  அவரிடம்தான் கேட்க வேண்டும்.

இராயப்பர் வந்தவுடன் கல்லறைக்குள் நுழைந்து விட்டார்.

அப்புறமாக அருளப்பர் நுழைந்தார்.

ஒரு வேளை தலைவருக்கு முன்னால் நுழையக்கூடாது என்று காத்திருந்தாரோ? 

அப்படித்தான் இருக்கும்.

நாமும்கூட அவரிடமிருந்து ஒரு பாடம் கற்றுக் கொள்ளலாமே,

மூத்தோருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்று! 

உள்ளே நுழைந்து பார்த்தபிறகுதான் இயேசு  உயிர்த்ததை விசுவசித்தார்கள்.



இயேசு மதலேன் மரியாளுக்குதான் முதலில் காட்சியளித்தார்.

"பாவிகளைத் தேடித்தான் உலகிற்கு வந்தேன்" என்று சொன்னவர் இறை மகன் இயேசு.

மதலேன் மரியாள் பாவியாய் இருந்து, 

பாவங்களுக்காக மனம் வருந்தி அழுது 

பாவ மன்னிப்புப் பெற்றவள்.

ஆகவேதான் இயேசு அவளுக்கு முதலில் காட்சி கொடுத்தார்.

மதலேன் மரியாள் சீடரிடம் வந்து, "ஆண்டவரைக் கண்டேன்" என்றாள்.

உலகிற்கு முதன்முதல் இயேசு உயிர்த்த நற்செய்தியை அறிவித்தவள் மனம் திரும்பிய பாவிதான்!

இதில் நமக்கு ஒரு மகிழ்ச்சி. நாமும் பாவிகள். நம்மைத் தேடித்தான் இயேசு வந்தார்.

மதலேன் மரியாள் அப்போஸ்தலர்களை விட பாக்கியசாலியாய் இருந்ததுபோல,

நாமும் குருக்களை விடவும், ஆயர்களை விடவும், பாப்பரசரை விடவும்

நாம் தான் பாக்கியசாலிகள்.

ஏனெனில் பாவிகளாகிய நம்மைத்தான் இயேசு அதிகம் நேசிக்கிறார்.

நம்மைத் தேடித்தான் இயேசு உலகிற்கு வந்தார்.

நாம் மனம் வருந்தி சிந்தும் கண்ணீர் உலகத்திலுள்ள அத்தனை செல்வங்களையும் விட மதிப்பு கூடியது, கடவுள் முன்னால்.

அருளப்பர் இயேசுவுக்குப் பிரியமான சீடர்தான்.

ஆனால் விசுவசிப்பதில் தாமதம் செய்தாரே!

அருளப்பர் எப்போது விசுவசித்தார்? 

"உள்ளே நுழைந்து பார்த்தார்: பார்த்து விசுவசித்தார்."


நமக்கும் அப்படித்தான்.

உள்ளே நுழைந்து பார்க்காவிட்டால் விசுவாசம்  வராது.

"நாம் பாவிகள். நம்மைத் தேடித்தான் இயேசு வந்தார்.
நாம் சிந்தும் கண்ணீருக்கு விண்ணகத்தில் மதிப்பு அதிகம்." 

என்ற உண்மையை நாம் அறியும்போது நமது விசுவாசம் வலுப்பெறுகிறது.

இந்த உண்மை எங்கு இருக்கிறது?

பைபிளுக்கு உள்ளே இருக்கிறது.

பைபிளை எப்போதும் கையில் வைத்திருப்பதாலோ,

அப்பப்போ திறந்து பார்ப்பதாலோ,

திறந்து வாசிப்பதாலோ

நமது  விசுவாசம் வலுப்பெறாது.

ஆற்றுக்குப் போகிறோம். தெளிவான நீர். 

நீருக்குள்ளே ஆயிரக்கணக்கான மீன்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

 மீன்களைப் பார்ப்பதனால் அவை நம் கைக்கு வந்து விடுமா?  

தண்ணீருக்குள் இறங்காமல் மீன் பிடிக்க முடியாது.

அதே போல்தான் பைபிள் வசனங்களைப் பார்ப்பதாலோ,வாசிப்பதாலோ விசுவாசம் வந்து விடாது.

வசனத்திற்குள் நுழைந்து, அதற்குள் இருக்கிற செய்தியைத் (Message) தேட வேண்டும்.

அதற்கு முதற்படியாக அந்த வசனத்தைத் தியானிக்க வேண்டும்.

நமக்கு ஏற்றவாறு வசனத்திற்குப் பொருள் கொடுப்பதற்காக பொருளை வளைக்க முயலக்கூடாது.

பரிசுத்த ஆவியின் துணையோடு நாம் தியானித்தால் 

அதன் செய்தியும், 

அந்தச் செய்தியை எப்படி நமது வாழ்வாக்குவது என்பதும் புரியும்.

கண்டுபிடிப்பது கடினமாக இருந்தால், அதற்கென்றே இருக்கின்ற பங்குச் சாமியாரைத் தேடிப்போய் விளக்கம் கேட்க வேண்டும்.

விளக்கத்தை அறிந்து செய்தியை வாழ்வாக்க வேண்டும்.

அநேகர் பைபிளை வாசிப்பார்கள்.

வசனங்களை மேலெழுந்த வாரியாகப் பார்த்து அவர்கள் மனதில் தோன்றுகிற விளக்கத்தை அவர்களாகவே கொடுத்துக் கொள்வார்கள்.

இங்கே வேறொரு விசயத்தைக் குறிப்பிபிடாமல் இருக்க முடியவில்லை.

ஒரு Analogy.

"எல்லோரிடமும் கணக்குப் புத்தகம் இருக்கா?"

"இருக்கு சார்."

"Very good. Class work நோட்டை எடு.

எடுத்தாச்சா?  புத்தகத்திலுள்ள முதல் பயிற்சியிலுள்ள முதல் கணக்க எடு.

நல்லா வாசி. சரி இப்ப கணக்கைச் செய்."

மாணவர்கள் கணக்கை வாசித்துக் கொண்டே இருந்தார்கள்.

செய்யவில்லை.

ஒரு பையன் சொன்னான்,

"எப்படி சார் செய்யணும்?"


இப்படித்தான் பைபிள் வாசிப்பும்.

 வாசித்ததைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால் வாசித்து என்ன பயன்.

பைபிளைக் கொடுக்கிறோம். அதை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கு பயிற்சி கொடுக்கிறோமா?

பைபிள் விளக்கப் (commentary)  புத்தகங்களாவது கொடுக்கிறோமா?

உபயோகிக்கத் தெரியாதவன் கையில் கத்தியைக் கொடுப்பது ஆபத்து.

சம்பந்தப் பட்டவர்கள்
 சிந்திக்கவும்

ஒரு வசனத்திற்குள் நுழைந்து பார்ப்போமா? 

"அதற்கு இயேசு, "அம்மா! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? எனது நேரம் இன்னும் வரவில்லை" என்றார்."

இயேசு தன் தாயோடும், சீடரோடும் கானாவூர் திருமணத்திற்குச் சென்றிருக்கிறார். 

பந்தி முடியும் முன் இரசம் தீர்ந்து விட்டது.

மரியாள் இரக்க சுபாவம் உள்ளவள்.

எப்படியாவது திருமண வீட்டாருக்கு உதவ வேண்டும்.

தன் மகன் கடவுள் என்று அவளுக்குத் தெரியும்.

அவர் எல்லாம் வல்லவர் என்றும் தெரியும்.

அவர் இரக்கம் உள்ளவர் என்றும் அவளுக்குத் தெரியும்.

அவர் கட்டாயம் உதவுவார் என்றும் அவளுக்குத் தெரியும்.

ஆகவே அவரிடம் சென்று,

அவரை நோக்கி, 

"இரசம் தீர்ந்துவிட்டது" என்று மட்டும் சொல்கிறாள்.

"உதவி செய்யும்" என்று சொல்லவில்லை.

ஏனெனில் பிரச்சனையைச் சொன்னால் போதும், தீர்வு அவர் காண்பார் என்று 
 அவளுக்குத் தெரியும்.

ஆனால் இயேசு ,

"அம்மா! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? எனது நேரம் இன்னும் வரவில்லை"
என்கிறார்.

இயேசுவின் பதில் நமது பார்வைக்கு வித்தியாசமாகத் தெரிகிறது.

ஆனால் மாதாவுக்குத் தன் மகனைப்பற்றி நன்கு தெரியும்.

ஆகவே மகனிடம் வேறு ஒன்றும் சொல்லாமல்,

பணியாட்களிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றாள்.

இயேசு ஏன்,

"எனது நேரம் இன்னும் வரவில்லை" 

என்று சொன்னார்?

இயேசு கடவுள். அளவற்ற ஞானம் உள்ளவர்.

"கானாவூரில் திருமணம் நடக்கும்,

அம்மாவும் நாமும் அங்கு போவோம்,

இரசம் தீர்ந்துபோகும்,

அம்மா விசயத்தைச் சொல்லுவாங்க,

-நாம தண்ணீரை இரசமாக்குவோம்"

என்று நித்தியகாலமாகவே அவருக்குத் தெரியும்.

அதுமட்டுமல்ல இயேசு அளவற்ற இரக்கம் உள்ளவர்.

பின் ஏன்,

"எனது நேரம் இன்னும் வரவில்லை" என்றார்.

இயேசு தன் தாயின் மேல் அளவற்ற அன்புள்ள்ளவர் மட்டுமல்ல 30 ஆண்டுகள் அவருக்கு கீழ்ப்படிந்து நடந்தவர்.

30 ஆண்டுகள் மட்டுமல்ல எப்போதுமே அம்மா சொல் தட்டாதவர்.

கடவுளால் தன் திட்டத்திற்கு விரோதமாக தானே செயல்பட முடியாது.

அதனால்தான் கடவுளால் பாவம் செய்ய முடியாது என்கிறோம்.

தண்ணீரை இரசமாக மாற்ற நித்திய காலமாக திட்டமிட்டிருக்கும்போது

 அத்திட்டத்திற்கு எதிராக அவர் போகவேமாட்டார். 


இயேசு ஏதாவது ஒரு விசயத்தை அழுத்திச் சொல்ல வேண்டுமானால்,

அதன் அழுத்தத்தை அதிகரிக்க தன்னையே  தாழ்த்திக் கொள்வது போன்ற சொற்களைப் பயன்டுத்துவார்.

இறுதிகால வரவு எப்போது என்று யாருக்கும் தெரியாது என்பதை அழுத்த,

"தந்தைக்குத் தெரியுமேயன்றி

மகனுக்கும்கூடத் தெரியாது."
(மாற்கு.13:32) என்றார்.

தந்தையும், மகனும்,பரிசுத்த ஆவியும் ஒரே கடவுள்.

கடவுளுக்கு மட்டும் தெரிவது
கடவுளாகிய மகனுக்கு எப்படித் தெரியாமல் இருக்கும?

ஆனால் ஒரு உண்மைக்கு அழுத்தம் கொடுக்க இயேசு பயன்படுத்தும் Technique இது.

"என்னில் விசுவாசங்கொள்பவன் நான் செய்யும் செயல்களையும் செய்வான்: ஏன், அவற்றினும் பெரியனவும் செய்வான்."


என்னில் விசுவாசங்கொள்பவன் நான் "செய்யும் செயல்களையும் செய்வான்:"

என்பதை அழுத்த

"அவற்றினும் பெரியனவும் செய்வான்."

என்பது Technique.

விசுவாசம் உள்ளவன் செய்வதே இயேசு செய்வதுதான்.

அவர் செய்வதைவிட பெரியன செய்ய எந்த கொம்பனாலும் முடியாது.

அதேபோல்தான் 

மாதாவால் தன் மகன் மூலம் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு அழுத்தம் கொடுக்கவே 

தன் நேரம் வருமுன்னே தாய்க்காகச் செய்வதாகக்
 காட்டிக் கொள்கிறார்.

அதாவது இதை வாசிப்பவர்களுக்கு

"இயேசு தான் திட்டமிட்ட நேரம் வராவிட்டாலும்கூட தன் தாயின் சொல்லைத் தட்ட முடியாமல் அவள் சொன்னதைச் செய்வார்"  

என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

உண்மையில் தன் திட்டத்துக்கு மாறாகக் கடவுளால் எதுவும் செய்ய முடியாது.

ஆனால் தாயின் பரிந்துரைக்கு அவரிடம் இருக்கும் அளவற்ற செல்வாக்கை அழுத்தமாகக் கூற இந்த  Techniqueகை இயேசு பயன்படுத்துகிறார்!

இவ்விசயத்தை அருளப்பர் எழுதுவார் என்றும், நாம் அதை வாசிப்போம் என்றும் இயேசுவுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

நம்மிடம் மாதா பக்தியை வளர்க்கவே இந்த Techniqueஐப் பயன்படுத்தினார்.

நாம் மாதா வழியாக அவரிடம் சென்றால்  நமது செபத்திற்கு சக்தி அதிகம் என்று நமக்கு அறிவுறுத்துகிறார்.

இதற்காகத்தான் சிலுவையில் மரிக்கும் முன் 

'இதோ உன் தாய்' என்று கூறி

 தன் தாய்க்கு நம்மையும் பிள்ளைகள் ஆக்கினார்."

ஒரு வசனத்திற்குள் கொஞ்ச தூரம் நுழையும்போதே இவ்வளவு விசயம் அகப்பட்டிருக்கு. 

இன்னும் ஆழமாய் நுழைந்தால் இன்னும் ஏராளமான விசயம் கிடைக்கும்.

நமது விசுவாசம் ஆழமாக வேண்டுமென்றால் இறை வசனத்திற்குள் ஆழமாக நுழைய கற்றுக் கொள்ள வேண்டும்.

நமக்குப் பைபிளைத் தந்தவர்கள்தான் இதைக் கற்றுத்தர வேண்டும்.

லூர்துசெல்வம். 

Thursday, December 26, 2019

தபசு காலமும், இயேசு உயிர்த்த நாளும் ஒவ்வொரு ஆண்டும் தேதி மாறி வருகின்றன. ஏன்?

தபசு காலமும், இயேசு உயிர்த்த நாளும் ஒவ்வொரு ஆண்டும் தேதி மாறி வருகின்றன. ஏன்?
*   *    *   *   *    *  *   *    *   *   *    *

"ஏங்க, பூகோளப் புத்தகத்தையும், பைபிளையும் ஒரே நேரத்தில வாசித்துக் கொண்டு இருக்கீங்க? "

"ஏண்டி, பூகோளத்துக்கும், பைபிளுக்கும் சம்பந்தம் இல்லாதது மாதிரி பேசற.

பைபிளே பூகோளத்திலிருந்து தானே ஆரம்பிக்குது!

"ஆதியிலே கடவுள் விண்ணையும், மண்ணையும் படைத்தார்."

'மண்'ணுன்னா பூமின்னு உனக்குத் தெரியாது?

'பூகோளம்னா' என்ன அருத்தம்?"

"ஏதோ சின்னப் பிள்ளைய்ட்ட கேட்கது மாதிரி கேட்கிறீங்க? நானும் உங்கள மாதிரி டீச்சர் வேலை பார்த்திட்டு ரிட்டயர்ட் ஆனவதாங்க!"


"நான் உன்ன Test பண்ணல.
வயசாகிட்டில்ல. நிறைய வார்த்தைகள் மறந்து போச்சி. தெரியாமல்தான் கேட்டேன்."

"அப்போ சொல்றேன். 
'பூ கோளம்'னா 'பூமி உருண்டை'ன்னு அருத்தம்.

ஆமா! பூமி உருண்டைக்கும், பைபிளுக்கும் என்ன சம்பந்தம்?"

"பைபிள் நமது ஆண்டவர் இயேசுவை மையமாகக் கொண்டது.

இயேசுவின் வாழ்க்கை அவரது

 உற்பவத்தையும், 

பிறப்பையும் 

உயிர்ப்பையும் மையமாகக் கொண்டது.

உற்பவம் Conception.

பிறப்பு    Christmas. 

உயிர்ப்பு Easter.

இந்த  விழாக்களை மையமாக வைத்துதான் திருச்சபையின் ஆண்டு தீர்மானிக்கப்படுகிறது.

இவற்றில் கிறிஸ்மஸ் தேதி மாறாது, டிசம்பர் 25.

உயிர்ப்புத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தேதி மாறி வரும்."

"ஏன்?"

..."உயிர்ப்புத் திருவிழாவின் தேதி  பூகோளத்தை மையமாக வைத்துதான் தீர்மானிக்கப் படுகின்றது."

"என்னது? உயிர்ப்புத் திருவிழாவின் தேதி  பூகோளத்தை மையமாக வைத்துதான் தீர்மானிக்கப் படுகின்றதா?

விளங்கவில்லை."

பொறுமையா கேட்பதா இருந்தால் சொல்லுகிறேன்."

"ஏங்க, உங்க கூடவே 60 வருசம் 
பொறுமையா குப்பகொட்டி இருக்கேன். கேட்டுக்கொண்டு இருப்பது பெரிய காரியமா? சொல்லுங்க."

"பூமி உருண்டை தனது அச்சில 23.5° சாய்ந்து, தானும் சுற்றிக் கொண்டு, நீள்வட்டப் பாதையில் சூரியனை வலம் வருகிறது."

"அதென்ன வலம் வருகிறது? சூரியனைச் சுற்றுகிறது என்றுதான் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்."

..."'வலம் வருகிறது'  என்றால் வலதுபுறமாக சுற்றுகிறது என்று அருத்தம்.

நீ எப்போவது உவரிக்குப் போகும்போது அந்தோனியார் கோவிலைச் சுற்றியிருக்கிறாயா?"

"ஆமா."

..."வலப்புறமாகவா? இடப்புறமாகவா?"

"கொஞ்சம் பொறுங்கள். ம்ம்ம்.
வலப்புறமாகத்தான். வலது கை கோவில் பக்கம் இருக்கும்.
சரிதான். வலம் வருவது இயல்பானது. இடம் வந்தால் கொஞ்சம் Strain எடுக்கணும்."

"உனக்குத் தெரியும், பூகோளத்தின்மேல் கிழக்கு மேற்காக வரையப்பட்டிருக்கும் கற்பனைக் கோடுகளுக்கு அட்ச ரேகைகள் என்று பெயர்.

இவற்றில் நடு மத்தியிலுள்ள 
அட்ச ரேகைக்கு நிலநடுக்கோடு என்று பெயர்.  

நிலநடுக்கோட்டிற்கு வடக்கே 23.5° அட்சம் கடகரேகை எனப்படும்.

நிலநடுக்கோட்டிற்குத் தெற்கே
23.5° அட்சம் மகர ரேகை எப்படும்."

"ஏங்க,.இதெல்லாம் தெரிஞ்சது தானே. பூமி 23.5° சாய்ந்து சூரியனைச் சுற்றுவதனால சூரியகதிர்கள் வருடம் முழுவதும் ஒரே இடத்தில் செங்குத்தாக விழாது.

கடக ரேகையிலிருந்து மகர ரேகை வரை வெவ்வேறு காலக்கட்டங்களில்  செங்குத்தாக விழும்.

இதை சூரியன் கடக ரேகையிலிருந்து மகர ரேகை வரை பயணிக்கிறது என்போம்.

சூரியன் கடக ரேகையிலிருந்து தெற்கு நோக்கி

 நிலநடுக்கோடு வழியாகப் பயணித்து, 
மகர ரேகைகக்குச் சென்று,

பின் அங்கிருந்து வடக்கு நோக்கி பயணித்து

நிலநடுக்கோடு வழியாகப் , 

கடக ரேகைகக்குச் சென்று,
பின் தெற்கு நோக்கித் திரும்பும்."

..."பொறு. நம்ம Pointக்கு வந்துவிட்டோம்.

கடக ரேகையிலிருந்து மகர ரேகைக்குச் சென்று, மறுபடியும்
கடகரேகையை வந்தடைய ஒரு வருடம் ஆகும்."

"இதுக்கும் இயேசுவின் வாழ்க்கைக்கும் என்னங்க சம்பந்தம்?"

..."சொல்றேன். சூரியன் கடக ரேகையையும்,  மகர ரேகையையும் ஆண்டிற்கு ஒருமுறைதான் தொடும். 

ஆனால் நில நடுக்கோட்டை இரு முறை கடக்கும், வடக்கு நோக்கிச் செல்லும்போது ஒரு முறை, (மார்ச் 21ஐ ஒட்டி)

தெற்கு நோக்கிச் செல்லும்போது ஒரு முறை.
(செப்டம்பர் 22 ஐ ஒட்டி.)

இப்படி கடக்கும் நாளுக்கு

 equinox என்று பெயர்.

ஆண்டவருடைய  வாழ்க்கையில் equinox முக்கிய பங்கு வகிக்கிறது.

இயேசு  உற்பவித்ததும் அதை ஒட்டிதான்,

 உயிர்த்ததும் அதை ஒட்டிதான்.

 அதாவது மார்ச் 21 ஒட்டி. (Around March  21)

'ஒட்டி' (around) என்றேன். ஏனெனில் காலம் மாறாது, நாள் மாறலாம்.

இயேசுவின் பிறப்பு சூரியன் மகரரேகையைத் தொடும்   டிசம்பர் மாதம். தேதி 25. அதில் மாற்றம் இல்லை. 

அதாவது நமது விழாக் கொண்டாட்டத் தேதியில் மாற்றம் இல்லை.


ஆனால், உயிர்ப்பின் காலம் மாறாது, தேதி மாறும்.

 சூரியனின் வடக்கு நோக்கிய பயண Equinox ல்  

(around மார்ச் 21ல்)

வரும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஞாயிறு உயிர்ப்பு ஞாயிறு.


Easter falls on the first Sunday 

after the Full Moon date, 

based on mathematical calculations, 

that falls on or after March 21.

பௌர்ணமி  ஞாயிற்றுக் கிழமை வந்தால் அதற்கு அடுத்த ஞாயிறு உயிர்ப்பு ஞாயிறு. 

அன்றைய தேதி ஆண்டுக்கு ஆண்டு மாறும்.


If the Full Moon is on a Sunday, Easter is celebrated on the following Sunday.


தபசுகால நாட்கள்  உயிர்ப்பு ஞாயிறை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன.


சாம்பற்புதன்,  ஈஸ்டருக்கு 46 நாட்களுக்கு முன்னால்.

குறுத்து ஞாயிறு  ஈஸ்டருக்கு
 முந்தைய ஞாயிறு.

அதைத் தொடர்ந்து புனித வாரம்.(Holy week)

 ஈஸ்டருக்குப் பின்னால்

விண்ணேற்ற விழா 
39 நாட்களுக்குப் பிறகு.

பென்தேகோஸ்தே 
49 நாட்களுக்குப் பிறகு.



தமதிருத்துவ ஞாயிறு 
56 நாட்களுக்குப் பிறகு.

Corpus Christi 
60 நாட்களுக்குப் பிறகு."

நான் சொன்னவற்றிலிருந்து உனக்கு என்ன புரிகிறது?"

".1.சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தில் நிலநடுக் கோட்டைக் கடக்கும்போது இயேசு உற்பவித்தார்.

அதிலிருந்து கடகரேகையை அடைய 3 மாதங்கள். 

அடுத்து கடகரேகையிலிருந்து தெற்கு நோக்கிப் பயணித்து நிலநடுக்கோடு வழியாக மகரரேகையை அடைய 6 மாதங்கள்.

மகரரேகையை அடைந்து திரும்பும் காலக்கட்டத்தில் இயேசு பிறந்தார்.

33 ஆண்டுகள் கழித்து தான் உற்பவித்த அதே காலக் கட்டத்தில் (Equinox) மரித்து, உயிர்த்தார்.

நமது வாழ்வின் மையம் தானே என்று இயேசு எண்பித்தார்.

2.கடவுள் உலகைப் படைப்பற்கு முன்பே தான் படைக்கப் போகும் மனிதனை மீட்க மனிதனாய்ப் பிறக்கத் திட்டமிட்டுவிட்டார். இது நித்திய காலத் திட்டம
 

3.பிறந்த நாமும் இறந்தாலும் ஒருநாள் உயிர்ப்போம்.

4..அவர் பிறந்தது குளிர்காலத்தில்.

உயிர்த்தது வசந்தகாலத்தில்.

குளிர் கஸ்டம், 
வசந்தம் மகிழ்ச்சி.

நாமும் பிறந்தபின் கஸ்டப்பட்டாலும், 

உயிர்த்தபின் மகிழ்ச்சியாய் இருப்போம்."

..."வசந்த காலத்தில் உற்பவித்து,

குளிர் காலத்தில் பிறந்து,

வசந்த காலத்திலேயே மரித்து உயிர்த்தார் இயேசு.

இதிலிருந்து நாம் ஒரு பாடம் கற்போம்.

நமது வாழ்விலும் வசந்மும், குளிரும் மாறிமாறி வரும்.

இறுதியில் வசந்தமே நிலைக்கும்.

ஆம், நாம் நிலை வாழ்வு பெறுவோம்."

லூர்துசெல்வம் 

டிசம்பர் 25.

            டிசம்பர் 25.
*   *    *   *   *    *  *   *    *   *   *    *


"அண்ணாச்சி, ஒரு சின்ன சந்தேகம்."

"முதல்ல சந்தேகத்தைச் சொல்லு. 

அது சிறுசா பெருசா என்கிறத அப்புறம் பார்ப்போம்."


"இயேசு பிறந்தது டிசம்பர் 25ல தானே?"

..."இதுதான் சந்தேகமா?  உன் வயசு என்ன?"

"16"

..."16 வருசமா கிறிஸ்மஸ் கொண்டாடியிருக்க. இப்ப சந்தேகம் வருது!"

"எனக்கு சந்தேகம் இல்லை அண்ணாச்சி. என் நண்பன் ஒருவன் வேற மாதிரி சொன்னான். அவனுக்குப் பதில் சொல்லணும். அதுதான் கேட்டேன்."

..."வேற மாதிரி என்ன சொன்னான்? "

"டிசம்பர்25,  ரோமை சாம்ராஜ்யத்துல சூரிய கடவுளின் பிறந்த நாளாம்.

கான்ஸ்டன்டைன் என்ற அஞ்ஞான (Pagan) மன்னன்தான் கிறிஸ்தவனாக மாறியபின்  

சூரிய கடவுளின் பிறந்த நாளை இயேசுவின் பிறந்த நாளாக மாற்றினானாம்.

அது உண்மை இல்லை என்று எனக்குத் தெரியும்.

ஆனால் அவனுக்கு உண்மையை எப்படிப் புரிய வைக்கிறதுன்னு தெரியல."

"சரி, கவனமா கேளு. 

சூரிய கடவுள் ரோமை சாம்ராஜ்யத்தின் கடவுளாக ரோமை மன்னனால் அறிவிக்கப் பட்டதே கி.பி 274 ல் 
தான்.

(In 274 AD the Roman emperor Aurelian made it an official cult alongside the traditional Roman cults.”) (Source: Wikipedia – Sol Invictus)

ரோமர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ல் அவனுக்கு விழா எடுத்தார்கள்.


ஆனால் 274க்கு முன்னரே

 கிறிஸ்து பிறந்தது டிசம்பர் 25 என்று கிறிஸ்தவர்களிடையே நம்பிக்கை இருந்தது.

கி.பி 171-183 காலக்கட்டத்தில் வாழ்ந்த புனித தியோபிலுஸ்
இத்தேதியை உறுதிப்படுத்தினார்.

 "என்ன கிழமையில் டிசம்பர் 25 வந்தாலும், அன்று நாம் கிறிஸ்மஸைக் கொண்டாட வேண்டும்." என்றார்.


St. Theophilus (171-183 A.D) was the first to identify December 25 as the birth date of Christ, saying ...
.
“We ought to celebrate the birth day of our Lord on what day soever the 25th of December shall happen." 


புனித இரேனேயுஸ் ( 130–202)
பைபிள் குறிப்புகளிலிருந்து


ஸ்நாபக அருளப்பர் உற்பவித்தது செப்டம்பர் 25என்றும்


இயேசு  உற்பவித்தது மார்ச்25
என்றும், 

இயேசு  பிறந்தது டிசம்பர்25 என்று உறுதிப்படுத்தினார்."

"ஸ்நாபக அருளப்பர் உற்பவித்தது செப்டம்பர் 25என்று எப்படி உறுதி செய்தார்? "


"யூத  இறைவழிபாட்டு முறைமைப்படி 

சக்கரியாஸ் ஆலயத்துள் சென்று தூபங்காட்டியது யூதர்கள் மாதம் Tishrei 15 ல். 

அது செப்டம்பர் 25 ச் சமம். 

சக்கரியாஸ் தூபங்காட்டிய தம்முடைய திருப்பணி நாட்கள் கடந்ததும் அவர் வீடு திரும்பினார்.  அடுத்து எலிசபெத் கருத்தரித்தாள்."



"இன்னும் வேறு யாராவது இதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்களா? "

"ஆமா. புனித ஹிப்போலிட்டஸ். (St. Hippolytus (170-236 A.D)

அவர் கணக்குப்படி இயேசு பிறந்தது டிசம்பர் 25 புதன் கிழமை.

அதுமட்டுமல்ல, ஆதித்  திருச்சபையிலேயே ஆண்டவர் பிறந்த நாளை டிசம்பர் 25ல் கொண்டாடும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.


ரோமை மன்னர்கள் சூரிய கடவுளுக்கான விழாவை ஆரம்பித்ததற்கு வெகு காலத்திற்கு முன்பேயே கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸை டிசம்பர் 25 ல் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.



நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கான்ஸ்டனடைன்  எப்படி

சூரியகடவுள் பிறந்த தேதியை கிறிஸ்துவின் பிறந்த தேதியாக அறிவித்திருக்க முடியும்?

ஆனால் அவன் ஒரு நல்ல காரியம் செய்தான்.

அவன் ஆட்சி ஆரம்பிக்கும்போது அவன் ஒரு அஞ்ஞானி.(Pagan)

அப்போது அஞ்ஞானிகள் டிசம்பர் 25ல் சூரிய கடவுளுக்கு விழா எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அவன் மனம் திரும்பி, கிறிஸ்தவத்தை தேசிய மதமாக்கியபின்

சூரிய கடவுளின் வழிபாட்டை நிறுத்தினான்.

கிறிஸ்தவர்கள் சுதந்தரமாக, உற்சாகமாக கிறிஸ்மஸைக் கொண்டாடினார்கள்.

தேதி மன்னன் கொடுத்தது அல்ல.

ஆதித் திருச்சபைப் புனிதர்கள் நிர்ணயித்த டிசம்பர் 25.

இப்போ புரியுதா?"

"நல்லா புரியுது. எப்படி புரிய வைக்கணுங்கதும் புரியுது."

லூர்துசெல்வம்

Tuesday, December 24, 2019

நீதிமானின் நினைவலைகள்.

நீதிமானின் நினைவலைகள்.
*   *    *   *   *    *  *   *    *   *   *    *  


"அவள் கணவர் சூசை நீதிமானாயும், அவளைக் காட்டிக் கொடுக்க மனமில்லாதவராயும், இருந்ததால் 

அவளை மறைவாக விலக்கிவிட வேண்டும் என்றிருந்தார்.

இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில்,
(மத்.1:19,20)

மேற்படி பைபிள் வசனங்களை வாசித்துக் கொண்டிருக்கும் போதே என் மனதில் ஒரு சிந்தனை ஓடியது.

ஒரு கேள்வியும் எழுந்தது.

"சூசையப்பர் என்ன சிந்தித்துக்
கொண்டிருந்திருப்பார்?"

அதாவது மரியாளைப் பார்த்ததற்கும், கபிரியேல் தூதர் அவர் கனவில் தோன்றியதற்கும் இடைப்பட்ட நேரத்தில்.

யாருடைய நினைவுகளையும்,

 அவர்களால் வெளிப்படுத்தப் படாவிட்டால்

நம்மால் கண்டுபிடிக்க முடியாது.

நாம் கற்பனை வேண்டுமானால் செய்து கொள்ள முடியும்.

நமது கற்பனையும் சம்பந்தப் பட்டவர்களின் நினைவுகளோடு ஒத்துவரும் என்பதற்கில்லை.

அதிலும் மற்றவர்களைப் பற்றி கண்டபடி,

அவர்கட்கு எதிராக,

 கற்பனை செய்ய நமக்கு உரிமை இல்லை.


அவர்களின் நல்ல குணங்களின் அடிப்படையில்,

அவர்களுக்கும் நமக்கும் உள்ள
நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் கற்பனை செய்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

'சூசையப்பர் நீதிமான். 

 மரியாளைக் காட்டிக் கொடுக்க மனமில்லாதவர்'

என்ற பைபிள் வார்த்தைகளின் அடிப்படையில்,  

அவர்மீது நமக்கிருக்கும் பக்தியை அதிகரிக்கும் வகையில் 

கற்பனை செய்கிறேன்.

நீதிமானான,

 மரியாளைக் காட்டிக்கொடுத்து அதனால் அவளுக்கு எந்தவிதமான அவமானமும் வந்து விடக்கூடாது என்று நினைக்கும், 

மரியாள் மீது உண்மையான அன்பு கொண்ட சூசையப்பர்

 இவ்வாறு சிந்தித்திருக்கலாம்.

"வாழ்நாள் முழுவதும் தன் கற்பைக் காப்பாற்றுவதாக இறைவனுக்கு வாக்குக் கொடுத்திருப்பவள் மரியாள்.

'என் கற்பிற்கு நமது திருமணத்தால் எந்தவித பங்கமும் வந்துவிடக்கூடாது,

 நீங்கள் எனது கற்புக்குப் பாதுகாவலராய் இருக்க வேண்டும்' என்று அவள் என்னிடம் கூறி,

'உங்கள் கற்புக்குப்  பாதுகாவலனாக இருப்பேன்,


சட்டத்தின் முன்னால் மட்டுமே நீங்கள் என் மனைவியாய் இருப்பீர்கள்,

 உறவின் அடிப்படையில் நீங்கள் எனது சகோதரிதான்' 

என்று நான் சத்தியம் செய்து கொடுத்த பின்புதான் 

திருமண நிச்சயத்திற்கே (betrothal)  சம்மதித்தாள்.

அப்படிப் பட்ட புனிதவதி  தவறு செய்திருக்க முடியாது.

இது எப்படி நடந்திருக்கும் என்று என்னால் கற்பனை செய்யக்கூட முடியவில்லை.

நிச்சயமாக மரியாள் தவறு செய்திருக்க முடியாது.

ஆனாலும் நீதியின் அடிப்படையில்,

 குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் பெண்ணைத் திருமணம் செய்ய முடியாது.

ஆகவே ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்வதே சரி.

இதைச் சட்டப்படி செய்தால் மரியாளுக்குப் பெருத்த அவமானம்.

நிச்சயமாக அவள் குற்றம் அற்றவள்.

குற்றமற்றவளை அவமானப் படுத்துவதும் நீதிக்கு எதிரானது.

அப்படியானால் ஒன்று செய்யலாம்.

இரகசியமாக அவளை விலக்கிவிடலாம்.

அதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறதே.

நான்  அவளை இரகசியமாக நீக்கிவிட்டு, 

நானும் இரகசியமாக விலகி விட்டால் 

தனித்திருக்கும் அவளை அவளது வயிறு காட்டிக் கொடுத்து விடுமே.

அப்போது ஏற்படும் அவமானத்தை அவள் எப்படித் தாங்கிக் கொள்வாள்?

அவளது பிழை இன்றி யாரோ செய்த தவறுக்கு அவள் அவமானப் படக்கூடாது.

அதுவும் நீதிக்கு எதிரானது.

என்ன செய்யலாம்.

இப்படிச் செய்யலாம்.

நான் அவளை இரகசியமாக நீக்கிவிட்டாலும் அதை அவளிடம் சொல்ல வேண்டாம்.

திருமணமும் முடிக்க வேண்டாம்.

எப்படியும் சகோதரனாக வாழத்தான் வாக்குக் கொடுத்திருக்கிறேன்.

அவளுடைய சகோதரனாக,

பிறக்கவிருக்கும் அவளது குழந்தைக்கு வளர்ப்புத் தந்தையாக,

சாகும் வரை அவளோடு வாழ்வேன், பாசமுள்ள அண்ணனாக.

கற்பத்தின் காரணத்தைக் கேட்கமாட்டேன்

அவளாகச் சொன்னால் பரிவோடு ஏற்றுக்கொள்வேன்.

அவள்மீது எனக்குக் கோபமே வராது.

ஏனெனில் அவள் என் பாசமுள்ள தங்கை.

யாரோ செய்த தப்பிற்காக அவளை எப்படி வெறுக்க முடியும்?

நீதியும் அன்பும் இணைந்து வாழ்வதே வாழ்க்கை.

 ஒப்பந்தத்தை விட்டு விலகுகிறேன், நீதிப்படி.

அண்ணனாகச் சேர்ந்து வாழ்வேன், அன்புப்படி.

அவளது குழந்தை எனது வளர்ப்புக் குழந்தை."

இவ்வாறு சிந்தித்துக் கொண்டு   இருக்கும்போதே தூங்கிவிட்டார்.


 ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "சூசையே, தாவீதின் மகனே, உம்முடைய மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். 

ஏனெனில், அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான். அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்.

21 அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். 

ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.

சூசையப்பரும் விழித்தெழுந்து, 

ஆண்டவரின் தூதர் தமக்குக் கட்டளையிட்டவாறு 

தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

அவளோடு அவள் கற்புக்குப் பாதுகாவலனாகவும்,

இறைமகனுக்கு வளர்ப்புத் தந்தையாகவும் வாழ ஏற்றுக்கொண்டார்.

இறைவன் நீதியும், அன்பும் நிறைந்தவர்.

நீதி நாம் செய்த பாவத்திற்குப் பரிகாரம் கேட்டது.

அன்பு அந்தப் பரிகாரத்தை அவரையே செய்யவைத்தது.

நீதிமானாகிய சூசையப்பரிடம் அன்பும் இருந்தது.

நீதி விலகச் சொன்னது. 
அன்பு சேர்த்து வைத்தது.

நம்மிடமும் நீதி இருக்க வேண்டும்.

தீர்ப்பிட அல்ல. 
அன்புடன் ஏற்றுக்கொள்ள.

லூர்துசெல்வம்

Monday, December 23, 2019

கிறிஸ்மஸ் செய்தி.

கிறிஸ்மஸ் செய்தி.

ஆதியில் ஆண்டவர்  கொடுத்த வாக்கை நிறைவேற்றினார்.

"ஆண்டவர் சொன்ன வாக்கு நிறைவேறும் என்று விசுவசித்தவள் (மரியாள்) பேறுபெற்றவள்" (லூக்.1:45)
*   *    *   *   *    *   *    *    *   *  *  *

ஏதாவது ஒரு பொருளை யாருக்காவது கொடுத்து விட்டால் 

அதைப்பற்றிய பொறுப்பு நம்மைவிட்டு நீங்கி விடுகிறது.

நண்பனுடைய திருமணத்தின் போது அவனுக்கு ஒரு பரிசு கொடுத்தால்,

அதை அவன் பத்திரமாக வைத்திருக்கிறானா, தொலைத்து விட்டானா என்று கண்காணிக்கிற வேலை நமக்கு இல்லை.

கொடுத்ததோடு நம் கடமை முடிந்து விட்டது. 


ஆனால், ஒன்று இருக்கிறது.

அதை   நாம் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டால் அதை  நாம்தான் காப்பாற்ற வேண்டும். 

அதுதான் நமது வாக்கு.

வாக்குக் கொடுத்தபின் அதைக் காப்பாற்றியே ஆக வேண்டும்.

ஆனால் சில வள்ளல்கள் அள்ளி அள்ளி கொடுப்பார்கள், வாக்குகளை, ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால்.

காரியம் ஆகிவிட்டால் கொடுத்ததை மறந்து 
விடுவார்கள்

வள்ளல்கள் ஆச்சே! 

நம்மால் காப்பாற்றப்படக் கூடிய வாக்குகளையே நாம் கொடுக்க வேண்டும்.

இறைவன் சர்வ வல்லவர். அவரால் ஆகாதது எதுவுமில்லை. ஆகவே அவர் வாக்குத் தவறவே மாட்டார்.

"விண்ணும் மண்ணும் ஒழிந்துபோம்: என் வார்த்தைகளோ ஒழியவே ஒழியா." (மத்.24:35)

வார்த்தை மனுவானார்.

நம்மிடையே  வாழ்ந்தார்.

வார்த்தைகளால் நம்மிடம் பேசினார்.

அவரது வார்த்தைகளை வாழ்ந்து காட்டினார்.

வார்த்தைகளால் வாக்குகள் கொடுத்தார்.

அவர் கொடுத்த அனைத்து வாக்குககளும் நிறைவேறின, நிறைவேறுகின்றன, நிறைவேறும்.

ஆனால், நாம்?

நாம் அவரைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொள்கிறோம்.

அவரது சீடர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம்.

கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம்.

ஆனால், வாக்கு மாறா தேவனின் பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் வாக்கு மாறாமல் இருக்கிறோமா?

ஆதியில் ஆண்டவர்  கொடுத்த வாக்கு என்ன? 

"உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்: 

அவள் உன் தலையை நசுக்குவாள்:

 நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார்."
(ஆதி.3:15)


நமது முதல் பெற்றோரைப் பாவத்தில் விழச் செய்த சாத்தானுக்கு கடவுள் கொடுத்த சாபத்திலேயே

மனிதனை மீட்க கடவுள் கொடுத்த வாக்கு அடங்கியிருக்கிறது.

சாத்தானின் தோல்வி மனிதனின் வெற்றி.

அதாவது பாவம் அழியும்போது மனிதன் மீடட்கப்படுகிறான்.

சாத்தானைத் தோற்கடித்து,

 பாவத்தை அழித்து,

 பாவத்திலிருந்து மனிதனை மீட்க 

ஆதியிலேயே கடவுள் வாக்குக் கொடுத்தார்.


"சாத்தானே, நீ நான் படைத்த ஏவாள் என்னும் பெண்ணை பாவத்தில் விழச் செய்தாய்.

நான் படைக்கப்போகும் இரண்டாவது ஏவாளாகிய மரியாளை உன்னால் பாவத்தில் விழச்செய்ய முடியாது!


உனது வித்தாகிய பாவத்தை, அவளது  வித்தாகப் பிறக்கப் போகும் நானே அழிப்பேன்!"

பாவமாசற்ற மரியாளின் வயிற்றில் மனிதனாய்ப் பிறந்து, 

மனிதனைப் பாவத்திலிருந்து மீட்கப் போவதாக

 ஆதியிலேயே வாக்குக் கொடுத்தார், கடவுள்.

அந்த வாக்கின்டியே   மனிதனாய்ப் பிறந்தார்.

கொடுத்த வாக்கை நிறைவேற்றினார்.


தாயைப்போல பிள்ளை என்பார்கள்.

தமக்குத் தந்தை மட்டுமல்ல தாயும் இறைவன்தான்.

"தாயைப்போல பிள்ளை" என்ற வார்த்தைகள் நமக்குப் பொறுந்துமா?

1.இயேசு  "பாவிகளைத் மீட்க வந்தேன்" என்றார். தன் உயிரைச் சிலுவையில் பலிகொடுத்து நம்மை மீட்டிருக்கிறார்.

மீட்பிற்காக நமது பாவங்களை பாவசங்கீர்த்தனம் மூலம் மன்னித்துக் கொண்டிருக்கிறார்.

2."உலகம் முடியுமட்டும் உங்களோடு இருப்பேன்" என்றார். காரணத்தினாலும், ஞானத்தினாலும் மட்டுமல்ல,

 திவ்ய நற்கருணையில் உண்மைப் பிரசன்னத்தின் (Real presence) மூலமும் நம்மோடு இருக்கிறார்.

3.தன்னையே நமக்கு உணவாகத் தருவதாக வாக்குக் கொடுத்தார்.

 திவ்ய நற்கருணை மூலம் தனது உடலையும் இரத்தத்தையும் நமது ஆன்மீக உணவாகத் தந்து கொண்டிருக்கிறார்.

4."நானே வழி" என்றார். தனது பிரதிநிதிகளாகிய குருக்கள் மூலம் அவரது ஆன்மீக வழியில் நடத்திச் செல்கிறார்.

5."கேளுங்கள், கொடுக்கப்படும்"  என்றார்.

விசுவாசத்தோடு கேட்கும் எதையும், 

நமக்கு நன்மை பயப்பதாய் இருந்தால், 

தருகிறார்.

நன்மை பயப்பதாய் இல்லாவிட்டால், 

நமக்கு எது பயன்டுமோ அதைத் தருகிறார்.


நாம் எப்படி? 

1.நாம் அவருக்குக் கொடுத்த
வாக்கைக் காப்பாற்றுகிறோமா? 

2. 'கிறிஸ்தவர்கள்' என்ற நமது பெயருக்கு ஏற்றபடி நடந்து கொள்கிறோமா அல்லது பெயரளவில் பெயர் வைத்திருக்கிறோமா?

1. நாம் ஞானஸ்நானம் பெற்றுதான் கிறிஸ்துவின் சீடர்களானோம்.

ஞானஸ்நானத்தின் போது
 கடவுளுக்குக் கொடுத்த வாக்குகளைக் காப்பாற்றுகிறோமா? 

ஞானஸ்நானத்தின் போது
கடவுள் குருவானவர் மூலம் நம்மிடம் கேட்ட முதல் கேள்வி,

"பசாசை விட்டுவிடுகிறாயா?"

நாமும், "விட்டுவிடுகிறேன்" என்று நமது ஞானப் பெற்றோர் மூலம் வாக்குக் கொடுத்தோம்.

எந்த ஞானப் பெற்றோராவது குழந்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்தவுடன் தங்கள் ஞானப் பிள்ளையிடம்,

"உன் சார்பில் பசாசை விட்டு விடுகிறேன் என்று வாக்குக் கொடுத்திருக்கிறேன்.

அந்த வாக்கைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு. அதைக் கண்காணிக்க வேண்டியது எங்கள் கடமை" என்று கூறியிருக்கிறார்களா?

ஞானக் குழந்தைகளின் ஞான வாழ்க்கையில் கொஞ்சமாவது அக்கரை காட்டுகிறார்களா? 

குழந்தையைப் பெற்றவர்கள் குழந்தையின் லௌகீக வாழ்க்கை  மீது காட்டும் அக்கரையை 

ஆன்மீகவாழ்க்கை  மீது காட்டுகிறார்களா? 

" பசாசை விட்டு விடுகிறேன்" என்றால் "பாவம்
செய்ய மாட்டேன்" என்று பொருள்.

நாம் பாவம் செய்யும் ஒவ்வொரு முறையும்

 இறைவனின் கட்டளையை மட்டுமல்ல, 

நமது  வாக்குறுதியையும் மீறுகிறோம்.

நாம் கர்த்தர் கற்பித்த செபம் சொல்லும் ஒவ்வொரு முறையும் பின்வரும் வாக்குறுதிகளைக் கடவுளுக்குக் கொடுக்கிறோம்.

"இறைவா! உம்மை எங்கள் தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம்.

உம்மை எங்கள் அரசராக ஏற்றுக் கொள்கிறோம்.

விண்ணக வாசிகள் உமது சித்தத்தை நிறைவேற்றுவது போல் 

நாங்களும் உமது சித்தத்தை நிறைவேற்றுவோம்.

ஒவ்வொரு நாளும் அன்றன்றைய உணவை நீர் தருகிறீர்.

அதுவே போதும்.

எதிர்காலத்திற்குத் தேவைப்படும் என்று உணவைப் பதுக்கி வைக்க மாட்டோம்.

எங்களுக்கு எதிராக யாராவது தீங்கு செய்தால் அவர்களை மன்னிப்போம். 

அவர்களை நாங்கள் மன்னிக்காவிட்டால் நீர் எங்கள் பாவங்களை மன்னிக்க வேண்டாம்.

சோதனைகள் வரும்போது உமது உதவியை நாடுவோம்."

இந்த வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றுகிறோமா?

'எங்கள் தந்தையே' என்று கூறும்போதே 

கடவுளைத் தந்தையாகவும்,  மனிதர்களை  உடன் பிறந்தவர்களாகவும் ஏற்றுக் கொள்கிறோம்.

ஏற்றுக்கொண்டபடி நடக்கிறோமா?

ஏற்றுக்கொண்டபடி நடந்தால் உலகில் சமாதானம் நிலவுமே!

குடும்பங்களில், பங்குகளில், நாட்டில், உலகில் சண்டை சச்சரவுகள் வராதே! 

ஒவ்வொருநாளும்  கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுகிறோமா,

 அல்லது,

 நமது ஆசைகளை நிறைவேற்ற கடவுளை உதவிக்கு அழைக்கிறோமா? 

நம்மிடம்  இருப்பதை தேவைப்படுவோரோடு பகிர்ந்து கொள்கிறோமா,

அல்லது 

எல்லாம் நமக்கே என்று பதுக்கு  கிறோமா?

அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்துக்குக் காரணமே பதுக்குதல்தானே! 

நமது மனதை நோகச் செய்தவர்களை அவர்கள் கேட்காமலேயே மன்னிக்கிறோமா?

மன்னிப்பதுதான் நம்மை மன்னிப்பதற்காகவே மனிதனாய்ப் பிறந்த இயேசுவுக்கு நாம் காட்டும் நன்றி.

2. ஞானஸ்நானத்தில் நாம் கொடுத்த வாக்கையும், 

செபிக்கும்போது தினமும் கொடுக்கும் வாக்குகளையும் நிறைவேற்றினால்தான் நாம்
உண்மைக் கிறிஸ்தவர்கள்.

நாம்  உண்மையான கிறிஸ்தவர்களாக  வாழ்வதுதான்  இயேசு பாலனுக்கு நாம் செலுத்தும் நன்றி.

வாழ்க்கையால் நன்றி கூறுவோம்.

கிறிஸ்து பிறந்த தின வாழ்த்துக்கள், எல்லோருக்கும்.

Wish you all a very Happy Christmas!

லூர்துசெல்வம்.

Friday, December 20, 2019

"கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை" (லூக்.1:37)

"கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை" (லூக்.1:37)
*   *    *   *   *    *   *    *    *   *  *  *

நமது வாழ்வின் மிகப் பெரிய பிரச்சனையே நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதுதான்.

நமது வாழ்வை  ஆரம்பித்ததே நாம் அல்ல.

முதலில் நாம் பிறக்கவே இல்லை.

ஒன்றுமில்லாதிருந்த நாம் நமது தாயின் வயிற்றில் கடவுளால் படைக்கப் பட்டோம்.

நமது தாய் நம்மைப் பெற்றாள்.

நாம் பிறக்கவே இல்லை, 

பெறப்பட்டோம்.

We were born by our mother.

இருந்தாலும் ஏதோ  நாம் சாதித்து விட்டதுபோல

"நான் பிறந்தேன்" என்று பீற்றிக் கொள்கிறோம்.

சரி, அது மொழி வழக்காகையால் (Usage) அப்படியே வைத்துக் கொள்வோம்.

நாம் பிறந்தவுடன் நாமாகச் செய்தது ஒன்றே ஒன்றுதான்,

நாம் அழுதது மட்டும்தான்.

நாம் அழுததைப் பார்த்து நம்மைச் சுற்றி இருந்தவர்கள் சந்தோசப் பட்டார்கள்.

அதன்பின் நாம் வளரவில்லை, வளர்க்கப் பட்டோம்.

நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நாம் சுயமாக இயங்கவில்லை, இயக்கப் பட்டோம்.

யாரையும் சார்ந்திராமல் நாம் எதையும் செய்ய முடியாது.

இந்த வாக்கியத்தை எழுதக்கூட ஒரு Phone இல்லாவிட்டால் முடியாது.

"நான் இதைச் செய்தேன், அதைச் செய்தேன், 

இதைச் சாதித்தேன், அதைச் சாதித்தேன்

என்பதெல்லாம் வடிகட்டின பொய்.

நாம் யாரைச் சார்ந்திருக்கிறோமோ அவரைப் பொறுத்துதான்

'நமது சாதனை' என்று  சொல்லப் படுவது அடங்கி இருக்கிறது.

சரி,மொழி வழக்கிற்காக 'நாம் சாதித்தோம்' என்றே வைத்துக் கொள்வோம்.

நாம் யாரைச் சார்ந்திருக்கிறோமோ,

அவருடைய திறமையின் அடிப்படையில்தான்

நமது சாதனையின் அளவு இருக்கும்.

ஆகவே நாம் பெரிதாக சாதிக்க வேண்டுமென்றால் நாம் திறமை உள்ள, 

சக்தி உள்ள ஒருவரைச் சார்ந்திருக்க வேண்டும்.

இப்போ நேரடியாகக் கேட்டு விடுவோம்.

எல்லாம் வல்ல கடவுளைச் சார்ந்திருந்தால் சாதிக்க முடியுமா?

மனிதர்களைச் சார்ந்திருந்தால் சாதிக்க முடியுமா?

மனிதனால், 

அவன் எவ்வளவு பெரிய கில்லாடியாக இருந்தாலும் சரி,

 சுயமாக ஒன்றும் செய்ய முடியாது.

சுயமாக ஒன்றும் செய்ய முடியாதவனை நம்பி நம்மால் எதையும் சாதிக்க முடியாது.

ஆனால் கடவுள் சர்வ வல்லவர்.


"அவரால் ஆகாதது ஒன்றுமில்லை."

இது இறைத்தூதரே அறிவித்த நற்செய்தி.

அறிவியல் ரீதியாக கன்னி கருத்தரிக்க இயலாது.

அறிவியல் ரீதியாக களிமண்ணிலிருந்து உயிருள்ள மனிதனை உருவாக்க முடியுமா?

பொம்மை வேணும்னா செய்யலாம்.

ஒன்றுமில்லாமையிலிருந்து நம்மை உருவாக்கிய கடவுளால்,

களிமண்ணிலிருந்து மனிதனை உருவாக்கிய கடவுளால்

கன்னியின் வயிற்றில் தானே மனுவுரு எடுக்க முடியாதா? 

முடியும்.

அவரால் யாருடைய உதவியும் இன்றி எதையும் செய்ய முடியும்.


கோடானுகோடி நட்சத்திரங்களையும் "ஆகுக" என்ற ஒரே சொல்லால் படைத்தவர்.

நம்மையும் ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்தவர்.

நாம் சார்ந்திருக்க வேண்டியது அவரை மட்டும்தான்.

நமது ஆன்மாவை நேரடியாகப் படைத்தார்.

நமது உடலை உருவாக்க நமது பெற்றோரைக் கருவிகளாகப் பயன்படுத்திக் கொண்டார்.

"இதோ ஆண்டவருடைய அடிமை"

என்று மரியாள் தன்னையே ஒப்புக்கொடுத்ததுபோல

நாமும் நம்மை முழுவதும் அவரிடம் கையெளித்து விட்டால்

(Total and unconditional surrender)

அவரே செயலாற்றுவார், நம்மைக் கருவிகளாகப் பயன்படுத்திக் கொண்டு.

இதுல Double benefit இருக்கு.

1.செயல் புரிபவர் அவர். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர் காட்டிய வழியே போக வேண்டியது மட்டும்தான்.

2. அவர் காட்டிய வழி நடந்ததற்காக மட்டுமே நமக்கு நித்திய சம்பாவனை கிடைக்கிறது! 

கிறிஸ்தவத்தின் அடிப்படை நமது விசுவாசம்தான்.

 நமக்கு இருக்கும் விசுவாசத்தின் அளவிற்கு ஏற்ப

 நமது நம்பிக்கையின் அளவும்,

 தேவ சிநேகத்தின் அளவும் இருக்கும்.


விசுவாசத்தால் கடவுளை அவர் உள்ளபடியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதாவது அவரது அளவற்ற அன்பையும்,

அளவற்ற நீதியையும்,

அளவற்ற வல்லமையையும்,

அளவற்ற ஞானத்தையும்,

ஏற்றுக் கொள்வதோடு,

இத்தகைய அளவற்ற பண்புகள் கொண்ட அவர் 

நமது அன்புத் தந்தை என்பதையும்,

நாம் அவரது முழுமையான பராமரிப்பில் இருக்கிறோம் என்பதையும் 

முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.


அதுதான் முழுமையான விசுவாசம்.

நமது விசுவாசம் முழுமையாக இருந்தால்,

நமது நம்பிக்கையும் முழுமையாக இருக்கும்,

நமது அன்பும் முழுமையாக இருக்கும்.

நமது விசுவாசம் குறைவானதாக இருந்தால்,

நமது நம்பிக்கையும், அன்பும் குறைந்துவிடும்.

உலக ரீதியான ஒரு உதாரணம் கொடுப்போம்.

ஒரே வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கும் ஒரே பிரச்சனை.

கையில் இருந்த பணம் முழுவதும் செலவழிந்து விட்டது.

இன்னும் 24 மணி நேரத்தில் பத்தாயிரம் ரூபாய் Exam fees அலுவலகத்தில் கட்டினால் மட்டுமே தேர்வு எழுதமுடியும் என்று கல்லூரித் தலைவர் சொல்லிவிட்டார்.

ஒரு மாணவன் இதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை.

எப்போதும்போல மகிழ்ச்சியாக இருந்தான்.

ஏனெனில் அவனது அப்பாவைப் பற்றி நன்கு தெரியும்.

ஒரு Phone பண்ணினால் போதும். அடுத்த வினாடி பள்ளிக் கணக்கிற்குப் பணம் Transfer ஆகிவிடும்.

ஆனால் அடுத்த மாணவன் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை.

அப்பாவிடம் பணம் இருக்கிறதோ இல்லையோ.

Phone பண்ணினாலும் பணம் வருமோ, வராதோ!


.இப்போ நம் வாழ்வுக்கு வருவோம்.

நாம்

உதாரணத்தில் வரும் முதல்  மாணவன் மாதிரியா?

இரண்டாம் மாணவன் மாதிரியா?

வாழ்க்கையில் ஒரு பிரச்சனை வருகிறது.

எந்தப் பிரச்சனையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நாம் கடவுளுடைய அளவுகடந்த அன்பிலும், 

வல்லமையிலும், 

ஞானத்திலும் 

விசுவாசம் வைத்திருக்கிறோம்  என்றால் 

நாம் கலங்கவும் மாட்டோம்.

கவலைப்படவும் மாட்டோம்.

நமது பிரச்சனையைப் பற்றி கடவுளுக்கு முழுவதும் தெரியும், 

ஏனெனில் அவர் அளவற்ற ஞானமுள்ளவர்.

நமது பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் அதிக அக்கரை
உள்ளவர்,

ஏனெனில் அவர் நம்மீது அளவற்ற அன்பு உள்ளவர்.

நம் பிரச்சனைக்கு அவரால் தீர்வு காணமுடியும்,

ஏனெனில் அவர் அளவற்ற வல்லமை உள்ளவர்.

நம் பிரச்சனைக்கு அவர் கட்டாயம் தீர்வு காண்பார்,

 ஏனெனில் நாம் தந்தையாகிய அவரின் பராமரிப்பில்தான் இருக்கிறோம். 

இவ்வளவும் இருந்தும் நாம் கவலைப் பட்டால்  

நாம் அற்ப விசுவாசம் உள்ளவர்கள் என்று அருத்தம்.

ஆழமான விசுவாசம் உள்ளவன் 

உறுதியாக நம்புவான்,

அவனது அன்பும் ஆழமானதாக இருக்கும்.

அப்படியானால் பிரச்சனைக்குத் தீர்வுகாண நாம் முயற்சி எடுக்க வேண்டாமா?

முயற்சி எடுக்க வேண்டும். 

ஆழமான விசுவாசத்தோடும்,

உறுதியான நம்பிக்கையோடும்,

பொங்கிவடியும் அன்புடனும்

முயற்சி எடுக்க வேண்டும்.

கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை,

அவரோடு நாம் இருந்தால்,

நம்மால் ஆகாததும் ஒன்றுமில்லை!

"எனக்கு உறுதியூட்டும் இறைவனால் எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு."
(பிலிப்பியர்4:13)

லூர்துசெல்வம். 


Wednesday, December 18, 2019

"நம்மோடு கடவுள் "

" நம்மோடு கடவுள் "
*   *    *   *   *    *   *    *    *   *  *  *

கடவுள் இன்றேல் நாம் இல்லை, ஏனேனில் அவர் நம்மைப் படைத்தவர்.

ஒன்றுமில்லாமையிலிருந்து நம்மை அவர் உருவாக்கிய காரணத்தால் 

நாம் தொடர்ந்து இருக்க (Exist) அவர் நம்மோடு இருந்தாக வேண்டும்.

நமக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்துப் பொருட்களுக்கும், நடப்புகளுக்கும் அவரே ஆதிகாரணர்.

நாம் அவரையே சார்ந்திருக்கிறோம்.

ஒரு சிறுமி கடவுளிடம் வேண்டினாள்,

"இறைவா, எங்களைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம்.

 நாங்கள் உமது கரங்களில் பத்திரமாக இருக்கிறோம். 

நீர் உம்மைப் பத்திரமாகப் பார்துக்கொண்டால் போதும்."

அந்தச் சிறுமியின் அசைக்க முடியாத விசுவாசம் 

வளர்ந்தவர்களாகிய நம்மிடம் இருக்கிறதா? 

கடவுள் நம்மோடு  இருப்பது தவிர்க்க முடியாதது,

நம்மைப் படைத்ததற்காக நம்மோடு இருந்துதான் ஆகவேண்டும்.

பெற்ற தாய் பிள்ளையைக் கவனித்துதானே ஆகவேண்டும்.

இப்போ கேள்வி,

நாம் அவரோடு இருக்கிறோமா? 

அதாவது நாம் அவரோடு இருப்பதை உணர்கிறோமா?

 கப்பல் ஒன்று கடலில் பயணித்துக் கொண்டிருந்தது.

வெகு நாள் பயணத்திற்குப் பின் கப்பலில் குடிநீர் முழுவதுமாகத் தீர்ந்து விட்டது.

பயணிகள் தாகத்தால் துடித்துக் கொண்டிருந்தார்கள்.

தண்ணீர் உதவி கேட்பதற்காக கப்பலின் மேல்தளத்தில் S.O.S கொடி  பறக்கவிடப்பட்டது.

(S.O.S = Save our souls.)

கொடியைப் பார்த்த படகு ஒன்று கப்பலை நெருங்கி வந்தது.

கப்பல் Captain மேல் தளத்தில் நின்று கொண்டிருந்தான்.

படகில் இருந்தவர்கள் கேட்டார்கள்,

"என்ன பிரச்சனை?"

"கப்பலில் குடிநீர் தீர்ந்து விட்டது."

"அதனால் என்ன?  கப்பல் தண்ணீரில்தானே மிதக்கிறது. தண்ணீரைக் கோதிக்கொள்ள வேண்டியதுதானே!"

"உப்புத் தண்ணீரை எப்படீங்க குடிக்க முடியும்?"

"உப்புத் தண்ணீரா?  தேம்ஸ் நதி நீர் நல்ல  நீருங்க."

"நாங்கள் பயணிப்பது கடலாச்சே!"

"இல்லை. நாம் மிதந்து கொண்டிருப்பது தேம்ஸ் நதியில்!"

Captain தண்ணீரைக் கோதிக் குடித்துப் பார்த்தான். 

நல்ல தண்ணீர்!

கப்பல் கடலிலிருந்து  நதிக்குள் நுழைந்துவிட்டதை உணராமல்

 தாகத்தால் துடித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்! 

நாமும் அப்படித்தான்.

பிரச்சனைகள் வரும்போது நம்மைப் படைத்தவர் நம்மோடு இருப்பதை உணர்வதில்லை.

உணர்ந்தால் பிரச்சனைகளை அவர் பார்த்துக் கொள்வார் என்று அமைதியாய் இருப்போமே!

அபிரகாமை ஏன் விசுவாசத்தின்  தந்தை என்கிறோம்?

இறைவன் அபிரகாமிடம் அவரது மகனைப் பலியிடச் சொன்னபோது கவலைப் படாமல் கீழ்ப்படிந்தார்.

ஏன்?

"அது கடவுளுடைய பிரச்சனை. நமது வேலை சொன்னதைச் செய்வது."

கடவுளால் கொடுத்த வாக்குறுதியயை மீறமுடியாது என்று அவருக்குத் தெரியும்!

நாம் கடவுளோடு இருக்றோம்,

எந்தச் சூழ்நிலையிலும் அவர் நம்மைக் கைவிடமாட்டார்,

எதைச் செய்தாலும் நமது நன்மைக்காக மட்டுமே செய்வார்

என்ற உண்மைகளைத் தீர்க்கமாக உணர்ந்தால் 

நம்மால் எப்படிக் கவலைப்பட முடியும்.

"நம்புங்கள்,

செபியுங்கள்,

நல்லது  நடக்கும்."


செபம் என்பது 
நாம் எப்போதும் கடவுளோடு இணைந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து, அந்த உணர்வில் வாழ்வது.

Prayer is to live in union with God.

இந்த வாழ்வுக்கு அடிப்படை நம்பிக்கை.

நமது வாழ்வில் நல்லது மட்டும்தான் நடக்கும்.

பிறப்போ, இறப்போ,

சுகமோ, சுகவீனமோ,

வெற்றியோ, தோல்வியோ

எது நடந்தாலும் நன்மைக்கே.

ஆகவேதான் 

"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்"

என்று கூறுகிறோம்.


இந்த மனப்பக்குவம் வரவேண்டுமானால் நாம் கடவுளோடு இருக்க வேண்டும்.

"நாம் கடவுளோடு."

லூர்துசெல்வம். 





Tuesday, December 17, 2019

கடவுள் ஏன் மனிதன் ஆனார்?

இயேசு ஏன் பிறந்தார்?
*   *    *   *   *    *   *    *    *   *  *  *

இனம் இனத்தோடு சேரும் என்பார்கள்.

அன்பு அன்போடு சேரும்.

அன்பே உருவான கடவுள் தன் முழுமையான அன்பைப் பகிர்ந்து கொள்ளவே 

தன் சாயலாக மனிதனைப் படைத்தார்.

அவருடைய அன்பை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ஆகவேதான் நாமும் யாரையாவது அன்பு செய்ய ஆசிக்கிறோம்.

நாம் யாரை அன்பு செய்கிறோமோ அவரோடு நெருங்கி வாழவே ஆசைப்படுகிறோம்.

நாம் யாரை அன்பு செய்கிறோமோ அவரால் அன்பு செய்யப்படவும் விரும்புகிறோம்.

இது நாம் இறைவனின் சாயலாய் இருப்பதால்தான்.

சாயலுக்கு இருக்கும் குணம் நிஜத்திலிருந்து வந்தது.

ஆக இறைவன் என்றென்றும் நம்மோடு இருக்க விரும்புகிறார் என்பது சொல்லாமலே புரியும்.

தன்னுடைய காரணத்தாலும்,(By being the primary Cause of everything)

 ஞானத்தாலும் (Wisdom)

அவர் எங்கும் இருக்கிறார்.

இது தவிர்க்க முடியாதது.

ஆனால் அதையும் தாண்டி, அதைவிட நெருக்கமாக நம்மோடு இருக்க விரும்புகிறார்.

எப்படி?

சர்வ வல்லப கடவுள்

மனிதன் மீது கொண்டிருந்த அளவு கடந்த அன்பின் காரணமாக, 

மனிதனாகவே ஆகவிரும்பினார்! 

உண்மையான மனித சுபாவம் கொண்ட மனிதனாக ஆக விரும்பினார்! 

He wanted to become 

fully man   

being at the same time 

fully God! 


God wanted to share in the fullness of our humanity! 

முழுமையாக கடவுளாக இருந்துகொண்டே முழுமையாக மனிதனாக ஆக விரும்பினார்!

என்னே அன்பின் ஆழம்!

துவக்கமும் முடிவும் இல்லாத கடவுள்

பிறப்பும் இறப்பும் உள்ள மனிதன் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக

அவனைப் போலவே பிறப்பும் இறப்பும் உள்ள மனிதனாக ஆக விரும்பினார்!

இது அவரது நித்திய காலத் திட்டம்.



அவர் மனிதனை அன்பு செய்வதற்காக மட்டுமே படைத்தார், பாவம் செய்வதற்காக அல்ல.

ஆதாம் படைக்கப்பட்டபோது அவனிடம் பாவ மாசு கொஞ்சங்கூட இல்லை.

ஆனால் அவன் கடவுளால் தனக்குப் பரிசாக அளிக்கப் பட்டிருந்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பாவம் செய்தான்.

தனது பாவத்தினால் மனிதன் இறைவனோடு தனக்கிருந்த அன்புறவை முறித்துக் கொண்டான்.

ஆனால் கடவுளின் அன்பு சிறிதும் குறையவில்லை.

ஆகவே மனிதன் செய்த பாவத்திற்குப் பரிகாரம் செய்து

அவன் முறித்துக் கொண்ட அன்புறவை மீட்டுக்கொடுக்கத்

தனது மனிதனாகப் பிறக்கும்  திட்டத்தைப் பயன்டுத்திக்கொண்டார்.

இப்போது ஒரு கேள்வி எழும்.

கடவுள் மனிதனை இரட்சிக்க மனிதனாய்ப் பிறந்தாரா?

அல்லது

மனிதனாக வேண்டும் என்பதற்காக மனிதனாய்ப் பிறந்தாரா?

ஒரு சின்ன Analogy.

நான் மாணவனாக இருந்தபோது பூகோள பாடம் படிக்கும்போது அமெரிக்காவிற்குப் போய்ச் சுற்றிப் பார்க்க ஆசையாய் இருந்தது.

அப்போது வயது 13.

இப்போது வயது 82.

என் பேரன்மாரும், பேத்தியும், பூட்டிமாரும் அமெரிக்காவில் இருக்காங்க.

போன வருசம் அமெரிக்காவிற்குப் போனேன்.

அமெரிக்காவைப் பார்க்கப் போனேனா?

பேரன்பேத்தியைப் பார்க்கப் போனேனா?

ஒரே பதில்தான்.

இரண்டு ஆசைகளும் ஒன்றாய் நிறைவேறின.

அதேபோல்தான் மனிதனாய்ப் பிறக்க வேண்டும் என்ற திட்டமும்,

 மனிதனை மீட்க வேண்டும் என்ற திட்டமும் 

ஒன்றாய் நிறைவேறின.


கடவுளின் நித்திய திட்டப்படி பரிசுத்த தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய மகன் தேவன் கன்னிமரியின் வயிற்றில் மனித உரு எடுத்தார்.

மனு உரு எடுக்குமுன் மகன் தேவனுக்கு ஒரே சுபாவம், தேவ சுபாவம்.

மனு உரு எடுத்த பின் இரண்டு சுபாவங்கள்.

ஆள் ஒன்று, தேவ ஆள்.
சுபாவங்கள் இரண்டு.

தேவ சுபாவம்,
மனித சுபாவம்.

இயேசு முழுமையாக கடவுள்,
முழுமையாக மனிதன்.

Jesus is fully God and fully Man.

நமக்காகப் பாடுபட்டது, தேவ ஆள், மனித சுபாவத்தில்.

பாடுபட்டது, தேவ ஆள், 
ஆகவே பாடுபட்டது கடவுள்.

மரியாளின் வயிற்றில் மனித உரு எடுத்தது கடவுள், ஆகவே மரியாள் கடவுளின் தாய்.

மனுக்குலத்தைப் படைத்த கடவுள் இப்போது மனுக்குலத்தின் ஒரு உறுப்பினர்!

நமது சகோதரர்! 

அது நமக்கு எவ்வளவு பெருமை! 

பெருமைப்பட்டுக் கொண்டால் மட்டும் போதாது.

இறைவனும், நமது சகோதரருமாகிய இயேசுவுக்கு பிரியமானவர்களாக வாழ வேண்டும்.

அவர் நம்மை அன்பு செய்வது  போல நாமும் அவரை அன்பு செய்ய வேண்டும்.

பாவம் செய்யாமல் புண்ணியவான்களாக வாழ வேண்டும்.

அவர் மனுக்குலம் முழுவதையும் அன்பு செய்வது போல 

நாமும் மனுக்குலம் முழுவதையும் அன்பு செய்ய வேண்டும்.

அவரது அன்பு எவ்வளவு ஆழமானது என்றால் அவர் நம்மோடு மட்டுமல்ல நமக்கு உள்ளும் வாழ விரும்புகிறார்.

அதற்காகவே திவ்ய நற்கருணையை ஏற்படுத்தி,

நமது ஆன்மீக உணவாக நமக்குள் வருகிறார்.

அடிக்கடி திருப்பலியில் கலந்து கொண்டு, 

அவரை உண்டு, 

அவரோடு இணைந்து வாழ வேண்டும் என்பதே அவரது நித்திய ஆசை!

அவரது ஆசையை நிறைவேற்றுவது நமது கடமை.


ஞான உபதேச வகுப்பில்  ஒரு பையனிடம் கேட்டேன்,

"நீ எதற்காகப் பிறந்தாய்?"

"வாழ்வதற்காக."

"இயேசு எதற்காகப் பிறந்தார்?" 

"மரிப்பதற்காக."

"கொஞ்சம் விளக்க முடியுமா? "

"தனது மரணத்தின்மூலம் எனக்கு நித்திய வாழ்வு பெற்றுத்தர இயேசு பிறந்தார்."

கடவுள் நம்மைப் படைத்ததே நித்திய வாழ்வுக்காகத்தான்.

ஆனால் நமது பாவம் இடையில் குட்டையைக் குழப்பி விட்டது, மரணம் புகுந்தது.

இயேசு பிறந்தது தன் மரணத்தினால் நம் மரணத்தை வெல்ல.

தீமையிலிருந்து  நன்மையை  வரவழைக்க கடவுளால் முடியும்.

பாவத்தின் விளைவான நமது மரணத்தை

தனது மரணத்தினால்

நமது நிலை வாழ்வின் வாயிலாக மாற்றியவர் இயேசு. 

நமது பாவம் இயேசுவின் மரணத்திற்குக் காரணமாய் இருந்தது.


இயேசுவின் மரணம் நமது பாவத்தின் மரணத்திற்குக் காரணமாய் இருந்தது.

இயேசு பிறந்தார், வாழ்ந்தார், மரித்தார் நமக்காக.

பிறந்த நாம் வாழ்வோம், மரிப்போம் அவருக்காக.

அவரது மரணம் நமது இரட்சண்யம்.

நமது மரணம்  நமது நிலை வாழ்வுக்கான வாசல்.

மரண வாயில் வழியே நித்திய பேரின்ப வீட்டிற்குள் நுழைவோம்,

இறைவனோடு இணைந்து நிலை வாழ்வு வாழ்வோம்.

லூர்துசெல்வம் 


















 

Monday, December 16, 2019

"ஆண்டவரே! உம்ம பைபிளில் கை வைக்க உம்ம அனுமதி வேணும்." சாத்தான்.

http://lrdselvam.blogspot.com/2019/12/blog-post_16.html


"ஆண்டவரே! உம்ம பைபிளில் கை வைக்க உம்ம அனுமதி வேணும்."     சாத்தான்.
*   *    *   *   *    *   *    *    *   *  *  *

"ஹலோ! மைக்கில்!  நான் லூசிபெர் வந்திருக்கேன்னு உன் கடவுள்ட போய்ச் சொல்லு!"

"மரியாத தேயுது?"

"நான் பழைய லூசிபெர் இல்லை. சாத்தான். சாத்தான்கிட்ட இருந்து மரியாதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது.ji

நானும் மரியாதையெல்லாம் எதிர்பார்க்க மாட்டேன்.

நான் நினைத்தது நடக்கணும். அவ்வளவுதான்."

..."ஹலோ! சாத்தான்! புத்தியே இல்லாம உன் கத எப்படி ஓடுது?"

"எனக்கா புத்தி இல்ல? உன் கடவுளையே சிலுவையில அறைஞ்சவன் நான்."

"இதச் சொல்ல வெட்கமா இல்ல?

கடவுளைச் சிலுவையில அறைஞ்சதினால தோற்றது யார்?

மக்களுக்கு இரட்சண்யம் கொடுக்க மனிதனாகப்   பிறந்தவரைக் கொல்ல

அவர் பிறந்த நாளிலிருந்தே முயற்சி செய்தாயே, ஏன்? 

அவர் மக்களுக்கு இரட்சண்யம் கொடுத்து விடக்கூடாது என்பதற்காகத்தானே! 

அவரது இறப்பிலேதான் மனித இரட்சண்யம் அடங்கி இருந்தது என்ற எண்ணம் உன் மரமண்டையில் ஏன் ஏறவில்லை?"

"பழைய கதை இப்போ எதற்கு? 
நான் அவசரமா கடவுளப் பார்க்கணும்.

போய்ச் சொல்லு."

"யார்ட்டப்போய்ச் சொல்லணும்."

"கடவுள்டதான்."

"ஹலோ! கடவுள் எங்கும்  இருக்கிறார் என்ற 

எல்லோருக்கும் தெரிந்த உண்மை 

 நரகுலக மாமன்னனுக்குத் தெரியல! "

"எனக்குத் தெரியாதுன்னு உன்னிடம் யார் சொன்னா?"

"அவர் உனக்குப் பக்கத்திலேயே இருக்கும்போது என்னை ஏன் சொல்லச் சொன்ன?"

"உனக்குத் தெரியுமான்னு  சோதிச்சேன்."

"குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலன்னு சொல்ற!"

"எனக்கு மீசையே இல்ல, எப்படி ஒட்டும்? "

"ஹலோ!  நான் இங்க இருக்கேன். வந்த விசயத்தச் சொல்லு."

"ஆண்டவரே! உம்ம பைபிளில கை வைக்க உம்ம அனுமதி வேணும்."

"நீ சொல்ல வந்திருக்கது என்னவென்று எனக்குத் தெரியும். 

இருந்தாலும் நீயே சொல்லு."

"உம்ம பைபிள அடிக்கடி மொழி பெயர்த்துக் கிட்டிருக்காங்க.

நானும் அவங்ககூட இருந்து கொஞ்சம் விளையாட அனுமதி வேண்டும்."

"என்ன விளையாட்டு?"

"உங்க அம்மாவை விட்டு என் தலையை நசுக்க வச்சிட்டீங்க.

அவங்க பாவ மாசில்லாம உற்பவித்து,

பாவ மாசில்லாம பிறந்து,

பாவ மாசில்லாம வாழ்ந்து 

பாவ மாசில்லாம மரித்து

 என்னை அவமானப்படுத்திட்டாங்க."

"எனக்குத் தாயாகப் போறவங்க பாவ மாசில்லாம இருக்க வேண்டும் என்பது என்பது எனது நித்திய காலத்திட்டம்.

அவங்களைப் பாவ மாசின்றி படைத்தது நான்தான்.

அதற்கு இப்ப என்ன செய்யப்போற?"

"உங்க பிள்ளைகள் எல்லோரும் அவங்கள அமலோற்பவத் தாய் என்று கொண்டாடிக் கொண்டிருக்காங்க.

அது எனக்குப் பிடிக்கல"

"உனக்கு என்றைக்கு நல்லது பிடிச்சிருக்கு. இப்ப என்ன செய்யப் போற?"


"அவங்க மற்ற மனிதர்களைப் பாவ மாசு உள்ளவர்கள்தான் என்று உங்க பிள்ளைகளை நம்ப வைக்கணும்."

"அதற்கு?"

"அவங்களது அமல உற்பவத்திற்கான பைபிள் ஆதாரங்களை அழிக்கணும்.

அவற்றை அழிச்சிட்டா மக்கள் நான் சொல்றத நம்புவாங்க.

ஆதாரங்களை அழிக்க இதுதான் சரியான நேரம்.


இப்ப பைபிளுக்கு புதிய மொழி பெயர்ப்புக் கொடுக்கப் போறாங்க.

நீங்க சரின்னு சொல்லிட்டீங்கள்னா மொழி பெயர்ப்பாளர்கள் மூலமா ஆதாரங்களை அழிச்சிடுவேன்."

"ஏண்டா உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா?"

"இல்லை.   இருந்திருந்தால் சம்மனசுக்களிலேயே மிக அழகாக இருந்த நான் கொழுத்துப்போய் சாத்தானா மாறியிருப்பேனா? 

அனுமதி கொடுங்கள், மாதா பக்தர்களை என்பக்கம் இழுத்துக் காட்டுகிறேன்."


"உன்னால் முடியாதுன்னு உனக்கே தெரியும்.

நீ என்ன தீமை செய்தாலும்

 அதிலிருந்து நன்மையை வரவழைக்க என்னால் முடியும் என்றும் உனக்குத் தெரியும்.

ஆனாலும் உனக்கு வேறு வேலை இல்லை.

Go. Permission granted."


"Hi! Michael!  Bye! , வெற்றியோடு திரும்புகிறேன்!

By the by, நான் என்ன செய்யப் போகிறேன் என்று சொல்ல வில்லையே!

மரியாளின் அமல உற்பவத்திற்கான பைபிள் ஆதாரங்களை அழிக்கப் போகிறேன்,  

பைபிள் படிப்பாளிகளின்(Bible Scholars) துணை கொண்டே!

என்னை யாரும் சந்தேகப்பட மாட்டார்கள்.

இனி ஆதியாகமத்த்தில் 'அவள் உன் தலையை நசுக்குவாள்' என்னும் வசனம் இருக்காது.

புதிய ஏற்பாட்டில் கபிரியேல் மரியாளை 'அருள் நிறைந்தவளே' என்று வாழ்த்த மாட்டார். 

'அருள் மிகப் பெற்றவளே' என்றுதான் வாழ்த்துவார்.

நிறைவு போய்விடும், டும், டும்,டும்!

மிகுதி வந்திடும், டும், டும்,டும்!

ஆதாரம் Out!

அமலோற்பவம் Out!"


"சீ!  வாயப்பொத்து! அம்மா  உன் தலை நசுங்கி ரொம்ப நாளாச்சி!

அருள் நிறைந்த அன்னை இன்று விண்ணக, மண்ணக அரசி!

 உன்னால அன்னையையோ, அன்னை பக்தர்களையோ ஒண்ணும் பண்ண முடியாது.

போ!  தலையைத் தொங்கப் போட்டுக்கிட்டு வா!"

"தலைன்னு ஒண்ணு இருந்தால்தானடா தொங்கப் போட முடியும்!

Bye!"

(சில ஆண்டுகள் கழித்து)

"ஹலோ! மிஸ்டர் சாத்தான்!

ஆளையே காணல! 

 உன் டும், 'டும்,டும்,டும்' என்னாச்சி?"

"இந்த முட்டாப் பயல்களை நம்பி சவால் விட்டுப் பேசியது தப்பாப் போச்சி."


"ஏன்?  என்னாச்சி?"

"பிரிஞ்சி போன எல்லோர்   கையிலும் ஒரு பையிள் இருக்கு. 

நீ அவங்கள்ட்ட என்ன சொன்னாலும், "பைபிளில இருக்கான்னுதான் கேட்கிறான்.

ஆனால் உங்காள்கள் கையிலும் கட்டாயப்படுத்தி பைபிள் கொடுத்திருக்காங்க.

ஆனால் யாரும் சீரியசா வாசிக்கிறது மாதிரி தெரியல.

அவங்களுக்கு அவங்க பங்குச் சாமியார்தான் எல்லாம்.

சாமிமார் தங்களுடைய பிரசங்கத்தில 
கிறிஸ்தவ வாழ்வுக்குரிய அடிப்படை உண்மைகளை எல்லாம் 

சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள்.

அப்படியே சிலர் பைபிள் வாசித்திலும் விளக்கத்துக்குச் சாமியார்ட்டதான் போராங்க.

பூமியில ஆயிரக்கணக்கா மாதா கோயில்ள் இருக்கின்றன.

ஒவ்வொரு கோவிலிலேயும் மாதாவுக்கு ஒரு செல்லப்பேர் வச்சிருக்காங்க.

அது மட்டுமல்ல மாதாவுக்கு ஒவ்வொரு மாதமும் திருவிழா வச்சிருக்காங்க.

அவங்க வேலையே மாதா
பெருமையைப் பாடறதும்

மாதா பக்தியை வளர்க்கிறதும்தான்! 

பாப்பானவரும், பிஷப்மாரும், சாமிமாரும் இருக்கிற வரைக்கும் என்னால் மக்களை ஒன்றுமே செய்யடியாது.

உண்மையிலேயே இராயப்பர் கல்லுதான்.

மூணுதடவை இயேசுவை மறுதலிக்க வச்சேன்.

அதுக்காக மனுசன் வாழ்நாள் முழுதும் அழுதுருக்காரு.

உங்காட்கள் எல்லாம் அழுமூஞ்சிப் பயலுக.

ரொம்பச் சங்கடப்பட்டு சோதனை மேல் சோதனை கொடுத்து பாவம் செய்ய வச்சிருப்பேன்.

திடீர்னு பார்த்தா அழுதுகிட்டே கோவிலுக்குள் போவாங்க,

 சிரிச்சிக்கிட்டே வெளியே வருவாங்க, 

உள்ளே எட்டிப் பார்த்தா ஒரு சாமியார் உட்கார்ந்திருப்பார்!"


"ஆதார அழிப்பு என்ன ஆச்சி?"

"ஒண்ணும் ஆகல.

மாதா பக்தி நாளுக்கு நாள் வளர்ந்துகிட்டுதான் இருக்கு.

பைபிள் வாசிக்காவிட்டாலும் செபமாலை ஒழுங்கா சொல்லிடராங்க.

கையில பைபிள் இருக்கோ இல்லியோ, பாக்கட்ல செபமாலை இருக்கு."

"ஆக சாத்தானே மாதா புகழ் பாட ஆரம்பிடிச்சு."

"ஹலோ!  நான் ஒண்ணும் புகழ் பாடல. உண்மை நிலையைச் சொன்னேன், பழைய Friend ஆச்ச!"

"வாயக் கழுவு!  நான் உனக்கு  Friend ஆ?"

"பழையன்னுதான சொன்னேன்!"

"கடவுள எப்போ சந்திக்கப்போற?"

"முயற்சியைக் கைவிட மாட்டேன்.  மாதாவைத் தோற்கடிச்சிட்டுச் சந்திப்பேன்."

"அது ஒருநாளும் நடக்காது.

பந்தை எவ்வளவு வேகமா கீழ பார்த்து உதைக்கிறியோ அவ்வளவு வேகமா மேலே பார்த்துப் போகும்.

மாதாபக்தியை எவ்வளவு வேகமா அழிக்கப் பார்க்கிறியோ அவ்வளவு வேகமா  அது வளரும்!

Every action has its equal reaction!

நீ  உன்னையே பெரிய வில்லன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்.

ஆனால் உன் வில்லன்தனத்தை எல்லாம்

 கடவுள் தனது நித்திய திட்டத்தை 

நிறைவேற்றப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.


இறுதிக் காலத்தில் உனக்குப் புரியும்,

 நீ எதை எல்லாம் அழிக்க நினைக்கிறாயோ

 அதெல்லாம் நிறைவேறியிருக்கும் 

உன் உதவியாலே!"

"என்ன உளறுகிறாய்?  

கடவுளா என்னை வில்லனாக மாற்றினார்?

நான் தீமை. கடவுள் நல்லவர். 
அவர் எப்படித் தீமையைப் பயன் படுத்த முடியும்?"

"முட்டாள்! முட்டாள்!

கடவுள் உன்னை நல்லவனாகத்தான் படைத்தார்.

அவரால் தீமையைப் படைக்க முடியாது.

"கடவுள் தாம் படைத்த எல்லாவற்றையும் நோக்கினார். அவை எல்லாமே மிகவும் நன்றாய் இருந்தன."
(ஆதி.1:31)

ஆனால் கடவுள் உனக்கு அளித்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உன்னையே தீயவனாக மாற்றிக் கொண்டாய்.

உன்னால் தீமையை மட்டும்தான் செய்யமுடியும்.

கடவுளால் நன்மையை மட்டும்தான் செய்ய முடியும்.

அவரது நித்திய நல்ல திட்டம் நிறைவேறிக் கொண்டிருந்தபோது

தீமையாகிய நீ குறுக்கே பாய்ந்தாய்.

ஆனால் கடவுள் உன் தீமையை தனது நல்ல திட்டம் நிறைவேறப் பயன்படுத்திக் கொண்டார்.

தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க கடவுளால் முடியும்.

ஆதிப் பெற்றோரை பாவத்தில் விழத்தாட்டியவன் நீ.

ஆனால் அதை 

அவரே மனிதனாய்ப் பிறந்து

 தன் அளவற்ற அன்பை மனிதனுக்கு வெளிப்படையாகக் காட்டப் பயன் படுத்திக் கொண்டார்! 

யூதர்களைப் பயன்படுத்தி இயேசுவைக் கொன்றாய்.

ஆனால் இயேசுவின் சாவிலிருந்துதான் அவரது நித்திய திட்டமாகிய மனித இரட்சண்யம் பிறந்தது!

நீ கொன்றாய். இரட்சண்யம் பிறந்தது.

ஐயோ பாவம் நீ! வில்லன்  என்று நினைத்துக் கொண்டு Hero வுக்கு உதவிக் கொண்டிருக்கிறாய்!"

"டேய்!  மைக்கில்!  உன்னை என்ன செய்கிறேன் பார்!" 


"அடேய்! நான் கொடுத்த ஒரே மிதியில் நரகத்தில் வித்தையடித்து வீழ்ந்தவன் நீ.

இப்போ  என்னைப் பார்த்து
வீர வசனம்  பேசுகிறாய்!"

" செய்யத்தான் முடியவில்லை!  வசனம் கூட பேசக் கூடடாதா!

டேய் மைக்கில்! நீ விண்ணுலக சேனைகளின் தளபதி என்றால், 

நான் நரகுலக சேனைகளின் தளபதி!

நீயா, நானா?  பார்க்கிறேன் ஒரு கை!"

லூர்துசெல்வம்.