Sunday, February 25, 2018

"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்." (லூக்.6:36)

"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்." (லூக்.6:36)
"""'''''''''''''''''''''''''""""'''''''"'''''''''''''''''''''''''''''''''''''''''''''

" தாயைப்போல் பிள்ளை,  நூலைப்போல் சேலை"- அனுபவப்பூர்வமான பழமொழி.

ஒரு பிள்ளையின் முகச் சாயலைப் பார்த்தவுடன் 'இது இன்னாருடைய பிள்ளை' 
என்று கூறிவிடலாம்.

முகச்சாயல்   மட்டுமல்ல தாய் தந்தையரின் குணங்கள்கூட பிள்ளைகட்கு  வந்துவிடுவதுண்டு.

ஆனாலும் தனி மனித சுதந்திரம், வாழ்க்கைச்ஞ சூழ்நிலை காரணமாக குணபாவங்கள் மாறுபடுதுதுண்டு.

ஆனால் தனி மனித சுதந்திரம்  உள்ள நாம் நமது சுதந்திர உரிமையைப் பயன்படுத்தி நல்ல குணபாவங்களை நம்முடையதாக்கிக்கொள்ள வேண்டும்.

இறைமகன் இயேசுவின் ஆசை:

நமது விண்ணகத் தந்தை நிறைவுள்ளவர்.

நாமும் நிறைவுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணகத் தந்தை அன்புள்ளவர்.

நாமும் அன்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணகத் தந்தை இரக்கம் உள்ளவர்.

நாமும் இரக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணகத் தந்தை மன்னிக்கிறவர்.

நாமும் மன்னிக்க வேண்டும்.

நமது குண நலன்களை வைத்து

நாம் விண்ணகத் தந்தையின் மக்களென்றும்,

இயேசுவின் சீடர்களென்றும்

மற்றவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

நமது தந்தையின் இரக்கத்தின் காரணமாகத்தான்,

அவரது ஒரே மகனை நமது இரட்சகராகப் பெற்றோம்.

நாம் பெற்ற இரட்சகரை மற்றவர்கட்கும் தரவேண்டாமா?

நற்செய்திப் பணி இரக்கத்தின் பணியல்லவா?

இயேசுவை அறியாதவர்மீது இரக்கம் காட்டவேண்டாமா?

இயேசு நற்செய்தியை அறிவிக்கவும்,

நமது பாவங்ளுக்குத் தன் மரணத்தின்மூலம் பரிகாரம் செய்யயவும்   வந்தார்.

அப்பணியின்போது சென்றவிடமெல்லாம் தன் இரக்கத்தின் காரணமாக நோயாளிகளைக் குணமாக்கினார், மரித்தோரை உயிர்ப்பித்தார்.

நாம் அன்பு செய்தால் மட்டும் போதாது.

உள்ளத்து அன்பை நமது இரக்கச் செயல்கள் மூலம் செயல்படுத்த வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment