Thursday, February 22, 2018

"முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள்." (மத்.5:24)


"முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள்." (மத்.5:24)
+++++++++++++++++++++++++

எதற்காக இறைவனுக்குக் காணிக்கை செலுத்துகிறோம்?

அவருக்கு pocket money.   யாகவா? அதாவது,  அவரது செலவுக்காகவா?

இவ்வுலகிலுள்ள எல்லாமே அவருக்கு உரியவை.

நம்மிடம் இருப்பதெல்லாம் அவரால் நமக்குத் தரப்பட்டவை.

அவர் மேல் நாம் கொண்டுள்ள அன்பைத் தெரிவிப்பதற்காகவே காணிக்கை செலுத்துகிறோம்.

அன்பைத் தெரிவிக்க முதலில் நம்மிடம் அன்பு இருக்க வேண்டும்.

அன்பு இருக்கும் இடத்தில் சமாதானம்  இருக்கும்.

நமது அயலானுக்கும் நமக்கும் இடையில் சமாதானம் இல்லையேல் நம் அன்பில் குறைபாடு உள்ளது என்று பொருள்.

அன்பு கலவாத காணிக்கை   காணிக்கையே அல்ல,  வெறும் காசுதான்.

ஆகவே,

நம் சகோதரனுக்கு நம்மீது மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நாம் நினைவுற்றால்,

அவனோடு சமாதானம் செய்து நம் அன்பைச் சரி செய்த பின்புதான் நமதுகாணிக்கையைச் செலுத்த வேண்டும்.

அந்த காணிக்கைதான்,  அதாவது அன்புதான்,  இறைவனுக்கு ஏற்ற காணிக்கை.

கோவிலில் போடும் காணிக்கை மட்டுமல்ல,

நமது அயலானுக்கு நாம் அன்புடன் செய்யும்

பண உதவியும்,

செயல் உதவியும்கூட

நாம் இறைவனுக்கு அளிக்கும் காணிக்கைதான்.

ஆகவே கோவிலில் மட்டுமல்ல,

தெருவில்கூட இறைவனுக்கு காணிக்கை செலுத்தலாம்.

எங்கே  அன்பு இருக்கிறதோ,  அங்கு இறைவன் இருக்கிறார்.

இறைவன் மாறாதவர். அவர் எப்போதும் நம்மோடு சமாதானமாகவே உள்ளார்.

நாம் பாவம் செய்யும்போது சமாதானப்பாதையை விட்டு விலகுகிறோம். இறைவன் விலகுவதில்லை.

பாவங்களுக்காக மனம் வருந்தும்போது, மன்னிப்புப்பெற்று சமாதானப் பாதைக்குத் திரும்புகிறோம்.

மக்களும் ஒருவரை ஒருவர் மன்னித்து,  சமாதானத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

மன்னிப்போம்.

மன்னிப்புப் பெறுவோம்.

சமாதானத்தோடு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment