Tuesday, April 1, 2025

அன்புக்கு வயது இல்லை.


அன்புக்கு வயது இல்லை.


கடவுளை  அன்பு செய்யவும், அவருக்கு சேவை செய்யவும், அதன் மூலம் அவரோடு நித்திய வாழ்வைப் பெறவும் அவர் நம்மைப் படைத்தார்.


இந்த உலகில் நமது செயல்கள் அனைத்தும்  கடவுளின் மேலான மகிமையையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

 நமது திருமண வாழ்க்கையும் நமது வாழ்க்கை நிகழ்வுகளுள் ஒன்றுதான்.


திருமண அருட்சாதனத்தை நிறுவியவர் கடவுளே.


எனவே திருமணமான தம்பதியினர் கடவுளுக்காக, கடவுளுக்காக மட்டுமே வாழ  வேண்டும்.

ஒருவரையொருவர் திருமணம் செய்வதன் மூலம், கடவுளின் மீட்புத் திட்டத்தில்   பங்கு வகிக்க அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

அவர்களுடைய திருமண வாழ்வுதான் அவர்களது மீட்புக்குக்கான வழி.

திருமணத்திற்கான முதல் நிபந்தனை அன்பு.

கணவன் மனைவிக்கு இடையேயான அன்பு தெய்வீக அன்பைப் பிரதிபலிக்க வேண்டும்.

கடவுளின் அன்பு அளவில்லாதது,  நிபந்தனையற்றது.

திருமண அன்புக்கு எல்லை கிடையாது.

திருமண அன்பிற்குள் நிபந்தனைகள் நுழையக்கூடாது.
No if clause in marital relationship.

'நீ எனக்குக் கீழ்ப்படிந்தால் நான் உன்னை காதலிப்பேன்', 

'நீங்கள் சுறுசுறுப்பாக இருந்தால்தான் நான் உங்களை விரும்புவேன்'

போன்ற நிமந்தனைகளுக்கு அன்பில் இடமில்லை.

கடவுள் நம்மை நிபந்தனையின்றி நேசிக்கிறார்.

அவரை நேசிக்காத பாவிகளையும் அவர் நேசிக்கிறார்.

திருமணமான தம்பதியினர் எப்படி அன்பு செய்ய ஆரம்பிக்கிறார்களோ அப்படியே இறுதிவரை அன்பு செய்ய வேண்டும். 

(The married couple should always be beginners in love.)


''உங்கள் வயது?"

"எண்பது."

"உங்கள் மனைவியை எப்படி அன்பு செய்கிறீர்கள்?"

"திருமணத்தன்று நேசித்தது போலவே இன்றும் நேசிக்கிறேன்.

நாங்கள் அன்பில் எப்போதும் இளைஞர்கள் தான்."

"எத்தனை வயது இளைஞர்கள்?"

"20 வயது. அன்புக்கு வயது கிடையாது."


நாம் சிலுவை அடையாளம் போடும் போதெல்லாம்,

 "ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும், எப்பொழுதும், அநாதி சதாகாலமும் இருக்கும்படியே.

ஆமென்.

என்று சொல்கிறோம்.

இதை நாம் கடவுளைப் பற்றி கூறுகிறோம்.

இயேசு, "உங்கள் பரலோகத் தந்தை நிறைவுள்ளவராக இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாக இருங்கள்" என்று கூறியுள்ளார். (மத்தேயு 5:48)

நம்முடைய அன்பு பரிசுத்த திரித்துவத்திற்குள் இருக்கும் அன்பைப் போல இருக்க வேண்டும்.

கத்தோலிக்க அன்பு தனித்தன்மை வாய்ந்தது.


கடவுள் மீதான அன்பும்,
 அயலார் மீதான அன்பும் கிறிஸ்தவ தம்பதியரின் அன்பில் சந்திக்கின்றன.


முந்தையது அவர்களை கடவுளுடன் ஒன்றிணைக்கிறது,

 பிந்தையது அவர்களின் குழந்தைகள் மற்றும் அவர்கள் உறுப்பினராக இருக்கும் சமூகத்துடன் ஒன்றிணைக்கிறது.


கிறிஸ்தவ அன்பு கடவுளையும் அவருடைய குழந்தைகளையும் அரவணைக்கிறது, 

அவர்கள் நம் அயலார்கள்.


ஒரு கணவர் கூறினார், "கடவுளின் இதயத்தில் இருக்கும் அன்புடன் என் மனைவியை நேசிக்க விரும்புகிறேன். 

அதை  நானாக எப்படிச் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, 

எனவே அதை கடவுளிடமிருந்தே  கற்றுக்கொள்ள  என் வாழ்நாள் முழுவதும் முயன்று  கொண்டிருக்கிறேன்."


தம்பதியினர் தங்கள் அன்பை கடவுளுடைய அன்பாக மாற்ற கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இந்த பிரார்த்தனை அவர்கள் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.

அவர்கள் ஒன்றாக பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒன்றாக பிரார்த்தனை செய்யும் குடும்பம் ஒன்றாக இருக்கும்.

திருமணமான தம்பதியினர் எது செய்தாலும் கடவுளின் முன்னிலையில் செய்யப்படுகிறது.

அவர்கள் தங்கள் அனைத்து செயல்களிலும் இதை நினைவில் வைத்திருந்தால், அவர்கள் தங்கள் திருமண கடமைகளைச் செய்யும்போது பாவங்களுக்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டார்கள்.

குழந்தை கருத்தரிப்பதை செயற்கையாகத் தடுப்பது பாவம் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

                   **

"மூன்றாவது குழந்தை உண்டாகாமல் இருக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?"

"ஒன்றுமே செய்ய வேண்டாம்!"
  
                **

கருக்கலைப்பு ஒரு கொலை என்பதால் அதுவும் ஒரு பாவம்.


அவர்கள் என்ன செய்தாலும் திருச்சபையின் கட்டளைகளுக்கு எதிராகச் செய்யக்கூடாது.

அவர்கள் கடவுளுக்காக, கடவுளுக்காக மட்டுமே வாழ வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment