Friday, November 26, 2021

"எந்நேரமும் செபித்து விழிப்பாயிருங்கள்."(லூக்.21:36)

"எந்நேரமும் செபித்து விழிப்பாயிருங்கள்."
(லூக்.21:36)

வாழ்வின் உயர்ந்த நிலையில் வைக்கக்கூடிய வேலை ஒன்றுக்கு விண்ணப்பித்திருக்கிறோம்.

நேர்காணல் Online ல்.

நேர்காணலுக்கான அழைப்பு எந்த வனாடியிலும் வரலாம்.

அழைப்பு வரும்போது தயாராக இருப்பவர்களுக்கு நேர்காணல் நடைபெறும், வேலையும் கிடைக்கும்.

அழைப்பு வரும்போது தூங்கிவிட்டாலோ, வேறு வேலையில் ஈடுபட்டிருந்தாலோ

 நிச்சயமாக வேலை இல்லை என்ற நிலை இருந்தால் என்ன செய்வோம்?

அழைப்பு வரும் வரை நிச்சயமாக தூங்கமாட்டோம்.

அதேபோல்தான் ஆன்மீக வாழ்விலும்.

விண்ணகத்துக்காக நம்மை படைத்து இந்த உலகில் வாழவிட்டிருக்கும் இறைவன்,

 நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச்செல்ல எந்த வினாடியும் வரலாம்.

ஆண்டவர் வரும்போது நாம் தயாராக இருந்தால் அவரோடு விண்ணகம் செல்வோம்.

தயாராக இல்லாவிட்டால் விண்ணகம் செல்ல முடியாது.

ஆகவேதான் ஆண்டவர் சொல்கிறார்,

"எந்நேரமும் செபித்து விழிப்பாயிருங்கள்."


ஆண்டவரின் வருகைக்காக நாம் ஒவ்வொரு வினாடியும் தயாராக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வினாடியும் செபித்து விழிப்பாயிருக்க வேண்டும்.

நமது ஆன்மா இறைவனோடு ஒன்றித்து இருக்கும் நிலையைத்தான் ஜெபம் என்கிறோம்.


ஒவ்வொரு வினாடியும் எப்படி ஜெபித்து இறைவனோடு ஒன்றித்து இருப்பது? வேறு வேலை எதுவும் செய்ய வேண்டாமா?

காலையில் விழிப்பது முதல் மறுநாள் காலையில் விழிப்பது வரை,

பல் தேய்ப்பது முதல் தூங்குதல் உட்பட அனைத்து வேலைகளையும் இறைவனுக்காகவே செய்தால் நாம் இறைவனோடு ஒன்றித்திருக்கிறோம்.

இறைவனோடு ஒன்றித்திருப்பவர்களால் இறைவனுக்கு எதிராக பாவம் செய்ய முடியாது.

கிழக்கு நோக்கி நடப்பவனால் அதே நேரத்தில் எப்படி மேற்கு நோக்கி நடக்க முடியும்?

ஒரே நேரத்தில் எதிர்த் திசைகளில் செல்ல முடியாது.

அதேபோல்தான் ஒரே நேரத்தில் இறைவனுக்காகவும், பாவத்திற்காகவும் வாழ முடியாது.

ஒவ்வொரு மூச்சையும் இறைவனுக்காக விட ஆரம்பித்தால் பாவம் நம்மை நெருங்காது.

இறைவனுக்காக வாழும் ஒவ்வொரு வினாடியும் இயேசுவின் வருகைக்காக தயாராக இருக்கிறோம்.

 இறைவனுக்காக வாழும் ஒவ்வொரு வினாடியும்

விண்ணக வாழ்வுக்கு தயாராக இருக்கிறோம்.

ஒவ்வொரு செயலையும் இறைவனுக்காக செய்வோம்,

 இறைவனுக்காக மட்டுமே செய்வோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment