Tuesday, November 23, 2021

" நீங்கள் சாட்சியாயிருப்பதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்." (லூக்.21:13)

" நீங்கள் சாட்சியாயிருப்பதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்." (லூக்.21:13)

" என் பெயரின்பொருட்டு
 உங்களைப் பிடித்து, செபக்கூடங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் இழுத்துச் சென்று, அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் உங்களைக் கையளித்துத் துன்புறுத்துவர்."

இயேசுவின் பெயரால் நற்செய்தி அறிவிப்பவர்களுக்கு என்ன நேரிடும் என்று இயேசு இந்த வசனத்தில் கூறுகிறார்.

நற்செய்தியை எதிர்பார்ப்பவர்களுக்கு ஈடாக அதை எதிர்ப்பவர்களும் இருப்பார்கள்.

அவர்களால் நற்செய்தியை அறிவிக்கின்றவர்கள் அந்த ஒரே காரணத்திற்காக துன்பப்படுத்தப் படுவார்கள்.

நற்செய்தியை அறிவித்தல் என்பது வாழைப்பழத்தை உரித்து சாப்பிடுவது போல அவ்வளவு எளிதான காரியமன்று.

பலாப் பழத்தை உரித்து சாப்பிடுவது போன்றது.

பூப் பொழிவிற்கு மத்தியில் அல்ல,

 கல் மழைக்கு மத்தியில் கல் 
எறிதலையும் தாங்கிக் கொண்டுதான் நற்செய்தியை அறிவிக்க வேண்யிருக்கும்.

அதனால் ஏற்படும் காயங்களை மட்டுமல்ல, மரணத்தையும் கூட ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

அப்படிபட்டவர்கள்தான் வேத சாட்சிகள், அதாவது நற்செய்திக்கான சாட்சிகள்.

ஆகவேதான் "நீங்கள் சாட்சியாயிருப்பதற்கு இவை (அரசினர் தரும் துன்பங்கள்) உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்." 

என்று இயேசு சொல்கிறார்.

வேத சாட்சிகளின் ரத்தத்தில்தான் திருச்சபை வளர்ந்திருக்கிறது என்பதற்கு வரலாறு சாட்சி.

இன்றைய காலகட்டத்தில் நற்செய்தி அறிவித்ததற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற எதிர்ப்புகள் நம்நாட்டில் திருச்சபை வளரப்போகிறது என்பதற்கான முன் அடையாளம்.

நற்செய்தி அறிவிப்பவர்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்கு இயேசுவின் வாழ்க்கையே முன்னுதாரணம்.


நற்செய்தியை அறிவிக்க அவர் ஆரம்பித்த ஆரம்பித்த காலத்திலிருந்தே அவரை எதிர்ப்பவர்களும் அவரை பின்தொடர ஆரம்பித்துவிட்டார்கள்.

 அவரோடு மரணம் வரை இருந்தவர்களும் அவர்கள்தான்.

நாம் இயேசுவின் சீடர்கள்.

 தாயை போல பிள்ளை என்பது போல் 

குருவை போல சீடன் என்பார்கள்.

ஆகவே நற்செய்தியின் பொருட்டு நாம் கஷ்டப் பட நேரும் போது நாம் இயேசுவைப் போல் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டும். 

சிலுவைக்குப் பிறகு தான் உயிர்ப்பு என்பதை நினைவில் வைத்துக் கொள்வோம்.

நற்செய்திக்காகக் கஷ்டப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்,

 ஏனெனில் அவர்களே இயேசுவைப் பிரதிபலிக்கிறார்கள்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment