Tuesday, November 30, 2021

செல்வத்தின் வருகை.

      செல்வத்தின் வருகை.

திருவருகைக் காலத்தை ஒரு வித்தியாசமான கோணத்திலிருந்து தியானிப்போம்.

திருவருகைக் காலம் என்றால் ஆண்டவரது வருகைக்காக தயாரிக்கும் காலம்.

திருவருகை என்ற வார்த்தையை 
திரு + வருகை என்று பிரித்துக் கொள்வோம்.

திரு என்ற சொல் ஆண்டவரை குறிப்பதாக வைத்துக் கொள்வோம்.

திரு என்ற சொல்லுக்கு தமிழில் , செல்வம் என்ற பொருள் உண்டு.

செல்வம் என்ற பொருளில் எடுத்துக் கொண்டால்

திருவருகை என்ற சொற்றொடர் செல்வத்தின் வருகை என்று பொருள்படும்.

ஆண்டவராகிய இயேசு தான் நமது செல்வம்.

திருவருகைக் காலத்தை செல்வத்தின் வருகைக் காலம் என்ற அடிப்படையில் தியானிப்போம்.

இயேசுவை செல்வம் என்ற பொருளில் தியானிப்பதில் என்ன விசேஷம் இருக்கிறது?

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்:
 ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே." (லூக்.6:20)

இந்த இறைவாக்கிலிருந்து இரண்டு உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1.கடவுளின் அரசுக்கு உரியவராக இயேசு ஒரு செல்வந்தர். 
அந்த செல்வந்தர் தான் நமது செல்வம்.

2, அந்த செல்வத்துக்கு நாம் உரியவர்கள் ஆக வேண்டுமென்றால் நாம் அவரைப்போல் ஏழைகளாக இருக்க வேண்டும்.

அதை நமக்கு புரிய வைப்பதற்காகத்தான் செல்வந்தர் ஆகிய இயேசு ஏழையாக பிறந்தார்.

இப்போது ஒரு முக்கியமாக உண்மை புரிந்திருக்கும்.

திருவருகைக் காலம் என்றால் ஏழையின் வருகைக் காலம்.

மரியாள் என்ற ஏழைப் பெண்மணியின் மகனாகப் பிறந்த ஏழையின் வருகைக் காலம்.

பிறக்கக் கூட இடம் இன்றி மாட்டுத் தொழுவத்தில் பிறந்த ஏழையின் வருகைக் காலம்.

படுக்க மெத்தை கிடைக்காமல் மாடுகளின் தீவனத் தொட்டியில் படுத்த ஏழையின் வருகைக் காலம்..

முதல் முதலில் ஏழைகளாகிய ஆட்டு இடையர்கள் பார்க்கச் சென்ற ஏழையின் வருகைக் காலம்.

உணவிற்காக தச்சு வேலை செய்து வாழ்ந்த ஏழையின் வருகைக் காலம்.

பொது வாழ்வின் போது தலை சாய்க்க கூட இடம் கிடைக்காத
ஏழையின் வருகைக் காலம்.

வாழ்வின் இறுதிக்காலத்தில் உடுக்கக் கூட துணி இல்லாமல் மரத்தாலான சிலுவையில் உயிர் விட்ட ஏழையின் வருகைக் காலம்.

இப்போது மற்றொரு உண்மையும் 
புரிந்திருக்கும்.

ஏழ்மை தான் உண்மையான செல்வம்.

இயேசு நமது செல்வம்.
அதாவது,
இயேசு நமது ஏழ்மை.

நாம் ஏழைகளாக இருந்தால்தான் இயேசுவை நமது செல்வம் என்று அழைக்க முடியும்.

நாம் ஏழைகளாக இருந்தால்தான் அவரது அரசுக்குள் நுழைய முடியும்.

கிறிஸ்மஸ் ஏழைகளின் விழா.

ஏழைகளின் விழாவை எப்படி கொண்டாட வேண்டும்?

நமது கொண்டாட்டத்தில் ஏழ்மை இருக்க வேண்டும்.

இலட்சக்கணக்காய் செலவழித்து புத்தாடை வாங்குவது ஏழ்மையின் அடையாளமா?

இலட்சக்கணக்காய் செலவழித்து வீட்டை அலங்கரிப்பது ஏழ்மையின் அடையாளமா?

ஒரு ஏழை பிறந்த குடில் தயாரிக்க ஆயிரக்கணக்காய் செலவழிப்பது 
ஏழ்மையின் அடையாளமா? 

கிறிஸ்மஸ் விருந்துக்கு என்று ஆயிரக்கணக்காய் செலவழிப்பதுதான் ஏழ்மையின் அடையாளமா? 

எதுதான் ஏழ்மையின் அடையாளம்? 

ஆண்டவருக்காக ஏழையாய் மாறினாலே போதும். வேறு அடையாளம் தேவை இல்லை.

ஏழையாக மாறுவது எப்படி?

"பற்றுக பற்றற்றான் பற்றினைப் பற்றுக பற்று விடற்கு."

அனைத்தும் சொந்தமாக இருந்தும் அவற்றின் மீது பற்று இல்லாமல் பிறந்த இயேசுவைப்போல்
 ஏழையாக மாற வேண்டும்.

 அதற்காகத்தான் திருவருகைக்காலம் கொடுக்கப்பட்டுள்ளது.

கையில் காசு இல்லாதவன் எல்லாம் ஏழை அல்ல.

கோடிக் கணக்காய் வைத்திருப்பவன் எல்லாம் பணக்காரனும் அல்ல.

கையில் காசே இல்லாதவனும் பணத்தில் மேல் ஆசை உள்ளவனாக இருந்தால் அவன் பணக்காரன்தான்.

கோடிக் கணக்காய் வைத்திருப்பவனும் பணத்தில் மேல் ஆசை இல்லாதவனாக இருந்தால் அவன் ஏழைதான்.

அகில உலகமே சொந்தமாக இருந்தும் இயேசு அதன் மேல் பற்று இல்லாமல் ஏழையாகப் பிறந்தார், ஏழையாக வாழ்ந்தார், ஏழையாக மரித்தார்.

அதனால்தான் எளிய மனத்தோர் பேறுபெற்றோர் என்றார்.
Blessed are the poor in spirit.

நாம் உண்மையிலேயே கையில் காசு இல்லாதவர்களாக இருந்தால் நமது ஏழ்மையை ஆண்டவருக்கு ஒப்பு கொடுக்கவேண்டும்.

கையில் கொஞ்சம் வசதி உள்ளவர்களாக இருந்தால் அதன்மீது பற்றில்லாமல் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கவேண்டும்.

நம்மிடம் இருப்பதை இல்லாத ஏழைகளோடு பகிர்ந்து கொள்வதுதான் கடவுளுக்கு ஒப்புக் கொடுப்பது.

அப்படி பகிர்ந்து கொள்பவர்களைப் பார்த்துதான் இயேசு 

"பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள். 

தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்.

 அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்றீர்கள்.

ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள்.

 நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்.''
என்று சொல்லுவார்.
 
நம்மிடம் இருப்பதன்மேல் பற்றில்லாமல் ஏழைகளோடு பகிர்ந்துகொண்டு 

ஏழை இயேசுவைப்போல் வாழ்வதற்காக தான் திருவருகைக்காலம் தரப்பட்டுள்ளது.

இலட்சக் கணக்காய் செலவழித்து ஆடம்பரமாய் கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்கு நம்மையே தயாரிப்பதற்காக அல்ல.

கிறிஸ்மஸ் dress வாங்க வேண்டியது நமக்கு அல்ல,
 இயேசு பாலனுக்கு, அதாவது இல்லாமல் வாழும் ஏழைகளுக்கு.

கிறிஸ்மஸ் விருந்து கொடுக்க வேண்டியது நமக்கு அல்ல,
 இயேசு பாலனுக்கு, அதாவது இல்லாமல் வாழும் ஏழைகளுக்கு.

அலங்கரிக்க வேண்டியது வீட்டையோ, கோவிலையோ குடிலையோ அல்ல,
நமது ஆன்மாவை, புண்ணியங்களால்.

கிறிஸ்மஸ் அன்று எளிய உடைகளை அணிந்திருக்கும் இயேசுவை Tip top dress அணிந்து பார்க்கச் சென்றால் நமது பணத் திமிரை அவரிடம் காட்டுவது போல் இருக்கும்.

சூசையப்பரும், அன்னை மரியாளும், இடையர்களும் எவ்வளவு எளிமையோடு கிறிஸ்மசைக் கொண்டாடினார்களோ,

 அவ்வளவு எளிமையோடு நாமும் கொண்டாடுவோம்.

அதற்கு நம்மை நாமே தயாரிப்பதற்காகத்தான் திரு வருகைக் காலம் தரப்பட்டுள்ளது.

ஆகவே 
ஏழை இயேசுவின் நினைவோடும், ஏழைகளின் உறவோடும்,
உண்மையான பக்தியோடும்,
தவ முயற்சிகளோடும்,

எளிய முறையில் கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட 
தரப்பட்டிருக்கிற திருவருகைக் காலத்தில் நம்மை நாமே தயாரிப்போம்.

ஏழ்மைதான் உண்மையான செல்வம் என்பதை நினைவில் கொள்வோம்.

லூர்து செல்வம்.

செல்வத்தின் வருகை.

      செல்வத்தின் வருகை.

திருவருகைக் காலத்தை ஒரு வித்தியாசமான கோணத்திலிருந்து தியானிப்போம்.

திருவருகைக் காலம் என்றால் ஆண்டவரது வருகைக்காக தயாரிக்கும் காலம்.

திருவருகை என்ற வார்த்தையை 
திரு + வருகை என்று பிரித்துக் கொள்வோம்.

திரு என்ற சொல் ஆண்டவரை குறிப்பதாக வைத்துக் கொள்வோம்.

திரு என்ற சொல்லுக்கு தமிழில் , செல்வம் என்ற பொருள் உண்டு.

செல்வம் என்ற பொருளில் எடுத்துக் கொண்டால்

திருவருகை என்ற சொற்றொடர் செல்வத்தின் வருகை என்று பொருள்படும்.

ஆண்டவராகிய இயேசு தான் நமது செல்வம்.

திருவருகைக் காலத்தை செல்வத்தின் வருகைக் காலம் என்ற அடிப்படையில் தியானிப்போம்.

இயேசுவை செல்வம் என்ற பொருளில் தியானிப்பதில் என்ன விசேஷம் இருக்கிறது?

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்:
 ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே." (லூக்.6:20)

இந்த இறைவாக்கிலிருந்து இரண்டு உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1.கடவுளின் அரசுக்கு உரியவராக இயேசு ஒரு செல்வந்தர். 
அந்த செல்வந்தர் தான் நமது செல்வம்.

2, அந்த செல்வத்துக்கு நாம் உரியவர்கள் ஆக வேண்டுமென்றால் நாம் அவரைப்போல் ஏழைகளாக இருக்க வேண்டும்.

அதை நமக்கு புரிய வைப்பதற்காகத்தான் செல்வந்தர் ஆகிய இயேசு ஏழையாக பிறந்தார்.

இப்போது ஒரு முக்கியமாக உண்மை புரிந்திருக்கும்.

திருவருகைக் காலம் என்றால் ஏழையின் வருகைக் காலம்.

மரியாள் என்ற ஏழைப் பெண்மணியின் மகனாகப் பிறந்த ஏழையின் வருகைக் காலம்.

பிறக்கக் கூட இடம் இன்றி மாட்டுத் தொழுவத்தில் பிறந்த ஏழையின் வருகைக் காலம்.

படுக்க மெத்தை கிடைக்காமல் மாடுகளின் தீவனத் தொட்டியில் படுத்த ஏழையின் வருகைக் காலம்..

முதல் முதலில் ஏழைகளாகிய ஆட்டு இடையர்கள் பார்க்கச் சென்ற ஏழையின் வருகைக் காலம்.

உணவிற்காக தச்சு வேலை செய்து வாழ்ந்த ஏழையின் வருகைக் காலம்.

பொது வாழ்வின் போது தலை சாய்க்க கூட இடம் கிடைக்காத
ஏழையின் வருகைக் காலம்.

வாழ்வின் இறுதிக்காலத்தில் உடுக்கக் கூட துணி இல்லாமல் மரத்தாலான சிலுவையில் உயிர் விட்ட ஏழையின் வருகைக் காலம்.

இப்போது மற்றொரு உண்மையும் 
புரிந்திருக்கும்.

ஏழ்மை தான் உண்மையான செல்வம்.

இயேசு நமது செல்வம்.
அதாவது,
இயேசு நமது ஏழ்மை.

நாம் ஏழைகளாக இருந்தால்தான் இயேசுவை நமது செல்வம் என்று அழைக்க முடியும்.

நாம் ஏழைகளாக இருந்தால்தான் அவரது அரசுக்குள் நுழைய முடியும்.

கிறிஸ்மஸ் ஏழைகளின் விழா.

ஏழைகளின் விழாவை எப்படி கொண்டாட வேண்டும்?

நமது கொண்டாட்டத்தில் ஏழ்மை இருக்க வேண்டும்.

இலட்சக்கணக்காய் செலவழித்து புத்தாடை வாங்குவது ஏழ்மையின் அடையாளமா?

இலட்சக்கணக்காய் செலவழித்து வீட்டை அலங்கரிப்பது ஏழ்மையின் அடையாளமா?

ஒரு ஏழை பிறந்த குடில் தயாரிக்க ஆயிரக்கணக்காய் செலவழிப்பது 
ஏழ்மையின் அடையாளமா? 

கிறிஸ்மஸ் விருந்துக்கு என்று ஆயிரக்கணக்காய் செலவழிப்பதுதான் ஏழ்மையின் அடையாளமா? 

எதுதான் ஏழ்மையின் அடையாளம்? 

அண்ட வருக்காக ஏழையாய் மாறினாலே போதும். வேறு அடையாளம் தேவை இல்லை.

ஏழையாக மாறுவது எப்படி?

"பற்றுக பற்றற்றான் பற்றினைப் பற்றுக பற்று விடற்கு."

அனைத்தும் சொந்தமாக இருந்தும் அவற்றின் மீது பற்று இல்லாமல் பிறந்த இயேசுவைப்போல்
 ஏழையாக மாற வேண்டும்.

 அதற்காகத்தான் திருவருகைக்காலம் கொடுக்கப்பட்டுள்ளது.

கையில் காசு இல்லாதவன் எல்லாம் ஏழை அல்ல.

கோடிக் கணக்காய் வைத்திருப்பவன் எல்லாம் பணக்காரனும் அல்ல.

கையில் காசே இல்லாதவனும் பணத்தில் மேல் ஆசை உள்ளவனாக இருந்தால் அவன் பணக்காரன்தான்.

கோடிக் கணக்காய் வைத்திருப்பவனும் பணத்தில் மேல் ஆசை இல்லாதவனாக இருந்தால் அவன் ஏழைதான்.

அகில உலகமே சொந்தமாக இருந்தும் இயேசு அதன் மேல் பற்று இல்லாமல் ஏழையாகப் பிறந்தார், ஏழையாக வாழ்ந்தார், ஏழையாக மரித்தார்.

அதனால்தான் எளிய மனத்தோர் பேறுபெற்றோர் என்றார்.
Blessed are the poor in spirit.

நாம் உண்மையிலேயே கையில் காசு இல்லாதவர்களாக இருந்தால் நமது ஏழ்மையை ஆண்டவருக்கு ஒப்பு கொடுக்கவேண்டும்.

கையில் கொஞ்சம் வசதி உள்ளவர்களாக இருந்தால் அதன்மீது பற்றில்லாமல் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கவேண்டும்.

நம்மிடம் இருப்பதை இல்லாத ஏழைகளோடு பகிர்ந்து கொள்வதுதான் கடவுளுக்கு ஒப்புக் கொடுப்பது.

அப்படி பகிர்ந்து கொள்பவர்களைப் பார்த்துதான் இயேசு 

"பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள். 

தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்.

 அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்றீர்கள்.

ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள்.

 நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்.''
என்று சொல்லுவார்.
 
நம்மிடம் இருப்பதன்மேல் பற்றில்லாமல் ஏழைகளோடு பகிர்ந்துகொண்டு 

ஏழை இயேசுவைப்போல் வாழ்வதற்காக தான் திருவருகைக்காலம் தரப்பட்டுள்ளது.

இலட்சக் கணக்காய் செலவழித்து ஆடம்பரமாய் கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்கு நம்மையே தயாரிப்பதற்காக அல்ல.

கிறிஸ்மஸ் dress வாங்க வேண்டியது நமக்கு அல்ல,
 இயேசு பாலனுக்கு, அதாவது இல்லாமல் வாழும் ஏழைகளுக்கு.

கிறிஸ்மஸ் விருந்து கொடுக்க வேண்டியது நமக்கு அல்ல,
 இயேசு பாலனுக்கு, அதாவது இல்லாமல் வாழும் ஏழைகளுக்கு.

அலங்கரிக்க வேண்டியது வீட்டையோ, கோவிலையோ குடிலையோ அல்ல,
நமது ஆன்மாவை, புண்ணியங்களால்.

கிறிஸ்மஸ் அன்று எளிய உடைகளை அணிந்திருக்கும் இயேசுவை Tip top dress அணிந்து பார்க்கச் சென்றால் நமது பணத் திமிரை அவரிடம் காட்டுவது போல் இருக்கும்.

சூசையப்பரும், அன்னை மரியாளும், இடையர்களும் எவ்வளவு எளிமையோடு கிறிஸ்மசைக் கொண்டாடினார்களோ,

 அவ்வளவு எளிமையோடு நாமும் கொண்டாடுவோம்.

அதற்கு நம்மை நாமே தயாரிப்பதற்காகத்தான் திரு வருகைக் காலம் தரப்பட்டுள்ளது.

ஆகவே 
ஏழை இயேசுவின் நினைவோடும், ஏழைகளின் உறவோடும்,
உண்மையான பக்தியோடும்,
தவ முயற்சிகளோடும்,

எளிய முறையில் கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட 
தரப்பட்டிருக்கிற திருவருகைக் காலத்தில் நம்மை நாமே தயாரிப்போம்.

ஏழ்மைதான் உண்மையான செல்வம் என்பதை நினைவில் கொள்வோம்.

லூர்து செல்வம்.

Monday, November 29, 2021

"உலகத்திற்கு என்ன நேருமோ என்னும் ஏக்கத்தினாலும் அச்சத்தினாலும் மக்கள் உயிர்விடுவார்கள்."(லூக்.21:26)

"உலகத்திற்கு என்ன நேருமோ என்னும் ஏக்கத்தினாலும் அச்சத்தினாலும் மக்கள் உயிர்விடுவார்கள்."
(லூக்.21:26)


சென்ற ஞாயிற்றுக்கிழமை பூசை முடிந்து வீட்டிற்கு வந்த உடனேயே எனது பேரன் ஒரு பெரிய சந்தேகத்தைச் சுமந்துகொண்டு என்னிடம் வந்தான்.


"என்னடா பேரா! உன் முகத்தைப் பார்த்தால் ஒரு பெரிய சந்தேகக் கல்லைச்  சுமந்துகொண்டு வருவது போல் தெரிகிறது!"

" ஆமா, தாத்தா, ஒரு பெரிய சந்தேகம்."

"சொல்லு."

"இன்று திருவருகைக் காலத்தின் முதல் நாள்தானே."

", ஆமா. திருச்சபையின் வழிபாட்டு ஆண்டைப்  பொறுத்தமட்டில் இன்றுதான் வருடப்பிறப்பு."

"Correct. அதனால்தான் எனக்கு இந்த சந்தேகமே வந்தது. வருடப்பிறப்பு அன்று நாம் ஒருவரை ஒருவர் எப்படி வாழ்த்திக் கொள்வோம்?

நீண்ட நாள் மகிழ்ச்சியோடு வாழ்க என்று சொல்வோமா? இறந்து மடிக என்று சொல்வோமா?"

",நீண்ட நாள் மகிழ்ச்சியோடு வாழ்க என்றுதான் சொல்வோம்.

அதில் உனக்கு இப்போது என்ன சந்தேகம்?"

"இன்றைய நற்செய்தி வாசகத்தில் உலக முடிவைப் பற்றி தான் வாசித்தோம். சாமியார் அதைப் பற்றி தான்  பிரசங்கமும் வைத்தார். 

 "உலகத்திற்கு என்ன நேருமோ என்னும் ஏக்கத்தினாலும் அச்சத்தினாலும் மக்கள் உயிர்விடுவார்கள்."

இது  வாசகத்தின் ஒரு சிறு பகுதி.
இது பிறக்கும்போதே இறப்பைப் பற்றி பேசுவது போல் தெரிகிறது.

 புத்தாண்டில் நம்மை வாழ்த்துவது போல் நற்செய்தியில் வேறு வாசகங்கள் கிடைக்கவில்லையா?"

", உண்மையில் இதுதான்டா மிகப்பெரிய வாழ்த்து."

"ஆரம்பிக்கும்போதே முடிவைப் பற்றி பேசுவது வாழ்த்தா?

யாராவது பிறந்தநாளன்று மரணம் பற்றி பேசுவதா?"

",விவசாயி நடும்போது எதை நினைத்து  நடுகிறான்?"

"அறுவடையை நினைத்துதான்."

",பேருந்தில் ஏறும் போது எதை நினைத்து ஏறுகிறாய்?

"பத்திரமாக ஊரில் இறங்க வேண்டும் என்பதை நினைத்து தான்."

",  எதை நினைத்து பள்ளியில் படிக்க ஆரம்பிக்கிறாய்?"

"வெற்றியோடு படித்து முடிக்க வேண்டும்  என்பதை நினைத்து தான்."

",அதேபோல்தான் இதுவும். 

எப்படி இறங்குவதற்காகவே பேருந்தில் ஏறுகிறோமோ,

 அதேபோல்தான் ஆன்மீக ரீதியாக,

 இறப்பதற்காகவே பிறக்கிறோம்.
.
பணக்காரனாக பிறப்பதை விட பரிசுத்தனாக இறப்பதே முக்கியம்.

உண்மையில் இறப்பு என்பது முடிவு அல்ல.

எப்படி மேல்நிலை பள்ளி படிப்பின் முடிவு, கல்லூரி படிப்புக்கு ஆரம்பமோ,

அதேபோல் இவ்வுலக வாழ்வின் முடிவு நித்திய பேரின்ப வாழ்வின் ஆரம்பம்.

ஒரு வேலையை ஆரம்பிக்கும்போது அதை நல்ல முறையில் செய்து 'முடிப்பாயாக' என்று வாழ்த்துவதே முறை.

வீட்டுக்கு புறப்பட்டு போகின்றவனை ஏன் போனவுடன் ஒரு phone  செய் என்று சொல்கிறோம்?

பத்திரமாக வீட்டுக்கு போய் சேர் என்று சொல்வதைத்தானே
 அப்படி சொல்கிறோம்!

விண்ணக வாழ்வின் ஆரம்பத்தை மனதில் வைத்துதான் வழிபாட்டு ஆண்டின் முதல் நாளிலேயே உலக அழிவைப் பற்றி திருச்சபை பேசுகின்றது.

நாம் இவ்வுலகில் பிறந்தது, விண்ணக வாழ்விற்காகத்தானே!

நட்சத்திரங்களையும் உலகையும் படைத்தவரே அவை அழிந்து போகும், என்று சொல்லியிருக்கிறார்.

அழிவு இல்லாதது இறைவனுடைய வார்த்தையும், அவர் வாழும் விண்ணகமும்தான்.

நாம் விரும்புகிறோமோ 
விரும்பவில்லையோ 

நமது இவ்வுலக வாழ்வு முடிவுக்கு வந்தே தீரும்.

 ஒருவரைப் பார்த்து "நீண்டநாள் வாழ்க" என்று நாம் 
வாழ்த்தும்போது நாம் வாழ்த்த மட்டும்தான் செய்கிறோம்.

ஆனால் நீண்ட நாள் வாழ்வு நமது கையில் இல்லை,

நமது இவ்வுலக வாழ்வு இறைவன் கையில்தான் இருக்கிறது.

அது  என்று முடியும் என்பது அவரது திட்டத்தை பொருத்தது.

எப்படி முடியும் என்பது நமது ஒத்துழைப்பைப் பொருத்தது.

நமது சுதந்திரத்தை பயன்படுத்தி இறைவனது சித்தத்தை நிறைவேற்றி வாழ்ந்தால்

 நமது இவ்வுலக வாழ்வின் முடிவு மறுவுலக பேரின்ப வாழ்வின் ஆரம்பமாக இருக்கும்.

ஆகவே ஒருவரை வாழ்த்தும்போது உங்களது இவ்வுலக வாழ்வின் முடிவு உறுதி என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும்.

அப்போதுதான் அவர்கள் தங்களது இவ்வுலக வாழ்வின் முடிவு மறுவுலக 
பேரின்ப வாழ்வின் ஆரம்பமாக இருப்பதற்கு ஏற்றவகையில் வாழ்வார்கள்.

ஆகவேதான் தாய் திருச்சபை வழிபாட்டு வருடப் பிறப்பன்று  உலக அழிவை ஞாபகப்படுத்தி வாசகங்களை கொடுத்துள்ளது."

"அதாவது இந்த உலகம் ஒரு நாள் முடியும், 

ஆகவே இதை நம்பி வாழாமல் என்றென்றும் இருக்கப் போகிற

 நித்திய பேரின்ப வாழ்வை நம்பி வாழ நமக்கு அறிவுறுத்துகிறது அப்படித்தானே."

",அப்படியேதான். நீண்ட நாள் வாழ்வது முக்கியமல்ல,

 வாழ்வின் முடிவு நல்ல முடிவாக இருக்கும்படி வாழ்வது தான் முக்கியம்.

100 ஆண்டுகள் இஷ்டம் போல் வாழ்ந்து விட்டு 100வது ஆண்டு 
பாவத்தோடு இறந்து, பரலோகத்தை இழப்பதை விட,

ஒரு சில ஆண்டுகளே இறைவனது சித்தப்படி வாழ்ந்து 

நித்திய பேரின்பத்தை அடைவது
 எவ்வளவோ மேல். 

இந்தியாவிற்கு வரும்படியாக அமெரிக்காவில் ஆகாய விமானத்தில் ஏறுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

இந்தியாவில் வந்து பத்திரமாக இறங்குவது முக்கியமா?

 விமானத்திலேயே ஆகாயத்தில் பறந்து கொண்டிருப்பது முக்கியமா?"

"ஆகவே முடிவை நினைத்தே வாழ வேண்டும் என்கிறீர்கள்."

", முடிவை மட்டும்தான்  நினைத்து வாழ வேண்டும்.

எப்படி பள்ளி இறுதித் தேர்வை நினைத்து ஆண்டு முழுவதும் படிக்கிறோமோ அதேபோல வாழ்வின் இறுதி நாளை நினைத்தே வாழ வேண்டும்.

அதனால்தான் ஒவ்வொரு நாளும் நமது பரலோக அன்னையைப் பார்த்து 

"எங்கள் மரண நேரத்திலும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்"

 என்று ஜெபிக்கிறோம். 

இவ்வுலக  வாழ்வின் முடிவுதான் மறுவுலக வாழ்வின் ஆரம்பம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்வோம்.

லூர்து செல்வம்.

Saturday, November 27, 2021

"ஆண்டவரே, நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்."(மத்.8:8)

"ஆண்டவரே, நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்."
(மத்.8:8)

இயேசுவால் ஒரே வார்த்தையால் தனது ஊழியனைக் குணமாக்க முடியும் என்ற ஆழ்ந்த விசுவாசத்தோடும்,

அவர் தன் இல்லத்துக்குள் வர தான் தகுதியற்ற பாவி என்ற தாழ்ச்சியோடும் நூற்றுவர் தலைவன் கூறிய வார்த்தைகள் இவை.

அவனுடைய விசுவாசத்தைப் பாராட்டி இயேசு அவனது ஊழியனை தனது வார்த்தையால் குணமாக்கினார்.

நூற்றுவர் தலைவன் கூறிய அதே வார்த்தைகளை நாம் திவ்ய நற்கருணை அருந்தும் முன் கூறுகிறோம். 

அவன் கூறிய அதே உணர்வோடு,

அதாவது ஆழ்ந்த விசுவாசத்தோடும் தாழ்ச்சியோடும் கூறவேண்டும்.

இயேசு பரிசுத்தர். நாம் பாவிகள். இயேசு நமது உள்ளத்தைத் ஆலயமாகக் கருதி அதில் குடியிருக்கிறார் என்றால்

 அது நமது தகுதியினால் அல்ல, அவரது அளவு கடந்த இரக்கத்தினால்.

நாம் தகுதி உள்ளவர்கள் அல்ல என்றால்

தகுதி உள்ளவர்களாக ஆக்கிக்கொள்ள  வேண்டும்.

நமது உள்ளத்தை பாவமாசின்றி பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பரிசுத்தமான உள்ளத்தோடுதான் 
திவ்விய நற்கருணை மூலமாக இயேசுவை நமது உள்ளத்திற்குள் வரவேற்க வேண்டும்.

நமது விழுந்த இயல்பு (Fallen nature)
காரணமாக நாம் பாவத்தில் விழ நேரிட்டால் 

அதற்காக மனஸ்தாபப்பட்டு பாவ சங்கீர்த்தனம் செய்து 

நமது உள்ளத்தை பரிசுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.

திவ்ய நற்கருணை வாங்கும்போது மட்டுமல்ல எப்போதுமே நாம் இறைவன் வாழும் ஆலயங்கள்தான்.

எங்கும் வாழும் இறைவன் நமது உள்ளத்திலும் குடியிருக்கிறார்.

இறைவன் எங்கும் இருப்பதால்,

நாம் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி,

பாவத்தோடு இருந்தாலும் சரி, பாவம் இல்லாதிருந்தாலும் சரி,

நல்லவர்களாக இருந்தாலும் சரி,
கெட்டவர்களாக இருந்தாலும் சரி,

அவர் நமக்குள் இருந்து நம்மை பராமரித்து வருவதை தடுக்க முடியாது.

நமது உள்ளம் பாவமில்லாமல் பரிசுத்தமாக இருந்தால் நாம் இறைவனுக்கு உரிய மரியாதையை கொடுக்கிறோம்.

அதற்குரிய பலனை பெறுகிறோம்.

பாவத்தோடிருந்தால் அதற்குரிய விளைவை அனுபவிக்க நேரிடும்.

 ஆகவே நற்கருணை வாங்கும்போது மட்டுமல்ல நாம் எப்போதுமே பாவ மாசின்றி இருக்க வேண்டும்.

எப்போதுமே பாவ மாசின்றி இருப்பது எப்படி?

இறைவன் நமக்குத் தந்திருக்கும் கட்டளைகளை அனுசரித்தால் நமக்குள் பாவம் புகாது.

கட்டளைகளை அனுசரிக்க வேண்டும் என்றால் அவைகளை நமக்குத் தந்த இறைவனை முழுமனதோடு நேசிக்க வேண்டும்.

நம்மை நேசிப்பது போல பிறனையும் நேசிக்க வேண்டும்.

முழுமையாக இறையன்பும், பிறர் அன்பும் உள்ளவன் பாவம் செய்ய மாட்டான்.

இறையன்புடனும், பிறர் அன்புடனும் வாழ வேண்டுமென்றால் அதற்கு இறைவனது அருள் உதவி தேவை.

நமக்குத் தேவையான அருள் உதவியை இறைவனை வேண்டி பெற வேண்டும்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்'' என்று இயேசு சொன்னதே நமக்கு வேண்டிய இறை அருள் உதவியை பற்றிதான்.

தேவ திரவிய அனுமானங்களை பெறுவதன் மூலமும்,

பிறரன்பு செயல்கள் மூலமும்,

தவ முயற்சிகள் மூலமும்

இறை அருள் உதவியைப் பெறலாம்.

சுருக்கமாக, கிறிஸ்தவ நெறிப்படி வாழ்ந்தால் இறைவன் தரும் அருள் வரங்களின் உதவியால்

நாம் இறைவன் தங்கும் ஆலயங்களாக மாறத் தகுதி பெறுவோம்.

லூர்து செல்வம்.

Friday, November 26, 2021

"எந்நேரமும் செபித்து விழிப்பாயிருங்கள்."(லூக்.21:36)

"எந்நேரமும் செபித்து விழிப்பாயிருங்கள்."
(லூக்.21:36)

வாழ்வின் உயர்ந்த நிலையில் வைக்கக்கூடிய வேலை ஒன்றுக்கு விண்ணப்பித்திருக்கிறோம்.

நேர்காணல் Online ல்.

நேர்காணலுக்கான அழைப்பு எந்த வனாடியிலும் வரலாம்.

அழைப்பு வரும்போது தயாராக இருப்பவர்களுக்கு நேர்காணல் நடைபெறும், வேலையும் கிடைக்கும்.

அழைப்பு வரும்போது தூங்கிவிட்டாலோ, வேறு வேலையில் ஈடுபட்டிருந்தாலோ

 நிச்சயமாக வேலை இல்லை என்ற நிலை இருந்தால் என்ன செய்வோம்?

அழைப்பு வரும் வரை நிச்சயமாக தூங்கமாட்டோம்.

அதேபோல்தான் ஆன்மீக வாழ்விலும்.

விண்ணகத்துக்காக நம்மை படைத்து இந்த உலகில் வாழவிட்டிருக்கும் இறைவன்,

 நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச்செல்ல எந்த வினாடியும் வரலாம்.

ஆண்டவர் வரும்போது நாம் தயாராக இருந்தால் அவரோடு விண்ணகம் செல்வோம்.

தயாராக இல்லாவிட்டால் விண்ணகம் செல்ல முடியாது.

ஆகவேதான் ஆண்டவர் சொல்கிறார்,

"எந்நேரமும் செபித்து விழிப்பாயிருங்கள்."


ஆண்டவரின் வருகைக்காக நாம் ஒவ்வொரு வினாடியும் தயாராக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வினாடியும் செபித்து விழிப்பாயிருக்க வேண்டும்.

நமது ஆன்மா இறைவனோடு ஒன்றித்து இருக்கும் நிலையைத்தான் ஜெபம் என்கிறோம்.


ஒவ்வொரு வினாடியும் எப்படி ஜெபித்து இறைவனோடு ஒன்றித்து இருப்பது? வேறு வேலை எதுவும் செய்ய வேண்டாமா?

காலையில் விழிப்பது முதல் மறுநாள் காலையில் விழிப்பது வரை,

பல் தேய்ப்பது முதல் தூங்குதல் உட்பட அனைத்து வேலைகளையும் இறைவனுக்காகவே செய்தால் நாம் இறைவனோடு ஒன்றித்திருக்கிறோம்.

இறைவனோடு ஒன்றித்திருப்பவர்களால் இறைவனுக்கு எதிராக பாவம் செய்ய முடியாது.

கிழக்கு நோக்கி நடப்பவனால் அதே நேரத்தில் எப்படி மேற்கு நோக்கி நடக்க முடியும்?

ஒரே நேரத்தில் எதிர்த் திசைகளில் செல்ல முடியாது.

அதேபோல்தான் ஒரே நேரத்தில் இறைவனுக்காகவும், பாவத்திற்காகவும் வாழ முடியாது.

ஒவ்வொரு மூச்சையும் இறைவனுக்காக விட ஆரம்பித்தால் பாவம் நம்மை நெருங்காது.

இறைவனுக்காக வாழும் ஒவ்வொரு வினாடியும் இயேசுவின் வருகைக்காக தயாராக இருக்கிறோம்.

 இறைவனுக்காக வாழும் ஒவ்வொரு வினாடியும்

விண்ணக வாழ்வுக்கு தயாராக இருக்கிறோம்.

ஒவ்வொரு செயலையும் இறைவனுக்காக செய்வோம்,

 இறைவனுக்காக மட்டுமே செய்வோம்.

லூர்து செல்வம்

Thursday, November 25, 2021

" மண்ணும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழியவே ஒழியா."(லூக்.21:33)

" மண்ணும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழியவே ஒழியா."
(லூக்.21:33)

இயேசு தனது இரண்டாவது வருகை பற்றியும்,

 அது வரும்போது உலகில் தோன்றும் அறிகுறிகளை பற்றியும் கூறிய பின்

"மண்ணும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழியவே ஒழியா"

என்று கூறினார்.

விண்ணிலுள்ள நட்சத்திரங்களையும் நாம் வாழும் இந்த பூமியையும் ஒன்றும் இல்லாமையிலிருந்து படைத்தவர் அவரே.

படைத்தவரே கூறுகிறார் அவை ஒழிந்து போகும் என்று.

ஆனால் அவரது வார்த்தைகள், அவர் கூறிய உண்மைகள் நித்தியமானவை.

அவரது வார்த்தைகளின்படி நமது ஆன்மா அழியாதது.

நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவரது வார்த்தைகளையா, 

நாம் வாழும் அழிந்து போகக்கூடிய   உலகத்தையும், விண்ணில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களையுமா?

 இறைவன் விண்ணையும் மண்ணையும் நமக்காகவே படைத்தாரேயொழிய, நம்மை அவற்றுக்காக படைக்கவில்லை.

நம்மை அவருக்காகவே படைத்தார்.

நமது வாழ்வின் நோக்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டியது இறைவன் ஒருவரைத்தான்.

இறைவனைப் பற்றியும், அவரை அடைவது எப்படி என்பது பற்றியும் இயேசு தனது வார்த்தைகளால் தெளிவாக கூறியுள்ளார்.

அதை அறிந்து கொள்வதற்காகவே நாம் இயேசுவின் வார்த்தைகளை வாசிக்க வேண்டும், 
தியானிக்க வேண்டும்,
 வாழ வேண்டும்.

இவ்வுலக உண்மைகளை பற்றி தெரிந்து கொள்வதற்காக இயேசுவின் வார்த்தைகளை நாம் வாசித்தால் நமது வாசிப்பு வீண்.

உதாரணத்திற்கு பைபிள்   உலகின் படைப்பைப் பற்றி கூறுகின்றது.

பைபிள் உலகின் தோற்றம் பற்றி கூறும் விஞ்ஞான நூல் அல்ல,

சிலர் விஞ்ஞான நூலை வாசிப்பது போல பைபிளை வாசித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஆராய்ச்சி வீண்.

நாம் இறை வார்த்தையை வாசிப்பது இறைவனைப்பற்றி அறிந்து கொள்வதற்காக,

உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அல்ல.

சர்வத்தையும் படைத்தவர் இறைவனே,

மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தார்,

 நமது பாவத்தினால் இறை உறவை முறித்துக்கொண்டோம்,

நாம் முறித்துக்கொண்ட உறவை மீட்டுத்தர மீட்பரை அனுப்ப இறைவன் வாக்களித்தார்,

மீட்பரின் தாய் பாவ மாசு இன்றி 
உற்பவிப்பாள்

என்ற இறைச் செய்தியை பைபிள்  தருகின்றது.

விஞ்ஞானபூர்வமான உலக தோற்றத்தைப் பற்றி அல்ல.

பைபிளில் வரலாறு இருக்கிறது.
ஆனால் அது இறைச் செய்தியை நமக்கு தருவதற்கான வரலாறு.

சாதாரண உலக வரலாற்றுப் புத்தகங்களை வாசிப்பது போல் அதை வாசிக்க கூடாது.

 அதில் இருக்கும் இறைச் செய்தியைப் புரிந்து, கிரகித்துக் கொள்வதற்காக வாசிக்க வேண்டும்.

இஸ்ரயேல் மக்கள் வரலாற்றை வாசிக்கும்போது இறைவன் தன் மக்களை எப்படி கருணையோடு பராமரித்து வருகிறார் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

நமது ஆன்மாவின் மீட்பை மையமாக வைத்தே பைபிள் வாசிப்பு இருக்க வேண்டும்.

ரயிலில் ஏறி சென்னைக்கு பிரயாணம் செய்வதாக வைத்துக்கொள்வோம்.

சென்னைக்கு போவதற்காக ரயிலில் பயணிக்கின்றோமா?

அல்லது,

ரயிலில் பயணிப்பதற்காக சென்னைக்கு போகின்றோமா?

நிச்சயமாக நோக்கம் போகவேண்டிய இடமேயொழிய பிரயாணம் அல்ல.

அதே போல்

 விண்ணகம் போவதற்காக உலகில் பயணிக்கின்றோமா?

 அல்லது 

உலகில் பயணிப்பதற்காக விண்ணகம் செல்கிறோமா?

நிச்சயமாக நோக்கம் 
விண்ணகமேயொழிய பிரயாணம் அல்ல.

பைபிளின் நோக்கம் விண்ணகத்தை நோக்கிய ஆன்மீக பயணத்தில் நமக்கு உதவுவதே,

உலக வாழ்வில் உதவுவதற்காக அல்ல.

Bible is meant for our spiritual life,
not material life.

அன்பர் ஒருவர் 

"எனது மகனுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்திருக்கிறேன். அதற்கு ஆலோசனை கூற பைபிளை கேட்கப்போகிறேன்." என்றார்.

" பைபிளுக்கு உங்கள் பெண்ணை எப்படி தெரியும்?" என்று கேட்டேன்.

"கண்ணை மூடிக்கொண்டு பைபிளைத் திறப்பேன்.

 எந்த வசனம் என் கண்ணில் படுகிறதோ அதை வைத்து செய்யலாமா செய்ய வேண்டாமா என்பதை தீர்மானிப்பேன்.

 பைபிள் நமது வாழ்க்கைக்கு வழிகாட்டி என்று பங்கு சாமியார் சொன்னாரே.

இதோ பாரும்." என்று கூறிக்கொண்டே பைபிளை கையில் எடுத்தார்.

கண்ணை மூடிக்கொண்டே பைபிளைத் திறந்தார்.

கண்ணில் பட்ட வசனத்தை வாசித்தார்.

" போய் நான்றுகொண்டான்."
(மத்.27:5)

"இப்போ என்ன செய்யப் போகிறீர்?" என்று கேட்டேன். 

"திரும்பவும் கேட்கப் போகிறேன்" என்று சொல்லிக் கொண்டே கண்ணை மூடி திறந்தார்.

கண் போன போக்கு சரியில்லை.

"என்ன கண்ணில் பட்டது " என்று கேட்டேன்.

" நீரும் போய் அவ்வாறே செய்யும்"
(லூக். 10:37)

"இப்போ என்ன செய்யப் போகிறீர்?"

"முக்கா முக்கா மூணு நேரம் பார்க்க வேண்டும்."

கண்ணை மூடி பைபிளைத் திறந்தார்.

முகம் போன போக்கு சரியில்லை.

"என்ன கண்ணில் பட்டது "

"செய்யவேண்டியதை விரைவில் செய்" (அரு13:27)

"இப்போ என்ன செய்யப் போகிறீர்?"

"இந்த பெண் வேண்டாம் என்று விட்டுவிட வேண்டியதுதான்."

நான் சிரித்துவிட்டேன்.
"
"ஏன் சிரிக்கிறீர்கள்?"

"செய்யவேண்டியதை விரைவில் செய்" என்றுதானே வாசித்தீர்கள். இந்த வாக்கியம் திருமணத்திற்கு எப்படி தடையாகும்?"

"அது முதல் தடவை திறக்கும்போது வந்திருக்க வேண்டும்."

"பிறகு ஏன் இரண்டாவது தடவை திறந்தீர்கள்?"

அவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"ஹலோ! உங்களுக்கு பெண் பார்க்க உதவுவதற்காக பைபிள் எழுதப்படவில்லை.

அது ஆன்மீக வழிகாட்டியான இறைவார்த்தை.

இப்படி சோசியம் பார்ப்பதற்காக பைபிளை வாசிக்கக் கூடாது.

திருச்சபையின் வழிகாட்டுதலின்படி வாசித்து, தியானித்து, அதன்படி நடப்பதற்காக பைபிளை பயன்படுத்த வேண்டும்.

பைபிள் ஆன்மீக வழி காட்டி, உலக
வழி காட்டி அல்ல."

அநேகர் இறைவனையே இவ்வுலக வாழ்க்கைக்கே பயன்படுத்த விரும்புகிறார்கள்.

அவர் நம்மை மறு உலக 
வாழ்க்கைகாகவே படைத்தார்.

அவரை இவ்வுலக வாழ்க்கைக்காக மட்டும் பயன்படுத்த விரும்புவது நோக்கத்திற்கு எதிரான செயல்.

இவ்வுலக வாழ்க்கைக்கான உதவிகளை  இறைவனிடம் கேட்கலாம்.
 தடை இல்லை.

ஆனால் அது மறுவுலக வாழ்க்கைக்கு நமக்கு உதவுவதாக இருக்க வேண்டும்.

குழந்தை வரம் கேட்கலாம். குழந்தையை இறைவனுக்காக வளர்ப்பது நோக்கமாக இருக்க வேண்டும்.

நல்ல சுகம் கேட்கலாம். அது இறைப்பணியில் நமக்கு உதவுவதற்காக இருக்க வேண்டும்.

இந்த உலகம் நமக்கு தரப்பட்டிருப்பதே இறை பணிக்காக பயன் படுத்துவதற்காகத்தான்.

விண்ணுலக வாழ்க்கையை நோக்கமாகக் கொண்டு எந்த உதவியையும் வேண்டுமானாலும் கேட்கலாம்.

அழியாத விண்ணுலகை மறந்துவிட்டு 

அழியக்கூடிய இவ்வுலக வாழ்க்கைக்காக மட்டும் இறைவனின் உதவியை நாடுவது 

இறைவனையே அவருக்கு எதிராக செயல்படக் கேட்பதற்குக் சமம்.

ஏனெனில் விண்ணுலக நோக்கமின்றி மண்ணுலகில் வாழ்வதற்காக மட்டும் கடவுள் மனிதனை படைக்கவில்லை.

ஒருவன் தென்காசியில் இருந்து சென்னைக்கு ஒரு பேருந்தில் பயணிக்கிறான்.

பேருந்தை இடையில் சாப்பாட்டிற்காக ஏதாவது ஹோட்டல் அருகே அரை மணி நேரம் நிறுத்துவது வழக்கம்.

ஹோட்டலுக்குள் நுழைந்தவன் சாப்பாட்டிலேயே ஒரு மணி நேரம் செலவழித்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம்.

என்ன நடக்கும்?

பேருந்து போய் விடும்.

அவனால் போக வேண்டிய இடத்திற்கு போக முடியாது.

இவ்வுலகில் வாழும் போது இவ்வுலகை மட்டும் நினைத்து அல்ல,

 விண்ணுலகை மட்டும் நினைத்து வாழ்வோம்.

அதற்காக இறைவனின் வார்த்தையை வாசித்து தியானிப்போம்.

லூர்து செல்வம்.

Wednesday, November 24, 2021

நமக்காக இயேசு ஏற்றுக் கொண்ட பலகீனங்கள்.

நமக்காக இயேசு ஏற்றுக் கொண்ட பலகீனங்கள்.

கிணற்றுக்குள் விழுந்தவனை காப்பாற்ற வேண்டுமென்றால்,

 காப்பாற்ற விரும்புகிறவன் கிணற்றுக்குள் குதித்தாக வேண்டும்.

தண்ணீருக்குள் மூழ்க தெரிந்தவனால்தான் மூழ்கியவனை காப்பாற்ற முடியும்.


இந்த அடிப்படையில்தான் உலகில் வாழும் மனிதனை பாவத்திலிருந்து மீட்க இறைமகன் உலகில் மனிதனாகப் பிறந்தார்.

விண்ணகத்திலிருந்து கொண்டே மனிதனைப் படைத்த சர்வ வல்லவராகிய கடவுளால் 

விண்ணகத்திலிருந்து கொண்டே,

 மனிதனாகப் பிறக்காமல், 

தனது வல்லமையால், மனிதனைப் பாவத்திலிருந்து மீட்டிருக்க முடியாதா?

முடியும்.

 அவர் எல்லாம் வல்லவர்.

 அவரால் முடியாதது எதுவுமில்லை.

நாம் கேட்காமலேயே நம்மை படைத்த இறைவனால் நாம் கேட்காமலேயே நமது பாவங்களை எல்லாம் மன்னித்திருக்க முடியும்.

 ஏனெனில் அவர் சர்வ வல்லவர்.

ஆனால் அவர் தனது வல்லமையை நம்மிடம் காட்ட விரும்பவில்லை,

 நம் மீது அவர் கொண்டுள்ள அளவில்லாத அன்பை காட்ட விரும்புகிறார்.

 தனது அன்பை வெளிப்படுத்தவே வல்லமையையும் பயன்படுத்துகிறார்.

நமது நண்பன் தனது திருமணத்திற்கு நம்மை அழைத்திருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

நம்மிடம் உள்ள விஞ்ஞான கருவிகளால் நமது வாழ்த்துக்களை அவனுக்கு அனுப்பி விடலாம்.

ஒரு Video call மூலமாகவோ WhatsApp மூலமாகவோ வாழ்த்துக்களை அனுப்பி விடலாம்.

பரிசு பொருளைக்கூட தபால் மூலம் அனுப்பி விடலாம்.

ஆனால் அவனது திருமண விழாவிற்கு நேரில் சென்று, அவனைப் பார்த்து வாழ்த்தும்போது நாம் வெளிப்படுத்துகிற அன்பை 

தபால் மூலம் அனுப்ப முடியுமா?

தபால் மூலம் பொருளை அனுப்பலாம்,

WhatsApp மூலம் செய்தியை அனுப்பலாம்.

உண்மையான புன்சிரிப்பையும் அன்பையும் அனுப்ப முடியுமா?

இறைவன் நம் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தவே நம்மைப்போல மனிதனாகப் பிறந்தார்.

ஒரு ஏழை நண்பன் வீட்டுக்கு விருந்துக்கு போகும் போது நமது பணக்கார மிடுக்கை காண்பித்துக் கொண்டு போகக் கூடாது.

நண்பன் நிலைமைக்கு நம்மை தாழ்த்தி சென்றால்தான் நமது முழுமையான அன்பை வெளிப்படுத்த முடியும்.

ஆகவேதான் பலகீனமுள்ள நம்மிடம் வந்தபோது,  

பாவத்தை தவிர,

நமது மற்ற பலகீனங்களை எல்லாம் ஏற்றே இறைமகன் மனிதனாகப் பிறந்தார்.

ஏன் பாவத்தை தவிர?

ஏனென்றால் இறைவனால் பாவம் செய்ய இயலாது.

ஏன் இறைவனால் பாவம் செய்ய இயலாது?

இறைவனது விருப்பத்திற்கு எதிராக செயல்படுவது தான் பாவம்.

இறைவன் எதை செய்தாலும் தனது விருப்பப்படியே செய்வார்.

ஆகவே அவரால் பாவம் செய்ய இயலாது.

அவரது விருப்பம் நமக்கு கட்டளை.

அவரது கட்டளையை நாம் மீறுவது பாவம்.

அவரது விருப்பத்தை அவரே மீற முடியாது.

 பலகீனங்கள் இருவகை,

1.உலகை, உடலைச் சார்ந்தவை.
2.ஆன்மாவை சார்ந்தவை.

ஏழ்மை, சக்தி இன்மை போன்றவை
உலகைச் சார்ந்த பலகீனங்கள்.

மனோ பலமின்மை ஆன்மாவை சார்ந்த பலகீனம்.

இறைவனின் சர்வ வல்லமை உள்ளவர், சர்வத்திற்கும் அதிபதி.

ஆகவே அவரிடம் பலகீனம் என்பது துளியும் இருக்க முடியாது.

ஆனால் இறைமகன் இந்த பலகீனங்களை தானே ஏற்றுக்கொண்டு மனித உரு எடுத்தார்.

சர்வ உலகத்திற்கும் சொந்தக்காரரான அவர் பிறக்கக் கூட இடம் கிடைக்காத, தலைசாய்க்க கூட இடமில்லாத, உழைத்தால் மட்டுமே உண்ணக்கூடிய ஏழையாக பிறந்தார்.

சர்வ வல்லமை கொண்ட அவர் ஏரோதுவிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எகிப்திற்குச் சென்று மூன்று ஆண்டுகள் நாடோடியாக 

(அதுவும் மனிதர்களான சூசையப்பர், மரியம்மாள் உதவியுடன்)

 வாழக்கூடிய அளவிற்கு வல்லமையை விட்டு விட்டு  பிறந்தார்.

சர்வ வியாபியான அவர், இடத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்தார்.

இடத்திற்கு இடம் நடந்தே சென்றார்.

இவையெல்லாம் அவர் ஏற்றுக்கொண்ட உடலைச் சார்ந்த பலகீனங்கள்.

தான் முழுமையாக மனிதனாக வாழ்வதற்காக மனோபலம் இன்மை என்ற ஆன்மீக பலகீனத்தையும் ஏற்றுக்கொண்டார்.

மனிதனைப் பொறுத்தமட்டில் இந்த பலகீனம் நம் பாவத்துக்கு காரணமாகிறது.

சோதனையை வெல்ல மனோபலம் இல்லாத மனிதன் பாவத்தில் வீழ்கிறான்.

ஆனால் இயேசு கடவுளாகையால்  பாவத்தில் விட முடியாது. 

ஆனாலும் மனித பலகீனத்தை நமது நன்மைக்காக அவரே ஏற்றுக் கொண்டார்.

தேவ சுபாவத்தில் கலங்க முடியாத, வருத்தப் படவே முடியாத இயேசு,

 மனித சுபாவத்தில் லாசரின் மரணத்தை நினைத்து கண்கலங்கி அழுதார்.

தேவ சுபாவத்தில் பயப்படவே முடியாத கடவுளாகிய இயேசு 

மனித சுபாவத்தில் அவர் படவிருக்கும் பாடுகளை நினைத்து பயந்தார்.

அவரது பாடுகளுக்கு முந்திய நாள் வியாழக்கிழமை அன்று 

இரவு உணவிற்குப்பின், அதாவது திவ்ய நற்கருணையையும், குருத்துவத்தையும் ஏற்படுத்திய பின்,

தனது சீடர்களுடன் கெத்சமனி தோட்டத்திற்கு ஜெபம் செய்ய சென்றபோது 

அன்று இரவு தான் கைது செய்யப்படவிருப்பதையும்,

தொடர்ந்து படப்போகும் பாடுகளையும், மரணத்தையும் நினைத்து பயப்பட ஆரம்பித்தார்.

அளவுக்கு மீறிய பயத்தின் காரணமாக அவரது உடலெல்லாம் இரத்த வியர்வை  வியர்த்தது.

அவர் எந்த அளவுக்கு பயந்தார் என்றால்

நமது பாவங்களுக்கு பரிகாரமாகப் பாடுகள் படவும், மரிக்கவும் என்றே 

நித்திய காலமாக திட்டமிட்டு

மனிதனாக பிறந்த இயேசு   


"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்:" என்று ஜெபித்தார்.

இங்கு ஒரு இறை இயல் உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்.

தந்தையும் மகனும் ஒரே கடவுள்தான்.

ஆகவே தந்தையின் விருப்பமும் மகனின் விருப்பமும் ஒன்றுதான்.

தந்தையின் விருப்பமும் மகனின் விருப்பமும்,

 அதாவது கடவுளின் விருப்பம்,

 மனிதராக பிறந்த இறைமகன் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு மரிக்க வேண்டும் என்பதுதான்.

இது இயேசுவுக்கு நன்கு தெரியும்.

அப்படியானால் இயேசு ஏன் 

"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்:"

என்று ஜெபித்தார்?

மனித சுபாவத்தில் அவரே மனமுவந்து ஏற்றுக்கொண்ட பலகீனக்தின் காரணமாக,

பாடுகளால் அவர் அனுபவிக்க இருக்கும் வேதனையை நினைத்து பயந்து அவ்வாறு ஜெபித்தார். 

ஆனாலும் அடுத்த வினாடியே,

"எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்று செபித்தார்."

அதாவது, தனது மனித பலகீனத்தினால் அல்ல, தந்தையின் விருப்பப்படி நடக்க வேண்டும் என்றுசெபித்தார்.

இயேசு ஏன் இந்த பலகீனத்தை ஏற்றுக்கொண்டார்?

1.தான், பாவத்தைத் தவிர, மற்ற எல்லா மனித பலகீனங்களுக்கும் உட்பட்ட முழுமையான மனிதன் என்ற இறை உண்மையை நமக்கு புரிய வைப்பதற்காக.

2.இப்படிப்பட்ட சூழ்நிலை நமக்கு ஏற்பட்டால்,

அதாவது, நமது பலகீனத்தின் காரணமாக இறைவனது சித்தத்தை நிறைவேற்றுவதில் நமக்கு தடங்கல் ஏற்பட்டால்,

நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை முன்மாதிரியாக நடந்து காண்பிப்பதற்காக இவ்வாறு ஜெபித்தார்.

சாதித்து போதிப்பவர் தான் இயேசு.

ஆகவேதான் இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சாதித்து காண்பிப்பதற்காகவே இந்த மனித பலகீனத்தை ஏற்றுக்கொண்டார்.

எந்த சூழ்நிலையிலும், என்ன கஷ்டம் வந்தாலும் நாம் இறைவனின் சித்தப்படிதான் நடக்க வேண்டும்.

நமது கஷ்டத்தை இறைவனிடம் எடுத்து சொல்லிவிட்டால் அவர் அதை தங்குவதற்கு வேண்டிய சக்தியை தருவார்.

இன்னொரு முக்கியமான ஆன்மீக பலகீனம் நமக்கு அளவுக்கு மீறி கஷ்டங்கள் வந்தால் எங்கே இறைவன் நம்மை கைவிட்டு விட்டாரோ என்று நினைக்க தோன்றுவது.

இதே பலகீனத்தை இயேசுவும் ஏற்றுக்கொண்டார்.

 சிலுவையில் தாங்க முடியாத வேதனையை அனுபவித்து கொண்டிருந்த இயேசு 

"என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் ?" என்று கூறினார்.

ஆயினும்,

"தந்தையே, உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்"

என்று கூறி உயிர் விட்டார்.

இறைவன் நம்மை கைவிட்டு விட்டாரோ என்று நினைக்கும் அளவுக்கு துன்பங்கள் வந்தால்

 நாம் உடனே நம்மை இறைவன் கையில் ஒப்படைத்து விட வேண்டும்.

இதை சாதித்து போதிப்பதற்காகவும், 

தான் உண்மையாகவே முழுமையான மனிதன் என்ற என்ற இறையியல் உண்மையை நமக்கு புரிய வைப்பதற்காகவுமே இந்த பலகீனத்தையும் ஏற்றுக்கொண்டார்.

சோதனை காலங்களில் நமது பலகீனங்களைக் கண்டு நாம் கவலைப்படத் தேவையில்லை.

அவற்றை நமது ஆண்டவரிடம் ஒப்புக் கொடுத்து விட்டால் நமக்கு வேண்டிய மனோபலத்தை அவர் தருவார்.

அதற்காகத்தான் நமது பலகீனங்களை அவரே ஏற்றுக்கொண்டார்.

ஆண்டவர்தான் நமது பலம்.

லூர்து செல்வம்.

Tuesday, November 23, 2021

" நீங்கள் சாட்சியாயிருப்பதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்." (லூக்.21:13)

" நீங்கள் சாட்சியாயிருப்பதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்." (லூக்.21:13)

" என் பெயரின்பொருட்டு
 உங்களைப் பிடித்து, செபக்கூடங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் இழுத்துச் சென்று, அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் உங்களைக் கையளித்துத் துன்புறுத்துவர்."

இயேசுவின் பெயரால் நற்செய்தி அறிவிப்பவர்களுக்கு என்ன நேரிடும் என்று இயேசு இந்த வசனத்தில் கூறுகிறார்.

நற்செய்தியை எதிர்பார்ப்பவர்களுக்கு ஈடாக அதை எதிர்ப்பவர்களும் இருப்பார்கள்.

அவர்களால் நற்செய்தியை அறிவிக்கின்றவர்கள் அந்த ஒரே காரணத்திற்காக துன்பப்படுத்தப் படுவார்கள்.

நற்செய்தியை அறிவித்தல் என்பது வாழைப்பழத்தை உரித்து சாப்பிடுவது போல அவ்வளவு எளிதான காரியமன்று.

பலாப் பழத்தை உரித்து சாப்பிடுவது போன்றது.

பூப் பொழிவிற்கு மத்தியில் அல்ல,

 கல் மழைக்கு மத்தியில் கல் 
எறிதலையும் தாங்கிக் கொண்டுதான் நற்செய்தியை அறிவிக்க வேண்யிருக்கும்.

அதனால் ஏற்படும் காயங்களை மட்டுமல்ல, மரணத்தையும் கூட ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

அப்படிபட்டவர்கள்தான் வேத சாட்சிகள், அதாவது நற்செய்திக்கான சாட்சிகள்.

ஆகவேதான் "நீங்கள் சாட்சியாயிருப்பதற்கு இவை (அரசினர் தரும் துன்பங்கள்) உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்." 

என்று இயேசு சொல்கிறார்.

வேத சாட்சிகளின் ரத்தத்தில்தான் திருச்சபை வளர்ந்திருக்கிறது என்பதற்கு வரலாறு சாட்சி.

இன்றைய காலகட்டத்தில் நற்செய்தி அறிவித்ததற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற எதிர்ப்புகள் நம்நாட்டில் திருச்சபை வளரப்போகிறது என்பதற்கான முன் அடையாளம்.

நற்செய்தி அறிவிப்பவர்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்கு இயேசுவின் வாழ்க்கையே முன்னுதாரணம்.


நற்செய்தியை அறிவிக்க அவர் ஆரம்பித்த ஆரம்பித்த காலத்திலிருந்தே அவரை எதிர்ப்பவர்களும் அவரை பின்தொடர ஆரம்பித்துவிட்டார்கள்.

 அவரோடு மரணம் வரை இருந்தவர்களும் அவர்கள்தான்.

நாம் இயேசுவின் சீடர்கள்.

 தாயை போல பிள்ளை என்பது போல் 

குருவை போல சீடன் என்பார்கள்.

ஆகவே நற்செய்தியின் பொருட்டு நாம் கஷ்டப் பட நேரும் போது நாம் இயேசுவைப் போல் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டும். 

சிலுவைக்குப் பிறகு தான் உயிர்ப்பு என்பதை நினைவில் வைத்துக் கொள்வோம்.

நற்செய்திக்காகக் கஷ்டப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்,

 ஏனெனில் அவர்களே இயேசுவைப் பிரதிபலிக்கிறார்கள்.

லூர்து செல்வம்.

Monday, November 22, 2021

ஈடு இணையில்லா அன்பு.

ஈடு இணையில்லா அன்பு.

கடவுள் ஏன் மனிதனை தன் சாயலில் படைத்தார்?

இந்த கேள்விக்குரிய பதிலை இன்று தியானிப்போம்.

"பின்னர் கடவுள்: நமது சாயலாகவும் பாவனையாகவும் மனிதனைப் படைப்போமாக:"
(ஆதி. 1:26)

மனிதனைத் தவிர  மற்ற எல்லா பிரபஞ்ச பொருள்களையும் 

"உண்டாகுக,
பிரியக் கடவது,
ஒன்றாகச் சேரக்கடவது:,
முளைப்பிக்கக்கடவது,"

போன்ற உத்தரவு வார்த்தைகளால் படைத்த கடவுள்,

மனிதனை மட்டும் "படைப்போமாக" 
 என்ற தன்னுடைய விருப்பத்தைக் கூறி படைத்தார்.

மண்ணிலிருந்து மனித உடலை உருவாக்கிய கடவுள்

 "உயிர் மூச்சை ஊதி,"

 உடலுக்கு உயிர் கொடுத்தார்.

மனித உடலை இயக்கிக் கொண்டிருப்பது,

 இறைவனது உயிர்மூச்சு,

 அதாவது நமது ஆன்மா.

இறைவனது உயிர்மூச்சினால் படைக்கப் பட்டிருப்பதால் அது 
இறைவனைப் போலவே ஆவியாக இருக்கிறது.

அவருடைய மூச்சு என்பதால் அவரோடு எப்பொழுதும் இணைந்து இருக்கும் நோக்கத்தோடுதான் அது படைக்கப்பட்டது.

அது உலகில் மனித உடலை இயக்கிக் கொண்டு வாழும் போதும் சரி,

 மனித உடலை விட்டுப் பிரிந்து விண்ணுலகம் செல்லும் போதும் சரி

அது இறைவனோடு இணைந்து (In union with God) வாழ வேண்டும் என்பதுதான் அது படைக்கப்பட்டதன் நோக்கம்.

ஆன்மா இறைவனோடு இணைந்து வாழ வேண்டும் என்பதனால்தான் அவர் அதோடு தன்னுடைய எல்லாப் பண்புகளையும் பகிர்ந்து கொண்டார்.

மனித ஆன்மாவோடு அவர் பகிர்ந்து கொண்ட மிக முக்கியமான பண்பு 

"சிந்தனை செயல் சுதந்திரம்."

இறைவனுடைய சுதந்திரத்தில் யாரும் குறுக்கிட முடியாது.

அதேபோல இறைவனும் மனிதனுடைய சுதந்திரத்தில் குறிப்பிடுவதில்லை.

அவரோடு இணைந்து வாழ்வதற்காக படைக்கப்பட்டாலும் 

இணைந்து வாழ்வதா பிரிந்து வாழ்வதா என்பதை தீர்மானிக்க

 மனிதனுக்கு முழு சுதந்திரம் உண்டு.

தனது முழு சுதந்திரத்தை பயன்படுத்திதான் மனிதன் இறைவனோடு இணைந்து வாழ வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.

நித்திய காலம் இறைவனோடு இணைந்து வாழ்வதே மோட்சம்.

இறைவனிடமிருந்து பிரிந்து வாழ்வது நரகம்.

மனிதன் தன்னோடு நித்திய காலம் இணைந்து வாழ வேண்டும் என்றுதான் இறைவன் விரும்புகிறார்.

நமது முழுமையான சுதந்திரத்தை பயன்படுத்தி இறைவனது விருப்பத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட மற்றொரு மிக முக்கியமான பண்பு அன்பு.

கடவுள் அன்பு மயமானவர்.
God is Love.

அவர் நித்திய காலமாக தன்னைத்தானே அன்பு செய்கிறார்.

கடவுள் தனது அன்பை பகிர்ந்து கொள்ளவும்,

 தன்னை அன்பு செய்யவும் தான் மனிதனை படைத்தார்.

அவர் நம்மை அளவற்ற விதமாக அன்பு செய்கிறார்.

நாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தான் படைக்கப்பட்டோம், ஆனால் கடவுள் நம்மை நித்திய காலமாக அன்பு செய்கிறார்.

 அதாவது நம்மை படைப்பதற்கு முன்பே நித்திய காலமாக  அவர் நம்மை அன்பு செய்து கொண்டிருக்கிறார்.

கடவுள் மாறாதவர்,
அவரது அன்பும் மாறாது,

 அவரது அன்பை நாம் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர் நம்மை அன்பு செய்து கொண்டுதான் இருக்கிறார்.

நித்திய காலமும் விண்ணக வாழ்வே வேண்டாமென்று நரக நிலையில் வாழ்பவர்களையும் இறைவன் அன்பு செய்கிறார்.


நமது மேல் கொண்ட அன்பின் காரணமாகவே அவர் நம்மை அவர் சாயலில் படைத்தார்.

அன்பு செய்ய மட்டுமல்ல அன்பு செய்யப்படுவதற்கும் இறைவன் விரும்புகிறார்.

அவரை நமது முழு இருதயத்தோடு நாம் அன்பு செய்ய வேண்டும் என்ற கட்டளையே கொடுத்திருக்கிறார்.

ஓம் தாய் தனது பிள்ளையை அன்பு செய்வதோடு, தன் பிள்ளை தன்னையும் அன்பு செய்ய வேண்டும் என்று விரும்புவது போலவே,

 இறைவனும் அவரது பிள்ளைகளாகிய நாம் அவரை அன்பு செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்.

நாம் உலகில் வாழ்வதே நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அன்பு செய்வதற்கு மட்டுமே.

இறைவன் நம்மை படைத்திருப்பதும் அன்பு செய்யவும், அன்பு செய்யப்படவும் மட்டுமே. (To love and to be loved)

நம் மீது அவர் கொண்டுள்ள அளவு கடந்த அன்பின் காரணமாகவே அவர் நம்மை அவரது சாயலில் படைத்தார்.

தன்னால் நேசிக்கப்படுகிறவர்கள் தன்னைப்போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது நமக்கு புரிகிறது.

ஆனால் தன்னால்  நேசிக்க படுகின்றவர்களைப்போல் தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் அன்பு ஈடு இணை இல்லாதது.

ஒரு கோடீஸ்வரன் ஒரு ஏழையைப் பார்த்தான்.  அவனை நேசித்தான்.


நேசத்தின் காரணமாக  அந்த ஏழை தன்னை போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தன்னிடம் உள்ளதையெல்லாம் அவனோடு பகிர்ந்து கொள்கிறான்.

ஆனால் அதே கோடீஸ்வரன் தான் ஏழையோடு தன்னிடம் உள்ளதையெல்லாம் பகிர்ந்து கொண்டதும் போதாதென்று

 அவன் மேலுள்ள அன்பின் மிகுதியால்

 தானும் அவனைப் போலவே ஏழையாகி 

அவனுடனே வாழ்ந்து, அவனது கஷ்டங்கள் எல்லாம் அனுபவித்து

அதன் மூலம் தனது அன்பை வெளிப்படுத்தி,

அதன்பின் தன்னோடு வாழ தனது அரண்மனைக்கே அழைத்து வந்தான் என்றால்   

 அந்த அன்புக்கு ஈடு இணை உண்டோ!

அதைத்தான் நம்மை படைத்த நமது விண்ணக இறைவனும் செய்தார்.

தனது சாயலை நம்மோடு பகிர்ந்து கொண்டதோடு திருப்தி அடையாமல்

 அன்பின் மிகுதியால் 

நமது சாயலை அவரும் பகிர்ந்து கொள்ள மட்டுமல்ல, மனிதனாகப் பிறக்கவே ஆசைப்பட்டார்.

அவரது சாயலை நமது ஆன்மா பெற்றிருக்கிறது.

நமக்கு அழிவே இல்லாத  நமது ஆன்மாவோடு மரணம் அடையக் கூடிய உடல் ஒன்றும் இருக்கிறது.

இறைவனுக்கு உடல் இல்லை. அவர் ஆவியானவர்.

நமது உடலோ சடப்பொருள். காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டது.

எங்கும் நிறைந்த ஆவியாகிய இறைவன் 

நம்மை போல உடலெடுத்து காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டு நம்மோடு வாழ்ந்து 

தனது ஈடு இணையற்ற அன்பை நமக்கு வெளிப்படுத்த விரும்பினார்.

கடவுள் அளவற்ற ஞானம் உள்ளவர்.

அவரது ஞானம் காலத்தைக் கடந்தது.

அவரது திட்டங்கள் எல்லாம் நித்தியமானவை.

நித்திய காலத்திலிருந்தே மனிதனை படைக்க திட்டமிட்ட அவருக்கு, மனிதன் பாவம் செய்வான் என்பது நித்திய காலமாகவே தெரியும்.

கடவுளை பொறுத்தமட்டில் பாவம் தீமையானது.

தீமையிலிருந்துகூட நன்மையை வரவழைக்கும் சர்வவல்லவர் நமது இறைவன்.

ஆகவே மனிதன் செய்த பாவத்தைப் பயன்படுத்தி 

அவனது பாவத்திற்குத் தானே பரிகாரம் செய்யும் நோக்கத்தோடு மனிதனாக பிறந்து  மனிதனோடு மனிதனாகவும் வாழ இறைவன் நித்திய காலமாக தீர்மானித்தார். 

காலத்திற்கும், இடத்திற்கும் அப்பாற்பட்ட கடவுளின் மகன்

காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்ட மனித சுபாவத்தையும் எடுத்துக் கொண்டார்.

காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்ட ஒரு ஏழைப்  பெண்மணியின் வயிற்றில்,

 ஆணின் உதவி இன்றி,

 தனது வல்லமையால் மனித உரு எடுத்தார்.

இறை மகன் மனு மகனாகப் பிறந்தார்.

நமது ஆண்டவராகிய இயேசு மனிதனாக பிறந்த இறைமகன்.

மனித உரு எடுத்து முன் அவரிடம் தேவ சுபாவம் மட்டுமே இருந்தது.

மனித உரு எடுத்த விநாடி முதல் அவர் முழுமையான கடவுளாகவும், முழுமையான மனிதராகவும் இருக்கிறார்.

Jesus is fully God and fully man.

பிறப்பும் இறப்பும் இல்லாத இறைமகன், பிறப்பும் இறப்பும் உள்ள மனிதனாகப்  பிறந்தார்.

சர்வ வல்லமை வாய்ந்த இறைமகன்,

பாவம் தவிர, மனிதனுடைய எல்லா பலவீனங்களையும் ஏற்றுக்கொண்டார்.

ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்தார்.

நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டு உழைத்த உழைப்பினால் கிடைத்த உணவையே உண்டார்.

சர்வத்திற்கும் அரசராக இயேசு அவரால் படைக்கப்பட்ட மரியாளுக்கும், 
சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து நடந்தார். 

பொது வாழ்வின் போது பிறருடைய தர்மத்தினால் மட்டும் வாழக்கூடிய ஏழைகளை பிரதிபலிப்பதற்காக இயேசு தனது சீடர்கள் கொடுத்த உணவையே உண்டார்.

சர்வ உலகத்திற்கும் சொந்தக்காரரான இயேசு தனது பொது வாழ்வின் போது தலை சாய்க்க கூட இடமில்லாமல் வாழ்ந்தார்.

தேவசுபாவத்தில்  கஷ்டமே பட முடியாத இயேசு 

மனித சுபாவத்தில் கஷ்டங்களை அனுபவித்தார், நமக்கு தனது அன்பை வெளிப் படுத்துவதற்காகவும், நமது பாவங்களுக்கு பரிகாரமாகவும்.

மனிதர்கள் மற்றவர்களுக்கு தங்கள் அன்பைக் காட்டுவதற்காக அவர்களுக்கு உணவு அளிக்கிறார்கள், ஆனால் யாராவது தங்களையே உணவாக அளிக்கின்றார்களா? 

ஆனால் நம்மேல் ஈடுஇணையற்ற அன்புள்ள இயேசு நமக்கு தன்னையே உணவாக அளிக்கிறார்.

ஐந்து அப்பங்களை 5000 அப்பங்களாக மாற்றிய இயேசு இப்போது அப்பத்தை தனது உடலாகவும், இரத்தமாகவும் மாற்றி நமக்கு ஆன்மீக உணவாகத் தந்து கொண்டிருக்கிறார்.

தன்னையே உணவாகத் தருவதன் மூலம் நம்மோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

தன்னையே உணவாகத் தரும் அன்புக்கு ஈடு இணையான அன்பு உண்டோ!

இயேசுவின் ஈடு இணையற்ற அன்பினில் இணைந்து இவ்வுலகில் மட்டுமல்ல விண்ணுலகிலும் என்றென்றும் வாழ்வோம்.  

லூர்து செல்வம்.

Thursday, November 18, 2021

"என் வீடு செபவீடாகும்" என்று எழுதியிருக்கிறது. நீங்களோ அதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்"(லூக்.19:46)

"என் வீடு செபவீடாகும்" என்று எழுதியிருக்கிறது. நீங்களோ அதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்"
(லூக்.19:46)


இயேசு ஜெருசலேம் கோயிலுக்குள் சென்ற போது அங்கே வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.

ஆண்டவர் விற்பவர்களைத் துரத்தத் தொடங்கி,

 அவர்களை நோக்கி, "என் வீடு செபவீடாகும்" என்று எழுதியிருக்கிறது. 

நீங்களோ அதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்" என்றார்.

ஜெருசலேம் தேவாலயம் மனிதர்களால் கட்டப்பட்டு இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மனிதர்களால் கட்டப்பட்ட ஆலயத்திலேயே மனிதர்கள் வியாபாரம் செய்யும்போது அதை 
"கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்" 
.என்று சொன்ன நம் ஆண்டவர்

அவரே கட்டிய ஆலயத்தில் அவர் விரும்பாத வியாபாரம் எல்லாம் நாம் செய்தால் நம்மை என்ன சொல்லுவார்? சிந்தித்துப் பார்ப்போம்.

அவரால் கட்டப்பட்ட ஆலயம் எங்கே இருக்கிறது?

நாம்தான் அவரால் கட்டப்பட்ட ஆலயங்கள்.

" உங்களுடைய உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா?"
(1 கொரி. 6:19)

கடவுளை மகிமைப்படுத்துவதற்காக
ஆலயமாகிய உடல் நமக்கு தரப்பட்டிருக்கிறது.

கடவுளுக்கு விருப்பமான முறையில் நமது உடலை நாம் பயன்படுத்தினால்தான் நம்மால் கடவுளை மகிமைப்படுத்த முடியும்.

நமது உடல் மண்ணில் இருந்து எடுக்கப்பட்ட சடப் பொருளாக இருக்கலாம்.

ஆனால் அதை இயக்கிக் கொண்டிருக்கும் நமது ஆன்மா கடவுளைப் போலவே ஒரு ஆவி.

நமது ஆன்மாவும் உடலும் சேர்ந்துதான் நாம்.

நமது உள்ளம் பரிசுத்த ஆவியின் ஆலயம்.

நாம் நல்லவர்களோ, கெட்டவர்களோ, 

நமது உள்ளத்தில் பரிசுத்த ஆவி குடியிருந்து நம்மை பராமரித்து வருகிறார்.

கடவுளை மகிமைப்படுத்த வேண்டும் என்றால்

நாம் நம்மில் குடியிருக்கும் அவரை நம்மைப் படைத்தவராக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏற்றுக் கொண்டு, நம்மை எதற்காக படைத்தாரோ அதன்படி வாழ வேண்டும்.

 அதாவது நமக்குள் இருந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அவரது சித்தத்தை நிறைவேற்ற வேண்டும்.

அவரது சித்தப்படி நடந்தால் நாம் நமது உள்ளத்தாலும், உடலாலும் அவரை மகிமைப் படுத்துகின்றோம்.

அவரது சித்தத்திற்கு எதிராக நடந்தால் அவரை அவமதிக்கிறோம்.

நமது உள்ளம் எண்ணங்களின் பிறப்பிடம்.

நமது உள்ளத்தில் பிறக்கும் எண்ணங்கள் எப்படிப்பட்டவை என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நம் உள்ளத்தில் வாழும் இறைவன் பரிசுத்தர்,

 அன்பு மிக்கவர்,

 இரக்கம் மிக்கவர்,

 மன்னிக்கும் குணம் உள்ளவர்,

 தாராள குணம் உள்ளவர்.

நமது எண்ணங்களும் பரிசுத்தமானவைகள் ஆகவும்,

அன்பானவைகளாகவும்,

இரக்கம் உள்ளவைகளாகவும்,

மன்னிக்கும் குணத்தை பிரதி பலிப்பவைகளாகவும்,

தாராள குணத்தை வெளிப்படுத்துபவைகளாகவும்
இருக்க வேண்டும்.

நமது நல்ல எண்ணங்கள் நல்ல சொற்களாகவும் நல்ல செயல்களாகவும் வெளிப்பட வேண்டும்.

அப்போதுதான் நமது உள்ளத்திலிருந்து நம்மை பராமரித்துக் கொண்டிருக்கும் நமது அன்பின் தேவனை மகிமைப்படுத்த முடியும்.

நம் உள்ளமே இறைவன் வாழும் செபவீடு தான்.

 அதைக் கெட்ட எண்ணங்கள் குடியிருக்கும் கள்வர் குகையாக மாற்றிவிடக் கூடாது.

ஜெப வாழ்வு என்றாலே இறைவனோடு ஒன்றித்து வாழ்வது தான்.

இறைவனோடு ஒன்றித்து வாழ உதவி செய்யும் நல்ல, பரிசுத்தமான எண்ணங்கள் மட்டும் தான் நம் உள்ளத்தில் இறைவனோடு குடியிருக்க வேண்டும்.

லூர்து செல்வம்.

Tuesday, November 16, 2021

"உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்"(லூக்.19:26)

"உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்"
(லூக்.19:26)

பொற்காசுகள் உவமையில் அரசர் தனது ஊழியர்களிடம் பொற்காசுகளைக் கொடுத்து அவற்கொண்டு வாணிகம் செய்யச் சொல்கிறார்.

அவற்றைக் கொண்டு இலாபம் சம்பாதித்தவர்களை நகர்களுக்கு அதிகாரிகள் ஆக்குகிறார்.

எதுவும் சம்பாதிக்காதவனிடமிருந்து
 கொடுக்கப்பட்ட பொற்காசைப் பிடுங்கி, பத்துப் பொற்காசுகள் உடையவனுக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டு 

"உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்"

என்கிறார்.

இருக்கிற பணத்தைக் கொண்டு லாபகரமாக வியாபாரம் செய்ய வேண்டும் என்று வியாபாரிகளுக்கு ஆண்டவர் புத்திமதி எதுவும் சொல்லவில்லை.

ஆண்டவர் வணிக பொருளாதாரம் பற்றி எதுவும் பேசவில்லை.

ஆண்டவர் போதிப்பது முழுக்க முழுக்க ஆன்மீக பாடம்.

அரசர் கடவுள். பொற்காசுகள் அவர் நமக்குத் தரும் அருள் வரங்கள்.

உலகம் யாரிடம் பணம் அதிகம் உள்ளதோ அவர்களுக்கு அதிக மதிப்பு தருகிறது.

பணத்தின் அளவுக்கு ஏற்ப மதிப்பின் அளவும் இருக்கும்.

இறைவனுக்கு முன்னால் பணத்திற்கு மதிப்பு எதுவும் இல்லை.

இறைவனுக்கு முன்னால் மதிப்பு உள்ள செல்வம் அருள் மட்டுமே.

இறைவனுக்கு முன் அருளுக்கு அப்படி ஏன் அவ்வளவு மதிப்பு?


ஏனெனில் அருள் அவருடைய சொத்து.

அளவு கடந்த அருள் உள்ளவர் கடவுள்

அவருடைய அருளினால்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

அவருடைய அருள் இல்லாமல் நம்மால் அசையக்கூட முடியாது.

தனது அருளினால் நல்லவர்களையும், கெட்டவர்களையும் கடவுள் பராமரித்து வருகிறார்.

நல்லவர்கள் கடவுளுடைய அருளால் இயங்குவதோடு அவர் தரும் அருளை ஏற்றுக்கொண்டு இயங்குகிறார்கள்.

கடவுளின் அருளை ஏற்றுக் கொள்ளும்போது அவர்கள் கடவுளோடு இணைக்கப்படுகிறார்கள்.

The good live in union with God.

கெட்டவர்கள் அவர் தரும் அருளை ஏற்றுக் கொள்வதில்லை. ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு இறைவனோடு ஆன்மீக உறவு இல்லை. ஆனாலும் இறைவன் தனது இரக்கப் பெருக்கத்தால் அவர்களை காப்பாற்றி வருகிறார்.

 கடவுள் தரும் அருளை ஏற்றுக் கொள்பவர்களுக்கு மட்டுமே விண்ணகத்தில் இடம் உண்டு.

ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு விண்ணகத்தில் இடம் இல்லை.

விண்ணகம் செல்ல ஆசைப்படுகின்றவர்கள் இறைவன் தரும் அருளை ஏற்றுக் கொள்வதோடு, அதில் வளர வேண்டும்.

இறைவனிடமிருந்து அருளை மீண்டும் மீண்டும் பெற்று அதிகமான அருளை ஈட்ட வேண்டும்.

இயேசு சொன்ன பொற்காசுகளின் உவமை இதைத் தான் குறிக்கிறது.

இறைவன் அவரால் படைக்கப்பட்ட அனைவருக்குமே அவரது அருளை தருகிறார்.

அவர் முதலில் தரும் அருளைப் பயன்படுத்தி மேன்மேலும் அருளில் வளர வேண்டும்.

இறைவனின் அருளை மேலும் மேலும் பெற்று வளர நமக்கு உதவியாய் இருப்பவை 
ஜெபம், 
தவம், 
தேவத்திரவிய அனுமானங்கள்,
பிறர் அன்பு செயல்கள்,
 நற்செயல்கள் ஆகியவை. 

ஜெபத்தின் மூலம் இறைவனது அருளை கேட்டுக் 
கொண்டேயிருக்க வேண்டும். 

நாம் கேட்கும்போதெல்லாம் அருளை தந்து 
கொண்டேயிருப்பார்.

நாம் ஆண்டவருக்காக  ஒறுத்தல் மூலம், உடலை அடக்கி தவம் செய்யும் போதெல்லாம் அதற்கு பரிசாக இறைவன் அருள் வரங்களை தந்து கொண்டேயிருப்பார். 

பிறரன்பு செயல்கள் செய்யும்போதும், நற்செயல்கள் புரியும் போதும், இறைவன் தனது அருளால் நம்மை ஆசீர்வதிப்பார்.

நமது 
ஜெபம், 
தேவத்திரவிய அனுமானங்கள்,
தவம், 
பிறர் அன்பு செயல்கள், 
நற்செயல்கள் மூலம் நாம் பெறும் அருளினால் நாம் அருள் செல்வத்தில் வளர்வோம்.

எவ்வளவுக்கு எவ்வளவு அருட்செல்வத்தில் வளர்ந்திருக்கிறோமோ

 அவ்வளவுக்கு அவ்வளவு விண்ணகத்தில் நமது பேரின்பத்தின் அளவு அதிகமாக இருக்கும்.

நமது வாழ்வின் இறுதிநாளில் இயேசு நம்மை சந்திக்க வரும்போது நமக்கு மோட்ச பேரின்பத்தை அளிப்பார்.

இதைத்தான் இயேசு தன் உவமையில் 

பொற்காசு பெற்றவர்கள் எத்தனை பொற்காசுகள் அதிகமாக ஈட்டுகிறார்களோ அத்தனை நகரங்களுக்கு அதிகாரிகள் ஆக்குவதாக குறிப்பிடுகிறார். 

ஆனால் இறைவன் முதலில் கொடுத்த அருளைப் பயன்படுத்தாமல் 

தங்களது இஷ்டம் போல் வாழ்பவர்களுக்கு விண்ணக சன்மானம் கொடுக்கப்பட மாட்டாது.

பயன்படுத்துவதற்குக் கிடைத்த பணத்தை பயன்படுத்தாதவர்களுக்கு பணம் இருப்பதும் ஒன்றுதான் இல்லாததும் ஒன்றுதான்.

அதனால் தான் இல்லாதவர்களிடம் இருந்து உள்ளதும் (ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டதும்) எடுக்கப்படும் என்றார்.

வாழ்வின் இறுதிநாளில் சந்திக்க வரும்போது 

 இறைவன் கொடுத்த அருளைப் பயன்படுத்தாதவர்களிடமிருந்து

(இருந்தும் இல்லாதது போல் வாழ்ந்தவர்களிடமிருந்து)

முதலில் கொடுக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கும் அருள் திரும்பப் பெறப்படும்.

அவர்களுக்கு விண்ணகம் இல்லை.

இறைவன் பாரபட்சமின்றி எல்லோருக்கும் அருள் வரங்களை கொடுக்கிறார்.

கிடைத்த அருளை பயன்படுத்தி அருள் செல்வத்தில் வளர்ப்பவர்களுக்கு விண்ணகத்தில் நித்திய பேரின்பம் கிடைக்கும்.

அதை பயன்படுத்தாதவர்களுக்கு நித்திய பேரிடர்தான் கிடைக்கும்.

இறைவன் தரும் அருளை பயன்படுத்தி அருட்செல்வத்தில் வளர்ந்து நித்திய பேரின்ப பாக்கியத்தைப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

Monday, November 15, 2021

சிலுவையின் மூலமாகத்தான் மீட்பு

சிலுவையின் மூலமாகத்தான் மீட்பு.


", ஏன்டீ காபி ரெடியா?"

"ஏங்க, இப்போதானே உங்கள் வாயிலிருந்து டீ வந்தது. அதைக் குடித்திருக்க வேண்டியதுதானே."

"நான் கேட்டது காபி."

"காபி ரெடி. ஆனால் அதைக் கொண்டு வர நான் ரெடியாக வேண்டுமென்றால் நான் கேட்கிற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்."

"வகுப்பில் மாணவர்களிடம் நான் கேள்விகள் கேட்கிறேன். வீட்டில் நீ என்னிடம் கேள்விகள் கேட்கிறாய்.

ஆனால் நான் பாடம் நடத்திவிட்டு கேள்விகள் கேட்கிறேன். நீ பாடம் நடத்தாமலேயே கேள்விகள் கேட்கிறாய்.

பரவாயில்லை. கேள். பதில் சொல்லும்போதே பாடம் நடத்தி விடுகிறேன்."

"நாம் என்ன செய்தாலும் நமது சிந்தனை, சொல், செயல் மூன்றும் அதோடு இணைந்திருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு செயலை ஆரம்பிக்கும்போது சிலுவை அடையாளம் (Sign of the Cross) போட்டு ஆரம்பிக்கிறோம்.

இதற்கான காரணத்தை விளக்க முடியுமா?"

"முடியுமே!"

"பதில் அவ்வளவுதானா?"

"நான் கேட்கிற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்றாய். இப்போது 

இதற்கான காரணத்தை விளக்க முடியுமா?

என்று கேட்டிருக்கிறாய்.

 "முடியுமா" என்ற கேள்விக்கு உரிய பதிலைச் சொல்லிவிட்டேன். வேறு என்ன வேண்டும்?"

"பதிலை விளக்கமாக கூற முடியுமா? Sorry. கூறுங்கள்."

"நாம் கிறிஸ்தவர்கள்.

 கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மரித்து பாவத்திலிருந்து நம்மை மீட்டதால் சிலுவை கிறிஸ்துவர்களின் அடையாளம். 

ஆகவேதான் சிலுவை அடையாளத்தைப் போட்டு நாம் எதையும் ஆரம்பிக்கிறோம்.

இயேசுவின் சிலுவை மரணம்தான் நம்மை பாவத்திலிருந்து மீட்டது.

ஆகவே பாவகரமான எதையும் செய்ய சிலுவை அடையாளத்தை போடமாட்டோம்.

ஆகவே நாம் சிலுவை அடையாளத்தைப் போட ஆரம்பிக்கும்போது நாம் செய்யப் போகின்ற செயல் எப்படிப்பட்டது என்று நமக்குத் தெரியும்."

"உதாரணத்திற்கு

 லஞ்சம் கொடுக்கப் போகும்போதோ,

 வாங்கப் போகும்போதோ

 சிலுவை அடையாளத்தை போட்டால்,

 அது உடனே சொல்லிவிடும், "வாங்காதே, போகாதே. 
அது பாவம்.  
என்னை போட்டுக்கொண்டு பாவம் செய்வதே பாவம்." என்று.

 சிலுவை அடையாளம் பாவத்தை தடுத்து நிறுத்தும், நம்மைக் காப்பாற்றும். சரியா?"

", Super சரி. பாவத்தை வெல்வதற்காக மரித்தவரை நினைத்துக்கொண்டு எப்படி பாவம் செய்ய முடியும்?

ஒரு காலத்தில் சிலுவை குற்றவாளிகளின் தண்டனைக்கான அடையாளமாக இருந்தது.

சிலுவையில்தான் குற்றவாளிகளை அறைந்து கொன்றார்கள்.

 ஆனால் இயேசு அதையே மீட்பின் அடையாளமாக மாற்றி விட்டார்.

 அதை அப்படி மாற்றுவதற்காக தனது உயிரையே தியாகம் செய்தார்."

"அடையாளத்திற்கு ஒரு அர்த்தம் இருக்கவேண்டுமே!"

",விண்ணகத்தை மேலே(above) என்றும், மண்ணகத்தை கீழே (down) என்று உருவகம் செய்வது வழக்கம்.

 விண்ணகத்தில் வாழும் இறைவனால் படைக்கப்பட்ட நாம் மண்ணகத்துக்கு வந்தோம்.

இப்போது மேலிருந்து கீழாக ஒரு செங்குத்துக் கோட்டைக் கற்பனை செய்துகொள்.

பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் விண்ணகம் செல்ல வேண்டும்,

 அதாவது மேல் நோக்கி செல்ல வேண்டும்.

ஆனால் விண்ணோக்கி செல்லம் செங்குத்து கோட்டின் குறுக்கே பாவம் என்ற படுக்கை கோடு 
வெட்டிக் கொண்டு செல்லுகிறது.

இப்போது என்ன அடையாளம் கிடைக்கிறது?"

"சிலுவை அடையாளம்."

", விண் நோக்கிய பாதையை பாவம் குறுக்கிட்டு விட்டதால் 
நம்மால் விண்ணகம் செல்ல இயலாது.

அதாவது சிலுவையின் அடையாளம் நமக்கான தண்டனையின் அடையாளமாகியது.

இப்போது இறைமகன் மனுவுரு 
எடுத்து தண்டனையின் அடையாளமான சிலுவையிலேயே தன்னை பலியாக்கி பாவத்தின் சக்தியை அழித்தார்.

இயேசுவின் சிலுவை மரணம் காரணமாக மன்னிக்கப்பட்ட பாவத்தினால் நாம் விண்ணகம் செல்வதைத் தடுக்க முடியாது.

சிலுவையிலே மரித்து இயேசு பாவத்தை வென்றதால் அது வெற்றியின் சின்னமாக மாறி விட்டது.

இனி நாம் விண்ணகம் செல்ல தடை ஏதும் இல்லை.

ஆகவே நாம் சிலுவை அடையாளம் போடும் போதெல்லாம் 

சிலுவையில் மரித்த இயேசுதான் நமது மீட்பர் என்பதை நினைவுபடுத்தி கொள்கிறோம்.

காலையில் எழுந்தவுடன் சிலுவை அடையாளம் போடும்போது

 இயேசு நமது மீட்பர்,

 இன்றைய நாளை அவருக்காகவே நாம் செலவிட வேண்டும்,'

 அவருக்கு எதிராக பாவம் எதுவும் செய்து விடக்கூடாது, 

இன்றைய நாள் அவரது மகிமைக்காக நமக்கு தரப்பட்டுள்ளது,
 
அவரது மகிமைக்காகவே நாம் உழைக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறோம்.

அவ்வாறு ஒவ்வொரு செயலுக்கும் முன்னால் சிலுவை அடையாளம் போடும்போது 

அந்த செயல் இறைவனது மகிமைக்கே என்று அதை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து செய்கிறோம்."

"சிலுவை அடையாளம் போடும் போது விரல்களை நெற்றியிலும்,

 நெஞ்சிலும்,

 இரு தோள் பட்டைகளிலும் வைக்கின்றோமே, இதற்கும் பொருள் இருக்க வேண்டுமே. அதை விளக்குங்கள்."

", சிலுவை அடையாளம் போடும்போது தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே, ஆமென்.

என்று சிந்திக்கின்றோம், சொல்லுகின்றோம்.

அதாவது சிந்தித்துக்கொண்டே சொல்கிறோம்.

தந்தை என்று சொல்லும்போது தந்தை இறைவனை மனதில் நினைக்கிறோம்.

மகன் என்று சொல்லும்போது சிலுவையில் மரித்து நம்மை மீட்ட இறைமகனை நினைக்கிறோம்.

தூய ஆவி என்று சொல்லும் போது நம்மை வழி நடத்தும் தூய ஆவியானவரை நினைக்கிறோம்.

மூன்று ஆட்களை நினைத்தாலும் 

"பெயராலே" என்று ஒருமையில் 
நினைக்கும்போது,

"மூன்று ஆட்களும் ஒரே கடவுள் என்ற விசுவாச சத்தியத்தை நினைக்கிறோம்.

தந்தை என்று சொல்லும் போது நெற்றியில் விரல்களை வைக்கிறோம். நெற்றி மேலே இருக்கிறது. ஆகவே விண்ணகத் தந்தை என்பதை நினைக்கிறோம்.

நெஞ்சு கீழே இருக்கிறது. மகன் என்று கூறிக்கொண்டு நெஞ்சில்  கை 
வைக்கும்போது 

இறைமகன் நம்மை மீட்க விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்தார், மனிதனாகப் பிறந்தார், என்ற விசுவாச சத்தியத்தை நினைவு கொள்கிறோம்.

  நமது நெஞ்சில் இயேசு இருக்கிறார் என்று எண்ணும்போது அவர் மேல் நமக்கு உள்ள அன்பு அதிகமாகும்.

தோள்ப் பட்டைகள் மனித சக்தியின் அடையாளம். பணிகளைச் செய்ப சக்தி தேவை.

தோள்ப் பட்டைகளில் விரல்களை வைத்து தூய ஆவி என்று சொல்லும்போது

 தூய ஆவி தரும்.சக்தியாலும், 
வழி நடத்துதலினாலுமே ஆன்மீக வாழ்வு வாழ்கிறோம் என்பதை நினைவு கொள்கிறோம்.

நமது மீட்புக்காக மனிதனாய் பிறந்து பாடுகள் பட்டு மரித்தவர் இறைமகன் இயேசுதான். 

 ஆனாலும் மூன்று ஆட்களும் ஒரே கடவுளாக இருப்பதால் நமக்கு மீட்பு அளிப்பவர் பரிசுத்த திரி ஏக கடவுளே.

நமது வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் நம்மோடு இருந்து பராமரிப்பவர் பரிசுத்த 
தமதிரித்துவம்தான் என்பதை நாம் போடும் சிலுவை அடையாளம் நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

நமது கையாலேயே 
திரி ஏக தேவனின் பெயரால் நாம் சிலுவை அடையாளம் போடும்போது 

இறைவன் நமக்குத் தரும் சிலுவைகளைச் சுமக்க மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோம்.

சிலுவை அடையாளம் வரைந்து அதற்கு நாம் கொடுக்கும் முத்தம் சிலுவையின்பால் நமக்குள்ள பாசத்தை காண்பிக்கிறது.

 சிலுவை அடையாளம் போட்டபின் அதற்கு கொடுக்க வேண்டிய முத்தத்தை அதை போட்ட நம் விரல்களுகுக் கொடுக்கிறோம்.

சிலுவையைத் தொட்டதெல்லாம் நமது பாசத்திற்கு உரியவை என்பதை ஏற்றுக் கொள்கிறோம்."

"ஒவ்வொரு முறை சிலுவை அடையாளம் போடும் போதும் இவ்வளவும் ஞாபகத்திற்கு வர வேண்டுமா?"

",வரவேண்டும். வருவதற்காகவே சிலுவை அடையாளம் போடுகிறோம்."

"இவ்வளவையும் நினைத்துக்கொண்டு சிலுவை அடையாளம் போட்டால் அதுவே மிகப்பெரிய ஜெபம் ஆகிவிடுமே!"

", திரியேக தேவனோடு ஒன்றித்து விடுவதுதான் மிகப்பெரிய ஜெபம்.

 அதைத்தான் சிலுவை அடையாளம் போடும்போது செய்கிறோம்.

திரியேக தேவனோடு மனதில் ஒன்றித்துக் கொண்டுதான் சிலுவை அடையாளம் போடுகிறோம்.

 சிலுவையை நினைத்தவுடனே அதில் மரித்த இயேசு ஞாபகத்திற்கு வருவார்.

 அவரையும் சிலுவையையும் சேர்த்து நினைத்தவுடனே இறைவனின் அன்பு ஞாபகத்திற்கு வரும்.

 இறைவனின் அன்பு ஞாபகத்திற்கு வந்த உடனே நமது பாவத்தின் கனாகனம் புரியும்.

பாவத்தின் கனாகனம் புரிந்த
 உடனே மனதில் மனஸ்தாப உணர்வு தோன்றும்.

 மனஸ்தாப உணர்வு தோன்றும் போது பாவமன்னிப்பு கிடைக்கும்.

 பாவமன்னிப்பு கிடைக்கும்போது நாம் நித்திய வாழ்வுக்கு தயாராகி விடுவோம்.

இதற்கு பெயர்தான் மீட்பு.

அதனால் தான் சிலுவையின் மூலமாகத்தான் மீட்பு என்று சொல்லுகிறோம்."

"என் நெற்றியில் சிலுவை அடையாளம் போடுங்கள்."

'',தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே ஆமென்."

லூர்து செல்வம்.

Saturday, November 13, 2021

"தன் உயிரைப் பாதுகாக்கத் தேடுகிறவன் அதை இழந்துவிடுவான். இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான். " (லூக்.17:33)

"தன் உயிரைப் பாதுகாக்கத் தேடுகிறவன் அதை இழந்துவிடுவான். இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான். " 
(லூக்.17:33) 

உலகியல் ரீதியாக ஒரு ஒப்புமை:

கையில் மாம்பழம் ஒன்று இருக்கிறது.

 பழத்தைச் சாப்பிடுகிறோம்.  மாங்கொட்டை மட்டும் கையில் இருக்கிறது.

கையில் இருக்கும் மாங்கொட்டையை என்ன செய்யலாம்?

ஒன்று பத்திரமாக பெட்டிக்குள் பூட்டி வைக்கலாம்.

அல்லது தோட்டத்தில் மண்ணில் புதைத்து வைக்கலாம்.

பெட்டிக்குள் பூட்டி வைத்தால்  அது நம்மோடு இருக்கும்.

மண்ணில் புதைத்து வைத்தால் நாம் அதை இழந்து விடுவோம்.

நம்மோடு இருப்பதால் நமக்கு என்ன பயன்? அதை அப்பப்போ பார்த்து ரசிக்கலாம். அவ்வளவுதான்.

ஆனால் அதை நாம் மண்ணுக்குள் இழந்து விட்டால்,
 அது முளைத்து,
 தளிர் விட்டு,
 கன்றாகி,
மரமாகி,
பூத்து,
காய்த்து,
ஆயிரக்கணக்கான ருசியான மாம்பழங்களை தரும்.

இழப்பது ஒரு மாங்கொட்டை.
திரும்ப பெறுவது ஆயிரக்கணக்கான மாம்பழங்கள்.


 சென்னையிலிருந்து இரயிலில் தென்காசி நோக்கி பயணிக்கிறோம்.

ACஉட்பட சகல வசதிகளையும் கொண்ட முதல் வகுப்பு வண்டியில்.

தென்காசி வந்த பிறகும் வசதியான பிரயாணத்தை இழக்க விரும்பவில்லை.

தென்காசியில் இறங்காமல் தொடர்ந்து பயணிக்கிறோம்.

பயணம் ஏதாவது ஒரு நிலையத்தில் முடிந்துவிடும்.

ஆனால் வீட்டிற்கு வந்திருக்க மாட்டோம்.

பிரயாணத்தை இழந்தால் வீடு.
இழக்காவிட்டால்  பிரயாணம் மட்டுமே.

 வீட்டில்தான் வாழ்க்கை, பிரயாணத்தில் அல்ல.

ஆன்மீகத்தில் ஆன்மா உடலை இழந்தால்தான் விண்ணக வீட்டிற்குச் செல்ல முடியும்.

ஆன்மாவும், உடலும் இணைந்து வாழ்வதை உயிருடன் வாழ்தல்
 என்போம்.

இது உடலைச் சார்ந்த உயிர்.

உடலைச் சார்ந்த உயிர் பிரியும்போது ஆன்மா உடலை விட்டு பிரிந்துவிடுகிறது.

இறைவன் அருளும் புனிதமாக்கும் அருள் (Sanctifying grace) ஆன்மாவின் உயிர்.

ஆன்மீக வாழ்வில் உடலைச் சார்ந்த உயிரைவிட ஆன்மாவின் உயிர்தான் முக்கியம்.

உடலைவிட்டு உயிர் பிரியும்போது ஆன்மா புனிதமாக்கும் அருளாகிய உயிரோடு இருந்தால்தான் விண்ணக வீட்டிற்குள் நுழைய முடியும்.

நாம் உலகில் வாழ்வதே  விண்ணக வாழ்விற்காகத்தான்.

விண்ணக வாழ்வை விரும்புபவன் எப்போதும் புனிதமாக்கும் அருளாகிய உயிரோடு இருக்க வேண்டும்.

''தன் உயிரைப் பாதுகாக்கத் தேடுகிறவன் அதை இழந்துவிடுவான்."

உலக வாழ்வை மட்டும்  பாதுகாக்க முயற்சி செய்பவன் விண்ணக வாழ்வை இழந்துவிடுவான்.

உலக வாழ்வை இழக்க  தயாராக இருப்பவன் தான் விண்ணக வாழ்வை அடைவான்.

இறைவனுக்காக மரித்த வேதசாட்சிகள்  உலகில்  தங்கள்  உயிரைத் தியாகம் செய்ததால்

விண்ணகத்தில் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உலகில் உயிரை இழக்க மனமில்லாமல் இறைவனை மறுப்பவர்கள் 

விண்ணக உயிரை இழந்துவிடுவார்கள்.

 உலகில் நீண்ட நாள் வாழ விரும்புகிறவர்கள் தங்கள் உடலைப் பேணுவார்கள்.

 விண்ணகத்தில் நித்திய காலமும் வாழ விரும்புகிறவர்கள் தங்களது ஆன்மாவைப் பேணுவார்கள்.

ஆன்மாவைப் பேணுபவர்கள்  ஆன்மாவை  இறைவன் அருளால் நிறப்புவதற்காக உழைப்பார்கள்.

ஜெப, தவ முயற்சிகளினால் மட்டுமே இறையருளை நிறைய பெற முடியும்.

ஆன்மா இறைவனோடு இணைந்து வாழ்வது ஜெப வாழ்வு.

 ஒறுத்தல்  முயற்சிகளால் உடலை  அடக்கி வாழ்வது தவ வாழ்வு.


 உடல் கேட்டதையெல்லாம் கொடுப்பவனால் அதை அடக்கி ஆளமுடியாது.

 உடல் ஆசைப்படுவதை எல்லாம் கொடுக்க முயல்பவனால்

ஆன்மா ஆசைப்படும் அருள் வாழ்வைப் பெற முடியாது.

ஆன்மா அருள் வாழ்வைப் பெற்று வாழ அதற்கு உதவிகரமாக இருப்பதற்கே அதற்கு உடல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வினாடியும் உடல் ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

அப்போதுதான் அதனால் உடலை இறைவன் அருளைப் பெறுவதற்காகப்  பயன்படுத்த முடியும்.

அதிகாலையில் இறைவனை நினைத்த படியே எழுந்து,

காலை ஜெபத்தை சொல்லிவிட்டு

நாளின் பணியை ஆரம்பிக்க ஆன்மா ஆசைப்படும்.

உடலோ இன்னும் கொஞ்சம் தூங்க ஆசைப்படும். 

ஆன்மா அதன் ஆசைக்கு இணங்காமல் அதை தட்டி எழுப்பி விட்டால் அந்த முயற்சிக்காகவே இறைவன் அருள் ஆன்மாவுக்கு கிடைக்கும்.

உடல் தனது வசதியை இழந்தால்தான் ஆன்மா ஆண்டவரது அருளைப் பெறும்.

இழப்பு இன்றி பேறு இல்லை.

ஒரு சந்தி இருத்தல், 
சுத்தபோசனம் அனுசரித்தல்,
ருசிக்காக உண்ணாமல், பசிக்காக மட்டும் உண்ணல்,
 ஐம்புலன்களையும் அடக்குதல், 
ஆடம்பர வசதிகளை விலக்குதல், 

இன்னும் இதுபோன்ற உடலை அடக்கி வைக்கும் முயற்சிகளால்
உடல் சார்ந்த சிற்றின்பத்தை இழந்தால்தான்

 விண்ணகத்தில் ஆன்மாவிற்கு பேரின்பம் கிடைக்கும்.

 திருச்சபை ஒறுத்தல் முயற்சிகளுக்கும், தவ முயற்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

 தவம் செய்யவே தேவையில்லாத ஆண்டவரே மனிதராக பிறந்து தவ முயற்சிகளை செய்வதில் நமக்கு முன்மாதிரிகை காட்டினார். 

அனைத்துலகும் கீழ்ப்படிய வேண்டிய இயேசுவே  அன்னை மரியாளுக்கும், சூசையப்பருக்கும் கீழ்படிந்து நடந்தார்.

"உண்டாகுக" என்ற ஒரே சொல்லால் இந்த பிரபஞ்சத்தையே படைத்தவர்

 தான் சாப்பிட வேண்டிய உணவுக்காக தச்சுவேலை செய்தார்.

தனது நற்செய்திப் பணியை ஆரம்பிக்கும் முன் நாற்பது நாட்கள் உண்ணாநோன்பு இருந்தார்.

அவர் பட்ட பாடுகளும், சிலுவை மரணமும் அவரது தவ வாழ்வின் உச்ச கட்டம்.

அவரே நமக்காக செய்ததை நாம் நமக்காக செய்யக்கூடாதா?

ஒரு காலத்தில் நன்மை வாங்க விரும்புவோர் நடுச்சாமம் துவக்கி நன்மை வாங்கு மட்டும் ஒன்றும் உண்ணாமலும் குடிக்காமலும் இருந்தனர்.

 இப்பொழுது தாய்த் திருச்சபை
 நன்மை வாங்கு முன் ஒரு மணி நேரம் உண்ணாமலும், குடிக்காமலும் இருக்க கட்டளை கொடுத்திருக்கிறது. அதிலும் தண்ணீருக்கு விதிவிலக்கு அளித்திருக்கிறது.  

நம்மவர்களால்  இதையே    
 கடைப்பிடிக்க முடியவில்லை.

பூசைக்கு  வரும்போதே     காபி  குடித்துக்கொண்டுதான்   வருகிறார்கள்.

கேட்டால் சாமியார் பிரசங்கமே ஒரு மணி நேரம் ஓடுமே என்று சொல்கிறார்கள்.

ஆண்டவருக்காக தங்கள் உடலை கொஞ்ச நேரம் ஒறுக்க அவர்களுக்கு மனதில்லை.

முன்பெல்லாம் நற்கருணை நாதர் முன்பு ஆராதனை செய்யும் வகையில் முழந்தாள் படியிட்டு எழுவது வழக்கம்.

ஆனால் இப்போது இளைஞர்களுக்குக் கூட முட்டு வளைய மறுக்கிறது.

ஜிம்முக்கு சென்று காசு கொடுத்து ஆயிரம் பயிற்சிகள் செய்வார்கள்.

ஆனால் கடவுள் முன் முட்டும் வளையாது, இடுப்பும் வளையாது,
தலை மட்டும் ஆடும்!

தங்கள் உடலை Trim ஆக  வைத்துக் கொள்வதற்காக செய்வதை ஆண்டவருக்காக செய்யக்கூடாதா?

நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு முறை Hostel  மாணவர்கள் பூசை முடிந்து வெளியேறியபோது அவர்களது சட்டையில் ஆங்காங்கே மை தெளிக்கப்பட்டிருந்தது.

யாரோ ஒரு மாணவன் கோயில் வாசலில் இருந்த  தீர்த்த தொட்டியில்  தீர்த்தத்தோடு ink ஊற்றி வைத்திருக்கிறான்.

மாணவர்கள் Study hallல் அமர்ந்திருந்தபோது சாமியார் அதை பற்றி விசாரிக்க வந்தார்.

ஒரே ஒரு  பையனுடைய சட்டையில் மட்டும் மை இல்லை 

சாமியார்  அவன் மீது சந்தேகப்பட்டு தீர்த்தத்திற்குள் மை ஊற்றியது நீயா என்று கேட்டார்.

மையை ஊற்றியது தான்தான் 
 என்று ஏற்றுக்கொண்டான்.

"சுவாமி, சிலுவை அடையாளம் வரைவதற்காக தீர்த்தத் தொட்டியில் தீர்த்தம் ஊற்றி வைக்கப்பட்டுள்ளது.

 யாருடைய நெற்றியிலும், நெஞ்சிலும், தோள்பட்டைகளிலும் மைப்புள்ளி இருக்கிறதா என்று பாருங்கள். 

ஆக, யாரும் தீர்த்தத்தைத் தொட்டு மேலே தெளித்துக் கொண்டார்களே தவிர சிலுவை போடவில்லை.

மாணவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே இப்படி செய்தேன்."

சாமியார் சிரித்து விட்டார்.

" உனது நோக்கம் சரிதான். ஆனால் வழிமுறை தவறு."

"சுவாமி, மன்னித்துக் கொள்ளுங்கள். இனி இப்படி செய்ய மாட்டேன். இருந்தாலும் எப்படி சிலுவை அடையாளம் போடுவதென்று மாணவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்"  

ஆக, நமது ஒவ்வொரு செயலிலும் ஒரு தவ முயற்சிக்கு வாய்ப்பு இருக்கிறது.

தவக்காலத்தில் மட்டும் தவம் செய்தால் போதாது.

நமது வாழ்வே தவ வாழ்வாக
 இருக்க வேண்டும்.

 தவத்தினால் நாம் உலகில் சிற்றின்பத்தை இழக்கிறோம்,

 விண்ணகத்தில் பேரின்பத்தை அடைகிறோம்

லூர்து செல்வம்.

Thursday, November 11, 2021

"இதோ இங்கே! அதோ அங்கே! "என்று சொல்வதிற்கில்லை. ஏனெனில், கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது" என்றார்.(லூக்.17:21)

"இதோ இங்கே! அதோ அங்கே! "என்று சொல்வதிற்கில்லை. ஏனெனில், கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது" என்றார்.
(லூக்.17:21)

இயேசு நற்செய்தி பணியை ஆரம்பித்த நாளிலிருந்து அவரை பின்தொடர்ந்து வந்தவர்கள் இரண்டு வகையினர்:

1. சாதாரண, படியாத, பாமர மக்கள்.

2. சட்டங்களை கற்றுத்தேர்ந்த பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும்.

சாதாரண மக்களிடம் இயேசுவின் மேல் விசுவாசம் இருந்தது.

அவர்கள் அவரைத் தேடி வந்தது அவரது நற்செய்தியைக் கேட்கவும், நோய் நொடிகளிலிருந்து குணம் பெறவும், அவரது சீடர்களாக அவரைப் பின்பற்றவும்.

ஆனால் பரிசேயர் முதலான படித்த தலைவர்களுக்கு இயேசுவின் மேல் விசுவாசம் இல்லை.

அவர்கள் அவரைத் தேடி வந்தது அவரது பேச்சிலும், நடவடிக்கைகளிலும் குறை காண்பதற்கும், தேவையற்ற கேள்விகள் கேட்கவும், அவரை கொல்வதற்கான வழிவகைகளைத் தேடுவதற்காகவுமே.


பரிசேயர் இயேசுவிடம் ஏதாவது கேள்வி கேட்டால் அது தெரியாததைத் தெரிந்து கொள்வதற்காக அல்ல,

 அவரைப் பரிசோதிப்பதற்காகவே.

ஒரு முறை அவர்கள் இயேசுவைப் பார்த்து,

''கடவுளின் அரசு எப்பொழுது வரும்?"

என்று கேட்டார்கள்.

அவர்கள் உண்மையிலேயே இறைநம்பிக்கை உள்ளவர்களாக இருந்திருந்தால், அவர்களுக்கு இந்த சந்தேகம் வந்திருக்கக் கூடாது.

அதுமட்டுமல்ல இயேசு ஆரம்பத்திலிருந்தே இறையரசை பற்றிய நற்செய்தியைத்தான் போதித்துக் கொண்டிருந்தார்.

அவர்களும் அவர் பின்னாலேயே போய் அவர் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

இந்தக் கேள்விக்கு இயேசு என்ன பதில் சொல்கிறார் என்பதை பரிசோதிக்கவே இந்த கேள்வியை கேட்டார்கள்.

இயேசுவுக்கு அவர்களுடைய நோக்கம் தெரியும்.

சாதாரண மக்களுக்கு விளக்கும்போது ஆண்டவர் உவமைகள் மூலமாகவும், ஒப்புமைகள் மூலமாகவும் விளக்குவது வழக்கம்.

 ஆனால் திருச்சட்டப் படிப்பிலே வல்ல பரிசேயர்களுக்கு பதிலைச் சுருக்கமாகச் சொல்கிறார்.

நாமும் சாதாரணமானவர்கள்தான். ஆனால் பரிசேயர்களிடம் இல்லாத முக்கியமானதொன்று நம்மிடம் இருக்கிறது,

 விசுவாசம்.

நாம் இயேசுவைக் கடவுளாக ஏற்றுக்கொள்கிறோம்.

அவர் கூறிய பதில் இறைவனுடைய வார்த்தை.

நமது விசுவாசத்தின் அடிப்படையில் இறைவார்த்தையைத் தியானிப்போம்.

''கடவுளின் அரசு எப்பொழுது வரும்?"

" அரசு இதோ! உங்களிடையே உள்ளது" 

எங்கே? எப்பொழுது? என்ற வினாச் சொற்கள் படைக்கப்பட்ட பொருட்களைப் பற்றி கேட்பதற்கு பயன்படுத்தப்படுபவை.

அதாவது இடத்திற்கும் காலத்திற்கும் கட்டுப்பட்ட பொருட்களை பற்றி அறிய கேட்கப்படுவது.

சென்னை எங்கு இருக்கிறது? என்று கேட்கலாம். அது ஒரு இடத்தில்தான் இருக்க முடியும்,

ஒருவர் எப்பொழுது பிறந்தார்? என்று கேட்கலாம் ஏனெனில் ஒருவர் காலத்தில் ஒரு நேரத்தில்தான் பிறக்க முடியும்.

ஆனால் இடத்தையும், காலத்தையும் கடந்த இறைவனைப்பற்றி அறிய இந்த வினா சொற்களை பயன்படுத்த முடியாது. 

கடவுள் காலத்தை கடந்த நித்தியத்தில் வாழ்கிறார்.

அவர் வாழ இடம் தேவையில்லை.

காலத்தை கடந்த இறைமகன் மனிதனாக உரு எடுத்தபோது காலத்திற்குள் நுழைந்தார்.

அதனால் இயேசு எங்கே, எப்போது பிறந்தார் என்று கேட்கலாம்.

இறைமகன் தேவ சுபாவத்தில் காலத்தை கடந்தவர்.

மனித சுபாவத்தில் காலத்திற்கு உட்பட்டு 33 ஆண்டுகள் உலகில் வாழ்ந்தார்.

இறைவன் அரசர். இறைவன் எப்போதும் இருப்பதால் இறையரசும் எப்போதும் இருக்கிறது.

இறையரசர்தான் நம்மைப் படைத்தார். ஆகவே இறையரசுக்குள்தான் நாம் இருக்கிறோம்.

பிரபஞ்சம் முழுவதுமே அவருடைய அரசுக்குள்தான் இருக்கிறது.

ஆனாலும், இயேசு நமக்கு ஜெபிக்க கற்றுத்தந்தபோது 

"உமது ஆட்சி வருக" என்று தந்தை இறைவனிடம் கேட்கச் சொன்னார்.

நாம் அவரது ஆட்சிக்குள் இருக்கும்போது 

இயேசு ஏன் "உமது ஆட்சி வருக" என்று கேட்க சொன்னார்?

கடவுள் நம்மை படைக்கும்போது முழுமையான மன சுதந்திரத்தோடு படைத்தார்.

அவர் நமது அரசராக இருந்தாலும் அவரை நமது அரசராக ஏற்றுக்கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளாதிருக்கவோ நமக்கு முழு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார்.

நமது சுதந்திரத்தை பயன்படுத்தி அவரை நமது அரசராக ஏற்றுக் கொண்டால் நமக்குள் இறையரசு வந்துவிட்டது, 

அவரை நமது அரசராக ஏற்றுக் கொள்ளாவிட்டால் நமக்குள் அவரது அரசு இல்லை.

நம்மிடையே இருக்கிறது, ஆனால்,  நமக்குள் இல்லை.

அவர் நம்மை நித்திய காலமாகவே அன்பு செய்கிறார். ஆகவே நாம் அவரது அன்புக்குள்தான் இருக்கிறோம்.

ஆனால் நாம் அவரை அன்பு செய்தால்தான் அவர் நமது அன்புக்குள்தான் இருக்கிறார்.

அதேபோல்தான் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அரசுக்குள்தான் இருக்கிறோம்.

ஆனால் நாம் அவரை விரும்பி ஏற்றுக் கொண்டால்தான் அவரது அரசு நமக்குள் இருக்கிறது.

"உமது ஆட்சி வருக" என்று தந்தையிடம் வேண்டும் போது 

''மனுக்குலம் முழுவதும் உம்மை தந்தையாக ஏற்றுக் கொள்ள அருள் புரியும் தந்தையே"
என்று வேண்டுகிறோம்.

இயேசு "கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது" என்று சொன்னது போல,

கடவுளின் அரசு நம்மிடையேதான் உள்ளது. 

கடவுளின் அரசை நாம் ஏற்றுக் கொள்ளும் போது தான் அது நமக்குள் நுழைகிறது.

கடவுள் நமது முதல் பெற்றோரை அவரது அரசில்தான் படைத்தார்.

ஆனால் தங்களது பாவத்தின் மூலம் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் 

அவர்களுக்குள் இறையரசு இல்லாமல் போய்விட்டது. 

திரும்பவும் இறையரசு அவர்களுக்குள் வரவேண்டுமென்றால் 

அவர்கள் தங்களது பாவத்திற்கு பரிகாரம் செய்து மன்னிப்பு பெற்றாக வேண்டும்.

மனுக்குலம் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்து, அதன்மூலம் பாவமன்னிப்பு அளிப்பதற்காகவே இறைமகன் மனுமகனாகப் பிறந்தார்.

பரிகாரம் செய்வதற்காகவே பாடுகள் பட்டு சிலுவையில் தன்னையே பலியாக்கினார்.

இறையரசு உங்களிடையே இருக்கிறது அதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று தான் நம்மிடம் கேட்கிறார்.

"உமது ஆட்சி வருக" என்று தந்தையிடம் வேண்டவும் சொல்கிறார்.

மனுக்குலம் இறையாட்சியை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவேதான் நாம் செய்யும் நற்செய்தி பணிகள்.

முதலில் நாம் நற்செய்தியை வாழ்வோம்.

அதாவது பாவமன்னிப்பு பெற்று,

 பாவம் இன்றி வாழ்வதன் மூலம் நற்செய்தியை வாழ்வோம்.

நமது வாழ்வின் மூலம் இறையாட்சியை நாம் ஏற்றுக்கொள்வோம்.

நமது நற்செய்தி பணியின் மூலம் மற்றவர்களும் இறையாட்சியை ஏற்றுக்கொள்ள செய்வோம்.

"உமது ஆட்சி வருக" என்று தந்தையிடம் வேண்டினால் மட்டும் போதாது, நாமும் அதற்காக உழைக்க வேண்டும்.

இறையரசு ஆன்மீக அரசு.

நமது ஆன்மா பாவம் இன்றி பரிசுத்தமாக இருக்கும் போது நமக்குள் இறையரசு இருக்கிறது,

நம்மிடையே இருக்கும் இறையரசு நமக்குள்ளும் இருக்க தந்தையிடம் வேண்டுவோம்.

வேண்டினால் மட்டும் போதாது தந்தையின் சித்தப்படி வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, November 9, 2021

"பத்துப்பேரும் குணமடையவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?" (லூக்.17:17)

"பத்துப்பேரும் குணமடையவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?" (லூக்.17:17)

இயேசு பத்து தொழு நோயாளிகளைக் குணமாக்கினார்.

அவர்களுள் ஒருவன் மட்டும் உரத்த குரலில் கடவுளை மகிமைப்படுத்திக்கொண்டு, திரும்பி வந்து,


அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து நன்றிசெலுத்தினான்.

 அவனோ சமாரியன்.

  இயேசு அவனைப் பார்த்து,

 "பத்துப்பேரும் குணமடையவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?

திரும்பி வந்து கடவுளை மகிமைப்படுத்த இந்த அந்நியனைத்தவிர வேறு ஒருவரையும் காணோமே! " என்றார்.

நம்மில் அநேகர் நன்றி சொல்ல மறந்த இந்த ஒன்பது தொழுநோயாளிகள் போலவே நடந்து கொள்கிறோம்.

நமது வாழ்வின் ஒவ்வொரு விநாடியும் இறைவன்தான் நம்மை பராமரித்து வருகிறார்.

உண்மையைச் சொல்வதானால் நமது வாழ்வின் ஒவ்வொரு விநாடியும் இறைவனுக்கு நன்றி கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.

சென்ற விநாடி இருந்தவர்கள் இந்த விநாடி இருப்பதுவும்,

இந்த விநாடி இருப்பவர்கள்அடுத்த வினாடி இருக்கப்போவதும் அவரால் தான்.

எந்த விநாடி வரை நாம் இருப்போம் என்று நமக்கே தெரியாது.

அவருக்கே தெரியும்.

அவரன்றி அணுவும் அசையாது.

ஒவ்வொரு அசைவிலும் அவருக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.

நம்மைப் படைத்ததற்காக ஒரு முறையாவது இறைவனுக்கு நன்றி 
கூறியிருக்கிறோமா?

நம்மைப் படைத்தது இவ்வுலகில் கஷ்டப் படுவதற்கு அல்ல, மறு உலகில் அவரோடு நித்திய பேரின்பத்தில் வாழ்வதற்காக.

இவ்வுலகத்தில் நாம் படும் கஷ்டங்கள் ஒரு பெண்ணின் பேறுகால வேதனை போல்.

பேறுகால வேதனை நிரந்தரமானது அல்ல. ஆனால் அதன்பின் அவள் பெறும் குழந்தைச் செல்வம் நிரந்தரமானது.

அவ்வாறே தான் இவ்வுலக துன்பங்கள் நிரந்தரமானவை அல்ல.

அவற்றைக் கடந்து நாம் பெறவிருக்கும் நித்திய பேரின்பம் நிரந்தரமானது.

நிரந்தரமான பேரின்பத்தை நமக்குத் தருவதற்காக நம்மை படைத்த கடவுளுக்கு நன்றி கூற வேண்டாமா?

உலக துன்பங்களில் வழியே பயணித்துதான் நாம் நித்திய பேரின்பத்தை அடைய வேண்டும்.

 நித்திய பேரின்பத்தை எண்ணி, அதற்கு இட்டுச்செல்லும் துன்பங்களுக்காகவும் நன்றி கூற வேண்டும்.

நமக்கு இவ்வுலகில் என்ன நேர்ந்தாலும் நன்றி கூற வேண்டும்,

 ஏனெனில் என்ன நேர்ந்தாலும் அது இறைவனை நோக்கிய பாதையில் உதவிகரமானதாகவே இருக்கும்.

ஊசி போட்டால்தான் நோய் குணமாகும் என்றால் ஊசி வலியை தாங்கிக்கொண்டு

 ஊசி போட்ட மருத்துவருக்கு நாம் நன்றி கூறுவதில்லை?

அதேபோல்தான்,

சிலுவையை சுமந்தால் தான் விண்ணகம் செல்ல முடியும் என்றால்

 சிலுவை வலியை தாங்கிக்கொண்டு 

சிலுவையைத் தந்த இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.


"ரொம்ப நன்றி, சார்."

"என்ன விஷயம்?" 

"படிக்காத போதெல்லாம் பிரம்பால் அடித்து படிக்க வைத்ததால் நன்கு தேர்வு எழுதியுள்ளேன். நல்ல மார்க் வரும்.

 எங்களை படிப்பதற்காக அடித்த தங்களது பிரம்புக்கு நன்றி.

அடித்து படிக்க வைத்த தங்களுக்கும் நன்றி, சார்."

துன்பங்கள் வரும் போது இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

துன்பங்களோடுதான் நித்திய பேரின்பமும் சேர்ந்து வரும்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்" 
 என்று இயேசு கூறினார், 

கேட்டோம். கேட்டது கிடைத்தது. நன்றி கூறினோம். 

 கிடைக்கவே இல்லை. 

என்ன செய்ய வேண்டும்? அப்போதும் நன்றி கூற வேண்டும்.

கிடைக்காததற்கு ஏன் நன்றி கூற வேண்டும்?

நாம் ஆசைப்படுவதைக் கேட்கிறோம். ஆனால் நாம் கேட்பது நமக்கு நன்மை பயக்குமா, தீமை பயக்குமா என்பது நமக்குத் தெரியாது.

ஆனால் நம்மைப் படைத்த கடவுளுக்கு தெரியும்.

 நாம் கேட்பது நமக்கு நன்மை பயப்பதாக இருந்தால் மட்டுமே அவர் நமக்கு நாம் கேட்டதைத் தருவார்.

 தீமை பயப்பதாக இருந்தால் தரமாட்டார்.

 தீமை பயக்கக்கூடிய ஒன்றை அவர் அவர் நமக்குத் தராததற்காக அவருக்கு நன்றி கூற வேண்டும்.

வழக்கமாக பெற்றோருக்கு கடிதம் எழுதுபவர்கள், 

"தங்கள் அன்புள்ள மகன்" 

என்று எழுதி கடிதத்தை முடிப்பார்கள்.

ஒரு பையன், 

"என்றும் நன்றியுடன் உங்கள் மகன்" 

என்று எழுதி முடிப்பான்.

ஏன் என்று கேட்டால் 

அவர்கள் என்னுடைய பெற்றோராக கிடைத்ததற்கே அவர்களுக்கு நான் நன்றி உள்ளவனாக இருக்கவேண்டும் என்பான்.

அதுபோல,

கடவுள் நமது கடவுளாக இருப்பதற்கே நாம் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மற்ற எல்லா காரணங்களும் அதற்குள் அடக்கம்.

"இறைவா உமக்கு என்றும் நன்றி."

லூர்து செல்வம்.

Sunday, November 7, 2021

" இடறல் வராமல் இருக்க முடியாது. ஆனால், யாரால் வருகின்றதோ, அவனுக்கு ஐயோ கேடு!". ( லூக். 17:1)

" இடறல் வராமல் இருக்க முடியாது. ஆனால், யாரால் வருகின்றதோ, அவனுக்கு ஐயோ கேடு!".
 ( லூக். 17:1)

''ஏல, இங்க வா."

"என்ன சார்?"

"நம்ம வகுப்பில் எத்தனை பேர் இருக்காங்க?"

"40 பேர் சார்"

"கையை நீட்டு."

"சார், எதுக்கு?"

"அடி கொடுக்க. உள்ளங்கையைக் கையைக் காண்பி. வகுப்பிற்கு பாடத்தைக் கவனிக்க வந்தியா? விளையாட வந்தியா?"

கையை நீட்டினான்.

"Monitor, இவனுக்கு உள்ளங்கையில அடி கொடுக்கப் போகிறேன். அடிக்க அடிக்க எண்ணிக்கொண்டே வா."

"சார், எத்தனை அடி அடிக்கப் போறீங்க?"

"40."

"சார், நான் ஒரு நேரம்தானே விளையாடிக் கொண்டிருந்தேன். அதற்கு 40 அடிகளா சார்?"

"ஒரு அடி நீ. விளையாடிக் கொண்டு இருந்ததற்கு. முப்பத்தி ஒன்பது அடி மற்ற மாணவர்களை கெடுத்ததற்கு."

"சார், நான் யாரையும் கெடுக்கல. விளையாட மட்டும்தான்."

"நீ ஒருவன் விளையாட மற்றவர்கள் அனைவரும் பாடத்தைக் கவனிக்காமல் உன்னைத்தானே பார்த்து கொண்டு இருந்தார்கள்."

"அதுக்கு அவங்கள அடிங்க சார்."

 "அவர்களையும் அடிக்கப் போகிறேன். அவர்களுக்கு ஆளுக்கு ஒரு அடி.

 நீ விளையாடிபதற்கு ஒரு அடி.

 முப்பத்தி ஒன்பது பேரை பாடத்தை கவனிக்க விடாமல் செய்ததற்கு முப்பத்தி ஒன்பது அடி."

"Sorry, Sir.இந்த ஒரு தடவையும் மன்னித்துக் கொள்ளுங்கள், சார்.
இனிமேல் வகுப்பில் விளையாட மாட்டேன்.''

"மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்."

"ஆகட்டும், சார்."

"போய் இடத்தில் உட்கார்ந்து பாடத்தைக் கவனி.

மனிதனுக்கும் மிருகங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

 அவற்றில் மிக முக்கியமான ஒன்று 

மிருகங்கள் யாரையும் பார்த்து கற்றுக் கொள்வது இல்லை.

 அவை அவற்றிலுள்ள உள்ளுணர்வின் (Instinct) படியே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

ஒரு காலத்தில் மனிதன் மிருகங்களோடு காட்டில் வாழ்ந்திருக்கிறான்.

 மிருகங்களும் அவனோடுதான் வாழ்ந்திருக்கின்றன.

 ஆனால் மனிதன் தன் புத்தியை பயன்படுத்தி நாகரீகம் அடைந்திருக்கிறான்.

 ஆனால் மனிதனோடு வாழ்ந்த எந்த மிருகமும் பறவையும் நாகரிகம் அடைந்திருக்கிறதா?

மிருகங்கள் மனிதனைப் பார்த்து மட்டுமல்ல,

 மற்ற மிருகங்களை பார்த்தும் கற்றுக் கொள்வதில்லை.

 அவையவை அவையவற்றின் உள்ளுணர்வுப்படி இயங்குகின்றன.

மனிதன் புத்தியுள்ள சமூகப் பிராணி.

தனது புத்தியை பயன்படுத்தி மட்டுமல்லாமல், மற்றவர்களைப் பார்த்தும் கற்றுக் கொள்கிறான்.

ஒவ்வொரு மனிதனுடைய சிந்தையும், சொல்லும், செயலும் அவன் வாழும் சமூகத்தையும் பாதிக்கின்றன.

நான் தினமும் வகுப்பிற்கு பிந்தி வந்தால் நீங்கள் அனைவரும் என்னை பின்பற்றி பிந்தியே வருவீர்கள்.

ஆசிரியர் அவரிடம் கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் முன்மாதிரிகையாக இருக்க வேண்டும். 

ஒரு ஆசிரியர் துர்மாதிரிகையாக நடந்தால் அது அவரிடம் பயிலும் அத்தனை மாணவர்களையும் பாதிக்கும். 

தந்தை துர்மாதிரிகையாக நடந்தால் அது அவரது குடும்பத்தையே பாதிக்கும்.

அரசன் துர்மாதிரிகையாக நடந்தால் அது அவனது நாட்டையே பாதிக்கும்.

அதனால்தான் ஆண்டவர் சொல்லுகிறார்:


"இடறல் வராமல் இருக்க முடியாது.

 ஆனால், யாரால் வருகின்றதோ, அவனுக்கு ஐயோ கேடு! 

அவன் இச்சிறுவருள் ஒருவனுக்கு இடறலாயிருப்பதைவிட, 

அவன் கழுத்தில் பெரிய எந்திரக்கல்லைக் கட்டி கடலில் தள்ளுவது அவனுக்கு நலம்."

நாம் ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சமூகத்தில் நல்லவர்களும் இருப்பார்கள்.

 கெட்டவர்களும் இருப்பார்கள்.

நல்லவர்களின் நல்ல மாதிரிகையை ஏற்றுக் கொண்டு நாம் அவர்களை பின்பற்றி நல்லவர்களாக வாழ வேண்டும்.

கெட்டவர்களின் துர்மாதிரிகையான வாழ்க்கையை எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

நமது நல்ல வாழ்க்கையால் கெட்டவர்களையும் நல்லவர்களாக மாற்ற வேண்டும்.

எப்படி வாழ வேண்டும் என்பதை இயேசு வாழ்ந்து காண்பித்தார்.

அவருடைய சீடர்கள் ஆகிய நாம் அப்படியே செய்வோம்.

லூர்து செல்வம்.