Sunday, July 22, 2018

காலம் மாறிப்போச்சி!

காலம் மாறிப்போச்சி!
*******************************
சினிமாவுக்கு மட்டும்தானா Flash back?

எனக்குக் கிடையாதா?

வயதான பிறகுதான் பையன் பருவத்தின் அருமை புரிகிறது.

ஆரம்பப் பள்ளிக்கூடப் பருவம்.

வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கிட்டுதான் பள்ளிக்கூடம் போவோம்.

சட்டை போட்டாலும் உண்டு, போடாவிட்டாலும் உண்டு.

நடந்துதான் போவோம்.

வாத்தியாரை 'சார்'ன்னுதான் கூப்பிடுவோம்.

ஆனால் டீச்சரை 'அக்கா'ன்னு கூப்பிடுவோம்.

சாமியார் வந்தா,

"சாமி சர்வேசுரனுக்கு தோஸ்திரம்' என்று சொல்லி அவர் முன் முழங்கால்படியிடுவோம்.

அவர் எங்கள் நெற்றியில் சிலுவை போட்டு,

"ஆசீர்வாதம்" என்பார்.

அந்தக் காலத்தில் சாமியாரை அங்கி இல்லாமல் பார்க்கமுடியாது.

அங்கியோடு சாமியாரைப் பார்க்கும்போது சேசுநாதரைப் பார்த்ததுபோல் இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை பல மைல் தூரம் மொட்டை வண்டியில் கோவிலுக்குப் போவோம்.

சில சமயங்களில் நடந்தும் போவோம்.

கோவிலில் பெண்கள் தலையில் முக்காடு போட்டிருப்பார்கள்.

கோவிலில் மட்டுமல்ல, எங்கேயிருந்து செபம் சொன்னாலும் முக்காடு போட்டிருப்பார்கள்.

கோவிலில் முழந்தாள்படி இட்டுதான் நன்மை வாங்குவோம்,  நாவில் மட்டும்தான் வாங்குவோம்.

நன்மை கொடுக்க சாமியார்தான் நாங்கள் முழங்காலில் இருக்கும் இடத்திற்கு வருவார்.

விண்ணிலிருந்து ஆண்டவர் இறங்கி நம்மைத்தேடி வந்தது போலிருக்கும்.

பூசைக்கு அரை மணிக்கு முன்பே சாமியார் பாவசங்கீத்தனத் தொட்டியில் இருப்பார்.

நிறையபேர் பாவசங்கீத்தனம் செய்வார்கள்.

கிளைப்பங்குதளத்தில் ஞாயிறு  பூசை இருந்தால் சாமியார் சனிக்கிழமை மாலையிலேயே அங்கு வந்துவிடுவார்.

உள்ளூர்க்காரர்கள் சனிக்கிழமை மாலையிலேயே பாவசங்கீத்தனம் முடித்துவிடவேண்டும்.

வெளியூர்க்காரர்கள் ஞாயிறு காலையில் பாவசங்கீத்தனம் செய்யவேண்டும்.

கோவிலுக்கு வரும் எல்லோரும் பாவிகள்தானே!

சாமியார் 'பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே, ஆமென்'

என்று சொல்லிதான் பிரசங்கத்தை ஆரம்பிப்பார், முடிப்பார்.

இன்றைய நமது பழக்கங்களோடு பழையனவற்றை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

காலம் மாறிப்போச்சி, காலத்தோடு பழக்கங்ளும் மாறிப்போச்சி.

அங்கியைக் காணோம்.

முக்காட்டைக் காணோம்.

முழந்தாளைக் காணோம்.

பாவத்தைக் காணோம்.

இன்னும் காலம் எப்படி எல்லாம் மாறப்போகிறதோ தெரியவில்லை.

ஆனாலும் பயப்படத் தேவையில்லை.

திருச்சபை கற்பாறைமீது கட்டப்பட்ட கட்டிடம்.

பரிசுத்த ஆவி அதன் உயிர்.

கடந்த நூற்றாண்டுகளில் இதை விடப் பெரிய சோதனைகளை எல்லாம் சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறது.

இன்னும் வெற்றி பெறும்.

லூர்து  செல்வம்.

Saturday, July 21, 2018

செபிப்போம். விண்ணவனின் அருளைப் பெறுவோம்.

செபிப்போம்.

விண்ணவனின் அருளைப் பெறுவோம்.
************************---******

"வணக்கம், சார்."

"வாங்க. வணக்கம். நல்லா இருக்கீங்களா? "

"நல்லா இருக்கோம். ஆனால் .."

"ஆனால்?"

"ஒரு சின்ன சந்தேகம்."

"நீங்க நல்லா இருக்கீங்களாங்கிறதிலேயே சந்தேகமா? "

"அதில சந்தேகம் ஏதும் இல்லை.

நேரே விசயத்துக்கு வர்ரேன்.

இயேசு ஏன் 'கேளுங்கள், கொடுக்கப்படும்'ன்னு சொன்னாரு? 

நமக்கு என்ன தேவைன்னு அவருக்கு நம்மைவிட நல்லாகவே தெரியும்.

நாம் கேட்காமலேயே  அவர் நமக்குத் தருவார்.

பின் ஏன் கேட்கச் சொன்னார்?

'மரம் வச்சவரு தண்ணீ ஊற்றமாட்டாரு?'

பின் ஏன் நாம் செபிக்க வேண்டும்?"

"நான் ஒரு கேள்வி கேட்கலாமா?"

"முதலில் என் சந்தேகத்தை நிவர்த்தி செய்யுங்கள். அப்புறம் கேள்வி கேளுங்கள்."

"என் கேள்விக்கூப் பதில் சொன்னால் உங்களுக்கு வேண்டிய பதில் தானே வந்துவிடும்."

"சரி. கேளுங்கள்."

"கேள்வி கேட்பதற்கு முன்னால்,

மற்றொரு உண்மையையும் சொல்லிவிடுகிறேன்.

கடவுள் நிறைவானவர்.

God is perfect.

தன்னிடமிருக்கும் அளவற்ற செல்வங்களை

நம்மோடு  பகிர்ந்து கொள்வாரேதவிர,

நம்மிடமிருந்து  எதையும் பெறவேண்டிய அவசியம்
அவருக்கு இல்லை.

சரி.

செபம் செய்யாமல் என்ன செய்ய உத்தேசம்?"

"என் வேலையைச் செய்வேன்.''

"என்ன வேலையை?''

''உழைப்பேன்னு சொன்னேன்.''

"நீங்க   ஏன் உழைக்கணும்?

'மரம் வச்சவரு தண்ணீ ஊற்றமாட்டாரு?' ''

''நான் சொன்னதையே சொல்லிக்காண்பிக்கிறீங்க?''

''ஆமா.

அம்மா சாப்பாடு ரெடி பண்ணிட்டாங்க.

Kitchen ல சாப்பாடு இருக்கு.

நீங்க எடுத்துச் சாப்பிடுவீங்களா? 

அம்மாவைக் கேட்பீங்களா? ''

''கேட்கத்தான் செய்வேன்.

அம்மாட்ட கேட்டு,  வாங்கி சாப்பிடுரதில தனி ருசி இருக்குங்க.

முதல்ல அம்மாவைக் கூப்பிடுரதிலேயே தனிச் சுகம் இருக்கு.

அம்மாவைக் கூப்பிடும்போதெல்லாம் அவங்களுக்கும் மகிழ்ச்சி.

அம்மாவையே சார்ந்து வாழ்வதிலுள்ள மகிழ்ச்சி, தனித்து வாழ்வதிலே கிடையாதுங்க.

நாம அள்ளிச் சாப்பிடும் உணவைவிட அம்மா ஊட்டிவிடும் உணவு ரொம்ப ருசியா இருக்குமுங்க.

ஒரு விசயம் தெரியுமா?

நான் ஏன் நற்கருணையை நாவினால் வாங்குகிறேன் தெரியுமா?

நாவில் வாங்கும்போது இயேசுவே தன்னை எனக்கு ஊட்டிவிடுவதாக உணர்கிறேன்.

அந்த உறவு நெருக்கம் கையில் வாங்குபவர்கட்கு இருக்காது.

சார், இப்போ ஒரு உண்மை புரிகிறது.

கடவுள் நம் அம்மா மாதிரி,  மாதிரி என்ன,  அம்மாவேதான்.

நமக்கு அம்மாவும் அவர்தான், அப்பாவும் அவர்தான்.

அவரை அப்பா,  தந்தையே என்று அழைப்பதற்காகவாவது அவரிடம் ஏதாவது கேட்கணும்போல இருக்கு.

இப்போ புரியுது, சார், நல்லா புரியுது.

நாம் இறைவனை அழைக்க வேண்டும்,

அவரோடு பேசவேண்டும்,

அந்த இன்பத்தை நாம் அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவே

'கேளுங்கள்' என்று இயேசு சொல்லியிருப்பார்.

சார், என்ன அமைதியாயிட்டீங்க!''

''உங்க 'அம்மா' வெள்ளத்தில நான் மூழ்கியே போயிட்டேன்.

நீங்க கேட்ட கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிட்டீங்க.

ஆனாலும் நானும் கொஞ்சம் பேசலாமா?''

''நீங்களே வாத்தியார். வாத்தியார் எப்படி பேசாம இருக்க முடியும்?''

''இறைவனது பண்புகளில
மூன்று பண்புகளை எடுத்துக்கொள்வோம்.

கடவுள் அன்பானவர்.
God is love.

கடவுள் நிறைவானவர்.
God is perfect.

கடவுள் மாறாதவர். 
God cannot change.

அன்புடன் தொடர்புடையது உறவு.

அன்பின்றி உறவில்லை.

உறவின்றி  அன்பில்லை.

பரிசுத்த தமதிருத்துவத்தின் மூன்று ஆட்களிடையே நிலவும் அன்பு  பரிபூரணமானது.

மனித அன்பு மற்றவர்கள் நம்மீது கொண்டுள்ள அன்பிற்கு ஏற்ப கூடும் அல்லது குறையும்.

ஆனால் இறைவனின் நிறைவான அன்பு கூடாது, குறையவும் செய்யாது.

Perfect love cannot beome more perfect or less perfect.

Perfection cannot change.

நாம் யாரையாவது அன்பு செய்தால்,   அவர் நம்மை அன்பு செய்தால் நமது அன்பு கூடும்.

அதாவது மற்றவர்கள் நம்மோடு நடந்து கொள்வதைப் பொறுத்து நம் அன்பு கூடும், குறையும்.

ஆனால், இறைவனது அன்பு நிறைவானதாக இருப்பதால்

அவரால் அன்பு செய்வதற்கென்றே படைக்கப்பட்ட நாம்

அவரை அன்பு செய்தாலும், செய்யாவிட்டாலும்

அவரது அன்பில் மாற்றம் இருக்காது.

நாம் இறைவனை அன்பு செய்தால் பயன்பெறப்போவது நாம்தான்.

அன்பு செய்யாவிட்டால் இழக்கப்போவதும் நாம்தான்.

நாம் எதைச் செய்தாலும் 'ஆண்டவரின்  அதிமிக மகிமைக்காகச்' செய்கிறோம்.

ஆண்டவரின்  அதிமிக மகிமைக்காக

நாம்  செய்யும் செயலால் பயன்பெறப்போவது
ஆண்டவர் அல்ல.

ஏனெனில், இறைவன் மகிமையிலும் நிறைவானவர்.

நாம் செய்யும் எந்தச் செயலாலும் இறைவனின் மகிமையைக் கூட்டமுடியாது.

இறைவனது மகிமைக்காக நாம் செய்யும்  செயல் நமக்கு மோட்ச மகிமையைப் பெற்றுத்தரும்.

இறைவன் பெயரால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலாலும் பயன்பெறப்போவது நாம்தான்.

நாம் ஏதாவது பொருள்  வேண்டி இறைவனிடம் செபித்தால்

அப்பொருள் நமக்குப் பயன்படுமானால் அதை நமக்குத் தருவார்.

பயனில்லா பொருளானால்  அதைத் தராமல் பயனுள்ள வேறொரு பொருளைத் தருவார்.

அதுபோக செபித்ததற்கான அருள்வரத்தையும் தருவார்.

கேட்கப்பட்ட பொருள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும்

கேட்டதற்காக,

இறைவன்மீது நம்பிக்கை வைத்ததற்காக

இறைவனைச் சார்ந்து இருந்தமைக்காக பலன் கிடைக்கும்.

இறைவனுக்காக நாம் செலவழிக்கும் ஒவ்வொரு வினாடிக்கும் விண்ணகத்தில் பலன் உண்டு.

செபிக்கும்போது நமது உள்ளம் இறைவனிடம் இருக்கிறது.

ஆகவே செபிப்போம்.

விண்ணவனின் அருளைப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

Thursday, July 19, 2018

நாம் திருக்குடும்பத்தின் பிள்ளைகள்.


நமது குடும்பம் திருக்குடும்பம்.
******-**************************

மூன்று ஆண்டுகள் வாழ்ந்த பொதுவாழ்வின்போது

மக்களிடையே நிறைய பேசி நற்செய்தியை அறிவித்த இயேசு,

தம்மையே நமக்காக பலியாக்கியபோது சொன்ன கடைசி வாக்கியம்,

"எல்லாம் நிறைவேறிற்று."

அதற்கு முந்தைய வாக்கியம்

"இதோ! உன் தாய்."

இயேசுவின் கூற்றுப்படி,

அவரது அன்னையை நமது அன்னையாகத் தந்த பிறகுதான்

அவரது பணி நிறைவேறிற்று.

   இயேசு  மரியாளின் வயிற்றில் கருத்தரித்தபோது ஆரம்பித்த பணியை,

அவளை நம் அன்னையாகத் தந்துவிட்டு முடிக்கிறார்.

ஆக இயேசுவின் நற்செய்திப் பணியின் துவக்கமும், முடிவும் அன்னை மரியாள்தான்.

இயேசு நிருவிய கத்தோலிக்கத் திருச்சபையின்

நிருவாகப் பொறுப்பை  இராயப்பரிடம் ஒப்படைத்திருந்தாலும்,

அதன் குடும்பத் தலைவி அன்னை மரியாள்தான்.

அதாவது,

திருச்சபை என்ற

திருக்குடும்பத்தைச் சேர்ந்த
நமக்கு

தாய் அன்னை மரியாள்தான்.

இயேசு நமது இரட்சகர் மட்டுமல்ல,

நமது சகோதரர்.

"ஆகவே பறவைநாகம் பெண்மீது சினங்கொண்டு,

எஞ்சிய அவள் பிள்ளைகளோடு போர் தொடுக்கச் சென்றது.

அவர்கள் கடவுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து

இயேசு தந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள்."
(திருவெளி.12:17)

திருவெளிப்பாட்டின் இவ்வசனப்படி

சாத்தானால் மரியாளை வெல்ல முடியவில்லை.

ஆகவே அவளுடைய பிள்ளைகளைத் தாக்க ஆரம்பித்தது.

யார் அவளது பிள்ளைகள்?

கடவுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து

இயேசு தந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்ட நாம்தான் அவளுடைய பிள்ளைகள்.

அதாவது,

கடவுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து

இயேசு தந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டால்தான்

அவளுடைய பிள்ளைகள் என்று உரிமை கொண்டாடலாம்.

வெற்றிவாகை சூடி விண்ணகத்தில் வாழ்பவர்களும்,

உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ள உத்தரிக்கிற ஆன்மாக்களும்

நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

ஏனெனில்,  எல்லோரும் கிறிஸ்துவில் ஒன்றித்திருக்கிறோம்.

மரியாள் நமது தாய் மட்டுமல்ல,

மரியாள் விண்ணக, மண்ணக அரசியுங்கூட.

தாயைப் போல பிள்ளை என்கிறோம்.

நாம் எப்படி இருக்கிறோம்?

தாயைப்போல அவளுடைய எல்லா பண்புகளையும் நாமும் கொண்டிருந்தால்தான் அவளுடைய பிள்ளைகள் என்று பெருமை கொண்டாடலாம்.

நமது அன்னையைப்போல

நாம் கற்பு நெறி தவராமல்  வாழவேண்டும்,

இறைவன் சித்தத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழவேண்டும்,

இயேசுவின் சிலுவைப் பாதையில் நடக்கவேண்டும்.

நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில் நம் அன்னையைக் காணவேண்டும்.

அருள்நிறை அன்னைமரியே வாழ்க.

லூர்து செல்வம்.

Wednesday, July 18, 2018

யாருக்காக வாழ்கிறோம்?


யாருக்காக வாழ்கிறோம்?
********************************

நாம் கத்தோலிக்கர்கள்.

இயேசுவால் நிருவப்பட்ட ஒரே திருச்சபையின் செல்லப் பிள்ளைகள்.

நமக்கு வெளியிலிருந்து ஆயிரம் தாக்குதல்கள்.

உள்ளிருந்தே ஆயிரம் தாக்குதல்கள்.

சாத்தான்   யாரை விழுங்கலாம் என்று

நம்மை வலம் வந்து கொண்டிருக்கிறது.  

இவ்வளவுக்கும் மத்தியில் நாம் தொடர்ந்து கத்தோலிக்கத் திருமறையில் நீடிக்கிறோம் என்றால் அதற்கு என்ன காரணம்?

'இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளுfம் உங்களோடு இருக்கிறேன்."
(மத். 28:20) என்று இயேசு அளித்த வாக்குறுதிதான் காரணம்.

வாக்குறுதி கொடுத்தது மட்டுமல்ல, அதைக் காப்பாற்றிவருகிறார்.

நம்முடனே, நமக்காக, திவ்ய நற்கருணைப் பேழையில் காத்திருப்பதோடு,

நமது ஆன்மீக உணவாக வந்து

நம்மை ஆன்மீக ரீதியாக வாழவைத்துக்  கொண்டிருக்கிறார்.

நமது முதல் பெற்றோருக்கு சாத்தான் பொய்யான வாக்குறுதி ஒன்றைத் தந்து ஏமாற்றியது.

"பாம்பு பெண்ணை நோக்கி: நீங்கள் உண்மையில் சாகவே மாட்டீர்கள்:"

என்று பொய் சொல்லி விலக்கப்பட்ட கனியைத் தின்ன வைத்தது.

சிலுவை மரத்தின்  கனியாகிய இயேசு,

"நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு.

இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான் "(அரு.6:15)

என்ற மெய்யான வாக்குறுதி ,
கொடுத்து

சாத்தானை வென்றார்.

"நீங்கள் எப்போது அக்கனியைத் தின்பீர்களோ அந்நேரமே உங்கள் கண்கள் திறக்கப்படும். அதனால் நீங்கள் தெய்வங்கள் போல்" ஆவீர்கள்

என்று சாத்தான் பொய் சொல்லி ஏமாற்றியது.

அப்பொய்யை முறியடிக்க இயேசு

"என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்."

அதாவது, 'தெய்வமாகிய நான் உங்களில் வாழ்வேன்,  நீங்கள் என்னில் வாழ்வீர்கள்'

என உறுதியளித்தார்.

நற்கருணை உணவை உண்ட உடனேயே இறைவன் நம்மோடு ஒன்றித்துவிடுகிறார்,

நாம் அவரோடு ஒன்றித்துவிடுகிறோம்.

இது மோட்சவாழ்வின் முன்சுவை.

Pretaste of Heaven.

தனது சிலுவை மரணத்தினால் நமது ஆன்மீக மரணத்தை வென்ற

இயேசுவின் அருளால்தான் இவ்வளவு

இடைஞ்சல்களுக்கு மத்தியிலும்

திருமறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வெளியிலிருந்து நம்மீது சகதியை வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

நம்மிடையே வாழும்  நம்மவரில்கூட சில நவீனவாதிகள் மாற்றங்கள் என்ற பெயரில் ஏமாற்றங்களை வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நாம் கத்தோலிக்கர்களாய் இருப்பது இவர்களுக்காக அல்ல,

நம்மிடையே, நமக்காக வாழும் இயேசுவுக்காக மட்டும்தான்.

இயேசுவுக்காக வாழ்வோம்.

இயேசுவுக்காக மரிப்போம்.

மரணத்தை வென்றவர்

நித்திய வாழ்வைத் தருவார்.

லூர்து செல்வம்.

Tuesday, July 17, 2018

"But whom do you say that I am?” Jesus.

"But whom do you say that I am?”
Jesus.
****************-**-----**********
"But whom do you say that I am?”

Jesus puts this question to His disciples.

A disciple is one who follows his master closely,

step by step,

surrendering himself to his guidance.

Followers follow their master's teachings,

but disciples follow their master.

One cannot be a true disciple unless he knows his master through and through.

Lots of people followed Jesus to listen to His words and to get cured.

They were like the people of modern times

who attend prayer meetings,  

for healing and listening to the preacher.

In fact healing is for attracting people

and preaching  for giving them the word of God.

In plain words

healing is honey, 

word of God preached is medicine.

In the closer circle were the disciples,

who followed Jesus

wherever He went to listen to His words.

Jesus sent His disciples to other places to do what He did,  healing and preaching.

One day Jesus  gave  an oral test to His disciples, with two questions.

1. Who do people say that the Son of Man is?

2. But whom do you say that I am? 

In the first question He introduced Himself as ' the Son of Man'.

Of course the answer is 'Son of God.'

From the reply given by the disciples

we have to conclude

that the people who followed Him

did not know the real identity of Jesus.

Some of them  thought that He was
John the Baptist,

some,  Elijah,

some,  Jeremiah

some,  one of the prophets.

So from the words of the disciples we come to know that many people followed Jesus without knowing Him to be the Messiah.

The second question was  answered correctly  by Peter.

His correct answer earned for him

'the keys to the kingdom of heaven.'

Here we must note one thing.

In the first question,  the emphasis was on 'the people.'

In the second question the emphasis was on 'you'.

1. What do 'people' think?

2. What do 'you' think?

The answer to the questions brought out the difference between the disciples and the ordinary people.

I think that Jesus' questions are applicable to today's world too.

We can divide the Christians into two catagories. :

1. disciples,

2.  followers.

Each one should decide for himself whether he is a disciple or a follower.

One who sticks to the authentic teaching of the church is a disciple.

He may be a clergy,  religious man or a layman.

One who sticks to herd mentality in his belief is merely a follower.

What is herd mentality?

Before answering this question we have to answer another question :

What is truth?

The only answer to this question has already been given by Jesus Himself :

"I am truth."

So, Jesus is truth.

What Jesus has said about Himself is truth.

The possessor of Jesus is the
possessor of truth.

The Holy Apostolic Catholic Church is the only  possessor of Jesus and hence has truth.

Only the authentic teaching of the Catholic  Church about Jesus is truth.

Whatever we think, speak or write must tally with the teaching of the Catholic  Church.

Only one who believes in and practice the truth is a disciple of Jesus.

All the others,

who call themselves followers,

have at the same time different views about Jesus,

just like people of Jesus' time,

cannot be His disciples.

Now a number of churches have sprung up,

calling themselves the followers of Jesus,

but their beliefs are not original Christian beliefs

as they don't tally with Christ's teachings.

Though they call themselves Christians,

they have no respect for His dear Mother,

whom He loved so dearly.

They have no belief in the real presence of Jesus in Holy Eucharist.

They have no belief in the Sacrament of penance, confession.

Those who differ from Catholic Church

pose themselves as Jesus' disciples

and spread their views through  the social media

of the modern times.

But they  are not disciples of Jesus

as they have no belief in His original teaching

Some people tend to believe in whatever appears in the social media without verifying its veracity.

When one animal in a herd goes one way,

all the other animals follow it blindly

without verifying whether the first one goes the right way.

Of course they cannot verify as they are animals.

One who behaves like a herd in his beliefs is said to have herd mentality.

Today  it is very  easy to follow the herd mentality due to our blind  belief  in social media.

Now a days social media is like  a river which flows with a mixture of good and gutter water.

All kinds of people,

genuine believers,

heretics,

non believers etc.

take resort to social media

to give publicity to their views.

We must be careful

against the
circulation of rumours

and unofficial information

about what we must believe

and how we must behave.

Let us be real disciples

and side with Peter

to whom Jesus has entrusted

the keys  to the kingdom of heaven.

Lourdu Selvam

Monday, July 16, 2018

Love is behind everything good"

Love is behind everything good.
****************-****************

"Good morning, Sir."

"Very good morning."

"Sir, I have a very small, but very serious doubt."

"Doubt about what?"

"Didn't you say in your last article,

'He did not will his choice,

but permiitted it

as He respected his freedom.'

referring to prodgical son's father?"

"Yes.

It has reference to our Heavenly Father.

He does not will many of our actions,

but permits them

as He has given us freedom of choice."

"Do you mean to say that God  permits sin?"

"Yes."

"But, how can an action be sin when it is done with the permission of God? "

"Hello, my dear man, you have misunderstood the word 'permit'.

It is not used in the sense of 'give permission'.

Let me give you an analogy.

Your father wants you to become a priest.

But you choose  to become a lawyer.

Your father knows that as a free citizen you have every right to choose whichsoever kind of life you like.

What will your father do?"

"He will tolerate with my choice though he doesn't  wish it because I am his son."

"Correct.

Your father wants you to become a priest.

You choose to become a lawyer.

Your father tolerates with your choice,

because he doesn't want to interfere into your freedom.

God 'permits'

means 

God 'does not prevent,

He tolerates'."

"But,  Sir,  God is all powerful. He can easily prevent man from committing sin. 

Why should He allow sin and then take the trouble of becoming man and sacrificing Himself on the cross to amend for the same? "

"My dear man,

it is like you asking your father,

'you can easily have prevented me from being born

by remaining unmarried,

which would have freed you from the trouble of suffering so hard to bring me up.' "

"Very true. I have already asked my father this million dollar question."

"Hope he has answered the question."

"Surely.  He answered me,

'I married because I loved your mother.

Then we wanted a son to love us and to be loved by us.

So we gave birth to you."

"What truth did you derive from your father's answer?"

"Love is behind everything."

"So you have already got the answer to your first question."

"I have already got the answer?

Explain."

"Love is behind whatever God does.

God is Love.

Love longs to love and to be loved.

God loves Himself from all eternity.

His love is perfect even without somebody else loving Him.

But,  He wants to share His love with  somebody.

In order to love and to be loved, He created the Angels and human beings. 

His love is so great and unlimited that that He shared His image and attributes with them.

Angels are pure spirits.

Though man's body is a material thing, his soul is a spirit.

When God created man in his image,

He blessed him with freedom of choice, love,justice, knowledge etc.

Of course man's attributes are limited unlike God's unlimited ones.

As man has been created with freedom,

he is free either to accept God and His commandments

or to reject Him.

God will reward him with eternal bliss if he accepts and obeys Him.

Disobedience will earn loss of God eternally."

"I would have been happy if God had not given us freedom.

It is freedom that makes us choose evil. "

"But,  my dear man, without freedom we would just be puppets, programmed robots!

God wants us to earn our reward.

God values our free will,

and the quality of the choices that flow from it, 

and thus tolerates the bad choices,

   sin and the suffering that can also result from it.

He  tolerates evil for the sake of allowing good to be freely chosen."

"Is there no way to escape from it?"

"Escape from what? "

"Evil. Sin."

"Why not?

Love.

Love is behind everything good.

Love is behind God's creating us.

Love is behind God's  toleration.

Love is behind His incarnation.

Love is behind His thirty three years of life earth.

Love is behind His teaching us.

Love is behind His healing the sick.

Love is behind His institution of seven sacraments.

Love is behind His forgiving our sins.

Love is behind His suffering and death on the cross.

Love is behind His still remaining with us in the sacrament of Eucharist.

Love is behind His feeding us with His own body and blood.

Love is behind  His giving us what we ask for.

Love is behind even  His not giving us what we ask for.

Love is behind our suffering.

Love is behind even our death.

So,  love.

Love Him who loves us.

Love even those who don't love us.

Love created us.

Love will save us.

Simply love and escape sin.

Lourdu Selvam.

.

Saturday, July 14, 2018

என் அன்பே! ஆருயிரே!

என் அன்பே! ஆருயிரே! http://lrdselvam.blogspot.com/2018/07/blog-post_86.html

என் அன்பே! ஆருயிரே!
********************************

"ஆண்டவராகிய கடவுள் களிமண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதவே, மனிதன் உயிருள்ளவன் ஆனான்."(ஆதி.2:7)

பைபிள் வாசிக்கும்போது அதன் ஒவ்வொரு வசனமும் தரும் இறைச்செய்தியைக் (Divine message) கூர்ந்து கவனித்து,

தியானிக்கவேண்டும்.

வெறுமனே உலக வரலாற்று நூல்களை வாசிப்பதுபோல் வாசிக்கக்கூடாது.

வரலாற்று நூல்களில் நிகழ்வுகள் மட்டும் முக்கியத்துவம் பெறுகின்றன.

பைபிளில் நிகழ்வுகள் தரும் செய்திகளுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

நிகழ்வு உடலென்றால், செய்தி உயிர்.

என் நண்பன் ஒரு பெண்ணைக் காதலித்தான்.

"அந்தப் பெண்ணின் என்ன குணம் உன்னைக் காதலில் தள்ளியது? " என்றேன்.

"ரொம்ப அழகா இருப்பாள்டா."

"உடலழகு இருக்கட்டும். அவளது உள்ளத்தில் என்ன இருக்கிறது என்று தெரியுமா?"

"தெரியலிய."

"அதை முதலில்  தெரிந்துகொள்."

மனிதரோடு பழகும்போது அவர்களின் மனதை அறியவேண்டும்.

பைபிள் வாசிக்கும்போது அது தரும் செய்தியை அறிய வேண்டும்.

ஒவ்வொரு பைபிள் வசனத்திலும் அதன்மூலம் இறைவன் தரும் செய்தி ஒன்று இருக்கிறது.

அதைப்புரிந்து வாசிப்பதே உண்மையான பைபிள் வாசிப்பு.

ஆதியாகமத்தில் இறைவன் மனிதனைப் படைத்ததுபற்றிக் கூறும் வசனத்தைத் தியானிப்போம்.

"ஆண்டவராகிய கடவுள் களிமண்ணால் மனிதனை உருவாக்கி.."

ஒன்றுமில்லாமையிலிருந்து உலகை உருவாக்கிய கடவுள்,

தான் படைத்த மண்ணிலிருந்து மனித உடலை உண்டாக்குகிறார்.

மண்ணிலுள்ள அத்தனை அம்சங்களும் மனித உடலில் உள்ளன.

பூமிக்குள்ளிருக்கும் இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்களால் ஆன நம் உடலில் தண்ணீரும், காற்றும்  பெரும்பங்கு வகிக்கின்றன.

அதனால்தான் ஆன்மா பிரிந்தவுடன் உடல் மண்ணுக்குத் திரும்பி மண்ணோடு மண்ணாய் மக்கிவிடுகிறது.

கடவுள் உடலைப் படைத்ததின் நோக்கம்

ஆன்மாவினால் இயக்கப்பட்டு இறைப்பணி செய்திடத்தான்.

ஆன்மா இறைப்பணி ஆற்றிட உடல் ஒரு கருவியாகப் பயன்படவேண்டும்.

ஆனால் நாம் நமது உடலுக்குச் சேவை செய்கிற அளவுக்குப் ஆன்மாவைக் கவனிப்பதில்லை.

"அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதவே, மனிதன் உயிருள்ளவன் ஆனான்."

இறைவனின் உயிர் மூச்சுதான் நம் ஆன்மாவின் உயிர்.

ஆகவேதான் இயேசு "நானே உங்கள் உயிர்" என்கிறார்.

அன்புமயமான அவரை , நாம் "அன்பே! ஆருயிரே!" என்று  ஆசையாய்  அழைக்கலாம்.


ஏனெனில், நம் ஆன்மாவின்  உயிர் அவரே.

நாம் அவரை விட்டுப் பிரிந்தால் நம் ஆன்மா தன் உயிரை இழந்துவிடும்.     

பாவம் ஒன்றுதான் நம்மை இறைவனிடமிருந்து பிரிக்கும்.                                                                                     

"பாவத்தின் சம்பளம் மரணம்."

நாம் பாவம் செய்யும்போது நமது ஆன்மா மரிக்கிறது.

அதாவது இறைவன் தந்த உயிர் தரும் அருளான தேவ இஸ்டப்பிரசாதத்தை இழக்கிறது. 

இதுதான் ஆன்மாவின் மரணம்.

நாம் பாவசங்கீத்தனம் செய்தவுடன்

ஆன்மா தான் இழந்த தேவ இஸ்டப்பிரசாதத்தைத் திரும்ப பெற்று

உயிர்பெறுகிறது.

இங்கே ஒரு முக்கியமான இறையியல் உண்மையை நினைவில் கொள்ளவேண்டும்.

இறைவன் மாறாதவர்.

தனது சுதந்திரத்தின் காரணமாக

அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும்

மனிதனின் நடவடிக்கைகளை

தனது ஞானத்தின் மூலமாக

நித்திய காலமாக அறியும் இறைவன்

அதை மனதிற்கொண்டு

நித்தியகாலமாக ஒரு திட்டத்தை வகுத்து,

அதிலிருந்து மாறாமல் செயல்படுகிறார்.

ஆகவே நம் மீது அவர் கொண்டுள்ள  அன்பு ஒருபோதும் மாறாது.

நாம் பரிசுத்தமாய் இருந்தாலும்,

பாவநிலையில் இருந்தாலும்,

ஏன்,
அவரை வேண்டாமென்று சொல்லிவிட்டு

நரகத்துக்கே போய்விட்டாலும்

இறைவனின் அன்பு மாறாது.

நாம் பாவம் செய்யும்போது நாம்தான் இறைவனை விட்டுப் பிரிகிறோம்.

பாவத்திற்காக உத்தம மனஸ்தாபப்படும்போது சேர்ந்துகொள்கிறோம்.

ஊதாரிப் பிள்ளையின் உவமையைக் கூர்ந்து வாசித்தால் இவ்வுண்மை புரியும்.

இறைவன் நமது உயிர்.

நாம் என்றால் இறைவனுக்கு உயிர்.

தந்தை மகனை மிகவும் அதிகமாக நேசித்தார்.

ஊதாரிமைந்தன் தன் சொத்துக்களை எல்லாம் கேட்டபோது

தந்தை அவனது உரிமையில் தலையிடவில்லை.

மகன் செய்தது தப்பு என அவருக்குக் தெரிந்திருந்தாலும்

மகனுடைய சுதந்திரத்தில் (Freedom of choice) குறுக்கிட்டுத் தடுக்காமல்,

அவன் சொத்துக்களோடு போவதை விரும்பாவிட்டாலும்,

அனுமதிதத்தார்.

He did not will his choice,  but permiitted it as He respected his freedom.

ஆனாலும் தன் மகன் திரும்பத் தன்னிடம் வருவதற்காகக் காத்திருந்தார்,

வந்தவுடன் மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

ஏனெனில் அவன்  அவருடைய ஆருயிர் மகன்.

நாமும் பாவம் செய்யும்போது ஊதாரி மைந்தர்கள்தான்.

நம் உயிருக்கு உயிரான தந்தையிடம் திரும்புவோம்.

அவர் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்வார்.

ஒரு முறையல்ல,

ஆயிரம் முறை,

ஆயிரமாயிரம் முறை,

கணக்கற்ற முறை

பாவம் செய்தாலும்,

மனஸ்தாபப்பட்டு அவரிடம் திரும்பும்போதெல்லாம்

ஆசையுடன்,

முழுமனதோடு ஏற்றுக்கொள்வார்.

ஏனெனில் நமது உயிர் அவரது உயிர் மூச்சு.

" என் அன்பே! ஆருயிரே!

அடியேன் என்றும் உம்முயிரே,

உயிரோடு உயிரிணைந்து ,

உம்முடனே வாழ்ந்திடவே,

பாவி என்னை மன்னித்து

ஏற்றுக்கொள்ளும் இறைவா,

என்றென்றும் உமைப் பிரியா

வரம் தரவே வேண்டுகிறேன்.

அன்பே! என் ஆருயிரே."

லூர்து செல்வம்.