Friday, April 24, 2020

Who is our Hero ?

Who is our  Hero?
**  **  **   ** ** **   ** ** ** ** **

நாம் எழுதும் சிறுகதை, தொடர்கதை, சினிமாக் கதை 

எதுவாக இருந்தாலும் அதன் மையமாக கதாநாயகன் (Hero) ஒருவன் இருப்பான்.

கதாநாயகன் (Hero) இல்லாமல் கதை எழுத முடியாது.

கதையின் நிகழ்ச்சிகள் எல்லாம் ஹீரோவை சுற்றியே சுழன்று கொண்டிருக்கும்.

காதல்  கதைகளில் கதாநாயகி
( heroine)   ஒருவள் இருப்பாள்.

பெரும்பாலான கதைகளில் வில்லன் ஒருவன் இருப்பான்.

கதாநாயகியின் ஒரே குறிக்கோள் கதாநாயகனை அடைவதாக இருக்கும்.

 வில்லனின் ஒரே குறிக்கோள் அதைத் தடுப்பதாக இருக்கும்.

 பாத்திரங்களில் அநேகர் கதாநாயகன் பக்கமும்,

 சிலர் வில்லன் பக்கமும் இருப்பார்கள்.

 ஒவ்வொரு கதையிலும் கதாநாயகனும் கதாநாயகியும் வெல்வார்கள்.

 வில்லன் தோல்வி அடைவான்.

நமது வாழ்க்கையை ஒரு கதையாக உருவகித்து கொள்வோம்.

நமது வாழ்க்கை என்னும்  கதையின் கதாநாயகன் யார்?

கதாநாயகி யார்?

வில்லன் யார்?

நம்மை படைத்த இறைவன் தான் நமது வாழ்க்கையின் கதாநாயகன், ஹீரோ.

நமது ஆன்மாதான் கதாநாயகி.

வில்லன் சாத்தான்.

நமது ஆன்மாவின் ஒரே குறிக்கோள் தன்னைப் படைத்த இறைவனை அடைவதுதான்.

சாத்தானின் ஒரே குறிக்கோள் ஆன்மாவை இறைவனை அடைய விடாமல் தடுத்து தன் பக்கம் ஈர்ப்பது தான்.

நமது ஹீரோ, அதாவது, இறைவன் சாத்தானைத் தோற்கடித்து  நம்மை தன்பால் ஈர்த்துக் கொள்வார்.

நாம் நம்மைப் படைத்த இறைவனோடு ஒன்றித்து

 நித்திய காலமாக பேரின்பத்தில் வாழ்வோம்.

 பேரின்ப வாழ்விற்கு முடிவு இராது.

 அங்கே சாத்தான் புக முடியாது.


இதுவரை நமது வாழ்க்கையை ஒரு கதையாக உருவகித்து எழுதியிருக்கிறோம்.

இப்போது நிஜ வாழ்க்கைக்கு வருவோம்.

நாம் நமது உண்மை வாழ்க்கையில் இறைவனைக் கதா நாயகனாக ஏற்றுக் கொண்டிருக்கிறோமா?

அல்லது இந்த உலகத்தைக் கதா நாயகனாக ஏற்றுக் கொண்டிருக்கிறோமா?


இறைவனைக் கதா நாயகனாக ஏற்றுக் கொண்டிருந்தால் நமது சிந்தனை, சொல், செயல் அனைத்தும் இறைவனை மட்டும்தான் மையமாகக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு வினாடியும் இறைவனைப் பற்றி மட்டும்தான் சிந்திப்போம்.

காலையில் எழும்போது இறைவன் ஞாபகம்தான் முதலில் வரும்.

"தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால்"தான் நாளை ஆரம்பிப்போம்.

இரவில் நம்மைக் காப்பாற்றியமைக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.


அன்றைய நாளின் நமது எல்லா செயல்பாடுகளையும் இறைவனுக்கு ஒப்புக் கொடுப்போம்.

நமது பாவங்களால் அவரது மனத்தை நோகச் செய்தமைக்காக மன்னிப்புக் கேட்போம்.

அன்றைய நாளில் பாவம் எதுவும் செய்யாமல் இருக்கவும், இறைவனுக்குப் பிரியமான காரியங்களை மட்டும் செய்யவும் உறுதி எடுப்பதோடு, 

அதற்காகத் தன் அருள் வரங்களால் நமக்கு உதவிட வேண்டுவோம்.

அன்றைய நாளில் நாம் எதைப் பேசினாலும் நமது பேச்சு இறைவனை மட்டும்தான் மையமாகக் கொண்டிருக்கும்.

சாப்பாட்டைப் பற்றி பேசினாலும் சரி,

வகுப்பில் பாடம் பற்றி பேசினாலும் சரி,

வியாபாரம் பற்றி 
பேசினாலும் சரி,

வைத்தியம் பற்றி பேசினாலும் சரி,

கொரோனா பற்றி பேசினாலும் சரி

இறைவனை மறக்காமல் பேசுவோம்.

முடிந்தபோதெல்லாம் இறைவனைப் பற்றியும் பேசுவோம்.

நாம் எதைச் செய்தாலும் இறைவனுக்காக மட்டும்தான்
செய்வோம்.

நமது அந்தஸ்தின் பணியான எந்த வேலையைச் செய்தாலும் அதை இறைவனுக்காக மட்டுமே செய்வோம்.

அடுத்தவர்களுக்கு உதவி செய்தாலும் இறைவனுக்காக மட்டுமே செய்வோம்.

எதைச் செய்தாலும் இறைவனுக்காக மட்டுமே செய்தால் பாவம் செய்ய வாய்ப்பே இல்லை.

பைபிள் இறைவன் நமக்கு எழுதிய Love letter.

Love letter என்றாலே அன்பைச் சுமந்துவரும் லெட்டர் என்பதுதான் பொருள்.

இறைவன் நம் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்காக இறைவன் எழுதிய கடிதமே பைபிள்.

அதில் அவர் நம்மைப் படைத்தது பற்றியும், 

நம்மை ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வருவது பற்றியும்,

நம் மீது அவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்காக

 மனிதனாகப் பிறந்து, 

நம்மோடு வாழ்ந்து,
 
நமக்காகப் பாடுபட்டு 

நாம் பிழைக்க வேண்டும் என்பதற்காகத்

 தன் உயிரையே சிலுவையில் பலியாக கொடுத்ததை

அன்பு சொட்ட சொட்ட எழுதியிருக்கிறார். 

அன்பரோடு சம்பந்தப்படாத  வர்களுக்கு லவ் லெட்டர் ஒரு பொழுதுபோக்குக் கடிதம்.


மற்றவர்களுக்கு வந்த கடிதத்தை நாம் வாசிக்க நேர்ந்தால் 

அது வெறும் பொழுதுபோக்கு தானே.

ஆனால் நமது அன்பரிடம் இருந்து நமக்கு வருவது,

 அன்பைத் தாங்கிவரும் கடிதம்,

 அன்பை ஊட்ட வரும் கடிதம்,

அவர் பால் நம்மை ஈர்க்க வரும் கடிதம்,

 நம்மை மகிழ வைக்க வரும் கடிதம்.

அது நமக்கு உயிர் மூச்சு.

 வாசிக்க வாசிக்க

 நம் உள்ளத்திலும் அன்பு ஊறும்.

 அன்பரைக் காண இதயம் துடிக்கும்.

 அவரைத் தவிர வேறு எதுவும் பொருட்டாக தெரியாது.

அவரே நமக்கு எல்லாம்.

 பைபிள் வாசிக்கும்போது இறைவனைப்பற்றி நம்மிடம் இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்ற வேண்டும்.

பைபிளைப் பொழுது போக்கிற்காக,

அல்லது.

கட்டாயம் வாசிக்க வேண்டும் என்பதற்என்பதற்காக வாசிப்பவர்கள் இறையன்பை ஏற்றுக் கொள்ளாதவர்கள்.

இறைவனை Hero வாக மனதார ஏற்றுக் கொண்டவர்கள் பைபிளைப் பக்திப் பரவசத்தோடு வாசிப்பர்.

ஏனெனில் அவர்களுடன் இறைவன் பேசுகிறார்.

அவர்களும் இறைவனோடு பேசுவர்.

இறைவனை நமது ஹீரோவாக ஏற்றுக்கொண்டால் 

அவரது பண்புகள் அனைத்தும் நம்மிடம் பிரதிபலிக்கும்.

நமது வாழ்க்கையே அவரை அடையும் முயற்சியாகத்தான் இருக்கும்.

அம்முயற்சியில் நமக்கு என்ன கஷ்டங்கள் வந்தாலும் அவற்றை மனமுவந்து மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்.

அவருக்கு பிடிக்காதவற்றை உதறித் தள்ளுவோம்.

அவரை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக நம்மையே தியாகம் செய்வோம்.

அவர் தரும் சன்மானத்திற்காக அல்ல,

அவரை அவருக்காகவே அன்பு செய்வோம்.

அதுவே சுயநலம் அற்ற அன்பு.
Selfless love.

அதுவே நிபந்தனை அற்ற அன்பு.
unconditional love.

நாம் அவர் தரும் சன்மானம் கருதாமல் அன்பு செய்தாலும்,

அவர் நமக்கு பேரின்ப நிலை வாழ்வைத் தருவது உறுதி. 


இந்த உலகத்தைக் கதா நாயகனாக ஏற்றுக் கொண்டு வாழ்பவர்களுக்கு வில்லனாகிய சாத்தான் துணையிருப்பான்.

இறைவனுக்காக வாழ்பவன் 
இறைவனுக்காக கஷ்டப்படும் போது

உலகிற்காக வாழ்பவன் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

ஆனால் அம்மகிழ்ச்சி நிலையற்றது.

அவனுக்கு நிலை வாழ்வு கிட்டாது.

இறைவனே நமது Hero.

அவருக்காக வாழ்வோம், இவ்வுலகில்.

அவரோடு வாழ்வோம், மறுவுலகில்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment