Tuesday, April 28, 2020

கவனம், வில்லனும் நம்மோடு தான் வருகிறான்.

கவனம், வில்லனும் நம்மோடு தான் வருகிறான்.
**  **  **   ** ** **   ** ** ** ** **
"தம்பி, கையில என்ன வச்சிருக்கீங்க?"

"அண்ணாச்சி, வாங்க. 
கையில மாம்பழம் இருக்கு."

"எங்கே வாங்கினீங்க?"

"கடையிலதான். நல்லா Taste ஆ இருக்கு."

'"அப்படியா?"

"ஆமா. Taste மட்டுமல்ல. சத்துள்ள உணவுங்கூட்"


"கடையில் வாங்கிய மாம்பழம்!
சத்துள்ள உணவு!


இங்க பார் தம்பி,


மாம்பழம் சத்துள்ள உணவுதான். 

ஆனால் கடையில் வாங்குகிற மாம்பழம்?   

அநேக கடைகளில் மாம்பழங்களை காந்தத்கல் வைத்து பழுக்க வைக்கிறார்கள்.  


காந்தத்கல்லால் பழுத்த மாம்பழங்கள் நமது கல்லீரலுக்குக் (liver) கேடு, தெரியுமா?

மாம்பழங்களைப் பழுக்க வைக்கும் காந்தத்கல் நமது உடல் நலத்திற்கு வில்லன்."

"ஆனால் காந்தத் கல் இல்லாமல் சரியான முறையில் பழுக்க வைக்கும் கடைகளும் உள்ளனவே!"

"நீ வாங்கிய கடை எப்படி?"

: "தெரியாது."

"நல்ல பதில். பேருந்தில் பயணிப்பாய். 'இந்த பேருந்து எங்கே போகிறது' என்று கேட்டால், 'தெரியாது' என்பாய்!"

"அப்படிப் பார்க்கப்போனால் நாம் சாப்பிடும் எல்லா உணவுப் பொருட்களிலும், பூச்சிமருந்து கலந்திருக்கிறதே!

அது மட்டும் உடல் நலத்திற்கு நல்லதா?"


நமது உடல் நலத்திற்காக நாம் சாப்பிடும்  உணவில் 

உடல்  நலத்திற்கு கேடு விளைவிக்கும் நச்சுப் பொருள் நமக்கு தெரியாமல் இருக்கிறது.

அது நமது நலவாழ்விற்கு வில்லன்.

கவனியுங்கள், விஷம் நமது வாழ்வுக்கு வில்லன்.

ஆனால் ஒவ்வொரு வினாடியும் அவன் நம்மோடு தான் வருகிறான்.

சிலருக்கு இது தெரியாது, சிலர் தெரிந்திருந்தும் அதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.



நமது ஆன்மீக வாழ்விலும்  ஆன்மீகத்திற்குக் கேடு விளைவிக்கும் நோக்கத்துடன் வில்லன் ஒருவன் நமக்கு தெரியாமல் எப்போதும் நம்மோடு இருக்கிறான்.

நமது முதல் பெற்றோருக்கு நன்மை செய்வது போல் நடித்து 

அவர்களை ஏமாற்றி பாவ வலையில் விழ வைத்த சாத்தான் தான் நமது ஆன்மீக வாழ்வில் வில்லன்.

அவன்  ஏவாளிடம் 'இறைவனுக்கு எதிராக பாவம் செய்யுங்கள்' என்று கூறவில்லை. 

'ஆனால் இந்த பழத்தைச் சாப்பிட்டால், ". நீங்கள் தெய்வங்கள் போல் ஆகி நன்மையும் தீமையும் அறிவீர்கள்:" என்று சொல்லி. ஏமாற்றியது.

 உண்மையில் இறைவன் ஆதாமையும் ஏவாளையும் தன் சாயலாகத்தான் படைத்தார்."

அவர் தன் சாயலாக நம்மைப் படைத்ததே 

அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட பண்புகளில் வளர்ந்து 

அவரைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.


"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத். 5:48)

என்று ஆண்டவர் கூறினார்.

வானகத்தந்தையைப்போல் நிறைவுள்ளவர்களாய் ஆக பழத்தைத் தின்றிருக்க வேண்டியதில்லை.

ஆண்டவர் படைத்த பரிசுத்த நிலையிலேயே நீடித்து வளர்ந்திருந்தாலே போதும்.

ஆனால் சாத்தான் ஏதோ பெரிய காரியத்தைச் சாதிக்க உதவியது போல  ஏமாற்றி பழத்தைத் தின்ன வைத்தது.

நமது முதல் பெற்றோரை ஏமாற்ற பாம்பு ரூபத்தில் வந்த சாத்தான் இப்போது எந்த ரூபத்தில் வேண்டுமானலும் வரலாம்.

ஆனாலும் ஒரு விஷயத்தை ஆரம்பத்திலேயே சொல்லிவிட வேண்டும்.

நமது வில்லன் எந்த அளவிற்குத் தன்னையே திறமை உள்ளவன் என்று எண்ணுகிறானோ 

 அந்த அளவிற்கு அவன் ஒரு முட்டாள்.

நமது கதாநாயகனுக்குத் துரோகம் செய்வதாக நினைத்துக்கொண்டே
அவரது திட்டங்கள் நிறைவேற

 அவருக்கு உதவி செய்து கொண்டிருப்பான்.

ஐயோ பாவம், சாத்தான்!

அவன் நமது முதல் பெற்றோரைப் பாவம் செய்ய வைத்தான்.

ஆனால் அதுவே இறைவன் மனிதனாகி நம்மோடு நம்மாக திவ்ய நற்கருணையில் வாழ  வழி வகுத்து விட்டதே!

மனிதனாய்ப் பிறக்க இறைவன் திட்டம் போட்ட அன்றே சாத்தான் குழந்தையைக் கொன்றுவிட தீர்மானித்து விட்டான்.

ஆனால் இறைமகன் மனிதனாய் பிறந்து விட்டார் என்பதை அறிந்த பின்பும்

 அவர் எங்கே பிறந்தார் என்பது தெரியாமல்

 ஏரோதுக்கு தப்புத் தப்பாய் கணக்குப் போட்டு கொடுத்து இயேசுவைத் தப்பிக்க வைத்து விட்டான், அதை அறியாமலேயே!

நமக்கு மீட்புக் கிடைக்காமல் இருக்க இயேசுவை கொன்றுவிடத் தீர்மானித்த சாத்தான் 

அவரது மரணத்தில்தான் மீட்பு இருக்கிறது என்பதை தெரியாத அளவிற்கு

 முட்டாளாக இருந்தான்!

 அவனது ஏவுதலால் யூதர்கள் இயேசுவை கொன்றதே நமக்கு 
மீட்பாக  மாறிவிட்டது. 

திருச்சபையின் ஆரம்பக் கட்டத்தில்  நீரோ போன்ற மன்னர்களை ஏவி  கிறிஸ்தவர்களைக் கொன்றான்.

ஆனால் அவர்கள் சிந்திய இரத்த உரத்தில் திருச்சபை வேகமாக வளர ஆரம்பித்தது..

பந்தை எந்த அளவிற்கு கீழ் நோக்கி உதைக்கிறோமோ அந்த அளவிற்கு அது மேல் நோக்கி எழும்பும்.

அதேபோல் தான் அவன் எந்த அளவிற்கு திருச்சபையை அழிக்க நினைத்தானோ 

அந்த அளவுக்கு அது வேகமாக வளர்ந்தது!

திருச்சபைக்கு  எதிரான எல்லா செயல்களிலும் சாத்தானின் தூண்டுதல் இருந்தது.

சவுல் என்ற இளைஞனையும் சாத்தான் திருச்சபைக்கு எதிராக தூண்டி விட்டுக் கொண்டிருந்தான்.

யூதர்கள் புனித முடியப்பரைக் கல்லால் எறிந்து கொன்றதில் அவருக்கும் ஒரு பங்கு இருந்தது.

முடியப்பர் சாகும் முன்,

"ஆண்டவரே, இப்பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதீர்!"

என்று வேண்டிக் கொண்டார்.

இவர்களை மன்னியும் என்பதுதான் இதன் பொருள்.

இறை அன்பர்களின் செபம்  நிச்சயமாக கேட்கப்படும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று நான் நினைக்கிறேன்.

புனித முடியப்பரின் மன்னிப்பு வேண்டும் செபத்தை கேட்டு,

 நிச்சயமாக அவரது மரணத்திற்கு காரணமானவர்களின் மனதை               இறைவன் தொட்டிருப்பார்,

 அவர்கள் மனந்திரும்பி மன்னிப்பு கேட்டு இறைவன் பதம் திரும்பி இருப்பார்கள்

 என்று நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

 நமக்கு தெரியும் இறைவன் சவுலைப் பவுலாக மாற்றிய வரலாறு.

செபத்தின் வல்லமைக்கு இது ஒரு உதாரணம் என்று எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்.

வேத சாட்சியின் இரத்தம் திருச்சபையின் வித்து.

 புனித முடியப்பர் சிந்திய ரத்தத்தில் முளைத்த வித்து தான் புனித சின்னப்பர் என்று 
நினைப்பதில் என்ன தவறு?

புனித முடியப்பரைக் கல்லால் எறிந்து கொன்று அவர் வேதசாட்சியாக மாற துணையாய் இருந்த சவுல்

முடியப்பரின் செப வல்லமையால் இயேசுவால் மனம் திருப்பப்பட்டு

பவுலாக மாறியது மட்டுமல்ல வேதசாட்சியாகவும் மாறினாரே,
இது ஒன்றே போதும்

வேத சாட்சியின் இரத்தம் திருச்சபையின் வித்து என்பதை நிரூபிப்பதற்கு!

சாத்தான் எவ்வளவு கில்லாடியாக இருந்தாலும்

 நமது செபத்தின் முன் அவன் ஒரு கொசு.

திருச்சபையின் வரலாறு முழுவதிலும் அதை அழிக்க சாத்தான் செய்யும் முயற்சிகளைக் காணலாம்.

அதோடு அவைகளை எல்லாம் ஒன்றும் இல்லாமல் ஆக்கும் பரிசுத்த ஆவியின் வல்லமையையும் காணலாம்.

12 பேரில் ஒரு யூதாஸ் இருந்ததுபோல 

திருச்சபை வரலாற்றிலும் சாத்தானின் தூண்டுதலால்  பல யூதாஸ்கள் திருச்சபையின் போதனைக்கு விரோதமாக பல பேதகங்களை (heresies) கிளப்பி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

வகுப்பில் பாடத்தில் ஒரு மாணவன் செய்யும் தப்பு மற்ற மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்,

 எப்படி?

 தவற்றை தவறு என்று எடுத்துக்காட்ட ஆசிரியர் வகுப்பு முழுமைக்கும் சரியான விளக்கத்தை கொடுப்பார்.

ஒருவன் செய்த தப்பு எல்லோருக்கும் விளக்கம் கிடைக்க உதவியாக இருக்கும்.

 அதேபோல்தான் திருச்சபையில் heresies கிளம்பும்போது 

 அவற்றைத் தவறு என்று எடுத்துக் காட்ட 

திருச்சபை திருச்சங்கங்களை கூட்டி

 அனைவருக்கும் வேத சத்தியங்களின் விளக்கத்தை அழுத்தமாக கூறியது.

உதாரணத்திற்கு,

ஆரிய பேதகத்தின்போது,

 திருச்சபை நிசேயாவில் கூடிய திருச்சங்கத்தில்

 பரிசுத்த தமதிரித்துவத்தைப் பற்றிய போதனையை நன்கு விளக்கியது.


In 325 the Council of Nicaea was convened to settle the controversy. The council condemned Arius as a heretic and issued a creed to safeguard “orthodox” Christian belief. The creed states that the Son is homoousion tō Patri (“of one substance with the Father”), thus declaring him to be all that the Father is: he is completely divine.

நைசீன் விசுவாசப் பிரமாணம் நமக்குக் கிடைத்ததே சாத்தானின் சேட்டையால் தானே!

அவன் பேதகத்தைக் கிளப்பியிருக்காவிட்டால் 

பொதுச்சங்கம் கூடியிருக்குமா?

'திருச்சங்கத்தைப் பார்த்து சாத்தான் அழுது கொண்டிருந்திருப்பான்!

அதே சாத்தான் இன்றும் நம்மிடையே உலவிக் கொண்டு இருக்கிறான்.

சில சமயங்களில் சம்மனசு போல் நடித்து நம்மை ஏமாற்றுவான்.

ஒரு சிறிய உதாரணம்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment