Monday, April 20, 2020

"உமது வார்த்தையை முழுத்துணிவுடன் எடுத்துச்சொல்ல உம் ஊழியர்களுக்கு அருள்தாரும்." (அப். 4:29)

"உமது வார்த்தையை முழுத்துணிவுடன் எடுத்துச்சொல்ல உம் ஊழியர்களுக்கு அருள்தாரும்." (அப். 4:29)
**  **  **   ** ** **   * |* ** ** ** **

இந்த இறைவாக்கு பின்வரும் எண்ணங்களைத் தியானிக்க நம்மைத் தூண்டுகிறது.

1 நாம் அனைவரும் இறை இயேசுவின் ஊழியர்கள்.

2. இறை ஊழியர்களின் ஒரே பணி இறைவார்த்தையை எல்லோருக்கும் அறிவிப்பதுதான்.

3.இறை வார்த்தையை அறிவிப்பது அவ்வளவு எளிதான வேலை அல்ல.

 அதற்கு மன உறுதியும் துணிவும் எதையும் தாங்கும் இருதயமும் நமக்கு வேண்டும்.

4.இயல்பாக நமக்கு அவ்வளவு மனவுறுதியும் துணிவும் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு 

அதை நமக்கு தமது அருள் வரத்தால் தந்து உதவும்படி இறைவனை தினமும் வேண்ட வேண்டும்.

5. இறைவன் உதவி இன்றி நம்மால் எதுவும் செய்ய இயலாது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


1 நாம் அனைவரும் இறை இயேசுவின் ஊழியர்கள்.

ஒவ்வொரு மனிதனும் ஆள் ஒன்று. அந்தஸ்துக்கள் பல.

அந்தஸ்துக்கு ஏற்ப பணிகள் மாறுபடும்.

இந்த பணிகளை அந்தஸ்தின் கடமைகள் என்போம்.

லூர்து செல்வம் அவனது

தாத்தா, பாட்டிக்குப் பேரன். பெற்றோருக்கு மகன்.
 உடன்பிறந்தோருக்கு சகோதரன்.
மனைவிக்குக் கணவன். பிள்ளைகளுக்கு அப்பா.
பேரன் பேத்திக்குத் தாத்தா. பூட்டிகளுக்குப் பூட்டன்.
மாணவர்களுக்கு ஆசிரியர்

இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

இறைவனோடு நமக்குள்ள உறவின் அடிப்படையில் நாம் அவரது 

படைப்புகள், 

பிள்ளைகள்,

சீடர்கள்,

நண்பர்கள்,

ஊழியர்கள்.

இறைவனால் படைக்கப்பட்ட நாம் அவரை தந்தையே என்று அழைக்கும்படி இயேசுவே கற்றுக்கொடுத்ததால் நாம் அவரது பிள்ளைகள் ஆகிறோம்.

நமது சிலுவையைச் சுமந்து கொண்டு அவரைப் பின்பற்றும்போது சீடர்கள் ஆகிறோம்.

இயேசு "உங்களை நண்பர்கள் என்றேன்:" என்று சொன்னதால் நாம் அவரது நண்பர்கள் ஆகிறோம்.

தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுவது நமது பணி, ஆகையால் நாம் அவரின் ஊழியர்கள் ஆகிறோம்.

அவரால் படைக்கப்பட்டதால் நாம் அவரை ஆராதிக்கின்றோம்.

அவரது பிள்ளைகள் என்பதால் அவரை நேசிக்கிறோம்.

அவரது சீடர்கள் என்பதால் அவரைப்போலவே நாமும் நமது சிலுவையைச் சுமக்கிறோம்.

அவரது நண்பர்கள் என்பதால்தான், தந்தையிடமிருந்து அவர் கேட்டதையெல்லாம் நமக்கு அறிவித்தார். (அரு.15:15)

இயேசு நமது தலைவர், ஆகையால் நாம் அவரது ஊழியர் ஆகிறோம்.
 
வேலைக்காரனுக்கும் ஊழியனுக்கும் வித்தியாசம் உண்டு.

வேலைக்காரன் சம்பளத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான்.

ஊழியன் தலைவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான்.

நாம் இறைவனின் ஊழியர்கள்.

 இறைவனின் கட்டளைகள அவரது மனம் நோகாமல் நிறைவேற்றுவதே நமது பணி.

2.நாம் தியானித்துக் கொண்டிருக்கும்   வசனப்படி
 
திருமுழுக்குப்புப் பெற்ற நாம் அனைவரும் இயேசுவின் ஊழியர்கள் மட்டுமல்ல, அவரது பொதுக் குருத்துவத்தின் உறுப்பினர்கள்.

அந்தவகையில்  இறை ஊழியர்களின் ஒரே பணி இறைவார்த்தையை எல்லோருக்கும் அறிவிப்பதுதான்.

ஒரே பணி என்றால் 

நாம் நற்செய்தி அறிவிப்பதைத் தவிர வேறு ஒரு பணியும் செய்ய கூடாதா? 

ஆம், கூடாது.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது நாம்

செப வாழ்வு சம்பந்தப்பட்ட   ஆன்மீக வாழ்வு,

இவ்வுலக சம்பந்தப்பட்ட லௌகீக வாழ்வு ஆகிய

 இருவகை வாழ்வுகள் வாழ்ந்து கொண்டிருப்பது போல் தோன்றும்.

அப்படி வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் நாம் வாழ வேண்டியது நற்செய்திப் பணியை மட்டும் செய்யும் ஆன்மீக வாழ்வை மட்டும்தான்.
 
என்று  "நமது சாயலாகவும் பாவனையாகவும் மனிதனைப் படைப்போமாக: அவன் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், மிருகங்களையும், பூமி முழுவதையும், பூமியின் மீது அசைவன ஊர்வன யாவற்றையும் ஆளக்கடவன்." என்று சொன்னாரோ, 

அன்று முதல்  இந்த உலக சம்பந்தப்பட்ட வேலைகளும் ஆன்மீக வாழ்வுதான்.

ஆனால் அவை கடவுளுடைய கட்டளையாக இருப்பதால் அவருக்காக,

நமது திருப்திக்காக அல்ல,

அவரது  திருப்திக்காக செய்யப்பட வேண்டும்.

கடவுளுடைய மகிமைக்காகச் செய்யப்படும் எந்த வேலையாக இருந்தாலும்,

விபசாயமாக இருந்தாலும்,
வியாபாரமாக இருந்தாலும்,
ஆசிரியப்பணியாக இருந்தாலும்

அவை ஆன்மீக வாழ்வுதான்.

இந்த வாழ்வைத்தான் நற்செய்தி அறிவிக்கும் வாழ்வாக வாழ வேண்டும்.

3.இறை வார்த்தையை அறிவிப்பது அவ்வளவு எளிதான வேலை அல்ல.

சிந்தனை, சொல், செயல் மூலமாகத்தான் இறை வார்த்தையை அறிவிக்கும் பணியைச் செய்ய வேண்டும்.

முதலில் நற்செய்தி நமது சிந்தனையில் இருக்க வேண்டும். சட்டியில் இல்லாவிட்டால் அகப்பையில் வராது.

அடுத்து நமது சொல் மூலம் மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

அடுத்து செயலில் நற்செய்தியை வாழ்வதன் மூலம் 

மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக வாழ வேண்டும்.

நம்முடன் வாழ்பவர்கள் நமது செயல்களிலிருந்து நற்செய்தியை அறிய வேண்டும்.

அன்பு செய்தல்,

 நம்மைப் பகைப்பவர்களையும் நேசித்தல்,

தீமை செய்பவர்களுக்கு
நன்மை செய்தல்,

எல்லோருடனும் சமாதானமாக வாழ்தல்,

 இல்லாதவர்களுக்கு கொடுத்தல் 

போன்ற நற்செய்திப் பணிகள் மற்றவர்களையும் அதன்வழி வாழவைக்கும்.

இது செயல் மூலம் நற்செய்தி அறிவித்தல்.

இது நாம் சொல்வது போல அவ்வளவு எளிதான செயல் அல்ல. 

தனது சொல்லாலும்  வாழ்வாலும் நற்செய்தி அறிவித்த இறைமகன் இயேசுவுக்கு

 மக்கள் கொடுத்த பரிசு என்ன என்று நமக்குத் தெரியும்.

நற்செய்தி அறிவிப்பதையே வாழ்வாகக் கொண்டிருந்த புனிதர்கள் என்ன பாடு பட்டார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.

இதையெல்லாம் தெரிந்த பின்பும் நற்செய்தியை வாழ நமக்கு மிகுந்த துணிவு வேண்டும்.

4.அதற்காக துணிவையும்,

 மன உறுதியையும்,

 நிலைத்து நிற்கும் பண்பையும்

 நமக்குத் தர ஒவ்வொரு நாளும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்ட வேண்டும்.

இவ்வுலகில் நல்லவர்களை பின்பற்றுகிறவர்களை விட கேலி செய்பவர்களும்,

எதிர்த்து நிற்பவர்களும் தான் அதிகம்.

 அவர்களையும் மன்னித்து அவர்களுக்காக இறைவனிடம் வேண்ட வேண்டும்.

இயேசு தன்னை கைது செய்ய வந்தவனுடைய அறுந்த காதை ஒட்டவைத்து,

 தீமைக்கு நன்மை செய்தது போல 

நாமும் நம்மைத் 
துன்புறுத்துபவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

இதுவும் அச்செய்தி அறிவிக்கும் பணிதான்.

5.பலகீனமான  நம்மால் இறைவன் உதவி இன்றி எதுவும் செய்ய இயலாது.

 இறைவனைச் சார்ந்தே வாழ்கிறோம் என்பதை ஏற்றுக் கொண்டு,

நமது ஒவ்வொரு செயலுக்கும் இறைவனை உதவிக்கு அழைக்க வேண்டும்.

தன்னைச் சார்ந்திருக்கிறவர்களை இறைவன் கைவிடமாட்டார். 

அவரது கைகளை இறுக பற்றிக்கொண்டு அவருக்காகவே ஊழியம் செய்வோம்.

"உமது நற்செய்தியை உலகெங்கும் பரப்ப நீரும் என்னோடு வாரும்,
இயேசுவே."

லூர்து செல்வம்.


No comments:

Post a Comment