Monday, April 27, 2020

"அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்: முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள்."(அரு. 6:27)

"அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்: முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள்."
(அரு. 6:27)
**  **  **   .** ** **   ** ** ** ** **

"ஆகவே, அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டுபோய், அரசனாக்க விரும்புகின்றனர் என்பதை அறிந்து, இயேசு அவர்களை விட்டு விலகித் தனியாக மீண்டும் மலைக்குச் சென்றார்." (அரு. 6:15)

இயேசு கலிலேயாக் கடலின் அக்கரைக்குச்  சென்ற போது 

அவரைத் தேடி வந்த மக்களுக்கு கடவுளின் அரசைப்பற்றி  போதித்தார்.

போதித்தபின் அவரைத் தேடி வந்த அனைவருக்கும் ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு வயிறார உணவளித்தார்.

உண்டபின் மக்கள் அவரைத் தங்கள்  அரசனாக்க விரும்பினர்.


இதை அறிந்த இயேசு 
 அவர்களை விட்டு விலகித் தனியாக மீண்டும் மலைக்குச் சென்றார்.

இயேசு போதித்தது கடவுளின் அரசைப்பற்றி.

ஆனால் மக்கள் அவரை இவ்வுலக சம்பந்தப்பட்ட அரசர் ஆக்க விரும்பினர்.

அவரைத் தங்கள் அரசராக்கி விட்டால் எப்போதும் தங்களுக்கு வயிறார உணவு கிடைக்கும் என்று எண்ணி இருக்கலாம்.

இயேசு கடவுளாகையால் அவரால் படைக்கப்பட்ட இவ்வுலகிற்கு அவர் தான் அரசர்.

ஆனால் உலக சம்பந்தப்பட்ட அரசர் அல்ல.

"என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று." (அரு. 18:36)
இது பிலாத்துவின் கேள்விக்கு இயேசுவின் பதில்.

அவர் நமது ஆன்மீக அரசர்.
He is our spiritual King.

கடலின் இக்கரைக்கு வந்தபின் மக்கள் அவரைப் பார்த்து, 

"ராபி, எப்பொழுது இங்கு வந்தீர் ?" என்று கேட்டனர்.

ஆனால் இயேசு அக்கேள்விக்குப் பதில் அளிக்காமல்,

"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: 

நீங்கள் என்னைத் தேடுவது அருங்குறிகளைக் கண்டதாலன்று, 

அப்பங்களை வயிறார உண்டதால்தான்."

ஆக மக்கள் இயேசுவை தேடியது இவ்வுலக உணவிற்காகத்தான்.

 ஆனால் இயேசுவோ  அப்பத்தையும் மீன்களையும் கொண்டு அவர்களுக்கு உணவளித்தது அவர்கள் மேல் கொண்ட இரக்கத்தினால்தான். 

அந்த இரக்கம் ஆன்மீகம் சம்பந்தப்பட்டது.

 ஆனால் மக்கள் இந்த உலக சம்பந்தப்பட்ட உணவை விரும்பி 

அவரைத் தங்கள் அரசர்  ஆக்க விரும்பினார்கள்.

 ஆகவே தான் இயேசு சொன்னார்,

"அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்:

 முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள். 

அதை மனுமகன் உங்களுக்குக் கொடுப்பார்:

 ஏனெனில், அவருக்கே தந்தையாகிய கடவுள் தம் அதிகாரத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்"


உணவிற்காக இயேசுவைத் தேடிய யூதர்களின் அதே நிலைதான் இன்று நமது நிலையும்.

நாம் எதற்காக இயேசுவைத் தேடுகிறோம்?

 எதற்காக தினமும் செபிக்கிறோம்?

 எதற்காக இறைவனை நம்புகிறோம்?

முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக என்ற பதில் வந்தால் நலமாக இருக்கும்.

சிலர் கேட்கலாம்,

 "ஏன் இயேசு அன்றன்றுள்ள உணவை எங்களுக்கு இன்று தாரும் என்று செபிக்கச் சொன்னார்?

இயேசு,

" உமது இராச்சியம் வருக"

 என்று செபித்த பிறகே உணவிற்காக செபிக்கச் சொன்னார்.

"கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத். 6:33)

இது இயேசு நமக்கு அளித்திருக்கும் வாக்குறுதி,

அவர் வாக்கு மாறாக தேவன்.

நமது வாழ்நாளில் நாம் முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது நமது ஆன்மீகக் கடமைகளுக்கே.

 செபம், தவம், நற்செயல்கள்,

பாவசங்கீர்த்தனம், திருப்பலி, திருவிருந்து உள்ளடக்கிய தேவ திரவிய அனுமானங்கள் 

ஆகியவற்றில் நாம் காட்டும் ஈடுபாடுதான் நமது ஆன்மீக வளர்ச்சியைக் காட்டும்.

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன், முதலில் அந்த நாளை இயேசுவுக்கு ஒப்புக் கொடுப்போம்.

அதாவது இறைவனின் இராட்சியத்தைத் முதலில் தேடுவோம்.

இறைவனின் இராட்சியத்திற்குள் நுழைந்த பின்  

நாம் என்ன செய்தாலும் இயேசுவுக்காக செய்வோம். 

நாம்  குளிப்பது, உண்பது, உடுத்துவது, பணிக்குச் செல்வது, பணிபுரிவது etc etc. எல்லாம் இயேசுவைக்காகவே.

நமது ஒவ்வொரு வேலையையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே துவக்குவோம்.

திரி ஏக தேவனின் மகிமைக்காகவே நமது வேலையை செய்வோம்.

"இயேசுவே, எனக்கெல்லாம் இயேசுவே."


ஹோட்டலுக்குச்  சென்று இட்டிலி கேட்டால் சட்னியும் சாம்பாரும் freeயாகத் தானே வரும்.

இறைவனின் இராட்சியத்தைத் தேடினால் இவ்வுலக சம்பந்தப்பட்ட சவுகரியங்கள் தானே வரும்.

இட்லி கேளாமல் சட்னியும் சாம்பாரும் மட்டும் இலவசமாக கேட்பது எப்படியோ


 அப்படித்தான்,
 இறை அரசை தேடாமல் இவ்வுலக வசதிகளை மட்டும் கேட்பது.

இன்றைய நிலையை எடுத்துக்கொள்வோம்.

கொரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத வைரஸ் உலக மக்கள் அனைவரின் வாழ்க்கையையும் தலைகீழாக புறட்டிப்போட்டு விட்டது

மக்கள்  எங்கே தங்கள் உயிர் போய்விடுமோ என்று பயந்து பயந்து செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போ ஒரு கேள்வி.

வைரசுக்கு 

பணக்காரன், ஏழை,

 முதலாளி, தொழிலாளி,

 அறிவாளி, முட்டாள்,

 ஆள்கிறவன், ஆளப்படுகிறவன்

என்றெல்லாம் தெரியாது.

யாரை வேண்டுமானாலும் தொற்றும்.

ஆகவே வைரசால் தங்கள் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அனைவரும் பயப்படுகிறார்கள்.

அப்படி ஏதாவது ஆபத்து வந்தால் நமது ஆன்மாவின்  நிலை என்ன என்று எத்தனை பேர் எண்ணிப் பார்க்கிறார்கள்?

"முதலில் நமது ஆன்மாவை நித்திய வாழ்வுக்குத் தயார் செய்வோம்,

அப்புறம் கொரேனாவைக் கவனிப்போம்"

என்று எத்தனை பேர் எண்ணிப் பார்க்கிறார்கள்?

 கணக்கெடுப்பு தேவை இல்லை.

அவரவர் நிலையை அவரவர் எண்ணிப் பார்த்தாலே போதும்.

அவரவர் சுய பரிசோதனை செய்ய அவரவருக்கு ஆண்டவர் சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறார் என்று எண்ணுவோம்.

கொரோனாவிற்கு முந்திய காலத்தில் 

நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுத்தோம் என்று 
 சிறிது எண்ணிப் பார்ப்போம்.

நாம் நமது குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுத்தபோது

 நமது குழந்தை சென்மப் பாவத்திலிருந்து விடுபட்டு

 இறைவனது பிள்ளையாகி விட்டது என்பதற்காக  மகிழ்ந்தோமா? 

அல்லது ஞானஸ்நான விழா சிறப்பாக நடந்தது என்பதற்காக மகிழ்ந்தோமா?

நாம் புதுநன்மை வாங்கியபோது 

இறை  இயேசு உண்மையாகவே  நமது நாவில் இறங்கி, நம்மோடு உறவாட வந்தார் என்பதை எண்ணி மகிழ்ந்தோமா?

அல்லது

நமது புதிய டிரஸ், பரிசுப் பொருட்கள், பிரியாணி விருந்து ஆகியவற்றை எண்ணி மகிழ்ந்தோமா?

நாம் திருமணம் முடித்த அன்று இறைவனின் படைப்புத் தொழிலில் உதவப்  போகிறோம் என்று எண்ணி மகிழ்ந்தோமா?
(நாம் உண்டாக்கும் உடலுக்குத்தானே இறைவன் ஆன்மாவைப் படைப்பார்!)

அல்லது உடல் இச்சையை பூர்த்தி செய்ய போகிறோம் என்பதை எண்ணி மகிழ்ந்தோமா?

நமக்கு பிள்ளைகள் பிறந்தபோது  இறை  பராமரிப்பில் அவருக்கு உதவ வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதற்காக மகிழ்ந்தோமா?

அல்லது நமது குழந்தை  ஆசை நிறைவேறிவிட்டது என்பதற்காக மகிழ்ந்தோமா?

முந்தியதற்காக மகிழ்ந்தால் நாம் பிள்ளைகளை நல்ல கிறிஸ்தவ பண்பாட்டில் வளர்த்தெடுப்போம்.

பிந்தியதற்காக மகிழ்ந்தால் பிள்ளைகளை அவர்களுடைய படிப்பையும் வேலையையும் வருமானத்தையும் மையமாகக்கொண்டே 
வளர்த்தெடுப்போம்.

நமது தொழிலில் நமக்கு நல்ல வருமானம் வந்தபோது ஏழைகளுக்கு உதவுவதற்காக இறைவன் தந்திருக்கிறார் என்று  எண்ணி மகிழ்ந்தோமா?

அல்லது

வாழ்க்கை  வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காகக் கிடைத்தது என்று  எண்ணி மகிழ்ந்தோமா?

இப்படி நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நாம் முக்கியமுக்கியத்துவம் கொடுத்தது ஆன்மீகத்துக்கா? லௌகீகத்துக்கா? என்று நினைத்துப் பார்த்தோம் என்றால்,


நாம் அழிந்துபோகும் உணவுக்காக உழைக்கிறோமா,

 அல்லது    முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழைக்கிறோமா என்பதை நாமே அறிந்து கொள்ளலாம்.


ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு போகாமல் Tution Class க்குப் போகிற மாணவன் எதற்காக உழைக்கிறான்?

ருசியாக இருக்கிறது என்பதற்காக அளவுக்கு மீறி உண்பவன் எதற்காக உழைக்கிறான்?

புனித அகுஸ்தீனார் கூறுகிறார்.

"Love and do as you like."

"அன்பு செய்து கொண்டு இஸ்டப்படி நட."

இறைவனை அன்பு செய், அதற்குப் பங்கமில்லாமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 

அழிந்து போகும் இவ்வுலகில் நாம் செய்யும் பயணம்

 அழியாத உலகை நோக்கி இருக்க வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment